Friday 10 November 2017

SIVAJI KILLED AFSAL KHAN 1659 NOVEMBER 10


SIVAJI KILLED AFSAL KHAN 
1659 NOVEMBER 10 






த்ரபதி சிவாஜியின் மனதிற்குள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மாற்றம் என்பது வாழ்வின் மறுபெயர் என அவர் எண்ணிக்கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுவிட்டது? 1659 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள் அவரது மனைவி சயிபாய் காலமானார். துக்கம் ஆழ்ந்த நிலைமை. அரசவையாளர்கள் அனைவரின் உள்ளங்களும் துக்கத்தால் கனத்திருந்தன. மகாராஜா துக்கத்தால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்று அவர்கள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் சிவாஜியோ தனது பணியில் முனைந்திருந்தார். ஒருவேளை அவர் தன்மனதில் இப்படி சொல்லிக் கொண்டிருக்கக்கூடும், சகோதரா மரணம் என்பது அனைவரது வாழ்விலும் நிகழ்கின்ற இயற்கையான நிச்சயமான நிகழ்வு. அதற்கு இவ்வளவு ஏன் கவலைப்பட வேண்டும். அவள் என் அன்பு மனைவி என்பது உண்மைதான். அழுவதால் மட்டும் என் மனைவி திரும்பக் கிடைப்பாளா? அழுவதற்கு எனக்கு நேரம் எங்கே இருக்கிறது? இங்கே உயிரினும் மேலான கடமை உணர்வு என்னை உந்துகிறது. தேச, தர்ம காரியங்கள் காத்துக் கிடக்கின்றன.
சிவாஜி காட்டிய மன அமைதியும் தீர்மானமான உள்ளமும் மனித வாழ்வின் கோடானுகோடி உன்னத சித்தாந்தங்களை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. சிவாஜி ஒருவேளை தூகிக் கொண்டிருக்கலாம் அல்லது விழித்துக் கொண்டிருக்கலாம், கடந்த கால நினைவுகள் ஒவ்வொன்றாக அவர் எதிரில் தோன்றின.

1659ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் அப்சல்கானின் பீஜாப்பூர் மீது படையெடுப்பு. 12 ஆயிரம் குதிரைப்படை வீரர்கள், 10௦ ஆயிரம் காலாட்படை வீரர்கள், 75 பெரிய துப்பாக்கிகள், 400௦௦ சிறிய துப்பாக்கிகள்.
துல்ஜாபூரின் தேவியின் புராதனக் கோயில். ஆம், அந்த தேவிக்கு என்னிடம் தனிப்பட்ட கருணை இருக்கிறது. அவள் எனக்கு காட்சியும் தந்திருக்கிறாள். என் உள்ளத்தில் எல்லையற்ற வலிமையைப் பரவச் செய்திருக்கிறாள். அடடா அத்தகைய ஆலயத்தை அப்சல்கான் சின்னாபின்னமாக்கி இருக்கிறான். சிலையை உடைத்து விட்டான். இந்துக்களின் தர்மம், கௌரவம், பக்தி ஆகியவை எல்லாம் அழிந்து விட்டனவா என்ன? மனம் சஞ்சலப்பட்டது.
ராஜ்கட்டை விட்டு நாம் பிரதாப்கர் சென்றோம். ஒற்றர்கள் எவ்வளவு திறமைசாலிகள் அப்சல்கான் சிரித்தவாறு சொன்னான், “பார், இந்த எலி இப்போதிருந்தே ஓட ஆரம்பித்து விட்டது”. அப்சல்கான் தயாரானான். அவன் பண்டர்பூரை அடைந்தான். வழியில் இருந்த கிராமங்கள், கோயில்களை சின்னா பின்னமாக்கினான். பல்டன் எனும் இடம் – எனது மைத்துனன் சயிபாயின் சொந்த சகோதரன் பஜாஜி நிம்பால்கர். அப்சல்கான் அவனைப் பிடித்துவிட்டான். சித்திரவதை செய்தான். அவமானப்படுத்தினான். முஸ்லீமாக மதம் மாற்றினான். இவ்வளவு செய்தும் அவன் திருப்தி அடையவில்லை. அவனுக்கு மரண தண்டனை தர விரும்பினான். அவனுக்கு இவன் என்ன கெடுதல் செய்தான்? கான் என்னை சீண்டிப் பார்க்க நினைக்கிறான் போலும். அவன் பிராந்திய, தார்மீக, குடும்ப அநியாயங்களைச் செய்வதில் முனைந்திருந்தான். அப்சல்கான் படையில் எனது நண்பன் நாயிகஜி ராஜே. அவன் தக்க சமயத்தில் உதவவில்லை என்றால் பஜாஜி நிம்பால்கர் எப்போதோ மாண்டிருப்பான்.

கானின் படையில் இந்துக்களும், மராத்தியர்களும் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால், அவனுக்கு அடிமைப்பட்ட காரணத்தினால் அவர்கள் மனதில் இறந்து விட்டனர். எல்லாக் கெட்ட காரியங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன என்று அவர்கள் உள்ளுக்குள்ளேயே உணர்ந்திருந்தனர். ஆனால், அப்சல்கானுக்கு அறுபதாயிரம் தங்கக் காசுகளை அபராதம் கொடுக்க வேண்டி வந்தது. இதற்கு மேலும் நிம்பால்கர் தனது தேசத் தலைமை அதிகாரத்தை அடகு வைத்தான். அப்சல்கான் மல்பரியில் கொள்ளையடித்தும் சூறையாடியும் வாயியை அடைந்தான்.
மழைக்காலத்து அடைமழை, அடர்ந்த காடு, நான்கு புறங்களிலும் அழகிய மலைகள், ஓய்வு, மழையின் ஆனந்தம். உற்சாகம் கொண்டாட்டம், இல்லை.
நான் போர் நடக்க விடமாட்டேன். அப்படியென்றால் நான் எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும். வெற்றி நூறு சதவிகிதம் வெற்றி. காரணமில்லாமல் பொருள் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்படக்கூடாது. செல்வம் உயிர், படையின் வீரர்கள். நமது நாட்டுடன் தொடர்புடையவைகள், செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒற்றர்கள் எத்தனை சாமர்த்திய சாலிகள். அப்சல்கானின் செய்தி கிடைத்து எல்லோரும் ராஜ்கருக்கு அழைக்கப்பட்டார்கள். கோமாஜி, நாயிக் பான் சம்பல், கிருஷ்ணாஜி நாயிக், மோரே பந்த் பிங்களே, நிலோ பந்த் சோன்தேவ், அண்ணாஜி தத்தோ, சோனோ பந்த், உபீர், கங்காஜி மங்காஜி, பால்கர், ரகுநாத் பந்த் அத்ரே, பிரபாகர் பட ராஜோபாத்யாயே, தானாஜி மாலுகரே, யேசாஜி கங் முதலானோர். எல்லோரும் சண்டையிட உற்சாகமாயிருந்தனர். சரி, நீ என்ன சொல்கிறாயோ ஒப்புக்கொள்கிறோம்.

போர் செய்வோம், அப்சல்கானைக் கொள்வோம். வெற்றி பெற்றால் நானே இருப்பேன். ஆனால், எனது உயிர் சேதமடைந்தாலோ எனது மகன், சிறுவன் சாம்பாஜியை நீங்கள் சிம்மாசனத்தில் அமர்த்துங்கள்”. எனது மரணத்தைக் கற்பனை செய்யவே அவர்கள் அஞ்சினர்.
இல்லை.இல்லை.போருக்கு அவசியம் இல்லை. எனது பேச்சு எடுபட்டது. ராணி ஜீஜாபாயும், எனது பாலகச் சிறுவன் சம்பாஜியும் ராஜ்கரில் இருப்பார்கள். நான் பிரதாப்கரில் இருப்பேன் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அங்கிருந்து நான் யுத்தத்தை நடத்துவேன். ஜீஜாபாய் சொன்னாள் – போர் செய், ஆனால் எக்காரணம் கொண்டும் கானை சந்திக்க செல்லாதே. அவன் நய வஞ்சகன். அவன் உன்னை உயிரோடு விடமாட்டான்”. நான் பதிலளித்தேன். “அன்னையே, எனக்கு இவ்வளவு வயதாகி விட்டது”. எப்போதாவது எந்த முஸ்லிம் தலைவனையோ அல்லது ராஜாவையோ சந்திக்கச் சென்றிருக்கிறேனா என்ன? ஆனால், இந்த முறை…இறுதி முறையாக இருக்கலாம். எனக்கு அப்படி செய்ய வேண்டும்.
கோயில்களை சின்னாபின்னப் படுத்தியவாறு அப்சல்கான் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குப் பாடம் கற்பித்தே ஆகவேண்டும். எனவே, நீங்கள் அவனை சந்திக்க அனுமதி கொடுங்கள். நான் போயே ஆக வேண்டும்”.
ஜீஜாபாய் ஒரே மகனின் தாய். அவள் சொன்னாள், அப்சல் கான் ஒரு பெரிய அரக்கன். அவன் சீண்டி சீண்டியே எனது கணவரைக் கைது செய்து, கை கால்களில் சங்கிலிகளைப் பிணைத்து எல்லா விதத்திலும் அவமானப் படுத்தினான். பீஜாபூர் வீதிகளை வளம் வரச் செய்தான்… பார்க்கப்போனால் நான் ஆறு மகன்களை ஈன்றேன். ஆனால், நான்கு குழந்தைப் பருவத்திலேயே மாண்டு விட்டன. இரண்டு தங்கின. சாம்பாஜி, நீ, சிவாஜி…. நான்கு வருடங்களுக்கு முன் கணக்கிரி போரில் அந்த அப்சல்கான் எனது செல்வம் சாம்பாஜியை ஏமாற்றிக் கொன்றுவிட்டான்.
சாம்பாஜி
இப்பொழுது தனியே நீ, சிவாஜி….எனது ஒரே புதல்வன் வீட்டிலிருக்கும் போதே நம்மிடம் அப்சல்கான் வந்து கொண்டிருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம், பசுக்களை வதைத்துக் கொண்டு, கோயில்களை இடித்துத் தள்ளிக் கொண்டு, பாவச்சுமை களை சுமந்து கொண்டு வருகிறான். வாளின் முனையில் இந்துக்களை முஸ்லீம்களாக மாற்றுகிறான். அவன் நமது நாட்டின் வீட்டின் எதிரி. ஜன்ம ஜன்மமாக விரோதி. எவ்விதத்திலும் அவனைக் கொள்வது தர்மம்தான். இத்தகைய வாய்ப்பு திரும்பத் திரும்பக் கிடைக்காது.
இதோ பார் மகனே, அப்சல்கான் உயிரோடு திரும்பிப் போகக் கூடாது…” அவளுடைய சகோதரன் பஜாஜியை அப்சல்கான் விடுவித்து விட்டான் என்றதும் எனது மனைவி சிப்பாய் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாள். – எப்படி அவள் தனது நோயை மறந்தாலோ அந்த வீரப் பெண், வீரமனைவி, வீரத்தை எல்லாவற்றையும் சிரித்து சிரித்தே சகித்துக் கொண்டாள்.
அங்கு அப்சல்கானின் படை வாயியில், மழயில் பெருக்கெடுத்து ஓடும் நதியைப் போல் இருந்தது. பீஜாபூரின் பல சிறிய பெரிய சிற்றரசர்கள் அவனுடன் சேர்ந்து விட்டனர். அப்சல்கானின் சுற்றறிக்கை எல்லா நாட்டுத் தலைவர்கள் பெயரிலும் அனுப்பப்பட்டது. பவீனர்கள் கீழ்படிந்தனர். எதிரிகள் மனதிற்குள்ளேயே குமுற ஆரம்பித்தனர். இடைப்பட்டோர் சிந்தனையில் மூழ்கினர். சுற்றறிக்கை கான்ஹோஜி ஜோகேக்குக் கிட்டியது. “யோசையின்றியும், அறியாமையினாலும் சிவாஜி நிஜாம் அரசின் கொங்கன் பிரதேசத்து முஸ்லீம்களுக்குத் தொல்லைகள் கொடுத்திருக்கிறான்.
அவர்களை கொள்ளையடித்துள்ளான். பேரரசு பிரதேசத்தி லிருந்து எவ்வளவோ கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளான். ஆகவே, அவனை அடக்கும் விதமாக அப்சல்கான் முகமத்ஷாஹியை, அந்தப் பிரதேசத்தின் சுபேதாராக நியமித்து அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே, நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம் என்னவென்றால் கான் சாகேப்பை மகிழ்வுறச் செய்து அவர் எப்படி சொல்கிறாரோ, அப்படி செய்வதுதான். மேலும், சிவாஜியைத் தோற்கடித்து அவனை வேரோடு பிடுங்கி எரிந்து இந்த அதிஷா சிற்றரசுக்கு நன்மை பயப்பீராக. அப்சல்கான் உங்களைப் புகழ்வார். அப்பொழுதே உங்களுக்கு உயர்வு தரப்படும். மேலும் தங்களுக்கு உரிய அன்பளிப்பு அளிக்கப்படும். இதை உணர்ந்து இந்த அரசாங்கக் கட்டளையை சீக்கிரம் நிறைவேற்றுங்கள். தேதி ஹிஜரி 1069, சபால் 5 ஆயிரம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கான்ஹோஜி என்னிடம் வந்தார். நானோ முதலிலேயே வில்வைலையை எடுத்து அப்சல்கான் எதிரில் தலை குனிய மாட்டேன் என்று சபதம் செய்தேன். கான்ஹோஜி தனது தேசத் தலைமைச் சின்னம் பரி போவதைப் பற்றிக் கவலைப் படாமல் எனக்கு உதவினார். மேலும், இப்போது சயிபாயும் மரணமடைந்து விட்டாள்.
சிவாஜி சோகத்தின் சசப்பை விழுங்கியவாறு நின்று விட்டார். காரியத்திலேயே கண்ணாயிருந்தார். தசரா வந்தது. ஆயுத பூஜை நடந்தது. ஆயுதங்கள் சொல்லலாயின.” ஏன் இவ்வளவு தாமதம், எங்களுக்கு மிகவும் பசிக்கிறது.”
படைவீரர்கள் சொன்னார்கள், “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்”.
தெற்கில் நாலாபுறமும் அப்சல்கானின் படையெடுப்பு பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தது. சிவாஜி இப்பொழுது நசுக்கப்படப் போகிறார் என தில்லி வரை செய்தி சென்றது. ஒவுரங்கசிப், குதுப்ஷா, ஆங்கிலேயர்கள் , பறங்கியர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், சிந்தி அனைவரும் மனதிற்குள் இதைத்தான் விரும்பினர்.
வாயி, அப்சல்கானுக்கு அரசிடமிருந்து கிடைத்த இடம். கொட்டும் மழையில் கேளிக்கை, கொண்டாட்டங்கள் வெகுவாக நடந்தன. இந்த சாக்கில் படைக்கும் ஓய்வு கிடைத்தது. தசராவை முன்னிட்டு அப்சல்கான் கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னியிடம் விரிவான கடிதம், வாய்மொழி ஆணை கொடுத்து பிரதாப்கருக்கு அனுப்பினான். குல்கர்னிக்கு சிவாஜியின் அரசவையில் வரவேற்பு கிடைத்தது. உபசார பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, குல்கர்னி வினயத்துடன் கூறினார், “ராஜாவே மதிப்பிற்குரிய அப்சல்கான் முகமத்ஷாஹி உங்கள் தந்தையின் பெரும் நண்பர். உங்கள் குடும்பத்துடன் அவருக்கு உள்ளார்ந்த தொடர்பு இருக்கிறது. அவரைச் சந்திக்க நீங்கள் வாயிக்கு வர வேண்டுமென்பதே அவரது விருப்பம். தங்களுக்காக அவர் இந்தக் கடிதத்தை கொடுத்திருக்கிறார்.”
அக்கடிதம் இவ்விதம் இருந்தது. “உனது பணிவின்மையை பேரரசர் ஆதில்ஷாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய இதயத்தில் இது முள்ளைப் போல் குத்துகிறது. நட்பு மூலம் முஹலாயர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிசாம் ஷாவின் எல்லா துர்க் பிரதேசம் முழுவதும் உனது அதிகாரத்திலேயே கொடுத்து விட்டார். தண்டராஜ்புரி சிந்திகளும் உனிடம் கோபம் கொண்டுள்ளனர். சந்த்ரா ராய் மோரேயை நீ முழுவதும் சூரையாடிவிட்டாய். கல்யாண் பிவாண்டியிலோ நீ மசூதிகளை இடித்து இருக்கிறாய். மேலும், காஜி முல்லாக்களை சிறையிலிட்டிருக்கிறாய். நீ அரச இலட்சினையை எடுத்துக் கொள்கிறாய், நியாயம் வழங்குகிறாய், மேலும் தங்க அரியாசனத்தில் அமருகிறாய். மேலும், மதிப்பிற்குரிய பாதுஷாவிற்கு எதிரில்கூட தலை குனிவது கிடையாது. இந்த எல்லா பணிவற்ற காரியங்களை இப்போது சகித்துக் கொள்ள முடியாது. இன்றுவரை உனது நடவடிக்கைக்கு தீர்வு காணவென பலர் அனுப்பி வைக்கப்பட்டும் நீ ஒருவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் முதன்மை வீரரான ஆதில்ஷா மூலமாக உன்னை வழிக்குக் கொண்டு வர திட்டத்தைத் தீட்டியுள்ளேன்.எனது பாதுஷா ஆறு வகையான படையைக் கொடுத்திருக்கிறார். அவர்கள் எல்லோரும் போர் செயத் துடிக்கின்றனர். முசெகான், பிரதாப்ராவ் மோரே போன்றோர் பலமுறை உத்தம் செய்ய தூண்டியிருக்கின்றனர். ஆனால் …. சிங்ஹ்கட் லோகஹட் முதலிய பிரபல் தூர்க், நீரா, பீமா நதிகளின் இடைப்பட்ட பிரதேசங்களை மிக பலசாலியான தில்லி அதிபதியின் அதிகாரத்தில் ஒப்படைத்து விடு. மேலும் சந்த் எராவ் மோரேயிடமிருந்து பலவந்தமாக பறித்துக் கொல்லப்பட்ட ஜாவலியை ஆதில்ஷா உன்னிடமிருந்து திரும்பக் கேட்கிறார். இவையெல்லாவற்றையும் ஒப்புக் கொள்வதிலேயே உனக்கு நன்மை இருக்கிறது. என்னிடம் நம்பிக்கை வை. நான் எப்போதும் உனக்கு நஷ்டம் வர விடமாட்டேன். எனவே, என்னைச் சந்திப்பதற்கென விரைவில் வாயிக்கு வந்து சேர்.”
நள்ளிரவில் சிவாஜிக்கு குல்கர்னியுடன் மனம் திறந்து பேச்சு நடந்தது. இறுதியில் பிரதாப்கர் அருகில் சந்திக்க அப்சல்கானை சம்மதிக்க வைக்குமாறு சிவாஜி கூறினார். குல்கர்னிக்கு விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் பரிசளிக்கப் பட்டன. மேலும் அப்சல் கானிற்காகவும் விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் கொடுத்தனுப்பப்பட்டன. சிவாஜி அப்சல்கானுக்கு எழுதிய கடிதம் பின் வருமாறு –
“கர்நாடகாவின் பல அரசர்களை யார் எளிதில் சின்னாபின்னமாக்கினாரோ அவரின் வீரம் உண்மையில் அக்கினி தேவதைக்கு ஒப்பானது. யார் பூமியின் அழகை இருமடங்காக ஆக்கியுள்ளாரோ, மேலும் பழகுவதற்கு இனிமையானவரோ, அவருடன் பழகுவது எனக்கு எல்லாவற்றிக்கும் மேலான ஆனந்தம் அளிக்கும் விஷயம். ஆனால், எனது வேண்டுகோள் என்னவென்றால், தாங்கள் இயற்கையிலேயே அழகான ஜாவலி வருவதே சரியானதாகும். நான் அச்சமின்றி உங்களை சந்திக்க முடியும். ஆதில்ஷாஜியின் படை முழுவதிலும், அல்லது முகலாயப் படையிலும் தங்களுக்கு இணையான சாமர்த்தியமான மனிதர் வேறு யார் இருக்கிறார்? தங்களை ஏறிட்டும் பார்க்கக் கூட பெரிய பெரிய ஆட்களுக்குத் தைரியம் வருவதில்லை. நானும் என்னை தங்களுக்கு முன் எந்த அருகதையும் உடையவனாக கருதவில்லை. இங்கே வந்து தங்கள் என்னை மகிழ்வித்தால் தாங்கள் எந்த கோட்டைகள், பிரதேசங்களைக் கேட்கிறீர்களோ, அதைக் கொடுத்து என்னுடைய வாளைக்கூட தங்கள் முன் சமர்ப்பிப்பேன். தங்கள் இங்கு வாருங்கள், பாருங்கள், இங்குள்ள கானகத்தில் உலாவ உங்களுக்கும், உங்கள் படைக்கும் பாதாள உலகின் ஆனதம் கிட்டும்.”
கடிதத்திப் படித்து விட்டு அப்சல்கான் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினான். அவன் சிவாஜியின் வார்த்தையை ஒப்புக் கொண்டான். அதே சமயம் அவனது சேனாதிபதி இதில் எதோ சூழ்ச்சி இருக்கலாம் என மனத்திற்குள்ளேயே நடுங்கினான். பிரதாப் மோரே போன்ற தலைவர்கள் கூறினார்கள். “சிவாஜியிடம் அற்புதமான சாமர்த்தியம் இருக்கிறது. அவன் கோட்டையின் மேலே பாய்ந்து ஏறுகிறான். கருடனைப் போல் எதிரி மீது விரைவாகப் பாய்கிறான். பின் திடீரென காணாமல் போகிறான் … துளஜா தேவிக்கு அவன் மேல் ஒரு தனி ஆனந்தம். அவள் தானாக அவனுக்கு உதவி செய்கிறாள்..” இதைக் கேட்டு அப்சல்கானின் கண்கள் தீப்பிழம்புகள் போலாயின. அவன் சொன்னான், “எனது வீரத்தை நீங்கள் இப்போது அறியவில்லை, ஆகவே, சிவாவை நீங்கள் இவ்வளவு புகழ்கிறீர்கள். இன்னொரு விஷயம், நீங்கள் கோழைகளாக இருக்கலாம்.”
அப்சல் கானிடமிருந்து சம்மதம் பெற்று சிவாஜி அவனைச் சந்திக்கும் ஏற்பாடுகளில் முனைந்தார்.
பிரதாப்கர் கோட்டை
அங்கு, அப்சல்கான் தனது சிறிய படை, கஜானா, மற்றும் குடும்ப உறுப்பினர்களை வாயியில் விட்டு விட்டு பெரும் படையுடன் ஜாவலிக்குக் கிளம்பினான். மூன்று மைல் வரை மேடான பாதை பிறகு 10 மைல் வரை பாம்பு வளைவு, மலைச் சரிவுகளினின்றும் கீழே இறங்குதல், இந்த வகையான பாதை அது. யானைகள் குதிரைகள் ஒட்டகங்கள் பீரங்கிகள் சாமான்கள் நிரம்பிய மாட்டு வண்டிகள் இவை அனைத்தும் அந்த பாதை வழியே முன்னேறிக் கொண்டிருந்தன. ஏறி, ஏறி எத்தனயோ யானைகளின் மூட்டுகள் உடைந்தன. தங்களது தும்பிக்கைகளால் மரங்களின் உதவி கொண்டு அப்படி இப்படியாக யானைகள் முன்னேற முடிந்தது. குதிரைகள், ஒட்டகங்களை ஏற்றுவது மிகவும் கடினமாகிக் கொண்டிருந்தது. எவ்வளவோ ஆபரணங்கள் பள்ளங்களில் வீழ்ந்து சுக்கு நூறாகின. மேலும் பல பாம்புகள், தேள்கள் மற்ற விஷப் பிராணிகள் கடித்ததால் இறந்தன. சிப்பாய்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. ஜாவலி அடைவதற்குள் படைக்கு ஏற்பட்ட மோசமான நிலையை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாது.
அப்சல்கான் படை ஜாவலியில் குமுதவதி ஆற்றங்கரையில் முகாமிட்டது. வைரக்கல் வியாபாரியை அனுப்பி வைக்கும் படியும், அப்போதுதான் அவனிடமிருந்து வைரம், முத்து வாங்கி அவருக்கு அன்பளிப்பாக தர முடியும் என சிவாஜி அப்சல்கானுக்கு செய்தி அனுப்பினார்.
அப்சல்கான் பெரும் உடல்வாகு படைத்த மனிதன். ஆறு அடி உயரம் நல்ல பருமன். எந்தக் குதியையும் அவனுடைய எடையைத் தாங்க முடியாது சீக்கிரமே இறந்துவிடும் என்று கூறுவார். அதனால்தான் அவன் பெரும்பாலும் யானையில் உட்காருவான். பத்து மனிதர்களின் உணவை அவன் ஒருவனே சாப்பிடுவான். சுபாவத்தில் குரூரமும், வஞ்சகமும் நிறைந்தவன். அவன் தீவிர முஸ்லிம். மேலும் தன்னை சிலைகளை உடைப்பவன் எனச் சொல்லிக் கொள்வதில் அவன் பெருமிதம் அடைந்தான். ஷாஜியை அவன் மிகவும் வெறுத்தான். முஸ்தபா கான் பாசி கோர்பாடேயுடன் அவன் நெருக்கமாயிருந்ததே அதன் காரணமாயிருக்கலாம். அவன் ஷாஜியை கைது செய்வித்து அவமானம் செய்யும் பொருட்டு பூஜாப்பூருக்குக் கொணர்ந்தான். கானக்கிரி போரில் அவன்தான் ஷாஜியின் பெரிய புதல்வன் சம்பாஜியை ஏமாற்றிக் கொன்றான். கர்நாடகாவில் அவன் அதிகக் கொடூரம் காட்டினான்.
எல்லா விதத்திலும் சிவாஜி அவனுடைய பிடியில் வந்து விட்டான். இப்போது அவன் எங்கும் போக முடியாது என்று அப்சல்கான் மனத்திற்குள் சந்தோஷப் பட்டான்.பரிசளிப்பின் பொது மறைத்து வைத்திருக்கும் குறுவாளை பயன்படுத்தி சிவாஜியின் உயிரைப் பறிக்க விரும்பினான். பின்னர் அவனுடைய பிரதாப்கரில் கட்டப்பட்டுள்ள பவானி தேவியின் சிலையையும் நாசம் செய்ய விரும்பினான்.
அப்சல்கான் தனது முகாமிலிருந்து புறப்பட்ட பொது அவனுடன் கூட பன்னிரண்டாயிரம் வீரர்கள் இருந்தனர். சிவாஜிக்கு இந்த விஷயம் கிடைத்த பொது குல்கர்னியின் மூலமே அப்சல்கானின் மெய்காப்பாளர்களில் எவரையும் முன்னே செல்ல விடவில்லை. அலங்கரிக்கப்பட்ட கொட்டகையில் சிவாஜியும் அப்சல்கானும் மட்டும் சந்திப்பதற்காகச் செல்ல வேண்டும்..
அப்சல் கானின் கதையை முடிக்கும் சிவாஜி
சிவாஜி பந்தலில் நுழைந்தார். கான் முன்னேறினான். அவன் தனது வாளை கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் கொடுத்து விட்டு பின் அகலக் கால் வைத்தவாறு முன்னே விரைந்தான். அவன் சொன்னான், ” வா சிவாஜி ராஜா. நீ மிகவும் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறாய். நான் உன்னை சரியான வழியில் கொண்டு வருவேன். நீ வஜீர்பூர் செல்ல வேண்டும். பாதுஷாவிடமிருந்து உனக்கு மிகப் பெரிய ஜாகீர், மேலும் அன்பளிப்பு வாங்கித் தருவேன். வா. பயப்படாதே.”
கட்டித் தழுவிக் கொள்ளவென முன்னேறினான் கான். சிவாஜியும் முன்னேர்நான். கான் மிக உயரமானவன். சிவாஜி குள்ளமானவன். தழுவிக்கொள்ளும் சமயத்தில் சிவாஜியின் கழுத்தை அவன் இடது பக்கம் அழுத்தினான். மற்றொரு கையால் அவன் குறுவாளை உருவி அதை சிவாஜியின் வயிற்றில் குத்தினான். ஆனால், சிவாஜி உள்ளே இரும்புக் கவசம் அணிந்திருந்தான். அதில் அது உரசியது. சிவாஜி மல்யுத்தத்தில் வல்லவன். அவன் உடனே தனது கழுத்தை விடுவித்துக் கொண்டு சிங்கம் போன்று கர்ஜித்தவாறு குறுவாளையும் கூறிய புலி நகங்களையும் கானின் வயிற்றில் செருகிக் குடலை வெளியே உருவினான். கானின் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்தது. அதை ஒரு கையால் சமாளித்தவாறு கான் ஓடுவதற்கு முயற்சி செய்தான். “சூழ்ச்சி, சூழ்ச்சி, எதிரியைக் கொள்ளுங்கள்” என்று காத்த ஆரம்பித்தான். அதற்குள் சிவாஜி உரையிலிருந்து வாளை உருவி கானின் கழுத்தைத் துண்டித்தான்.

இரண்டு படைகளுக்கும் இடையே பயங்கர சண்டை நிகழ்ந்தது. இறுதியில் சிவாஜிக்கு வெற்றி கிட்டியது.

அன்றைய தேதி நவம்பர் 10 ,1659 .

No comments:

Post a Comment