Sunday 22 November 2020

சில நகைகளின் பெயர் பட்டியல்

 

சில நகைகளின் பெயர் பட்டியல் 



புன்சிரிப்பு முகத்திற்கு அழகு என்பர். குமிழ்வாயின் புன்சிரிப்பு எனும் அலங்கார உவமை வரி இலக்கியங்களில் உண்டு. புன்சிரிப்பு என்கிற புன்னகையுடன் பொன் நகையும் சேர்ந்தால் அழகு. அது பெண்களின் அழகுக்கு அழகூட்டும் என்பர். தமிழர் பண்பாட்டில் பழங்காலம் தொட்டே பொன் நகைகளுக்குத் தனி இடம் உண்டு. 

தமிழ் இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி எனும் ஐந்தும் அணிகளின் அதாவது நகைகளின் பெயரையே கொண்டிருக்கின்றன. 

சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி 

மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி 

குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். 

வளையாபதி - வளையல் அணிந்த பெண் 

சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் கிரீடத்தில் பதிக்கப்படும் மணிக்கல். 

இப்படி தமிழ்பண்பாட்டிலிருந்து பிரிக்க முடியாத இந்த நகைகளை அணிந்து மகிழ்ந்த மனிதன் அதை தான் வணங்கும் தெய்வங்களுக்கும் சூட்டி மகிழ்ந்தான். கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் நகைகளின் பெயர்களை ஏராளமாக நாம் காண முடிகிறது. அவற்றில் பல இன்று நாம் அணியும் வழக்கத்திலிருந்தே காணாமல் போய்விட்டன. நமது பழம் பண்பாட்டில் இருந்து வந்த சில நகைகளின் பெயர் பட்டியல் இதோ:

ஏகவல்லி [கழுத்து அணி - ஒற்றைச் சரமாலை]

காறை [கழுத்து அணி ]

கச்சோலம் [ இடை அணி]

கலாவம் [இடை அணி]

காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி]

மோதிரம் [இரத்தினம் முத்து ]

முத்து மாத்திரை [காது அணி]

பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ]

பதக்கம். 

காந்திகை ( கழுத்து அணி)

கடகம்,

கொப்பு ( காதணி)

மகுடம், 

குதம்பை ( காதணி)

பட்டம் (மகுடம்)

பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்)

சப்தசரி ( ஏழு சங்கிலிகள்)

சிடுக்கு, சூடகம் (வளையல்)

பாத சாயலம் ( கால் அணி)

சூரி சுட்டி (நெற்றியில் அணிவது)

வீரப்பட்டம் (தலையில் அணிவது)

வாளி (காதணி)

காறை கம்பி (காதணி)

திருகு, மகரம் (காதணி)

உருட்டு திரிசரம் ( கழுத்து அணி)

தூக்கம் (காதணி)

நயனம் (கண்மூடி)

பொற்பூ,

பொட்டு.

பாசமாலை

தோள் வளை

தாலி

தாலி மணிவடம் 

புலிப்பல் தாலி

தாழ்வடம்

தகடு

திரள்மணி வடம்

வளையல்

வடுக வாளி

வடம்

தோடு

திருவடிக்காறை

கால் வடம்

கால் மோதிரம்

சன்ன வடம் திருகு

கால் காறை

கைக் காறை மாலை

பாம்படம்

தண்டட்டி 

இப்படி இன்னும் எத்தனையோ.....

இந்த நகைகளில் பதிக்கப்பட்ட நவமணிகளின் வகைகள் முத்துக்களில் 23 வகையும் இரத்தினங்களில் 11 வகையும் வைரங்களில் 11ம் இருந்தன என்று தெரியவருகிறது.

No comments:

Post a Comment