Sunday 1 March 2020

KANNADASAN







கய்யாமின் தோளில் ஏறிய கண்ணதாசன்!

முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேல் தமிழ்  சினி­மா­வில் பாட­லா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றிய கண்­ண­தா­சன், ஆயி­ரக்­க­ணக்­கான பாடல்­கள் எழு­தி­னார். அவற்­றில் பல அவ­ரு­டைய தனி முத்­தி­ரை­யைப் பெற்று விளங்­கின. ஆனால், ஒரே ஒரு பாடல் அவ­ரு­டைய கையெ­ழுத்­துப் பாட­லைப்­போல் விளங்­கு­கி­றது. அவர் தன்­னு­டைய ஆளு­மையை, தானே விளக்­கு­வ­தைப்­போல் உள்ள, ‘ஒரு கோப்­பை­யிலே என் குடி­யி­ருப்பு’ பாடல் அது.  கண்­ண­தா­சன் தயா­ரித்த ‘ரத்த தில­கம்’ படத்­தில் இடம்­பெற்ற பாடல். கண்­ண­தா­சனே திரை­யில் தோன்­றிப் பாடு­வ­தாக இந்த  பாடல் காட்சி அமைந்­தி­ருக்­கி­றது.

ஐம்­பத்தி ஐந்து வயது கூட ஆகாத நிலை­யில், அக்­டோ­பர் 1981ல் அமெ­ரிக்­கா­வில் கண்­ண­தா­சன் இறந்­து­போ­னார்.  முத­ல­மைச்­ச­ராக அப்­போது இருந்த எம்.ஜி.ஆர். அவ­ரு­டைய உடலை விமா­னம் மூலம் இந்­தி­யா­வுக்கு எடுத்­து­வர ஏற்­பாடு செய்­தார். எம்.ஜி.ஆர்­தான் ‘கண்­ண­தா­ச­னுக்கு அர­ச­வைக் கவி­ஞர்’ என்ற அந்­தஸ்­தை­யும் கொடுத்­தி­ருந்­தார். ‘சுனாமி’ போன்ற வாழ்க்­கை­யும் ‘சங்­கீத தென்­றல்’ போன்ற வார்த்­தை­யும் கொண்ட  வித்­தி­யா­ச­மான இந்த ஆளு­மையை, தகுந்த மரி­யா­தை­யு­டன் அனுப்பி வைத்­தார் எம்.ஜி.ஆர்.

பாக­வ­தர் காலத்­தில் பாப­நா­சம் சிவன் கோலோச்­சி­னார். அடுத்­த­தாக உடு­மலை நாரா­ய­ணக்­கவி உச்­சத்­தில் இருந்­தார். அவ­ரைத் தொடர்ந்து மரு­த­காசி முதல் நிலைக்கு வந்­தார். அறு­ப­து­க­ளில் கண்­ண­தா­சன் காலம் தொடங்­கி­யது. தனிப்­பெ­ரும் கவி­ஞ­ராக கண்­ண­தா­சன் உரு­வெ­டுத்­தா­லும் அவரை பிடிக்­காத ஏரா­ள­மான அதி­கா­ரப் பீடங்­கள் தமிழ் சினி­மா­வில் இருந்­தன. கண்­ண­தா­சன் பாடலா, வாலி பாடலா என்று வித்­தி­யா­சம் தெரிய முடி­யாத அள­வுக்கு கண்­ண­தா­சனை பின்­தொ­டர்ந்த வாலியை இத்­த­கைய வட்­டா­ரங்­கள்  வலி­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­டன. அதிர்ஷ்­டத்­தில் மட்­டும் வந்­த­வ­ராக இருந்­தி­ருந்­தால், கண்­ண­தா­சன் அன்றே அஸ்­த­மித்­தி­ருப்­பார்.

ஆனால், இளை­ய­ரா­ஜா­வின் ஆரம்ப காலத்­தில் கூட அவ­ரு­டைய புதுப் பாட்­டி­லும் கண்­ண­தா­சன் இருந்­தார். எப்­ப­டி­யும் விரை­வி­லேயே கவி­ஞர் இறந்­தார். மறைந்­தது சூரி­யன், இனி எங்­கள்  ராஜ்­ஜி­யம்­தான் என்று கிளம்­பி­ய­வர்­கள் பலர். தன்­னு­டைய தனி வழி­யைத் திரை இசை­யில் நிறு­வத்­து­டித்த இளை­ய­ரா­ஜா­வுக்கு வைர­முத்து, ஓர­ள­வுக்­குப் பயன்­பட்­டார். ஆனால், இளை­ய­ரா­ஜா­வின் இசை அர­சாங்­கத்­தி­லும் வாலி

வலம் வந்­தார். புல­மைப்­பித்­தன் புகழ் கொடி நாட்­டி­னார்.

காலம் ஓடிக்­கொண்­டி­ருந்­தது. அது யாருக்­காக எப்­போது நின்­றது? நேற்று இருந்­த­வன் இன்று இல்லை என்று கால­ரைத் தூக்கி விட்­டுக்­கொண்டு, நாளை­யும் தன்­னு­டைய  நாச நர்த்­த­னங்­க­ளைக்  காட்­டும் எண்­ணத்­து­டன், முச்­சந்­தி­யி­லும் நாற்­கோ­ணங்­க­ளி­லும் அது

ரிக்­கார்ட் டான்ஸ் ஆடிக் கொண்­டி­ருந்­தது!

இந்த  புழு­தி­யில் யாருக்­கும் கண்­மண் தெரி­யாது என்­கிற அள­வில்­தான் இரண்­டா­யி­ர­மாம் ஆண்டு வந்து இரு­பது ஆண்­டு­கள் ஆகிக்­கொண்­டி­ருக்­கிற இந்த 2020 உள்­ளது. ஆனால் என்ன ஆச்­ச­ரி­யம்! கண்­ண­தா­சன் மறைந்து நாற்­பது வரு­டங்­கள் ஆகி­யும்,  கண்­ண­தா­சன் மறை­யவே இல்­லையோ என்ற மயக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் வண்­ணம் உள்­ளது அவர் நினைவு.

 ‘நான் நிரந்­த­ர­மா­ன­வன் அழி­வ­தில்லை’ என்று ‘ஒரு கோப்­பை­யிலே’ பாட­லில் கவி­ஞர் கூறி­யது விளை­யாட்­டில்­லையோ, வாஸ்­த­வம்­தானோ என்று தோன்­று­கி­றது.

‘‘பார­திக்கு ஒரே கவி­தைத் தொகு­தி­தான் உள்­ளது. ஆனால் அவன் வான­ளாவ நிற்­கின்­றான். என்­னு­டைய மர­புக்­க­வி­தை­கள் பல தொகு­தி­கள் வந்து

விட்­டன.  எனக்கு ஒரு சின்ன இட­மா­வது  இலக்­கிய

உல­கில் கிடைக்­குமா,’’ என்று  கண்­ண­தா­சன் ஏக்­கம் கொண்ட நாட்­கள் உண்டு.



இந்த வகை­யில் தன்­னு­டைய ஆதங்­கங்­களை  வெளிப்­ப­டுத்­தும் போது, இலக்­கிய அன்­பர் கூறு­வார், ‘உங்­கள் திரை இசைப் பாடல்­கள் கால­கா­லத்­திற்கு நிற்­கும்’, என்று.  இதைத்­தான் கண்­ண­தா­சனே கூட, ‘இசைப் பாட­லிலே என்  உயிர்த்­து­டிப்பு’

என்­றாரோ?

இந்த வகை­யில் கண்­ண­தா­ச­னின் அடை­யா­ளத்­திற்­குத் திசைக்­காட்­டி­யாக உள்­ளது, ‘ஒரு கோப்­பை­யிலே’ பாடல்!

‘கோப்­பை­யிலே குடி­யி­ருந்­த­வன் கோகு­லத்­தில் குடி­யே­றி­யதை’, ‘மது­சாலை’ என்ற கவி­தைத் தொகுப்­பில் நான் குறிப்­பிட்­டி­ருக்­கி­றேன்.

‘‘கோப்­பை­யிலே ஒரு­வீ­ட­மைத்து

கொஞ்­சும் கும­ரி­கள் உடன் மகிழ

வேட்­கைக்­கொண்ட பெருங்­க­வி­ஞன்

வேண்­டி­ய­தென்ன கடை­சி­யிலே

பூக்­கைப் புல்­லாங்­கு­ழல் கொண்ட

புண்­ணிய மூர்த்­தி­யின் பாதங்­க­ளில்

வாழ்க்­கைப் பயனை அவன் கண்­டான்

வேண்­டி­னான் அங்கே மது­சாலை!’’

‘ரத்­தத் தில­கம்’ பாட­லின் சர­ணங்­கள் ஒரு மிதப்­போடு அமைந்­தி­ருக்­கின்­றன.

‘‘காவி­யத்­தா­யின் இளைய மகன், நான்

காதல் பெண்­க­ளின் பெருந்­த­லை­வன்

பாமர ஜாதி­யில் தனி மனி­தன், நான்

படைப்­ப­த­னால் என் பெயர் இறை­வன்!’’ என்று, ‘கொடி­யில் தலை சீவி வரும் இளம் தென்­ற­லை’ப்­போல் ஒயி­லாக  இசைப்­பா­டல்­களை அள்­ளித்­த­ரும் ஒரு கந்­தர்­வ­னின் புறப்­பாடு வர்­ணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது!

மல­ரம்­பு­கள் வீசி உயிர்­களை எல்­லாம் காதல் மயக்­கம் கொள்­ளச் செய்­யும் மன்­ம­த­னைப் போல், கவி அம்­பு­கள் எறிந்து மானு­ட­ரின் மனங்­க­ளைக் கொள்­ளைக் கொள்­ளும் கவி­பி­ரும்­மா­வின் வல்­ல­மையை இரண்­டாம் சர­ணம் எடுத்­து­ரைக்­கி­றது.

‘‘மானிட இனத்தை ஆட்டி வைப்­பேன், அவர் மாண்டு விட்­டால் அதைப் பாடி வைப்­பேன், நான் நிரந்­த­ர­மா­ன­வன், அழி­வ­தில்லை, எந்த நிலை­யி­லும் எனக்கு மர­ணம் இல்லை!’’. இந்த அள­வுக்கு உற்­சா­கம், இந்த அள­வுக்­குத் தன்­னு­டைய கவி­தா­வி­லா­சத்­தின் மீதான நம்­பிக்கை, தானே மேடை­யில் தோன்றி இந்த அள­வுக்கு அறை­கூ­வல் விடும் தைரி­யம் கண்­ண­தா­ச­னுக்கு எப்­படி வந்­தது?

‘பா’ வரி­சைப் படங்­க­ளில் பாடல் வரி­க­ளுக்கு இசை­யைப் பல்­லக்­குத்­தூக்க வைத்­த­தில் வந்த தன்­னம்­பிக்­கை­தான் கார­ணம்.

இதை­யும் மீறி, ‘அரி­ய­ணை­யில்­தான் அமர்­வேன்’ என்று இசை முரண்டு பிடித்­தா­லும், இசை­யும் மனம் மகி­ழும் வண்­ணம் இலக்­கிய சாம­ரம் வீசு­வ­தி­லும் தனக்கு வந்­து­சேர்ந்­தி­ருந்த  வல்­லமை இன்­னொரு கார­ணம்.

இவ்­வ­ளவு இருந்­தும், ‘ஒரு கோப்­பை­யிலே’ பாட­லில் தன்னை முன் நிறுத்­தித் தானே பாடு­வ­து­போல் காட்சி அமைத்­தா­லும், கண்­ண­தா­ச­னுக்கு உமர் கய்­யாம் என்ற ஊன்­று­கோல் தேவைப்­பட்­டது!

கல்­லூரி விழா­வில், பழைய மாண­வர் முத்­தை­யா­வாக வரும் கண்­ண­தா­சன் (முத்­தையா என்­ப­து­தான் அவ­ரு­டைய இயற்­பெ­ய­ரும் கூட), ‘ஒரு உமர் கய்­யாம் பாடல் பாடு­வார்’ என்ற அறி­விப்­பு­டன், ‘ஒரு கோப்­பை­யிலே’ பாடல் வழங்­கப்­ப­டு­கி­றது. கோட்டு சூட்­ட­ணிந்த கண்­ண­தா­சன், ஒலி­பெ­ருக்­கி­யின் முன் பாட­லுக்கு வாய­சைத்து, வரி­க­ளுக்கு ஏற்ப செய்­கை­கள் காட்­டும் போது, மேடை­யில் உமர் கய்­யாமை நினை­வூட்­டும் பார­சீ­கப் பாணி­யி­லான ஓவி­யங்­கள் காணப்­ப­டு­கின்­றன.

வாழ்க்கை நிலை­யில்­லா­தது. ஆகவே, இருக்­கும் பொழுதை வீண­டிக்­கா­மல் இன்­ப­மா­கக் கழிக்­க­வேண்­டும் என்ற செய்­தியை, குடித்து விட்­டுக் கும்­மா­ளம் போட்­டுக் கூத்­த­டிக்­க­வேண்­டும் என்­கிற லோகா­ய­தப் பிர­சா­ரம் போல் செய்­யா­மல், ஒரு­வித நளி­னத்­தோ­டும் வாழ்க்­கை­யின் உள்­ளர்த்­தம் குறித்த கவ­லை­யோ­டும் கூறின, உமர் கய்­யா­மின் பாடல்­கள். பதி­னோ­ராம் நூற்­றாண்­டில், பார­சீ­கத்­தில் வாழ்ந்த கணித நிபு­ண­ரும், வானி­ய­லா­ள­ரும், தத்­து­வ­வா­தி­யும், கவி­ஞ­ரு­மான கய்­யாம், நிச்­ச­ய­மாக வெறும் குத்­துப்­பாட்­டுக் கவி­ஞர் அல்ல, சில்­மி­ஷ­மான சிலுக்­குப் பாட்டு எழுத!

கய்­யாம் எழுதி, எட்­வர்ட் பிட்ஸ்­ஜெ­ரால்ட் மொழி­பெ­யர்த்த ஆங்­கில கவி­தை­க­ளால் ஈர்க்­கப்­பட்டு, உல­கமே கய்­யாமை அடை­யா­ளம் கண்டு அவர் கடை­வா­ச­லில் நின்­றது.  மொழி­பெ­யர்த்­தார் என்று கூறு­வ­தை­விட, புது மலர்­க­ளைத் தொடுத்­தார் என்­கிற அள­வில் இருந்­தன,  பிட்ஸ்­ஜெ­ரால்ட் ஆங்­கி­லத்­தில் தந்த கய்­யா­மின் கவிதை வரி­கள். இவற்­றைப் படித்­து­விட்டு மிகப்­பெ­ரிய ஆங்­கில கலை விமர்­ச­க­ரான ஜான் ரஸ்­கின் மயங்­கிப்­போ­னார். அப்­போது ஊர்­பேர் தெரி­யா­த­வ­ராக இருந்த  பிட்ஸ்­ஜெ­ரால்­டுக்கு ரஸ்­கின் எழு­திய  கடி­தத்­தில், ‘‘இது­வரை என்­னு­டைய வாழ்க்­கை­யில் இவ்­வ­ளவு அற்­பு­த­மான கவிதை வரி­களை நான் படித்­த­தில்லை’’ என்று புகழ்ந்­தார்.

பார­சீக மொழி­யின் பாரம் நமக்­குத் தெரி­யா­மல் ஆங்­கில அசை­க­ளில் தந்த பிட்ஸ்­ஜெ­ரால்­டைப்­போல், ஆங்­கி­லத்­தின் நெடி நம்மை மருட்­டாத வகை­யில், பனி­முத்­துக்­கள்  படர்ந்து தமிழ் ரோஜா இதழ்­க­ளாக அவற்றை நமக்­குத் தந்­தார், கவி­மணி தேசி­க­வி­நா­ய­கம் பிள்ளை (தேவி).

‘‘வெயி­லுக்­கேற்ற நிழல் உண்டு

வீசும் தென்­றல் காற்­றுண்டு

கையில் கம்­பம் கவி­யுண்டு

கல­சம் நிறைய அமு­துண்டு

தெய்வ கீதம் பல­வுண்டு

தெரிந்து பாட நீயுண்டு’’  என்று வரு­கிற தேவி­யின் வாய்­ம­ணக்­கும் தமிழ், கல்­கி­யின் ‘கள்­வ­னின் காதலி’ திரைப்­ப­டத்­தில் பானு­ம­தி­யும், சிவா­ஜி­யும் பாடு­வ­து­போல் பட­மாக்­கப்­பட்­டது.

‘‘எழு­திச் செல்­லும் விதி­யின் கை

எழுதி எழுதி மேற்­செல்­லும்

தொழுது போற்றி நின்­றா­லும்

சூழ்ச்சி பல­வும் செய்­தா­லும்

அழுது கண்­ணீர் விட்­டா­லும்

அப­யம் அப­யம் என்­றா­லும்

வழு­விப்­பின்­னால் ஏகி­யொரு

வார்த்தை மாற்­றம் செய்­தி­டுமோ’’ என்று விதி­யின் வலி­மை­யைக் கூறிய தேவி­யின் மொழி­பெ­யர்ப்பு, இன்­னும் எளி­மைப் படுத்­தப்­பட்டு, விஸ்­வ­நா­தன் ராம­மூர்த்­தி­யின் இசை­ய­மைப்­பில், ‘போர்ட்­டர் கந்­தன்’ பாட­லில் ஒட்­டிக்­கொண்­டது.   ‘கிண்­ணத்­தில் தேன் வடித்து’ என்று ஒரு கிளு­கிளு காதல் பாடல்,  இளை­ய­ராஜா இசை­யில் கய்­யாமை மீண்­டும் நினை­வு­ப­டுத்­தி­யது (‘இளமை ஊஞ்­சா­லா­டு­கி­றது’).

‘ஆண்­டொன்று போனால் வய­தொன்று போகும்’ என்­றும், ‘ஜகமே தந்­தி­ரம் சுகமே மந்­தி­ரம்’ என்­றும், ‘ஒரு கிண்­ணத்தை ஏந்­து­கி­றேன்’ என்­றும் உமர் கய்­யா­மு­ட­னான ஒட்­டு­த­லைக்   கண்­ண­தா­சனே சில பாடல்­க­ளில் அவ்­வப்­போது காட்­டி­யி­ருக்­கி­றார்.

‘ரத்­தத்­தி­ல­க’த்­தில் மட்­டும்­தான், உமர் கய்­யாம் நேர­டி­யாக குறிப்­பி­டப்­பட்டு ,  ‘ஒரு கோப்­பை­யிலே’ பாடலை முன்­வைத்­தார் கண்­ண­தா­சன். ஆனால் அந்­தப் பாட­லில் கய்­யாமை விட கண்­ண­தா­சன் தான் அதி­கம்! பின் இதோ ஒரு உமர் கய்­யாம் பாடல் என்று ஏன் கூறப்­பட்­டது? கண்­ண­தா­ச­னுக்கு தலை கனத்­து­விட்­டது.  அத­னால்­தான்   தன்­னை­யே­தான் புகழ்ந்­து­கொள்­கி­றார் என்ற கண்­ட­னத்­தி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக, கய்­யாம் பாடல் என்ற முன்­மொ­ழி­தல் நடந்­தி­ருக்­கி­றது!

உமர் கய்­யா­முக்­கும் கண்­ண­தா­ச­னுக்­கும் மது,

மங்­கை­யர் இன்­பம் ஆகி­ய­வற்­றில் ஒத்த கருத்து இருந்­த­தைப் போல் வேறொரு விஷ­யத்­தில் மிகப்­பெ­ரிய வேற்­றுமை இருந்­தது. 
கய்­யா­முக்­குக் கட­வுள் விஷ­யத்­தில் மிகப்­பெ­ரிய நம்­பிக்கை வறட்சி

இருந்­தது. கண்­ண­தா­ச­னுக்கோ கட­வுள் நம்­பிக்கை அஸ்­தி­வா­ர­மாக இருந்­தது. கட­வுளை நம்­பி­னால்

கவி­ஞர் ஆக­லாம் என்று ஒரு சூத்­தி­ரத்­தையே அவர் வகுத்­தி­ருந்­தார்!  

No comments:

Post a Comment