Thursday 4 January 2018

SAVITHRI NOT ONLY ACTRESS , KIND HEARTED WOMAN PHILANTHROPIC BORN JANUARY 4 ,1934.



SAVITHRI NOT ONLY ACTRESS , 
KIND HEARTED WOMAN  PHILANTHROPIC 
BORN JANUARY 4 ,1934.


நடிகர்களில் என் .எஸ் .கிருஷ்ணன் ,நடிகைகளில் சாவித்திரி ,புராணத்தில் கர்ணன்  இம்மூவரும்  ஒரே நேர் கோட்டில் கொடுத்து வாழ்ந்தவர்கள்   


ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

முதன் முதலாக, சாவித்திரி, ஜெமினியை சந்தித்தது, மனம் போல் மாங்கல்யம் படப்பிடிப்பில் தான்!
வெள்ளை நிறச் சட்டை, அதற்கு இணையாய் போட்டிருந்த கால்சட்டையில், எடுப்பாய் இருந்த அந்த இளைஞர், சாவித்திரியை நோக்கி வந்தார்.
அவரைப் பார்ப்பதை தவிர்க்க முனைந்த சாவித்திரியால், கண்களை அப்புறப்படுத்த முடியவில்லை. அவர் அருகில் வந்ததும், அவர் மனதுள் இனம் புரியாத பரவசம்!

'இவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன்...' என்று, இயக்குனர் பி.புல்லையா, அந்த இளைஞனை அறிமுகப்படுத்த, அந்த இளைஞரோ, சாவித்திரியைப் பார்த்து, 'ஹலோ...' சொல்லி, நகர்ந்து சென்றார்.
சாவித்திரிக்கு, அவருடன் பேச வேண்டும் என்ற துடிப்பு. ஆனால், வெறும் ஒற்றை வரியில் பேசிச் சென்றவரிடம், 'நாம் வலிந்து பேசுவதா...' என நினைத்து, தன் ஆர்வத்திற்கு தடை விதித்துக் கொண்டார். முதல் சந்திப்பிலேயே, சாவித்திரிக்கு பரவசத்தை ஊட்டிய அந்த இளைஞர் தான், ஜெமினி கணேசன்!
ஜெமினி கணேசனின் உண்மையான பெயர், ராமசாமி கணேசன். தஞ்சை புதுக்கோட்டையை சேர்ந்த, நடுத்தர பிராமண வகுப்பை சேர்ந்தவர். தமிழ் திரைத்துறையில் ஆரம்ப கால நடிகர்கள், நாடக பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஆனால், எவ்வித நாடக அனுபவமும் இன்றி, திரையுலகிற்கு வந்தவர் ஜெமினி கணேசன்.

எஸ்.எஸ்.வாசனின், ஜெமினி ஸ்டுடியோவில், நிர்வாக மேலதிகாரியாகப் பணியாற்றிய காரணத்தால், தன் பெயரோடு, ஜெமினியை சேர்த்துக் கொண்டார். பின்னாளில் ஜெமினி என்ற அடைமொழிப் பெயரே, அவரின் நிஜப்பெயர் போல் ஆனது.
ஜெமினி புரொடக் ஷன் தயாரித்த, மிஸ் மாலினி என்ற படத்தின் மூலம், முதன்முதலாக திரைக்கு அறிமுகமானார் ஜெமினி கணேசன். தனக்கென்று தனி பாணியை வகுத்து, காதல் மன்னனாய் உலா வந்தவர், அக்கால கல்லூரி பெண்களின் கனவு நாயகனாகவும் திகழ்ந்தார்.
தமிழில், பாதாள பைரவி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் சாவித்திரி. இதற்கு முன், தெலுங்கில், சம்சாரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
பாதாள பைரவி படத்தை தொடர்ந்து, தமிழில், தேவதாஸ் மற்றும் பரோபகாரம் ஆகிய படங்களில் நடித்தார் சாவித்திரி. தேவதாஸ் மற்றும் பாதாள பைரவி இரண்டும் பெரிய வெற்றியை பெற, தேவதாசின் பார்வதி, தமிழகம் மறக்க முடியாத கதாபாத்திரம் ஆனது.

நெல்லூரைச் சேர்ந்த பி.புல்லையா, 1937ல், சாரங்கதாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக, திரையுலகில் அடி எடுத்து வைத்தார். இவர், தன் படத்தில் நடித்த கதாநாயகி சாந்தகுமாரியை, மணந்து கொண்டார்.
பார்வதி கதாபாத்திரத்தில், சாவித்திரியின் நடிப்பை கண்ட இயக்குனர் புல்லையா, நாராயணன் அன் - கோ கம்பெனி சார்பில், தான் இயக்க இருந்த, மனம் போல் மாங்கல்யம் படத்தில், சாவித்திரியை ஒப்பந்தம் செய்தார்.
இப்படத்தில் ஜெமினி, சாவித்திரி மற்றும் சுரபி பாலசரஸ்வதி நடித்திருந்தனர்.

முதல் நாளில் ஜெமினியை பார்த்ததில் இருந்து, சாவித்திரியின் மனதில் அவரின் நினைவு தான். 15 வயதை தாண்டிய சாவித்திரிக்கு, மனதில் காதல் பட்டாம்பூச்சி, இறக்கை விரித்து, பறக்க ஆரம்பித்தது.
தெலுங்கு பெண்ணான சாவித்திரிக்கு, தமிழ் கடினமாக இருந்தது. ஒரு சில சொற்களை தவிர, தமிழில் வேறு எதுவும் பேச தெரியாமல், படத்தில் நடிக்க திணறினார். சாவித்திரியின் நிலை கண்டு அவருக்கு உதவ வந்தார் ஜெமினி. கலகலப்பான குணத்துடன், மனதில் பட்டதை, 'பளிச்' என்று பேசும் ஜெமினியின் பேச்சு, சாவித்திரிக்கு அவர் மேல் காதலை ஏற்படுத்தியது.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த சாவித்திரி, தன் தந்தையின் அரவணைப்பையோ, ஆறுதலையோ பெற்றதில்லை. இந்நிலையில், ஜெமினியின் அரவணைப்பு, அவருக்கு பெரும் ஆறுதலைத் தந்தது.
படப்பிடிப்பு சமயங்களில், ஜெமினியை சீண்டி, அவர் கோபப்படுவதை பார்த்து ஆனந்தப்படுவதும், தன்னை விட்டு அவர் வேறு யாரிடமாவது பேசினால், பொறாமை கொள்வதும் என, அவர் மனம் ஜெமினியுடன் இரண்டற கலக்கத் துவங்கியது.
சாவித்திரியின் மனநிலை, ஜெமினிக்கு தெரியாமல் இல்லை. அவரும் அந்த நிலைமைக்கு மாறி, நாட்கள் பலவாகி இருந்தன.
சாவித்திரியை காதலிக்க துவங்கிய ஜெமினியின் மனதில், எங்கோ ஒரு மூலையில், இரண்டு பாச முட்கள் குத்தி கொண்டே இருந்தன.
ஏற்கனவே, இரு பெண்களை திருமணம் செய்தவர் ஜெமினி. இந்து திருமண சட்டத்தின்படி, முதல் மனைவியை மண முறிவு செய்யாமல், இன்னொரு மணம் புரிய முடியாது. ஆனால், ஜெமினி எப்படி, மூன்று பெண்களை, பகிரங்கமாக மணம் முடித்தார் என்பது தான், இன்று வரை விளங்காத மர்மம். 

சென்னை கிறித்தவ கல்லூரியில் படிப்பை முடித்த பின், தன், 19வது வயதில், ஜூன், 30, 1940ல் அலமேலு என்ற பாப்ஜியை திருமணம் செய்தார் ஜெமினி.
அதன்பின், தன் முதல் படமான, மிஸ் மாலினி படத்தில், தன்னுடன் நடித்த புஷ்பவல்லியை மணந்தார். இதில் சிறப்பு என்னவென்றால், புஷ்பவல்லியும், ஜெமினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதே!
சாவித்திரியை காதலிக்கும் அதே சமயத்தில் தான், புஷ்பவல்லியுடனும், ஜெமினியின் காதல் தொடர்ந்தது.
ஜெமினியை காதலிக்க ஆரம்பித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது சாவித்திரிக்கு தெரியும்; ஆனால், புஷ்பவல்லியுடன் நடந்த காதல் திருமணம், அவருக்கு தெரியாத ஒன்று!
மனம் போல் மாங்கல்யம் படம் வளர்ந்த வேகத்தை விட, ஜெமினி - சாவித்திரியின் காதல் வளர்ந்த வேகம் அதிகம்!

பதினைந்து வயதை தாண்டிய சாவித்திரிக்கு, ஜெமினியின் அரவணைப்பு, சொர்க்கமாக தெரிந்தது. தான் தலை சாய்ந்து தூங்கும் அந்தத் தோள்கள், தனக்கு மட்டுமே சொந்தம் என நினைத்தார். கடைகளில் அவர் ஏதாவது பொருள் வாங்க போனால், முதலில், ஜெமினிக்கு பிடித்தமானதை தான் தேடுவார்.
இவர்களின் காதல் பார்வைகள், படக் குழுவினர் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது.
ஒருநாள், படப்பிடிப்புக்கு, ஜெமினி வர சற்று காலதாமதம் ஆகிவிட்டது; 'ஜெமினி வரும் வரை ஏன் நேரத்தை கடத்த வேண்டும், சாவித்திரி நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்கலாம்...' என்றார் இயக்குனர் புல்லையா. ஆனால், அதற்கு ஒத்து கொள்ளவில்லை சாவித்திரி. ஜெமினியை பார்க்காமல், தன்னால் நடிக்க முடியாது என்பது, அவருக்கு மட்டும் தானே தெரியும்!

காலதாமதமாக வந்த ஜெமினியை கண்டவுடன், சாவித்திரியின் கண்களில், தாரை தாரையாக கண்ணீர்! காதல் எவ்வளவு வலிமையானது என்பதை, அப்போது தான் தெரிந்து கொண்டனர் படக்குழுவினர்.
குச்சுப்புடி நடனம் ஆடுவதில் திறமையானவர் சாவித்திரி. அந்த நடனத்தின் வாயிலாக தான், திரைப்பட வாய்ப்பை பெற்றார்.
சிறுவயதிலேயே திரையுலகில் காலடி எடுத்து வைத்த சாவித்திரி, தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான போது, அவரின் வயது, 15!
யார் கண்ணீர் விட்டு அழுதாலும், சாவித்திரியால் தாங்க முடியாது. கஷ்டம் என்று வந்தவர்களுக்கு, இல்லை என்று அவர் கை விரித்ததில்லை.

சம்சாரம் என்ற தெலுங்கு படத்துக்கு பின், விஜயா புரொடக் ஷன்ஸ் தயாரித்த, பாதாள பைரவி என்ற படத்தில், ஒரு நடனக் காட்சியில், தெலுங்கு மற்றும் தமிழ் என, இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருந்தார், சாவித்திரி.
ஒருநாள், படப்பிடிப்பில், கடைநிலை ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டார். சாவித்திரி கையில், காசு எதுவும் இல்லாத ஆரம்ப கால நேரம் அது. மயங்கி விழுந்த ஊழியரை, அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.
அந்த ஊழியரைப் பரிசோதித்த மருத்துவர், அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக கூறினார்.

அந்த ஊழியரின் மருத்துவ செலவுக்காக, சிறுவயதில் தன் தாய், தன் விரலில் அணிவித்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தார், சாவித்திரி. நல்ல பெயர் எடுப்பதற்காக, அவ்வாறு செய்வதாக குதர்க்கமாக பேசினர் சிலர். ஆனால், அதை சாவித்திரி கண்டுகொள்ளவில்லை.
காங்கிரஸ் தலைவரான காமராஜர் வீட்டின் அருகில் தான் சாவித்திரியின் வீடு இருந்தது. பல நேரங்களில் மரியாதை நிமித்தமாக, அவர் காமராஜரை சந்திப்பது வழக்கம். அவருக்கு பிடித்த தலைவர்களில் ஒருவர் காமராஜர்.
நிதியின்றி காமராஜர் கட்சி நடத்த கஷ்டப்படுகிறார் என்பதை கேள்விப்பட்ட சாவித்திரி, தன் நகைகளை எல்லாம் அவரிடம் கொடுத்தார்.

அவரின் பாசத்தை கண்டு காமராஜருக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அந்த நகைகளை அவரிடமே திருப்பி கொடுத்து, 'நிதி விஷயத்தை கட்சிக்காரர்கள் பார்த்து கொள்வர்; நீயும், உன் கணவரும் எங்களுக்காக பரப்புரை செய்கிறீர்களே அது போதும்...' என்றார்.
சாவித்திரியின் மனதை படித்தவர்களுக்கு தான் தெரியும், அவருடைய கருணை உள்ளம்!
தான் சம்பாதித்த பணத்தில், எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்து இருக்கிறார் என்பதை, மனசாட்சி உள்ளவர்கள் புரிந்து கொள்வர்.
காதலில் விழுந்த சாவித்திரியின் காதல் பயணம், தங்கு தடையின்றி போன போது, வந்த செய்தி ஒன்று, அவரை அதிரச் செய்தது!
— தொடரும்.

ஞா. செ. இன்பா



R P ராஜநாயஹம்


கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்! எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன்.இன்னும் சாவித்திரி போன்ற அச்சு அசலாக இன்னும் ஒரு பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ நிராசைகள்!என்னுடைய சாவித்திரி பாசமலர்,பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பா
ன சாவித்திரி.

சாவித்திரிக்கு சிவாஜி போலவே ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் அமைப்பில் மாறுபாடு  உண்டு.  தேவதாஸ்,மிஸ்ஸியம்மா,மாயாபஜார் சாவித்திரி ஒரு வகை அழகு. களத்தூர் கண்ணம்மா,பாசமலர், பாவமன்னிப்பு, பாதகாணிக்கை, காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் சாவித்திரி வேறு வகை அழகு.

அப்புறம் பூஜைக்கு வந்த மலர் படத்தில் வரும் குண்டு சாவித்திரி.
திருவருட்செல்வர் படத்தில் ’ஊதிப்பெருத்த’ சாவித்திரி. பின்னால் மலையாளப்படம் ’சுழி’ சாவித்திரி. அப்புறம் அம்மா கதாபாத்திரங்களில் மெலிந்த ஒல்லி சாவித்திரி

அமிதாப் பச்சன் கூட இப்போது சாவித்திரி பற்றி குறிப்பிட முடிகிறது. ரேகா தன் சோட்டி மம்மி பற்றி சிலாகிக்கிறார். சாவித்திரி மட்டுமே அனைத்து நடிகைகளிலிருந்தும் வித்தியாசமானவர்! நடிகைகள் அனைவரிலும் மேலான திறமை கொண்டவர் தான் சாவித்திரி.

பத்மினி,சரோஜாதேவி,தேவிகா இந்த வரிசையில் முதலிடம் சாவித்திரிக்குத் தான். வேற்று மொழிப்பெண்கள் தமிழ் திரையில் அன்று நிகழ்த்திய கண்ணிய சாதனை மகத்தானது. முழுக்க ஹீரோ நடிகர்களின் ஆக்கிரமிப்பின் காலத்தில்,ரசிகப்பெருமக்களும் அந்த நடிகர்கள் பற்றிய பிரமிப்பில் இருக்கின்ற நிலையில்,  பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அன்றைய சாவித்திரி,பத்மினி,சரோஜாதேவி,தேவிகாவெல்லாம் உயர்ந்த கலாபூர்வ நளினத்தை வெளிப்படுத்தினார்கள்.

சாவித்திரி தன் துணை யாரென்று ஆரம்ப காலத்திலேயே,16 வயதிலேயே தேர்ந்தெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்திருக்கிறார்.அதிலும் சாஸ்திரப்படி இரண்டாவது மனைவி அந்தஸ்தில், சம்பிரதாய வரிசைப்படி மூன்றாவது தாரமாக வாழ்க்கைப்பட்டவர்.ஜெமினி கணேசனுக்கு அப்போது 32 வயது!

(படிப்பதற்கே தலை சுற்றுகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.)

சில வருடங்கள் ரகசியமாக அந்தத் திருமணத்தைப் பேணிக்காக்க வேண்டிய சூழ்நிலை வேறு! தலைமறைவுத் தாம்பத்தியம்.இதற்கு அவருடைய வளர்ப்பு தகப்பன் சௌதுரி மட்டும் காரணமல்ல.ஆனால் ஜெமினிகணேசன் காந்தர்வத்திருமணம் ( எவ்வளவு யோசித்தும் வேறு வார்த்தை கிடைக்கவில்லை.) செய்து கொண்ட பிரபல நட்சத்திரம் புஷ்பவல்லியும் தான் காரணம்.முதல்மனைவி பாப்ஜி அமைதியாக வேடிக்கை பார்த்தாலும் கூட புஷ்பவல்லி கடுமையான குரோதத்தை சாவித்திரி மீது காட்டினார்.  தான் ஓட்டி வந்த காரை இவர் மீது ஏற்றிக் கொல்லத்துணிகிற ஆவேசம்,துவேசம் புஷ்பவல்லிக்கு இருந்தது.

1952ல் மனம்போல் மாங்கல்யம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் சாவித்திரிக்கு திருமணம். ஏற்கனவே ஜெமினி கணேசனுக்கு1951செப்டம்பர் 22ல் புஷ்பவல்லியோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது.புஷ்பவல்லிக்கு 1954ல் ரேகாவும் 1955ல் ராதா என்ற பெண்ணும் பிறந்த நிலையில் அந்த வருட கடைசியில் Gemini-Pushpavalli relationship ended abruptly. 1956ல் தான் சாவித்திரியுடன் ஜெமினி திருமண உறவு வெளித்தெரிந்தது.

இவ்வளவிலும் சாவித்திரியின் நடிப்புத்திறமை ஜ்வலித்த மாயம் தான் பெரிய விஷயம். Director’s delight என்றே பெரிய இயக்குனர்கள் வாய்விட்டுச்சொன்னார்கள்.பிரமிக்க அடிக்கிற நேர்த்தியான நடிப்பு.

An angel’s graceful performance!

தெலுங்கு தமிழ் திரையுலகங்களில் கதாநாயக தேவேந்திரர்களின் இந்திராணியாக சாவித்திரி எட்டுக்கண்ணும் விட்டெரிய வலம் வந்தார்.

நிர்மலமான அழகுமுகம் கொண்ட சாவித்திரி.
பெண்மையின் மொத்த சாரமும் இயைந்து ஊறிய ஈர மென்மை.

எந்த ஹீரோ நடித்தாலும்,படத்தின் பெரும்பகுதியையும் ஹீரோ ஆக்கிரமித்தாலும் சாவித்திரி தன் விஷேச நடிப்பால் புறந்தள்ளி விட்டார்.

காதல் காட்சிகளில் vulgarity,obscenity எதுவும் காணமுடியாது. வேட்டைக்காரனில் எம்.ஜி.ஆருடன் காதல் காட்சி பற்றி கொஞ்சம் முணுமுணுப்பு இருந்தது.

சாவித்திரி தெலுங்குப்பெண்.ஆனால் தமிழ் பேசுவது ரொம்ப கச்சிதம். Accent and Diction பிரமாதம். சிவாஜி கணேசனுக்கு இணையாக ஏன் இன்னும் கூடிய அளவில் தமிழ் உச்சரிப்பு சிறப்பாகவே இருக்கும்.ஆனால் சிவாஜி ஒரு தெலுங்குப் படத்தில்(பெம்புடு கொடுகு) நடித்தபோது “Ganesan’s Telugu pronunciation is horrible” என்று அங்கே ஒரு பத்திரிக்கையில் (Kinema, Dec 1953 issue)எழுதினார்கள். நடிகர் திலகத்தை விட நடிகையர் திலகம் எத்தகைய திறமை வாய்ந்தவர்!
சார்லி சாப்ளின் போலவே சாவித்திரியும் Left hander!சாவித்திரியின் நடிப்பைப் பற்றி விளக்கக்கூட ஒரே வார்த்தை-'Perfect'.

சாவித்திரியின் கண்கள் பேசிய கதைகள்! முக பாவங்களின் உணர்ச்சிகள்!

சரோஜாதேவி தனக்கு கிடைத்த வாய்ப்புகளால் சாவித்திரியை மிஞ்சி விடமுடிந்தாலும் அவருடைய திறமையான நடிப்பை நெருங்க முடிந்ததில்லை.

நடிகையாக சாவித்திரியின் சாதனைகள் பற்றி எழுதி உணர்த்தி விட சாத்தியமில்லை. The greatest actress ever born and ever to be born!
ஆறு படங்கள் இயக்கியவர்.ஜெமினி,வாணிஸ்ரீ யுடன் நடித்த ’குழந்தையுள்ளம்’,(’முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு,துயில் கொண்டதே இன்பத்தேனுண்டு’ என்ற ஆரம்பகால எஸ்.பி.பி பாடல் இந்தப்படத்தில் தான்!)சிவாஜியுடன் இவர் நடித்த’பிராப்தம்’ (பி.சுசிலா டிஎம்எஸ் பாடிய ’சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்.முடிவே இல்லாதது.எங்கே சென்றாலும் தேடிகிடைக்கும் இனிய சுகம் இது’)இரண்டு படங்களும் சாவித்திரியே இயக்கியவை தான்.

1969ல் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் பிரிந்து விட்டார்கள்.

சாவித்திரி தமிழில் எடுத்த ’பிராப்தம்’ படமும் தெலுங்கில் எடுத்த ’விண்ட சம்சாரம்’படமும் இவர் பொருளாதாரத்தை சிதைத்து வாழ்வு தடம்புரளக்காரணமாகிவிட்டது.
தெலுங்கில் சாவித்திரியுடன் அக்கினேனி நாகேஸ்வரராவ்,ஜமுனா நடித்து வெற்றி பெற்ற படம் ’மூக மனசுலு’.இதைத்தான்  சாவித்திரி தமிழில் 1969ல் படப்பிடிப்பை துவங்கி சிவாஜி,சந்திரகலாவும்  நடிக்க ’பிராப்தம்’ என்ற பெயரில் தானே கதாநாயகியாக நடித்து,தயாரித்து இயக்கினார்.
’பிராப்தம்’ படம்  இரண்டு வருடம் தயாரிப்பில் இருந்ததால் வட்டி எகிறி விட்டது.சிவாஜி படங்கள் சில அந்த நேரத்தில் சரியாக ஓடாததால் வினியோகஸ்தர்கள் இந்தப் படவெளியீட்டில் ஒத்துழைக்கவில்லை.அதனால் படம் படுதோல்வி கண்டது.

தமிழில் சிவாஜி பத்மினி நடித்த ’வியட்நாம் வீடு’ படம் தான்தெலுங்கில்1970ல் துவங்கி ரீமேக்காகி ’விண்ட சம்சாரம்’ என்ற பெயரில் சாவித்திரியும் ஜக்கையாவும் நடித்து வெளியானது.

பிராப்தம், விண்ட சம்சாரம் இரண்டு படங்களுமே ஒரே நாளில் 1971ல் வெளியாகிய படங்கள். துரதிர்ஷ்டங்கள் எப்போதுமே தனியாக வருவதேயில்லை!

ஒரு மனுஷியாக saint என்று தான் சொல்லவேண்டும். சொத்துக்களை இழந்து,ஹபிபுல்லா ரோடு பங்களாவை இழந்து, அண்ணா நகர் வீட்டில் இருந்த போதுகூட அவர் செய்த உதவிகள் பற்றி தெரிய வரும்போது ஆச்சரியம் தான் மிஞ்சுகிறது.

ஒரு ரசிகர். தினமும் நூறு ரூபாய் மணியார்டர் சாவித்திரிக்கு செய்து வந்தவர்.திடீரென்று ஒரு நாள் தன் தொழிலில் நொடித்துப்போய் சாவித்திரியைக் காண வந்து தன் நிலையை சொல்கிறார். 6000 ரூபாய் இருந்தால் மீண்டும் பிசினசை துவங்கமுடியும். வீட்டில் உள்ள தன் ஷீல்டுகள் எல்லாவற்றையும் ஒரு சேட்டுக்கடையில் விற்று 10000 ரூபாய் அந்த ரசிகருக்கு கொடுத்தவர்.

அண்ணாநகர் வீட்டுக்கு இவருடைய பழைய டிரைவர் ஒருவரின் மகள் வருகிறார்.தன்னுடைய விலையுயர்ந்த சேலையை எடுத்து வீட்டு முன் இருக்கிற ரிக்‌ஷாக்காரனிடம் கொடுத்து விற்று வரச்சொல்லி,கிடைக்கும் பெருந்தொகையான பணத்தை அந்தப்பெண்ணின் திருமணச்செலவுக்கு கொடுக்கிறார். பெண் தெய்வம் சாவித்திரி!

எம்.ஜி.ஆருடன் மஹாதேவி,வேட்டைக்காரன்,பரிசு ஆகிய படங்கள். சந்திர பாபு தயாரித்து இயக்கி, வாழ்க்கையைப் பாழாக்கி, முடியாமல் நின்று போன ’மாடி வீட்டு ஏழை’யில் கூட எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி தான்.


சிவாஜியோடு ஜோடியாக அமரதீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை, காத்தவராயன் துவங்கி,ரத்தத்திலகம்,கை கொடுத்த தெய்வம், நவராத்தி்ரி, திருவிளையாடல் தாண்டி பிராப்தம் வரை சாவித்திரி!

ஜெமினி கணேசன் தான் சாவித்திரிக்கு மிகப்பொருத்தம் என்று இன்றும்
”யார் யார் யார் அவள் யாரோ ஊர்பேர் தான் தெரியாதோ” “காலங்களில் அவள் வசந்தம்” காற்று வந்தால் தலை சாயும் நாணல்” போன்ற பாடல்கள் சாட்சி சொல்கின்றன.

பாசமலர் படம் ரிலீஸ் அன்று எல்லாம் உனக்காக என்று ஒரு படமும் வெளியானது. அதில் சிவாஜியின் ஜோடி சாவித்திரி. ஆனால் அண்ணன் தங்கையாக பாசமலரில் வந்தவர்கள் அதே நேரத்தில் இதில் ஜோடியாக நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை.

சாவித்திரியின் Rash car driving பற்றி இப்போதும் பலர் நினைவில் வைத்திருக்கிறார்கள்.அவருடைய குடிப்பழக்கம்.... மிகத்தேர்ந்த நடிகை சொந்த வாழ்க்கையில் வேஷம் போடத்தெரியாதவராயிருந்திருக்கிறார்!

அவருடைய அம்மா சுபத்ராம்மா,அக்கா மாருதி ஆகியோரை புகைப்படங்களாக பார்க்கும்போது அவர்கள் சாவித்திரியின் பேரழகுக்கு உறை போடக்காணமாட்டார்கள் என்று உடனே தோன்றுகிறது. சேற்றில் செந்தாமரை தான்.  ஒன்றரை வருடங்கள் கோமாவில் கிடந்து சாவித்திரி  இறக்கவேண்டி யிருந்திருக்கிறது.அப்போது 46 வயது. சில மரணங்கள் ஆறாத துயர வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றன. 

ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
ஆனாலும் வழியென்ன தாயே! 

இந்திய அரசாங்கம் 08-03-2009ல் ஒரு தபால்தலை சாவித்திரிக்கு வெளியிட்டது.இந்த விஷேச கௌரவம் இந்தி நடிகை தேவிகாராணி,மீனாகுமாரிக்கும் கூட கிடைத்திருக்கிறது.


No comments:

Post a Comment