Saturday 14 November 2020

DADA DAWOOD IBRAHIM 1 தாதா தாவூத்

 



DADA DAWOOD IBRAHIM 1


தாதா தாவூத் இப்ராஹிம்: Most wanted person (க்ரைம் தொடர்-1)


 

Dawood%20head01.jpg


மும்பை மாநகரத்தின் மிக பிரமாண்ட ஹோட்டல் அது. அரபிக் கடலில் எழும் அலைகள் கரையில் வந்து மோதும் பொழுது, உடையும் சாரல் துளிகள் அந்த ஹோட்டல் வாசலில் வந்து தெறிக்கும். அதனால் எப்பொழுதும் ஈரமாகவே இருக்கும் அந்த ஹோட்டல் வாசல் சாலை. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெரிய பிசினஸ் புள்ளிகள், பாலிவுட் ஸ்டார்கள், முக்கியமான அரசியல் வாரிசுகள், உயர் அதிகாரிகள் என அனைவருவே அதிகார வர்க்கம்தாம். அந்த பிரமாண்ட ஹோட்டலில் யார் யாருடன் வருகிறார், யார் யாருடன் போகிறார் என்கிற விபரங்கள் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிந்தாலும் அதை வெளியில் சொல்வதில்லை.


பாலிவுட்டில் மிக பிரபலமாக இருந்த கனவுக்கன்னி நடிகை ஒருவர் மாலை நேரம் ஒன்றில் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார். ஐந்தாவது தளத்தில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் அவர் எட்டாவது தளத்தில் இருந்த அறைக்கு முகங்களை மூடிக்கொண்டு ரகசியமாக சென்றார். ஏற்கனவே அந்த அறையில் இந்திய வருவாய் துறை அதிகாரி ஒருவர் காத்திருந்தார். இந்தியாவின் பொருளாதரத்தை நிர்ணம் செய்யும் பங்குச்சந்தை உலகின் மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர் அவர். நடிகையும் அதிகாரியும் பரஸ்பர அறிமுகமாகி அடுத்த இரண்டு நொடிகள் கூட தாமதிக்காத அந்த அதிகாரி, சினிமாவில் தான் பார்த்து ரசித்த அந்த அழகியை, நேரில் பார்த்த அதிர்ச்சியில் அவரை இழுத்துப்பிடித்து அணைத்து, ஆசை தீர முத்தம் கொடுத்திருக்கிறார்.


அதோடு விடாமல், அவர் அழகை மிகவும் வர்ணனை செய்திருக்கிறார். அடுத்த பத்து நிமிடங்களில் அவர் ஆசைப்பட்ட அனைத்தும் நடந்து முடிந்து, களைப்பின் வியர்வை துளிகளின் ஈரம் காயும்முன்பே அந்த அறையின் கதவை உடைத்து வருகிறார் அன்னியர் ஒருவர். வந்தவர் கையில் அமெரிக்க மேட் பிஸ்டல் ஒன்று பளபளத்து. அதற்கு பிறகு அந்த அதிகாரி வளைக்கப்படுகிறார்.


இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில், பிசினஸ் மீட்டிங்க்காக  பாங்காங் நாட்டில் ஒரு ஸ்டார் ஹோட்டல் தங்கி இருந்தார், இந்தியாவில் இயங்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒருவர். அன்றைய மீட்டிங் முடிந்து பாத்ரூம் போன அந்த முதலாளியை அங்கு வைத்து துப்பாக்கி முனையில் கடத்தினார்கள் இருவர். பிறகு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு, இந்தியாவில் அவருக்கு இருக்கும் முக்கியமான சொத்துக்களின் பெரும்பாலான பங்குகள் எழுதி வாங்கப்பட்டன. இந்த இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்தது ‘டி’ கம்பெனியின் ஆட்கள்.


dawood1-02.jpg


டி கம்பெனி என்பது தாவூத் இப்ராஹிம் என்ற நிழல் உலக தாதாவின் நிறுவனம். நிறுவனம் என்றதும் நம்மூரில் இயங்கும் சாப்ட்வேர் கம்பனியோ இல்லை, தயாரிப்பு நிறுவனமோ இல்லை. மாறாக இந்த நிறுவனத்தின் வேலைகள் அனைத்தும் அப்படியே அக்மார்க் உலக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட பிசினஸ்கள். ஆட்கள் கடத்துவது, ஆயுதம் விற்பது, கடத்துவது, போதைப்பொருள்கள் கடத்தி உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பது என பெரிய சாம்ராஜ்யம் டி கம்பெனி. பல சமயம் டி கம்பெனிக்கு போர் அடித்தால் உலகமே உற்றுக்கவனித்து கொண்டு இருக்கும் ஒரு விஷயத்தின் முடிவை இவர்கள் தீர்மானிப்பார்கள். அதாவது அந்த விஷயத்தின் முடிவை பெட்டிங் கட்டி இயக்குவது. இதுதான் டி கம்பெனியில் முக்கியமாக பொழுது போக்கு அண்ட் பிசினஸ்.


ஒரு மாதத்தில் பாங்காங்கில் வளைக்கப்பட்ட தொழில் அதிபரின் நிறுவனத்தின் ஷேர்கள் சந்தையில் சக்கை போடு போட்டன. அதற்கு காரணம், நடிகை மூலம் வளைக்கப்பட்ட அந்த அதிகாரியின் கைவண்ணம்தான். ‘டி’ நிறுவனத்திற்கு இது ஒரு சின்ன வேலை. இந்த வேலையை துபாய் ஷேக் ஒருவருக்காக சும்மா டைம்பாஸ்க்கு செய்து கொடுத்தார் டி நிறுவனத்தின் தலைவர் தாவூத்.


தாவூதிதின் டி கம்பெனியின் தலைமை அலுவலகம் துபாய் நாட்டில் இயங்குகிறது. அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளில் தேடப்படும் குற்றவாளி. உலக குற்றவாளிகளின் டாப் 10 பட்டியலில் முதல் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் தாவூத். இந்தியாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பு, ஆயுதம் கடத்தியது, ஆள் கடத்தியது என எக்கசக்க குற்றப்பின்னணி இருந்தாலும் இன்றளவும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் மோஸ்ட் வாண்டட் பெர்சன் தாவூத். 


யார் இந்த தாவூத் இப்ராஹிம்?


மும்பையில் சாதாரண போலீஸ் தலைமைக்காவலர் இப்ராஹீம் கஸ்காரின் மகன் தாவூத் இப்ராஹீம். 1955ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் மும்பையில் பிறந்தார் என்றாலும், இவரின் பூர்விகம் உத்திரபிரதேசம் என்ற சலசலப்பும் உண்டு. சாதாரண பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத தாவூத்தின் பால்ய வாழ்க்கையில், அவரின் தந்தை மும்பையில் நடக்கும் பல்வேறு குற்றங்களை வீட்டில் வந்து சொல்லுவதுண்டு. அதில் அதிகமாக தங்க கடத்தல்கள், ஹேங் சண்டைகள் என மும்பையில் நடக்கும் பல்வேறு விஷயங்களையும், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் உயர் அதிகாரிகள் திணறுவதையும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதே இப்ராஹீம் கஸ்கர், அவரின் உயர் அதிகாரிகள் மீது அளவுக்கு கடந்த பயம் கலந்த மரியாதையை வைத்து இருந்தார். பெரும்பாலும் இரவு நேரங்களில் இப்ராஹிம் கஸ்கருக்கு அவசர வேலைகள் வரும். அப்பொழுது அவர் உயர் அதிகாரிகளுக்கு பயந்து விழுந்து ஓடுவது தாவூத்துக்கு பிடிக்காது. அதோடு வேலை முடிந்து வந்ததும் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு குற்றவாளிகள் எஸ்கேப் ஆன திரில் கதைகளை அப்படியே சொல்லுவார்.


அடிக்கடி போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரும், குற்றவாளிகளும் பெயரும் சரிசமமாக அடிபடும். அதனால் போலீஸ்-குற்றவாளி என இருவரும் ஸ்டார் என நம்ப ஆரம்பித்தார் தாவூத். எதிர்காலத்தில் அப்பா போல சாதாரண போலீஸ்காரராக இல்லாமல் உயர் அதிகாரி ஆகனும், அது நடக்கவில்லையென்றால் கடத்தல் தொழிலில் கொடி கட்டி பறக்கவேண்டும் வேண்டும் என்று தனது சகாக்களிடம் தாவூத் சொல்லுவதுண்டு.


dawood1-01.jpgதனது 14 வயதில் தாவூத் பள்ளியில் படிக்கும் பொழுதே செய்தித்தாளில் வரும் கடத்தல், ஹேங் வார்களை பற்றி படித்து அவற்றை கட் பண்ணி நோட்டில் ஒட்டி வைப்பது வழக்கம். அப்படியே காலத்தை கடத்திய தாவூத் உள்ளுரில் இருக்கும் முக்கியமான தாதாக்களை சந்திக்க போவதுண்டு. அவர்களும் கிரைம் பிராஞ்ச் போலீஸ்காரரின் மகன் என்பதால் தாவூத் மூலம் ஏதாவது விஷயம் வரும் என்று தாவூத்திடம் பழகியதுண்டு. அப்படியே பழக்கத்தை உண்டாக்கிய தாவூத் மும்பையின் பிரபல வெள்ளிக்கட்டிகள், தங்கக்கட்டிகள் கடத்தும் முக்கிய புள்ளியான ஹாஜி மஸ்தான் என்பவரோடு பழக ஆசைப்பட்டான்.


ஹாஜி மஸ்தானுக்கு தமிழகம்தான் பூர்விகம் என்பதால், அங்கு அவரை மதராசி ஹாஜி என்று அழைப்பதுண்டு. தவிர அங்கு நிலவும் ஊர் பிரச்னை நீறு பூத்த நெருப்பாக இருந்தது. கடத்தல் தொழிலில் மகாராஷ்டிராவினர் செய்ய முடியாத பல்வேறு வேலைகளை ஹாஜி மஸ்தான் கன கட்சிதமாக செய்து முடிப்பது வழக்கம். அதனால் மும்பை போலீஸ் வட்டாரம் நன்கு அறிந்து, அவரை கண்காணித்து வந்தது. ஹாஜி மஸ்தான் தனது வீட்டை விட்டு வெளியே போகாமல், அவரது சகாக்களை வைத்து அரபிக்கடலில் தங்கம் மற்றும் கருப்பு பணம் எனப்படும் ஹவாலா பணங்களை கடல் மூலம் பல்வேறு இடங்களுக்கு அரசாங்கத்திடம் சிக்காமல் கடத்துவதில் கில்லாடி. அந்தப் பணிகளை பெரும்பாலும் மார்வாடி சமூகத்தினர்களுக்கு செய்து கொடுப்பதால் மும்பையில் மிகப்பெரிய கடத்தல் மன்னனாக இருந்தார் ஹாஜி மஸ்தான்.


அப்படி, கடத்தலில் வரும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற மார்வாடி சமூகத்தினர், அந்த பணங்களை பாலிவுட் சினிமாவில் போட்டு சினிமா எடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். அப்படித்தான் சினிமா பிரபலங்கள் ஹாஜி மஸ்தானுக்கு அறிமுகம் ஆனதுண்டு. அதனால் சினிமாவில் பெரும்பாலும் ஹவலா பணங்களை மொத்தமாக மாற்ற ஹாஜி மஸ்தான் அதிகம் தேவைப்பட்டார். அதனால் என்னவோ ஹாஜி மஸ்தான் பற்றி, அவரை ஹீரோவாக சித்தரித்து காட்டி ஹாஜி மஸ்தான் செய்யும் வேலைகளை கதைக்களமாக்கி, பிரபல நடிகரை வைத்து ஒரு முன்னணி இயக்குனர் சினிமா ஒன்று எடுத்தார். அந்தப்படம் பயங்கர வெற்றி பெற்றது மும்பையில்.


அதுவரை அரசல் புரசலாக தெரிந்த ஹாஜி மஸ்தான் அதன் பிறகு வெகுஜன மக்களுக்கு நன்கு தெரியவந்தார். அதன் விளைவால்   பாதுகாப்பு கருதி ஹாஜி மஸ்தான் தனது புகைப்படங்களை வெளியே வராமல் பார்த்துக்கொண்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தாவூத்திற்கு பிடித்துப்போனது. ஹாஜி மஸ்தானிடம் பழக ஆரம்பித்தான். அதோடு அவர்கள் கடத்தும் பணத்தை அவர்களிடமிருந்து கடத்த திட்டம் தீட்டினான் தாவூத்.


18 வயதான தாவூத்தின் முதல் சம்பவம்


கடத்தலில் கொண்டு வரும் தங்க கட்டிகளை மும்பையில் பிரபலமான மூன்று மார்கெட்டில் வைத்துதான் பிரித்து பல்வேறு நபர்களுக்கு அனுப்புவார்கள். கிராப்ஃபோர்டு, மோகத்தா, மனிஷ் போன்ற முக்கியமான மூன்று மார்க்கெட்தான் அது. இங்கு இருந்துதான் காய்கறிகள், அரிசி பருப்பு உள்பட பல்வேறு பலசரக்கு தானியங்களை மும்பையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு லாரி உள்பட சரக்கு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம்.  இந்த சந்தைகளில் எப்பொழுதும் கூட்டம் நெரிசலாக இருக்கும் என்பதால் கடத்தல்காரர்களுக்கு தொழில் செய்ய நல்ல இடமாக இருந்தது.


இதுபோன்ற ஒரு கருப்பு பணத்தை கொண்டு செல்லும் ஒரு குரூப்பில் இருந்து வந்த தகவலை வைத்து கொள்ளை அடிக்க திட்டம் தீட்டினான் சிறுவனான தாவூத். அதற்காக அவன், யூசுப்கான், அபுபக்கர், இஜாஸ்ஜிங்கி, அசிஸ் டிரைவர், அப்துல் முத்தலிப், சையது சுல்தான், சிர்கான், உள்பட ஏழு நபர்களை கூட்டாளிகளாக வைத்துகொண்டு திட்டம் தீட்டினான்.


திட்டத்திற்கு தேவையான ஒரு கார், கத்திகள், துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்களை வைத்துக்கொண்டு திட்டத்தை செயல்படுத்தும் இடமான தெற்கு மும்பையில் உள்ள மரைன் டிரைவ் பாலத்தை தேர்ந்தெடுத்து அங்கு ஒத்திகை பார்த்தனர். கொள்ளைக்கு தேதி குறித்து காத்திருந்து கொள்ளையடிக்கும் நாளும் வந்தது.


காரை அசிஸ் ஓட்டுவதும், ஆயுதங்களை தாவூத் மற்றும் சையது சுல்தான் பயன்படுத்துவது என்று திட்டம். இதில் சையது சுல்தான் கட்டுமஸ்தான உடம்புக்காரன். மிஸ்டர் மும்பைக்கு தயாராக இருந்தான். பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து ஆணழகன் பட்டம் வாங்கி இருக்கிறான். அவனது ஆசை, கனவு எல்லாம் மிஸ்டர் மும்பை, மிஸ்டர் மகாரஷ்டிரா, அப்படியே மிஸ்டர் இந்தியா என்று அவனது கனவுகளின் தூரம் மிக அதிகம். அதற்கு பணம் தேவை என்பதால் இந்த வேலையை செய்ய அவன் முன் வந்தான்.


சோர்ஸ் சொன்னபடி ட்ரக் ஒன்று பணத்தை ஏற்றிக்கொண்டு கிராப்போர்டு மார்கெட் பகுதியை கடந்து மெல்லோ சாலை வழியாக வருவதாக தகவல். கர்னக் பந்தர் பாலம் அருகில் வைத்து கொள்ளை அடிக்க திட்டம். வண்டி முகமது அலி சாலையை கடந்ததும், அந்த வண்டியின் பின்புறம் தாவூத்தின் ஆட்கள் பின் தொடர வேண்டும் என்பது தாவூத்தின் கட்டளை. வண்டியில் டிரைவர் உள்பட இரண்டு மார்வாடிகள் வரை வருவதாகவும் தகவல் வந்தது. அவர்களும் தங்களுக்கு பாதுகாப்புக்கு என்று இரும்பு பைப்பில் கைப்பிடி போட்டு ராடு உள்பட துப்பாக்கி வரை வைத்து இருப்தாக கூடுதல் தகவல் வேறு தந்து இருந்தனர்.


மதியம் இரண்டு மணியளவில் சீறிப்பாய்ந்த அந்த வண்டியை முட்டி மோதி சிறிய விபத்து போல உண்டாக்கி, உள்ளே இருந்தவர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயுத முனையில் மடக்கினர் தாவூத்தும் சையதும். மற்றவர்கள் அந்த வண்டியில் இருந்தவர்களை பேச விடாமல் மடக்கினர். அவர்களிடம் தாவூத் 'இனி ஒரு வார்த்தை பேசினால், அடுத்து வார்த்தைகள் பேசமுடியாது. பெட்டி எங்கே' என்று மிரட்டினான். டிரைவர் பயந்து போய்  சீட்டின் பின்புறம் இருந்த இறுக்கி கட்டி சீல் வைக்கப்பட்ட கருப்பு பெட்டியை காட்டினான். கைப்பற்றினார்கள் தாவூத் அண்ட் கோ.


dawood1-03.jpg


பெட்டியை உடைத்து பணக்கட்டுகளை பையில் போட்டுகொண்டவர்கள், அவர்களை தாக்கி  விட்டு அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்து விட்டனர். வேறு வழி தெரியாமல் பணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசுக்கு போனார்கள். பைதொனிக் காவல் நிலையத்தில் குற்ற எண் 725/1974 என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


தாவூத் மற்றும் அவனின் கூட்டாளிகளுடன் சேர்ந்து மூன்று வாரங்கள் கழித்து தாவூத் தனது 19வது பிறந்தநாளை கொண்டாடும் பொழுது அன்றைய அணைத்து செய்திதாள்களிலும் மும்பை மெட்ரோபொலிட்டன் கார்பரேசன் வங்கி வண்டியை மடக்கி ரூபாய் 4,75,000 கொள்ளை என்று செய்தி வந்தது. அதோடு இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 20 வயதுக்கு உள்பட்ட நபர்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வந்ததோடு, அந்த கொள்ளையின் மாஸ்டர் பிளான் தாவூத் என்ற செய்தி வந்தது. ஒரே சம்பவத்தில் மும்பை முழுவதும் பேமஸ் ஆனான் தாவூத் இப்ராஹீம்.


அதன்பிறகு தான் தெரிந்தது தாவூத் கொள்ளையடித்தது ஹவலா பணம் இல்லை. அரசு கோஆப்ரடிவ் வங்கியின் பணம் என்று.


அதன் பிறகு மும்பை போலீஸ் கவனம் தாவூத் பக்கம் திரும்பியது. அதுவரை நேர்மையான போலீஸ்காரராக இருந்த தாவூத்தின் தந்தை  இப்ராஹீம் கஸ்கர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதோடு அவர் அவமானம் தாங்காமல் தானே முன்வந்து தனது வேலையை ராஜினாமா செய்தார்.


அடுத்து நடந்தது என்ன?


தோட்டாக்கள் பாயும்...


14 வயதிலேயே வழிப்பறிக்கொள்ளையன்! (தாதா தாவூத் -2)


 

Dawood%20head02%281%29.jpg


வங்கிக்கொள்ளையால் பிரபலமானதால் அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ், தாவூத்தின் முழுப் பின்னணி குறித்து விசாரித்து வந்தது. வங்கிக் கொள்ளைதான் அவனுக்கு முதல் கொள்ளை என்று நினைத்து வந்த போலீஸ் அதிர்ந்து போனது. தாவூத் தனது பள்ளிப்பருவத்தில் இருந்தே பல்வேறு திருட்டு சம்பவங்களை செய்து வந்தது தெரிய வந்தது.


கிராப்ஃபோர்டு மார்கெட்டில் காலை முதல் மாலை வரை நன்றாக வியாபாரம் நடக்கும் கடைகளை கவனித்து வந்தது ஒரு குழு. அந்தக்குழுவில் அனைவருமே  14 வயதுக்கு உட்பட்டவர்கள். மார்க்கெட்டை அடுத்துள்ள சந்துகளில் பகல் பொழுதில் கிரிக்கெட் விளையாடி வந்தனர். அதில் தாவூத்தும் ஒருவன். தாவூத் தான் அந்தக் குருப்பின் தலைவன். கிரிக்கெட் பேட், பந்து உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி கொடுப்பான். அதனால் தாவுத் அந்தக் குழுவின் பிரதான தலைவன்.


dawood2-01.jpg


பலசரக்கு கடை வைத்திருந்த கடை முதலாளி, அன்று வசூலான 2,500 ரூபாய் பணத்தை ஒரு பையில் பத்திரப்படுத்திக்கொண்டு, மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். திடீரென்று அவரை மடக்கிய நான்கு நபர்கள், அவரை தாக்கிவிட்டு அவரின் பணத்தை பறித்துக்கொண்டு ஓடி விட்டனர். இரவு நேரம் என்பதால்  தாக்கியவர்கள் யார் என்று தனக்கு தெரியவில்லை என்று போலீஸ்காரர்களிடம் விசாரணையில் சொன்னார்.


ஒரு வாரம் கழித்து மீண்டும் இன்னொரு வியாபாரியிடம் 5,000 ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு சென்றனர். போலீஸ் இந்த முறை விழித்துக்கொண்டு மார்க்கெட்டில் மூட்டை தூக்குபவர்கள், கூலி தொழிலாளர்கள் என்று பல்வேறு நபர்களை விசாரித்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மாதம் கழித்து மீண்டும் இதேபோல திருட்டு. இந்த முறை மார்க்கெட் வியாபார சங்கத்தலைவரிடம் 10,000 ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டது. தொடர் வழிப்பறியால் மார்க்கெட் வியாபாரிகள் பெரும் பயத்தில் இருந்தனர். சங்கத்தின் செல்வாக்கை வைத்து, போலீஸ் உயர் அதிகாரிகளை பார்த்து தங்கள் குமுறல்களை கொட்டித்தீர்த்தனர். உடனடியாக சிறப்பு ரோந்துப்படை அமைக்கப்பட்டு, இரவு நேரம் கண்காணிக்கப்பட்டது. தொடர் வழிப்பறி சற்று குறைந்தது.


இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வங்கிக் கொள்ளையை பற்றி விசாரிக்கும்பொழுதுதான் தெரிந்தது, மார்க்கெட்டில் நடந்த வழிப்பறி எல்லாமே தாவூத்தும், அவனது நண்பர்களும் சேர்ந்து செய்தது என்று. இந்த உண்மையை தாவூத்தின் கூட்டாளி ஒருவன் சொன்னபோது போலீஸ் அதிர்ந்து போய் விட்டது. பல்வேறு சமயங்களில் இரவு நேரங்களில் தாவூத், இரவு ரோந்து போலீஸ்காரர்களிடம் சிக்கும் பொழுதெல்லாம் தனது தந்தை போலீஸ்காரர் என்று சொல்லிவிட்டு தப்பிவிடுவதும் தெரிய வந்தது. பல்வேறு போலீஸ்காரர்கள் நடந்த சம்பவங்களை ஞாபகப்படுத்தி உண்மை என்று நம்பினர்.


தாவூத் தாதா ஆன கதை


வேலூரில் இருந்து சென்னை சென்று குடிபுகுந்த முதலியார் குடும்ப வாரிசான வரதராஜன், தனது எட்டு வயதில் சென்னை போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வந்தார்.  அவரது குடும்பமும், வறுமை காரணமாக மும்பைக்கு குடி பெயர்ந்து, அங்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடையை வைத்து வாழ்ந்து வந்தது. படிப்படியாக பல்வேறு நட்புகள் மூலம் வரதராஜ முதலியாரும் மும்பையில் கடத்தல் தொழிலுக்கு வந்தார். மஸ்தான் குரூப்பிற்கும், வரதராஜ முதலியார் குரூப்பிற்கும் இடையே மும்பையில் பெரும் போட்டி நிலவி வந்தது. வரதராஜ முதலியாருக்கு, மும்பை தாராவியில் குடியிருந்த உழைக்கும் தமிழ் மக்களிடம் நல்ல பெயர் இருந்து வந்தது. கடத்தல் தொழிலில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை மக்களுக்காக பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்தார். அதனால் அவரை ஹீரோ போல பார்த்தனர் தாராவி பகுதி மக்கள்.


மக்களின் செல்வாக்கு இருந்ததால் மும்பையில் உள்ள துறைமுகம் முதல் டாமன் துறைமுகம் வரை கடல்வழிபாதைகளை நன்கு அறிந்து வைத்து இருந்தார் வரதராஜன். அதனால் டாமனில் பெரும் கடத்தல் தொழில் செய்து வந்த சுகுர் நாராயண பசிரா என்கிற குஜராத்திக்கு வரதராஜன், பெரும் தலைவலியை உருவெடுத்தார். வரதராஜ முதலியாரை மடக்க நினைத்த சுகுர் நாராயணன், மஸ்தானிடம் நல்ல தொடர்பை வைத்துக்கொண்டார். அதோடு இல்லாமல் இருவரும் தொழில் பார்ட்டனர் ஆனார்கள். இதனால் மும்பையில் அடிக்கடி அடிதடி, பல்வேறு கொலைகள் என்று நடந்து வந்தன. இந்த நேரத்தில் மஸ்தான் குரூப்பில் இருந்து வெளியான தாவூத், தனியாக கடத்தல் தொழில் செய்ய ஆரம்பித்தான்.


பலியான பத்திரிகையாளர்


1970-80களில் மும்பை, கடத்தல் தொழிலின் மிகப்பெரிய ராஜ்யமாக இருந்து வந்தது. உலக நாடுகள் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்துதான் தடை செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. மும்பையில் இயங்கும் இன்னொரு இரவு உலகத்தை வெளியே வெளிச்சம் போட்டுக் காட்ட பல்வேறு பத்திரிகைகள் தயங்கின. உயிர் பயம் இருந்ததால் தயங்கினர், பல்வேறு இதழின் ஆசிரியர்கள். முகமது இக்பால் நாடிக் என்கிற 26 வயது பத்திரிகையாளர், 1970களின் தொடக்கத்தில் சொந்தமாக பத்திரிகை வைத்து நடத்தினார். 'தி கான்பிடன்ட்' என்கிற பெயரில் உருது மொழியில், உள்ளுரில் பத்திரிகை நடத்தி வந்தார். கிரைம் ரிப்போர்ட் செய்வதில் எக்ஸ்பர்ட் ஆன முகமதுவின் ரிப்போர்ட் மும்பையை உலுக்கியது.


'மும்பை கடல்பகுதிகள் அனைத்தும் கடத்தல் தொழில்களின் சுரங்கமாக இருக்கிறது. இதற்கு பல்வேறு துறை அரசு அதிகாரிகள் துணை போகிறார்கள். இரவில் கடல் கண்காணிப்பில் இருக்க வேண்டிய அதிகாரிகள் சொகுசு ஹோட்டல்களில், பெண்களுடன் இரவை கழிக்கின்றனர்' என்று மும்பையில் நடக்கும் இரவு சம்பவங்களை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டினார். இதனால் அரசு உடனடியாக இரண்டு, மூன்று என்கவுன்டர்களை நடத்தியது. அதில் தாவூத்தின் குரூப்பில் உள்ள ஒருவன் பலியானான். இருந்தாலும், மும்பையில் கடத்தல் தொழில் நிற்பதாக இல்லை. தனியாக இருந்தவர்கள் மாறாக ஒன்று சேர்ந்தனர்.


dawood2-02%281%29.jpgமுகமதுவின் எழுத்துக்கள் பல்வேறு பத்திரிகையாளர்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. அதற்கு பிறகு பல்வேறு பத்திரிகைகள் எழுதித்தள்ளின. இதனால் கடத்தல் தொழில் செய்யும் தலைகள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆறு மாதம் கழித்து வெளியே ஜாமீனில் வந்தார்கள் கடத்தல் டான்கள்.


வீட்டில் தனது மனைவியுடன் இருந்த முகமதுவை,  'தாவூத் அழைக்கிறார்' என்று தாவூத்தின் ஆட்கள் நள்ளிரவில் வந்து அழைத்தனர்.


'இரவு நேரம் என்பதால் இப்பொழுது வரமுடியாது, காலை வருகிறேன்' என்று சொன்னார் முகமது. 'உன் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் தாவூத். நீ இப்பொழுது வரவில்லை என்றால், அவர் இங்கு வருவார். உனக்கு புது மனைவி இருக்கிறார். அவருக்கு வயது குறைவு, அழகு தாராளம்' என்று மிரட்டினார்கள்.


வேறு வழியின்றி அவர்களுடன் சென்றார் முகமது. முகமதுவின் காரில் அவர் காரை ஓட்டிச்செல்ல, அவருடன் இரண்டு நபர்கள் ஏறிக்கொண்டனர். என்ன நடக்கப்போகிறது என்கிற விபரம் ஏதும் தெரியாமல் இருந்தார் முகமதுவின் 22 வயதான மனைவி சஹீதா.


கார், நகர்ப்புறத்தின் ஒரு பெட்ரோல் பங்கில் நின்றது. அங்கிருந்து இறங்கி தப்பி ஓட நினைத்த முகமது இக்பாலை தாவூத்தின் நண்பர்கள் ஆயூப்பும், சையதுவும் ஓங்கி எட்டி உதைத்தனர். அதை சற்றும் எதிர்பாராத முகமது கீழே விழவும், மாறி மாறி கொடுமையான ஆயுதங்களால் தாக்கினார்கள். ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து போனார் முகமது.


'இந்த கைதானே எழுதுகிறது...?' என்று கேட்டபடியே முகமதுவின் வலது கையை பிடித்து கரும்பை உடைப்பது போல உடைத்தான் சையது. 'உன்னால் எங்களுக்கு தொழில் நஷ்டம், நண்பர்கள் போலீசின் துப்பாக்கிக்கு பலி..!' என்று சொல்லிக்கொண்டே முகத்தில் தனது ஷூ காலால் மிதித்தான் ஆயூப்.


மிருகம் வேட்டையாடுவது போல வேட்டையாடினார்கள் முகமதுவை. தட்டிக்கேட்கவும், தடுக்கவும் யாருமில்லை. உடம்பெல்லாம் ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தததும் மயங்கி சரிந்தார் முகமது. அதோடு  இறந்து விட்டான் என்று நினைத்து, மாஹிம் பகுதியை ஒட்டியுள்ள ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் காரில் வைத்து தூக்கி வீசி எறிந்து விட்டு, முகமதுவின் முகத்தில் சிறுநீரை கழித்து விட்டு சென்றனர். நள்ளிரவில் நடந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் போனது. மறுநாள் நண்பகலில் முகமது கண்விழித்த பொழுது உடம்பெல்லாம் வலி. அதோடு ஈயும் எறும்பும் ஒட்டிக்கொண்டு தொந்தரவு செய்வதை கூட தடுக்க முடியாத நிலைமையில் இருந்தார். அந்த நேரம் பார்த்து அந்தப்பக்கம் வந்த வழிப்போக்கன்  ஒருவன், முகமதுவை பார்த்துவிட்டு அந்தப்பகுதியில் இருந்த ஒரு காவலரை அழைத்து வந்தான்.


உடனடியாக முகமதுவை மீட்டு ஜெஜெ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நடந்த சம்பவங்களை போலீஸ் அதிகாரிகளிடம் வாக்கு மூலமாக சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார் முகமது இக்பால்.


இந்த சம்பவம் மும்பையை உலுக்கியது. பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சோகமும், கோபமும் உண்டானது. இந்த சம்பவத்தை சாதாரணமாக விடக்கூடாது என்று சம்பவத்துக்கு காரணமான தாவூத்தினை கட்டம் கட்டி எழுதினார்கள். இந்த சம்பவத்தினால் இந்தியா முழுவதும் பிரபலமானான் தாவூத்.


அடுத்து நடந்தது என்ன?






போதை ஊசி போட்டால் ஓநாயாக மாறுவான்! (தாதா தாவூத் -3)


 

Dawood%20head03.jpg


பத்திரிகையாளர்  இக்பால் கொலையை அடுத்து போலீஸ் வட்டாரம் தாவூத் இப்ராஹிமின் தலைக்கு குறி வைக்கிறது. தாவூத்தின் கூட்டாளிகள் ஆயூப், சையது உள்பட அவனுடன் இருந்த எல்லோரும் தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து, பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆடுன காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பதால் எங்கு சென்றாலும் வழக்கம் போல அவர்களின் கடத்தல் தொழில்களை விடுவதாக இல்லை.


dawood3-03%281%29.jpgபகல் பொழுதுகளில் நன்றாக குடிப்பது, சீட்டு விளையாடுவது என அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வந்ததனர். பகலெல்லாம் அலுவலகம், வேலை என்று உழைத்து களைத்துப்போய் தூங்கும் சாமானியர்கள் போல இல்லாமல் இரவில்தான் தாவூத் அண்ட் கோவிற்கு வேலையே ஆரம்பிக்கும். கடத்தல் தொழில் செய்யும் பொழுது ஒரு சில நேர்மையான அதிகாரிகள்  கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்களால் பல லட்சங்கள் மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். அவர்களை மடக்கவே புதிய திட்டங்களை தீட்டினான் தாவூத்.


மும்பை 1970களில் பெரும் நகரமாக இருந்தது. அங்கு துறைமுகம் இருந்ததால் அதனை மையமாக வைத்து வடக்கு மும்பை, தெற்கு மும்பை என்று நான்கிற்கும் மேற்பட்ட பகுதிகளாக மும்பையை கூறு போட்டு வைத்து அவர்களுக்கு ஏதுவான தொழில்களை செய்து வந்தனர் மும்பையில் இருந்த ஃமாபியாக்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு டான் இருந்தான். சிறு, சிறு குழுக்களாக இயங்கி வந்தனர். அவர்களுக்குள் கடும் தொழில் போட்டிகள் இருந்து வந்ததால் சில சமயங்களில் அரசு அதிகாரிகளுக்கு போட்டு கொடுப்பதும் நடப்பதுண்டு. அது அவர்களுக்குள் பெரும் பகையை உண்டாக்கி, மார்க்கெட் போன்ற பொதுவான இடங்களில் அவர்கள் சந்திக்க நேரும் பொழுது மோதிக்கொள்வது உண்டு. மோதினால் எப்படியும் குறைந்த பட்சம் ஒரு கொலையாவது விழும். பொது மக்களுக்கு இந்த மாதிரி சம்பவங்களால் பெரும் அச்சமும், பயமும் உண்டானது. ஆனால் போலீஸ்காரர்களுக்கு இது போன்ற சம்பவம் நடந்தது என்றால் கொண்டாட்டம்தான். இது போன்ற செயல்களில் ரவுடிகள் அழிகிறார்கள் என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.


மும்பையில் அன்று முதல் இன்று வரை சாராயம் பிசினஸ் கொடிகட்டி பறப்பது யதார்த்தமான ஒன்று. அன்றைய மகராஷ்ட்ரா அரசு மதுவை தடை செய்து இருந்தது. அதனால் மதுவிற்கு கடும் கிராக்கி இருந்து வந்தது. வடக்கு மும்பையை ஒட்டிய பகுதிகளில் சாராயத்தை காய்ச்சி, அதனை லாரி டியூப்களில் கடத்தி வருவது வழக்கம். சாராயம் சின்ன விஷயம் என்றாலும், அதன் மூலம்தான் அதிகபட்சமான நேரடி வருமானம் வந்தது மும்பை மாஃபியாக்களுக்கு. இதனால், மும்பையில் கள்ளச் சாராயம் முதல் உயர் ரக மது வரை அவர்களின் தகுதிக்கு ஏற்ப கடத்தி அதை தொழில் செய்து வந்தனர். இதுபோன்ற தொழிலில் ஆரம்பித்து பிறகு எல்லா முன்னணி கள்ளக்கடத்தல் தொழிலையும் செய்து வந்தவன்  பாசு தாதா என்பவன். இவனிடம் வேலை பார்த்து இவனுக்கு எல்லாமாக இருந்து வந்தவன் காலித் பயில்வான். பல்வேறு வழக்குகள் பிரச்னையில் பாசு தாதா சிக்கிக்கொண்டதால், அவனுக்குப் பிறகு காலித் பயில்வான் தனியாக தொழில் செய்து வளர்ந்து வந்தான். அவனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஈடான வெள்ளிக்கட்டிகள் ஒரு பகுதியில் இருந்தது. அதனை வெளியே எடுக்க முடியாமல் திணறி வந்தான். அப்பொழுது தாவூத்தின் உதவியை நாடியதும் அவனுக்கு தாவூத் உதவி செய்தான்.


நடுக்கடலில் வெள்ளிகட்டிகள் கொண்ட சரக்கு கப்பல், கஸ்டம்ஸ் கண்ணில் படாமல் மும்பைக்கு வர வேண்டும். சிக்கினால் தொழில் உள்பட யார் யார் அதன் பின்னணியில் இயங்குகிறார்கள் என்பதோடு இல்லாமல், பல்வேறு நிலுவை வழக்குகளும் சிக்குபவர்கள் மீது விழும் என்பது தெரிந்தும் தாவூத் துணிந்து செயலில் இறங்கினான். அதற்காக அவன் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. கஸ்டம்ஸ் குடியிருப்பில் புகுந்த தாவூத்தின் ஆட்கள், அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் கஸ்டம்ஸ் உயர் அதிகாரி ஒருவரின் ஆசை மகளை தூக்கிக்கொண்டு போனார்கள். சினிமா பாணியில் நடந்தது போல இருக்கு என்று நினைக்கலாம். இங்கு நடந்த உண்மை சம்பவங்கள்தான் சினிமாவில் பின்பு காட்சிகளாக எடுக்கப்பட்டன.


dawood3-01.jpg


பின்பு அந்த வெள்ளிக்கட்டிகள் அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டன. அந்த சம்பவத்திற்க்கு பிறகு போலீஸ், தாவூத்தை சல்லடை போட்டு தேடியது. சிக்கவில்லை. பத்திரிகையாளர் இக்பால் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு வழக்குகளில் தாவூத் சிக்கினால்தான் பல்வேறு சம்பவங்களை வெளியே கொண்டு வரமுடியும் என்பதால் தாவூத்தை பிடிக்க முடியாமல் திணறி வந்தது போலீஸ். அதற்கு பிறகு தாவூத்திற்கு பல்வேறு வழிகளில் உதவினான் காலித்.


தாவூத்தின் அடாவடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தாவூத்திற்கு போதை ஊசி போடும் பழக்கம் இருந்தது. பல்வேறு சமயங்களில் போதை ஊசியை போட்டால் அவன் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. ஓநாய் போன்று மிகக் கொடூரமாக நடந்து கொள்வான் தாவூத். ஒரு முறை போதை ஊசி பயன்படுத்திவிட்டு காலித்துக்கு எதிரியாக இருந்த, வேறு முகாமை சேர்ந்த ஒருவனை போட்டுத் தள்ள திட்டம் தீட்டினான். திட்டம் தீட்டியதுடன் அதற்காக ஐந்து நிமிடம் கூட தாமதிக்காமல் அவனது இருப்பிடம் நோக்கி சென்றான் தாவூத். அங்கு அவன் இல்லை என்பதால் அவன் வழக்கமாக குடிக்க செல்லும் பார் ஒன்றிக்கு திபு திபுவென்று ஆட்களுடன் நுழைந்த தாவூத்தும், அவனது ஆட்களும்  அந்த பாரை நாசம் செய்கிறார்கள். எதிரிகளும் பயங்கரமாக மோதிக்கொண்டார்கள். துப்பாக்கி வெடிக்கிறது. தாவூத் ஆட்களில் ஒருவன் கொல்லப்படுகிறான். ஆனால், யாரை ஒழிக்க வேண்டும் என்று கிளம்பி போனார்களோ அவனை மட்டும் இல்லாமல், அவனுக்காக வேலை பார்த்த ஐந்து நபர்கள் உள்பட அனைவரையும் கொடூரமாக கொலை செய்கிறார்கள் ஒரே இரவில். தனது நண்பனுக்கு எதிரியாக இருந்த சாம்ராஜ்யத்தை ஒழித்து விட்ட சந்தோஷத்தில் தாவூத் சென்றான். மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும், 'கடத்தல் மாஃபியாகளுக்குள் மோதல்; ஆறுபேர் பலி!'  என்கிற செய்தி வந்தது. யார் இந்த சம்பவத்தை செய்தது என்று ஒட்டு மொத்த மும்பையும் குழம்பியது.


ஒரு வாரம் கழித்துதான் நடந்த கொலைக்கு காரணம் தாவூத் என்று தெரிய வந்தது. அதோடு ஒட்டு மொத்த மும்பையில் இருக்கும் மாபியாக்களுக்கு தாவூத் பற்றி தெரிய வருகிறது. தாவூத்தின் தலைக்கு போலீஸ் குறி வைத்து துரத்தியது. இன்னொரு பக்கம் தாவூத் தனக்கு வேலை செய்ய வேண்டும் என்று குஜராத், மாகி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு முக்கியமான தாதாக்கள் அழைப்பு விடுத்தனர். தாவூத் யார் பக்கமும் போகவில்லை. தாவூத்துடன் நட்பு வைத்து ஒருநாள் விருந்து உண்டாலும், தனக்கு பயன்படும் என்று மும்பையை சுற்றி வந்தனர் பல்வேறு கடத்தல் மன்னர்கள். சிலர் தாவூத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அவனை அவனுடைய நண்பனை வைத்து கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.


dawood3-02.jpg


இதனால் தாவூத்திற்கு அடைக்கலம் கொடுத்து வந்தவர்களும், தம்மால்தான் தாவூத் வளர்ந்தான் என்று பேசத் தொடங்கினர். அதனால் காலித் பயில்வான் உள்பட பல்வேறு நபர்களும் தாவூத்தை பழி வாங்க காத்திருந்தனர். தாவூத், தனது தலை தப்பிக்க வேண்டும் என்றால் உடன் இருக்கும் தலையை பலி கொடுக்க அஞ்சமாட்டான். பல்வேறு சண்டைகளில் தனது குருப்பில் இறந்தவர்களுக்காக பெரியதாக வருந்தியதில்லை என்ற முனகல்கள் தாவூத்தின் குரூப்பில் இருந்து வந்தது.


இக்பால் கொலை வழக்கில் பல்வேறு முக்கியமான புள்ளிகளுக்கும் தொடர்பு இருந்தது. இக்பால் கடத்தல் தொழிலின் ஆணி வேர் யார் என்பதை எழுதி இருந்தார். அதனால் பல்வேறு தலைகள் அந்தக் கொலையில் இருந்து தப்பிக்க, தாவூத் கூட்டாளியான ஆயூப்பை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள்.


அவர்கள் குறித்த தேதியில் கொடூரமாக நடுத்தெருவில் கொலை செய்யப்பட்டான். கைகள், உடம்பு என்று உடம்பில் பல்வேறு இடங்களில் கத்தியால் கிழித்து குதறி இருந்தார்கள். நடுத்தெருவில்,  'காப்பாற்றுங்கள்...!' என்று கத்திக்கொண்டு, ஓட ஓட ரத்தம் தெறிக்கும் அளவிற்கு கொலை செய்யப்பட்டான் ஆயூப்.


முதல் முறையாக தாவூத்தின் ஆள் ஒருவன் பயங்கரமாக கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் தாவூத்தை உலுக்கியதா?


அடுத்து நடந்தது என்ன?


மாஹி கடலில் உடல், வீட்டு வாசலில் தலை; தாதா தாவூத் தொடர்-4


 

dhavooth%204%20logo.jpg


மும்பையில் யார் ஆதிக்கம் செலுத்துவது,யார் அதிகாரம் செய்வது என்கிற அதிகார போட்டி நிலவி வந்தது. தாதாக்கள் தங்களுக்கு என்று தனியாக ஒரு மேனரிசம் வைத்துக்கொண்டு இருந்தனர். எல்லா தாதாக்களும் தங்களுக்கு என்று உடைகள், ஷூ, கூலிங் கண்ணாடி, சிகரெட் என்று அவர்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் மிக விலையுர்ந்த பொருட்களாக இருந்தது. அவர்கள் அதை பெருமையாக தனித்துவமாக கருதினார்கள்.


ஆனால் மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார்களுக்கு தாதாக்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தின் மணம், ஷீ தடம், சிகரெட் துண்டுகள் என்று நுகர்பவவை, கிடைப்பவையை வைத்து மும்பையில் நடக்கும் மோசமான கிரைம்களை எந்த டீம் செய்தார்கள் என்று ஸ்மெல் பண்ண வசதியாக இருந்தது.


dhavooth%204%20550%2011.jpg


தாவூத்தின் நண்பன் கொலை வழக்கிலும் அப்படிதான் கண்டுபிடித்தனர். எந்த குரூப் செய்தது என்று கண்டுபிடித்தனர். ஆனால் யார், யார் செய்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள். தாவூத் டீமில்  யார் செய்தார்கள் என்று அவர்களும் அவர்கள் பங்கிற்கு தேடினார்கள். துப்பு கிடைக்கவில்லை. ஆனால் தாவூத்தின் தொழிலில் மாற்றம் இல்லை. அளவிற்கு அதிகமாக பணமும் அதிகாரமும் குவிந்தது. தாவூத்திற்க்கு இப்பொழுது போலீஸ் வட்டாரங்களில் உளவு சொல்ல ஆட்கள் இருந்தார்கள்.


அவர்கள் சொல்லும் செய்தியைப் பொறுத்து தாவூத் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் கட்டுக்களை அள்ளி வீசினான். அதனால் பல்வேறு அதிகாரிகள் அவனுக்கு நெருக்கமாக வலம் வந்தனர்.


சில மாதங்கள் ஓடின. தாவூத் நண்பனை நான்தான் கொலை செய்தேன் என்று பாட்லா என்பவன் உள்ளூர் சாராய கடைகளில் சொல்லி மிரட்டி வந்தான். அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு எல்லோரையும் கொடூரமாக தாக்கி வந்தான். யாரிடமும் இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு மேல் பேசமாட்டான். கத்தியை காட்டி மிரட்டுவதும் அடிப்பது, கீழே தள்ளி கழுத்தில் மிதிப்பது போன்ற கொடூரமான செயல்களை செய்து வந்தான். அவனைப்பற்றி தாவூத்திற்கு தெரிய வந்ததும் தாவூத்தும் அவனது ஆட்களும் வழக்கமாக அவன் வரும் கடைக்கு சென்றார்கள். குடித்து விட்டு பணம் கொடுக்காமல் பல முறை சென்றுவிடுவான். அதனால் அவனிடம் எந்த சர்வரும் ஆர்டர் எடுக்க வரமாட்டார்கள்.          


dhavooth%204%20550%2022.jpg


பாட்லா வந்ததும் அவனது நடவடிக்கைகளை பார்த்து எரிச்சலான தாவூத்தின் ஆட்கள் அவனை பாட்டிலால் தாக்கினார்கள். நிலை குலைந்து போன பாட்லா அப்படியே சரிந்து விழுந்தான். அதோடு விடாமல் அவன் கழுத்தில் கத்தியை வைத்து முகத்தில் கத்தியால் கோடு போட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவனை கத்தியால் கிழித்துக்கொண்டு இருந்தனர். இருந்தாலும் பாட்லா அசரவில்லை.


இறுதியாக அவனது வலது கையில் உள்ள விரல்கள் ஒவ்வொன்றையும் கத்தியால் நறுக்கினார்கள். இந்த காட்சியைக் கண்டு பாரில் குடிக்க வந்தவர்கள் சிதறி ஓடினர். ஒரு சிலர் மட்டும் ஓடி ஒளிந்து கொண்டு நடந்தவற்றை பார்த்துக்கொண்டு இருந்தனர். வந்திருப்பது தாவூத் இப்ராஹீம் என்பதை தெரியாத சிலர் பாரில் கலாட்டா என்று காவல்துறைக்கு போன் செய்தார்கள்.


போலீஸ் வந்து சேர்வதற்குள் பாட்லாவின் கையில் உள்ள அனைத்து விரல்களும் துண்டாக நறுக்கப்பட்டு தரையில் சிதறிக்கிடந்தன. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி நடுத்தெருவில் கிடந்தான் பாட்லா. என்ன காரணத்திற்காக பாட்லாவை கொலை செய்யாமல் விட்டனர் என்று காவல்துறைக்கு புரியவில்லை. போலீஸ் விசாரணையில் மோட்டிவ் கொலைக்கான காரணத்தை சொல்லி பாட்லாவை சிறையில் அடைத்தனர்.


மும்பை கடத்தலின் பிதாமகன் வீழ்ந்த கதை  


dhavooth%204%20350%201.jpgமும்பையில் அடிக்கடி இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், தங்கம் கடத்தல் உள்பட பல்வேறு சம்பவங்களால்  கிரைம் ரேட் அதிகமாகி கொண்டு இருந்து. இதற்காக பல்வேறு தனிப்படை போட்டு வேலை செய்தது போலீஸ். ஆனாலும் கடத்தல், கொலை உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டே இருந்தன. மும்பையின் தாதா கலாசாரத்தை, கடத்தல் தொழிலை யார் கொண்டு வந்தது என்று ‘ரா’ அமைப்பு களத்தில் இறங்கி விசாரிக்க ஆரம்பித்து. அதில் மூத்த முன்னோடியாக கரீம் லாலா என்பவர் வந்தார்.


ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பிழைக்க வந்த குடும்பம் கரீம் லாலாவின் குடும்பம். ஆப்கானிஸ்தானில் இருந்து சில ஆயிரக்கணக்கான மக்கள் மொத்தமாக அவர்கள் நாட்டை விட்டு மும்பைக்கு வந்தனர். வந்தவர்கள் மும்பையில் மார்கெட், துறைமுகம், உள்பட பல்வேறு இடங்களில் கூலி வேலைகளை செய்துவந்தனர்.


அவர்களைப்போலதான் கரீம் லாலாவின் குடும்பமும் வந்தது. பள்ளிப்படிப்பை தாண்டாத கரீம் லாலா தனது பதினெட்டு வயதில் கள்ளசாராயம் கடத்த ஆரம்பித்தார். அதன்பிறகு தடை செய்யப்பட்ட பல்வேறு பொருட்களை கடத்தி வந்ததால் செல்வாக்கு உயர்ந்தது. கரீம் லாலாவிடம் மிகவும் சொற்பமான தொகைக்கு வேலை செய்ய நிறைய ஆப்கானிஸ்தான் நபர்கள் வேலைக்கு வந்தனர். இருந்தாலும் மும்பையில் நடந்து வரும் நடைமுறை உள்ளூர் அரசியலை சமாளித்து வேலை பார்க்க உள்ளூர் ஆட்கள் தேவைப்பட்டனர். அதன்பிறகு பல்வேறு நபர்கள் கரீம் லாலாவிற்கு வேலை செய்ய ஆரம்பித்தனர்.


இது போன்ற ஒரு தருணத்தில் சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டிக்கொண்டு இருந்த இளைஞன் ஹாஜி மஸ்தான் என்பவரை கரீம் லாலாவிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். பின்னாளில் அவர்தான் பாலிவுட்டின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளாராக வலம் வந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த ஹாஜி மஸ்தான் சில ஆண்டுகள் கழித்து கரீம் லாலாவிடம் இருந்து பிரிந்து வந்து கடத்தல் தொழில் செய்ய ஆரம்பித்தார்.


இருபது வயதில் தொடங்கிய ஹாஜி மஸ்தானின் கடத்தல் பயணம் மும்பையில் யார் ஆட்சியை பிடிப்பது, யார் பாலிவுட்டில் சினிமா ஸ்டாராக நீடிப்பது, கடத்தல் உள்பட பல்வேறு தொழில்களில் அவர்களுக்கு என்று தனியாக தொழில் ஏரியாக்கள் பிரித்து கொடுப்பது உள்பட பல்வேறு டான் வேலைகளை செய்து வந்தார்.


dhavooth%204%20550%202.jpg


அரசியல்பலமும், சினிமாவும் பலமும் ஒன்றாக இருந்ததால் மும்பையின் அசுர சக்தியாக வளம் வந்தார் ஹாஜி மஸ்தான். எப்பொழுதும் வாயில் வெளிநாட்டு சிகரெட், கோட், சூட், தலையில் ஸ்டைலான குல்லா, வெள்ளை நிற பென்ஸ் கார் என்று ஒரு 'டானு'க்குரிய கனக் கச்சிதமான தோற்றத்தில் வலம் வருவார் ஹாஜி மஸ்தான். கரீம் லாவிற்கும் ஹாஜி மஸ்தானுக்கும் இடையில் தொழில் போட்டி இருந்து வந்தது. யார் அதிகாரம் செலுத்துவது என்கிற அதிகார போட்டியில் இவர்கள் அணிகளும் பார்க்கும் இடங்களெல்லாம் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொள்வார்கள்.


இதனால் பொது மக்களுக்கு பெரும் அளவில் பாதிப்பு இருந்தது. இவர்கள் போடும் சண்டையில் பல அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். அதோடு இல்லாமல் மார்கெட், துறைமுகம், நடுவீதி என்று எல்லா இடங்களிலும் சண்டை துப்பாக்கி, கொடூர ஆயுதம் உள்பட பல்வேறு பொருட்களால் தாக்கி கொள்வதால் ஆட்களோடு நிறைய பொருட்களும் சேதாரம் ஆனது.


dhavooth%204%20550%203%281%29.jpg


இருவரையும் அடக்க  போலீஸ் பல்வேறு யுக்திகளை கையாண்டது. இருவருக்கும் பொதுவான ஆட்களை வைத்து சமாதான பேச்சு வார்த்தையை நடத்தியது. பலனில்லை அடுத்த இரண்டு நாட்களில் கரீம் லாலாவின் ஆள் ஒருவனை ஹாஜி மஸ்தானின் ஆட்கள் தலையை வெட்டி எடுத்து வந்து கரீம் லாலாவின் வீட்டு வாசலில் போட்டுவிட்டு உடலை மாஹி கடல் பகுதியில் தூக்கி போட்டு விட்டு சென்றனர். இருவருக்குமான ஹேங் வார் அப்போது உச்சகட்டத்தில் இருந்தது.


மும்பையில் யார் புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் ஹாஜி மஸ்தான், கரீம் லாலாவின் அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்கிற நிலைமை வந்தது. இதனால் இந்திய அரசு பயங்கரமான நெருக்கடியை சந்தித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த அரசு ஒரு முடிவு எடுத்தது. அந்த முடிவுதான் இருவருக்கும் 'தி டான்' என்கிற பெயரும், அவர்களின் தொழில் உள்பட எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக சரிய காரணமாக இருந்தது.


அது என்ன முடிவு?


http://www.vikatan.com/news/article.php?aid=53435




பிணம் கடத்தி வந்த வைரக்கற்கள்! (தாதா தாவூத் தொடர்-5)  

             ் தன்னை எப்போதும் மற்றவர்களை விட அதிக புத்திசாலியாகவும் , திறமையானவனாகவும் காட்டிக்கொள்வதில் விருப்பம் கொண்டவன் தாவூத். அதை பல்வேறு சம்பவங்களில் உணர்த்தியும் இருக்கிறான். பல சமயங்களில் அவனது நடவடிக்கைகள் எல்லாம் கை தேர்ந்த அரசியல்வாதிபோல இருக்கும். யாராலும் செய்ய முடியாது என்று தவிர்க்கப்பட்ட 'விஷயத்தை' கொஞ்சம் கூட உயிர் பயமின்றி சவாலாக செய்து முடிப்பது தாவூத்துக்கு பிடிக்கும்.

சிங்கப்பூர் தேசம் வளர்ந்து வந்த நேரம். எல்லோரின் பார்வையும் சிங்கப்பூர் பக்கம் இருந்து வந்தது.   சுற்றுலா உள்பட பல்வேறு தொழில்கள் மூலம் அந்த நாட்டின் வருமானம் கொட்டியது. இந்தியாவில் இருந்து பெரும்பாலான பணக்கார தொழில் அதிபர்கள் ஓய்வுக்காக சிங்கப்பூர் சென்று வந்தனர். மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ஒருவர்,  சிங்கப்பூருக்கு டூர் செல்வதாக சொல்லிவிட்டு, அங்கு வைத்து தனது பிசினஸ்களை செய்து வந்தார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை வரி கட்டாமல் இந்தியாவுக்கு  வாங்கியும் வந்தார். லண்டனைச் சேர்ந்த பெரும் புள்ளிகளுக்கு சிங்கப்பூரில் வைத்து வரி கட்டாமல் வைரங்களை விற்றும் வந்தார். அடிக்கடி வந்து போனதால், 'இவர் சுற்றுலாவுக்கு வரவில்லை; ஏதோ செய்கிறார்' என்று இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகள், அவர் மீது சந்தேகப் பார்வையை செலுத்தினர்.

அதற்கு ஏற்றாற்போல மும்பையில் இவரது நடவடிக்கைகள் இருந்தன. மும்பையின் டான்களான கரீம் லாலா மற்றும் ஹாஜி மஸ்தான் ஆகிய இருவருக்கும் நெருக்கமாக இருந்தார். இருவருக்கும் அன்பளிப்புகளை அள்ளி வழங்கினார். தனது தொழிலில் எந்த வித பின்னடைவும் வந்துவிடக்கூடாது என்று மும்பையின் மிகப்பெரிய தலைகளுக்கு தானாக முன்வந்து சலுகைகள் செய்து வந்தார்.

அதனால் மார்வாடி சமூகத்தை சேர்ந்த அந்த வைர வியாபாரியின் உண்மையான பெயர் மறைக்கப்பட்டு,  லால் சேட் என்றால் மும்பையின் அனைத்து பெரும் புள்ளிகளுக்கும் தெரிந்து இருந்தது. இந்த விஷயம் மெல்ல மெல்ல போலீஸ், கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கும் தெரிந்து இருந்தது. யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டார் வைர வியாபாரி. அரசுக்கு கட்ட வேண்டிய வரிப் பணத்தைக் கட்டாமல் அதிக அளவில் கருப்பு பணத்தை வைத்து இருந்தார். வரி கட்ட வேண்டிய பணத்தில் ஒரு சிறிய தொகையை,  அந்தந்தத் துறையின் அதிகாரிகளுக்கு கொடுத்து வந்தார்.

அதனால் பல்வேறு அதிகாரிகளும் அவருக்கு நெருக்கமாக இருந்தார்கள். ஒரு சில நேர்மையான அதிகாரிகளும் இருந்து வந்ததால் அந்த வைர வியாபாரியை திட்டமிட்டு மடக்க காத்திருந்தனர்.

மிக விலையுயர்ந்த வைரக்கற்கள் அடங்கிய ஒரு பெட்டியை சிங்கப்பூரில் இருந்து இந்தியா கொண்டுவர வேண்டும். அந்த கற்களின் மதிப்பு அப்போதே இரண்டு கோடிகள். கஸ்டம்ஸ் அதிகாரிகள் தன்னை மடக்கப்போவதாக லால் சேட்டுக்குத் தகவல் வந்தது. சிங்கப்பூர் சென்றால் வழக்கமாக செல்லும் ஒரு ஹோட்டல் ஒன்று இருந்தது. அந்த ஹோட்டலில் மும்பையைச் சேர்ந்த ஒருவன் வேலை செய்து வந்தான். அவனின் உபசரிப்பில் கொஞ்ச நாளில் அவனையும் தன்னுடைய ஆளாக பயன்படுத்திக்கொண்டார் லால் சேட்.

அதனால் சிங்கப்பூரில் லாலுக்கு எல்லாமாக இருந்துவந்தான் மும்பைக்காரன். தன்னை இந்திய அதிகாரிகள் கைது செய்தால் எளிதாக வெளியே வந்து விடலாம், சிங்கப்பூர் அரசு கைது செய்தால் வெளியே வரமுடியாது. மரண தண்டனைகூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று பயந்த லால், தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து நேராக கிளம்பி,  மும்பைக்காரன் அறையில் அந்த வைரக்கற்களை, அவனது கழிவறையில், அவனுக்கே தெரியாமல் ரகசியமாக வைத்துவிட்டு உடனடியாக இந்தியாவுக்கு ஃபிளைட் பிடித்தார்.

இந்தியாவில் லால் சேட்டை மடக்கி கடுமையாக சோதனைகள் செய்தார்கள். நடந்த எல்லா சோதனைகளிலும் எதுவும் கிடைக்கவில்லை. வெறும் சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார் சேட். ஒரு மாத காலம் ஆகிவிட்டது. பண நெருக்கடியால் சேட் சிக்கி தவித்து நின்றார். வேறு வழியில்லாமல் பல்வேறு நபர்களின் உதவிகளை நாடினார்.

பல்வேறு நபர்கள் சிரமம் எடுத்தும், வைரக்கற்களை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை. கடைசியாக தாவூத்திடம் வந்தார். தாவூத் அதற்கு கைமாறாக பாதிக்குப் பாதி பங்கு கேட்டான். சேட்டும் ஒப்புக்கொண்டு எப்படியாவது வைரம் வந்தால் போதும் என்று தாவூதின் டீலுக்குத் தலையாட்டினான்ர்.

வைரத்தை சொன்னபடி சொன்ன தேதியில் லாலிடம் கொண்டுவந்து சேர்த்தான் தாவூத். மிரண்டு போனார் லால். என்ன செய்வது என்று தெரியாமல் தாவூத்துக்கு சலாம் அடித்து நன்றி கூறினார். எப்படி கொண்டு வந்தாய் என்று சேட் எத்தனையோ முறை கேட்டும், தாவூத் அதனைப்பற்றி வாய் திறக்கவே இல்லை. ஆனால் அந்த ரகசியம் தாவூதின் சகோதரருக்கும்,தாவூத்தின் நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்து இருந்தது.

பயங்கரமான கண்காணிப்பு வளையத்தில் இருந்து வந்த லால் சேட்டின் வைரத்தை சிங்கப்பூரில் இருந்து மும்பைக்குக் கொண்டுவர பல்வேறு சிரமங்கள். கெடுபிடிகள் இருந்து வந்தன. அந்த நேரம் பார்த்து சிங்கப்பூரில் வேலை செய்துவந்த தாவூத்தின் கூட்டாளி ஒருவனின் உறவினர், விபத்து ஒன்றில் இறந்து விட,  இறந்தவனின் உடலை மும்பைக்குக் கொண்டுவர முடியாமல் தவித்து வந்தனர். இந்த விஷயம் தாவூத்துக்குத் தெரிய வந்ததும் அதனை வைத்து இரண்டு திட்டங்கள் தீட்டினான்.

இறந்தவரின் உடலை கொண்டுவர எல்லா ஏற்பாடுகளும் செய்துதருவதாக வாக்கு கொடுத்துவிட்டு, தனது கூட்டாளி  இஜாஜாஸ் என்பவனை உடனடியாக சிங்கப்பூர் அனுப்பினான். அங்கே வழக்கமாக செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, ஜெனெரல் மருத்துவமனையில் இருந்த பாடியை வாங்கினார்கள். அங்கிருந்து ஏர்போர்ட் வரும் வழியில் ஒரு சிலரின் உதவியோடு இறந்தவனின் உடலில் வைரக்கற்களை மறைத்து வைத்துவிட்டான் இஜாஜாஸ்.

மரத்திலால் ஆன சவப்பெட்டியை ரெடி செய்து அதனுள் பாடியை  வைத்து, சிங்கப்பூரில் இருந்த அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, பத்திரமாக இந்தியா செல்லும் ஃபிளைட்டில் ஏற்றிவிட்டனர்.

அதே சமயம் அங்கு பத்திரமாக வந்தாலும், இந்தியாவில் இருந்து தாவூத்தின் ஆட்களின் சிங்கப்பூர் பயணத்தின் உள்நோக்கம் பற்றி தெரிய முடியாமல் குழம்பி இருந்தனர். பார்சல் உள்பட இறந்த உடலினை பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவருக்கு லம்பாக ஒரு தொகையை கொடுத்து தாவூத்தின் ஆட்கள் சரிசெய்து வைத்து இருந்தனர். சிறிய அளவில் எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் வருகிறது. அதை கண்டுகொள்ளாமல் விடவேண்டும் என்று சொல்லி இருந்தனர்.

வைரம் வரும் கதையை மறைத்து இருந்தனர். சொன்னபடி தாவூத்தின் நண்பன் பிணத்தின் சவப்பெட்டிக்குள் ஒரு சில கடிகாரங்கள், ட்ரான்ஸ்சிஸ்டர்கள் என்று மறைத்து வைத்து கொண்டுவந்தான்.சோதனை செய்யும் இடம் வந்ததும் மேலோட்டமாக பார்த்த அதிகாரி கண்டுகொள்ளாமல் அனுப்பிவிட்டார்.

எல்லா சோதனைகளும் முடிந்து மும்பையில் இருந்து பிணம் நேராக நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. இடையில் இடைமறித்த தாவூத், வைரங்களை மட்டும் வாங்கிவிட்டு பிணத்தை அனுப்பிவிட்டான். இப்படிதான் தாவூத் யாரும் செய்ய முடியாத செயலை துணிந்து செய்தான். பல்வேறு பொருளாதார நெருக்கடிகளில் இருந்து லால் விடுபட்டார். அதே நேரத்தில் மிகப்பெரிய பணத்தை ஒரே வேலையில் முழுதாக கையில் பார்த்தான் தாவூத்.

நடந்த சம்பவங்கள் மெல்ல மெல்ல கரீம் லாலாவுக்கும் மஸ்தானுக்கும்  தெரியவந்தது. ஆனால் எப்படி செய்தான் என்று யாருக்கும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா சம்பவங்களிலும் அடாவடித்தனம் கை கொடுக்காது என்று பல்வேறு நபர்கள் உணரத் தொடங்கினர். தாவூத்தின் இந்த திறமையை பற்றி வெளியே எல்லோரும் பேசி முடிப்பதற்குள்,  தாவூத் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டி இருந்தான்.

இனக் குழுக்கள் போல கடத்தல் குழுக்களும் மும்பையில் நிரம்பி இருந்தது. அதனால் அரசுக்கு பெரும் நெருக்கடியான சூழல் நிலவி வந்தது. இந்தியாவின் பெரும் வரி ஏய்ப்பு சம்பவங்கள் மும்பை, குஜராத், டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் அரசுக்கு தெரிந்தே நிகழ்ந்து வந்தது. போதிய ஆதாரங்கள் இல்லாமல் அரசு வேடிக்கை மட்டும் பார்த்து வந்தது.

பல்வேறு திறமையான அதிகாரிகளை பல்வேறு இடங்களுக்கு போட்டுப்பார்த்தனர். ஆனாலும் கடத்தல்கார்கள், கருப்பு பணக்காரர்கள், தொழில் அதிபர்களின் ஆட்டங்கள் அடங்கவே இல்லை. வழக்கமாக நடைபெறும் எல்லா திரைமறைவு தொழில்களும் வெகு ஜரூராக நடந்துகொண்டு இருந்தன. 

பிக்பாக்கெட் திருடன் முதல் பெரிய டான்கள் என எல்லோரையும் சிறைக்குத் தள்ள அரசு காத்திருந்தது. அதற்கான நேரமும் வந்தது. இந்த முறை நாட்டுக்கு அச்சுறுத்தல் தந்துவந்த பல்வேறு முக்கிய நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் தாவூத்தும் ஒருவன்



No comments:

Post a Comment