Monday 29 January 2018

SABARNA ,TV ANCHOR,ACTRESS MURDER MYSTERY



SABARNA ,TV ANCHOR,ACTRESS 
MURDER MYSTERY





November 12, 2016,


வீட்டில் நிர்வாண நிலையில் மர்ம சாவு நடிகை சபர்ணா கொலை? டைரியில் ‘திடுக்’ தகவல்

சென்னை: சென்னையில் நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவத்தை  புலனாய்வு செய்வதற்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது வீட்டில் இருந்து அவரது டைரி மீட்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு  திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்  உடுமலைபேட்டை அருகே உள்ள காட்டூர் கிராமத்தை சேர்ந்த அனந்தகுமார்- புஷ்பலதா  தம்பதியின் மகள் சபர்ணா(25). சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
அதன் பின்னர் சினிமாவில் நடிக்க அவருக்கு  வாய்ப்பு கிடைத்தது.  ‘பிரிவோம்,  பூஜை, குடியரசு, காளை’ உள்ளிட்ட  திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன்  நகர், 1வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சபர்ணா  வசித்து வந்தார். சினிமா புள்ளி ஒருவரை சபர்ணா காதலித்து வந்ததாக  கூறப்படுகிறது. இது சபர்ணா பெற்றோருக்கு பிடிக்கவில்லை.

இதனால்  சபர்ணாவுக்கும், பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு  வந்ததாகவும் சபர்ணாவின் தோழிகள் கூறுகின்றனர். அதன்பிறகே சபர்ணா கடந்த ஒரு  ஆண்டாக பெற்றோரை விட்டு பிரிந்து மதுரவாயல்  வீட்டில் தனியாக வசித்து  வந்தார். ஸ்டண்ட் நடிகருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசிக்கிறார். இந்த வீடு கீழ் தளத்தில் உள்ள அறையில் இருந்தபடியே மேல் முதல் மாடிக்குச் செல்லும் வசதி கொண்டது. அவரது பெற்றோர் விருகம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
சபர்ணா தனது தோழிகளிடம் தன்னுடைய காதல் தோல்வியில் முடிந்து விட்டதாக  சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை சபர்ணா வசித்து  வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அருகில் வசிப்பவர்களுக்கு சந்தேகம்  ஏற்பட்டது. சபர்ணா நடிகை என்பதால் அவர் எப்போது வீட்டுக்கு வருகிறார்,  எப்போது வெளியே செல்கிறார் என்பதை பக்கத்து வீட்டுக்காரர்கள்  கண்டுகொள்வதில்லையாம்.

இந்நிலையில், திடீரென வீட்டுக்குள் இருந்து  துர்நாற்றம் வந்ததால் அவர்கள் சந்தேகம் கொண்டு போலீசுக்கு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து  பார்த்த போது படுக்கை அறையில் நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார்  சபர்ணா. அருகில் அவரது ஆடை கழட்டி வைக்கப்பட்டிருந்தது. அவரது இடது கை மணிக்கட்டில் வெட்டு காயம் இருந்தது. கத்தியால்  கீறியிருந்தது போல் தெரிந்தது. அவராகவே கிழித்து கொண்டதா அல்லது யாரும்  அவரை காயப்படுத்தியதா என தெரியவில்லை. 
சபர்ணா இறந்து மூன்று நாட்களுக்கு  மேலாகி இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் உடல் அழுகிய நிலையில் இருந்தது.  தரையில் கொட்டியிருந்த ரத்தம் உலர்ந்திருந்தது. சபர்ணாவின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி  வைத்தனர். இன்று பிற்பகலில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும், வீடு முழுவதும் ஆய்வு செய்த கைரேகை நிபுணர்கள்,  அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். சோதனைக்கு மோப்ப நாய்  வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து ஆலப்பாக்கம் மெயின் ரோடு  வரை சென்று நின்றுவிட்டது. இதற்கிடையே, சபர்ணாவின் வீடு முழுக்க போலீசார்  தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அக்கம் பக்கம் தினரிடம் துருவித் துருவி  விசாரித்தனர். சபர்ணா தற்கொலை செய்வதென்றால், தூக்க மாத்திரை சாப்பிட்டோ,  கயிற்றில் தொங்கியோ அந்த முடிவெடுத்திருக்கலாம்.
ஆனால், அவர் நிர்வாண  கோலத்தில் கிடந்ததால், அவரை யாராவது பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என  போலீசார் சந்தேகப்படுகின்றனர். கொலையாளிகளை கண்டுப்பிடிக்க கோயம்பேடு  உதவி கமிஷனர் நவநீதிகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது: சபர்ணா வீட்டுக்கு நாங்கள் சென்ற போது, கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. தாளிடாமல் மூடியிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது. நிர்வாணமாக  சபர்ணா பிணமாக கிடந்தார்.  சடலத்துக்கு அருகில் சிறிய கத்தி  எடுக்கப்பட்டுள்ளது. அவற்றை வைத்துதான் மணிக்கட்டை அறுத்து கொண்டாரா  என்றும் விசாரிக்கிறோம். கடையில் இருந்து டீ வாங்கி குடித்த 20 கப்புகள்  இருந்தன. அதில், பல கப்புகளில் சிகரெட் துண்டுகள் அணைக்கப்பட்டிருந்தது.  அவையனைத்தும் ெவவ்வேறு பிராண்டுகள். மது வாங்கிக் குடித்துள்ளனர். மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்களை அங்கு பயன்படுத்தியதற்கான அடையாளங்களும் இருந்தன. சபர்ணாவுக்கு போதை பழக்கம்  இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அடிக்கடி நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வாரா என்பது குறித்தும்  விசாரிக்கிறோம். அப்பகுதியில் உள்ள டீ கடை வைத்திருப்பவர்களிடம் விசாரித்த  போது சபர்ணா இரவு நேரத்தில் தினமும் டீ வாங்கி கொண்டு போவார் என்று  தெரிவித்துள்ளனர்.


தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு  நிறைந்த பகுதி, வெளியாட்கள் யாரும் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முடியாது.  எனவே, வாட்ச் மேன் வைத்திருக்கும் பார்வையாளர் வருகை பதிவேட்டை ஆய்வு  செய்து வருகிறோம். சபர்ணா வீட்டில் நேற்று சோதனை செய்த போது டைரி  ஒன்று கிடைத்தது. அந்த டைரியில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களின் மூலம் சில  துப்புகள் கிடைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தவுள்ளோம். சபர்ணா சின்னத்திரை கலைஞர்களுடன் மட்டுமே பழகுவார் என்று தெரியவந்துள்ளது.  எனவே, அப்பகுதியில் உள்ள சின்னத்திரை கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களிடம்  விசாரிக்கவுள்ளோம்.

3 நாட்களாக அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. எனவே, 3 நாட்கள் முன்பு யாரிடம் பேசினார் என்றும் ஆராய்ந்து  வருகிறோம். சபர்ணாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விட்டன. இதனால் இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்தார். இதற்காக டெல்லிக்குச் சென்று வந்தார். அங்கு நவீன் என்ற சினிமா பிரமுகரை காதலித்ததாக கூறப்படுகிறது. அந்த காதல் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், சென்னையில் அவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். கடைசியாகவும் அவரிடம்தான் பேசியுள்ளார். விரைவில் வீட்டை காலி செய்யப்போகிறேன். பேசாமல் டெல்லியில் போய் செட்டில் ஆகப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். அந்தப் பணத்தை ஓரிரு நாளில் தருவதாக கூறியுள்ளார். இதனால் அவரது வீட்டுக்கு அந்த ஆண் நண்பர் அல்லது காதலர் யாராவது வந்திருக்கலாம், அதன்பின் சபர்ணா உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இன்று பிற்பகலில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பிரேத பரிசோதனை முடிந்தவுடன்  சபர்ணாவின் உடலை திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள காட்டூர்  கிராமத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய அவரது பெற்றோர் முடிவு  செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment