Sunday 7 January 2018

BIPASA BAASU ,HINDI ACTRESS BORN 1979 JANUARY 7







 BIPASA BAASU ,HINDI ACTRESS 
BORN 1979 JANUARY 7


பிபாசா பாசு ஹிந்தி நடிகை பிறப்பு ஜனவரி 7

பிபாசா பாசுக்கு 2012 மிகவும் நல்ல ஆண்டு. ஜீஸம் படத்துக்குப் பிறகு அவ‌ரின் பெயர் சொல்லும் படமாக ராஸ் 3 அமைந்தது. பிபாசா நடித்தப் படங்களிலேயே அதிக வசூலை பெற்றுத் தந்தது இந்தப் படம்தான். மேலும் பிபாசாதான் இந்தப் படத்தின் சென்டர் ஆஃப் அட்ராக்சன்.

விரைவில் அவர் நடித்த ஆத்மா படமும் வெளியாகவிருக்கிறது. ராஸ் 3 போன்று இதிலும் பிபாசாதான் முக்கிய நடிகர். இந்தப் படமும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.


இந்நிலையில் தனது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் குறிப்பாக ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக ஆண்கள் பத்திரிகையான மேக்சிம் பத்திரிகைக்கு மேக்சிமம் கவர்ச்சியில் அட்டைப் படத்துக்கு போஸ் தந்திருக்கிறார் பிபாசா. இந்த அட்டைப் படம் உடனடி பிரபலத்தை அடைந்துள்ளது.

மேக்சிம் பத்திரிகையில் வந்துள்ள பிபாசாவின் போஸ் அவருக்கு 2013 ல் மேலும் சில படங்களை பெற்றுத் தரும் என்கிறார்கள்.

பிபாசா மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் மேலும் பல மேக்சிமம் கவர்ச்சி போஸ்களை தர வேண்டும்.

பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு. இவர் தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். அரைகுறை ஆடையில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதாக சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.

சமீபத்தில் யோகா தினத்தையொட்டி கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பிபாசா பாசு அழைக்கப்பட்டு இருந்தார். பிபாசா பாசு யோகா பயிற்சி பெற்றவர். தினமும் யோகா மற்றும் தியானம் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார்.

சக நடிகைகளுக்கும் யோகா கற்றுக்கொடுக்கிறார். எனவேதான அவரை பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தனர். பிபாசா பாசுவுடன் மாநில முதல்-மந்திரி சித்த ராமையாவும் யோகாவில் கலந்துகொண்டார்.

இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிபாசா பாசுக்கு ரூ.1½ கோடி கொடுக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அத்துடன் பிபாசா பாசு பெங்களூரு வந்து செல்வதற்கான விமான பயணச்செலவை கர்நாடக அரசே ஏற்றுள்ளது. அவர் ஆடம்பர ஓட்டலில் தங்குவதற்கும் பெரிய செலவு செய்துள்ளனர்.

யோகா நிகழ்ச்சி சமூக நலன் சார்ந்தது. அதற் காக ஒரு நடிகைக்கு பெரிய தொகை கொடுத்து வரவழைத்து அரசு பணத்தை விரயம் செய்வதா? என்று கர்நாடக அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பணம் வாங்கிக்கொண்டு இதில் பங்கேற்ற பிபாசா பாசை விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன.


தனது ஹேர்ஸ்டைலி்ஸ்ட்டின் அஜாக்கிரதையால், தன் முகம் மற்றும் கைகளில் தீக்காயம் அடைந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகையான பிபாசா பாசு.
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் பிபாசா பாசு. சமீபத்தில் இவர் தனது முகம் மற்றும் கையில் தீக்காயம் அடைந்ததாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார்.
மேலும், இந்த விபத்திற்குக் காரணம் தனது ஹேர்ஸ்டைலிஸ்ட் தான் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

எதிர்பாராத விபத்து.

சம்பவத்தன்று பிபாசாவின் தலைமுடியின் அமைப்பை கருவியின் துணை கொண்டு மாற்றியுள்ளார் அவரது ஹேர் ஸ்டைலிஸ்ட். அப்போது, எதிர்பாராத விதமாக சூடான அந்தக் கருவி பிபாசாவின் முகம் மற்றும் கையில் பட்டு தீக்காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோவுடன்…
முதலில் இந்த சம்பவத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்த பிபாசா, பின்னர் சிறிதுநேரத்தை அதை நீக்கி விட்டார்.

புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட்…
தற்போது அவர் தனது பழைய ஹேர்ஸ்டைலிஸ்டை மாற்றி விட்டு, புதிதாக ஒருவரை நியமித்துள்ளார். புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட் தனது முடிக்கு சாயம் பூசுவது போன்ற புகைப்படத்தை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.


கண்ணாடி உதவியுடன்…
அதில், முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு தன் முகத்தை மூடியபடி தோன்றுகிறார் பிபாசா. மேலும், இதன் மூலம் தனது முகத்தை தீக்காயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேவதைக்கு காயம்…

படப்பிடிப்பு தளங்களில் விபத்துகள் ஏற்படுவது சகஜமான விஷயம் தான் என்றாலும், இம்முறை பிரபல நடிகைக்கு தீக்காயம் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யோகா என்றொரு மந்திரம்: பிபாசா பாசு!

நேற்று (ஜூன் 21) ஆம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலதரப்பு நபர்களும் தங்கள் கருத்துக்களையும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் இருந்தனர். அதன்படி இந்திய நாட்டின் பிரதமர் மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் யோகாவில் பங்கேற்ற அனைத்து நபர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிபாசா பாசு இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அவரின் கணவர் கரன் சிங் குரோவருடன் சேர்ந்து யோகா செய்வது போன்ற புகைப்படங்களை யோகா தின வாழ்த்துக்களுடன் பதிவிட்டிருந்தார். அதனுடன் யோகா என்பது வாழ்க்கைக்கு நிகரானது-
சமநிலையில் வாழ்வினை வழிநடத்த அது உதவியாகவுள்ளது. யோகா ஒரு மந்திரம் போன்றது. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். இனிய யோகா தின நல்வாழ்த்துக்கள் என்ற தகவலையும் பதிவிட்டிருந்தார்.
திரையுலகில் உடற்பயிற்சி செய்யும் ஜோடி என எடுத்துக்கொண்டால் அதில் பிபாஷா மற்றும் கரன் ஜோடி நிச்சயம் இடம்பெறும்.

No comments:

Post a Comment