Friday 11 November 2016

T.P.RAJALAKSHMI "சினிமா ராணி" டி. பி. ராஜலட்சுமி பிறந்த தேதி 11‍. 11 .11.

T.P.RAJALAKSHMI 
"சினிமா ராணி" டி. பி. ராஜலட்சுமி 
பிறந்த தேதி  11‍. 11 .11.


டி. பி. ராஜலட்சுமி (11 நவம்பர் 1911[1] - 1964) என்னும் திருவையாறு பஞ்சாபகேச ராஜலெட்சுமி தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகையும், முதல் பெண் இயக்குநரும், புதின எழுத்தாளரும் ஆவார். தமிழில் 1931 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். 1943 ஆம் ஆண்டுவரையில் மொத்தம் 14 திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் ராஜலட்சுமி. தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தவர். ராஜலட்சுமிக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணைக் கொடுமையினால் பிறந்த வீட்டுக்கே வந்த ராஜலட்சுமியின் தந்தையும் இறக்கவே விதவைத் தாயுடன் 
வறுமையுடன் திருச்சி வந்து சேர்ந்தார்.

  இவர் பிறந்த தேதி ஒரு மேஜிக் எண்ணாக இருக்கிறது 
 11‍. 11 .11.

திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி ராஜலக்ஷ்மி என்பதன் சுருக்கம்தான் டி.பி.ராஜலக்ஷ்மி என்ற பெயர். தன் இளமைக்காலம் முதல் இசை, நாட்டியம், நாடகம் என்று கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர். நாடகக் கலை மேதை சங்கரதாஸ் சுவாமிகளிடம் இவர் நாடகங்களில் நடித்து வந்தார். 1936இல் (ஆம் 1936இல்தான்) இவர் மிஸ் கமலா என்று இவரே எழுதிய நாவலைப் படமாக இயக்கினார். முதல் பெண் இயக்குனர் எனும் பெருமையைப் பெற்றார். ராஜா சாண்டோ எடுத்த உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களிலும் நடித்தார். இவர் நடித்த படங்கள் 23. இதில் இரண்டை இவர் இயக்கியிருக்கிறார். 

அவை முறையே "உத்தமி" (1943), பரஞ்ஜோதி (1945), காளிதாஸ் (1931), பாமா பரிணயம் (1936), சீமந்தினி (1936), தமிழ் தியாகி (1939), பூர்ணசந்திரா (1935), சுகுண சரசா (1939), ராஜேஸ்வரி (1930), அநாதைப் பெண் (1938), இதயகீதம் (1950), மிஸ் கமலா (1936), லலிதாங்கி (1935), உஷா சுந்தரி (1930), பக்த குசேலா (1935), பக்த குமரன் (1939), மதுரை வீரன் (1938), குலேபகாவலி (1935), கெளசல்யா பரிணயம் (1937), சாவித்ரி சத்யவான் (1933), நந்தகுமார் (1938), கோவலன் (1929), ஜீவஜோதி (1947). இவற்றில் இரண்டு மட்டும் இவர் இயக்கியவை. 

மேடை நாடகங்களில் நடிப்பு[தொகு]

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய பயிற்சி இராஜலட்சுமிக்குக் கிடைத்தது. திருச்சியில் அப்போது வெற்றிகரமாக நடந்து வந்த சாமாண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ராஜலட்சுமிக்கு சந்தர்ப்பம் கிட்டியது. தனது 11 வயதில் நாடக நடிகையானார். அவர் நடித்த முதல் நாடகம் "பவளக்கொடி". அதன் பின்னர் கே. எஸ். செல்லாப்பாவின் நாடகக் கம்பனியில் சேர்ந்து நடித்தார். பின்னர் கே. பி. மொய்டீன் சாகிப் நாடக மன்றத்தில் மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள். பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.

காளிதாஸ் (1931) திரைப்படத்தில் ராஜலட்சுமியும்
 வெங்கடேசனும் தோன்றும் காட்சி
அதன் பின்னர் எஸ். ஜி. கிட்டப்பாவுடன் ராமா பட்டாபிஷேகம், எம். கே. தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி ஆகிய சில நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் பல பிரபலங்களுடன் இராஜலட்சுமி நடித்திருந்த போதும் வி. ஏ. செல்லப்பாவுடன் இவர் வெற்றிகரமாக இணைந்து நடித்துப் பாராட்டுப் பெற்றார்.

தான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களின் வரவேற்பைப் பெற்றார். அதே போல கருநாடக இசைப் பாடல்களையும் பாடினார். "இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...", "இராட்டினமாம் காந்தி கைபாணமாம்..." போன்ற இவர் பாடிய தேசபக்திப் பாடல்களும் வெகு பிரபலம். தேச பக்திப் பாடல்களைப் பாடியதற்காக பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டு சில முறை சிறையும் சென்றிருக்கிறார்.

திரைப்படத்துறையில்[தொகு]
ஊமைப் படங்களில்[தொகு]
1917 இல் ஆர். நடராஜ முதலியார் தயாரித்த தமிழ்த் திரைப்படவுலகின் முதல் மௌனப் படமான "கீசகவதம்" என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். 1929 இல் ஊமைப் படங்களைத் தயாரித்து வந்த ஜரைல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ. நாராயணன் ராஜலட்சுமியைத் தனது ‘கோவலன்’ எனும் ஊமைப்படத்தில் மாதவியாக நடிக்க வைத்தார். இது இவர் நடித்த இரண்டாவது ஊமைத் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் ‘உஷா சுந்தரி’, ராஜா சாண்டோவின் "இராஜேசுவரி" (1931) போன்ற சில ஊமைப்படங்களில் நடித்தார். அன்றில் இருந்து அவர் 'சினிமா ராணி' என்று புகழ்பெற்றிருந்தார்.

1931 செப்டம்பர் 29 சுதேசமித்திரன் பத்திரிகையில் 
வெளியான காளிதாஸ் விளம்பரம்
குறும் படத்தில்[தொகு]
தமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமையும் இராஜலட்சுமியையே சாரும். மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரித்த "குறத்தி பாட்டும் நடனமும்" என்ற அந்தக் குறும்படம் நான்கு சுற்றுக்களை மட்டுமே கொண்டது. இந்தப் படமும் 1931ல் தான் வெளியானது.

பேசும் படங்களில்[தொகு]
தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் இவர் நடித்து வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தைத் தயாரித்தவர் பம்பாய் இம்பீரியல் மூவி டோன் நிறுவனர் அர்தேஷிர் இரானி. இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக கே. சுப்பிரமணியம் ராஜலட்சுமியைத் தேர்ந்தெடுத்து பம்பாய்க்கு அனுப்பினார். இத்திரைப்படம் 1931 அக்டோபர் 31 இல் சென்னையில் கினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படத்தில் ராஜலட்சுமி "காந்தியின் கைராட்டினமே" என்ற பாடல் உட்பட இரு பாடல்களும் பாடி, குறத்தி நடனமும் ஆடினார்.

காளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜலட்சுமி ராமாயணம் (1932) படத்தில் நடித்தார். இதில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். இக்காலகட்டத்திலேயே இவருக்கு சினிமா இராணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அரிச்சந்திரா, கோவலன், சத்தியவான் சாவித்திரி, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார். 1933 இல் டி.பி. ராஜலட்சுமி நடித்து வெளிவந்த வள்ளி திருமணம் தமிழின் முதல் வெற்றிப்படம் ஆகும்.

அக்காலத்தில் அவருடன் சேர்ந்து நடித்த டி. வி. சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டார். கல்கத்தாவில் சேர்ந்து வாழ்ந்தார்கள். அங்கே பிரௌபதி, அரிச்சந்திரா குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்கள்.

கல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி சிறீ ராஜம் டாக்கீசு என்ற கம்பனியைத் தொடங்கி மிஸ் கமலா என்ற பெயரில் தானே கதைவசனம் எழுதி கதாநாயகியாக நடித்து தயாரித்து இயக்கி வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. இப்படம் 1936 இல் வெளிவந்து தோல்வி அடைந்தது. தொடர்ந்து மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி. பி. ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி. பி. ராஜசேகரன் கவனித்து வந்தார்.

எழுதிய புதினங்கள்[தொகு]
கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
விமலா
சுந்தரி
வாஸந்திகா
உறையின் வாள்
விருதுகள்[தொகு]
கலைமாமணி விருது, 1961

11ஆவது வயதில் திருமணம்

இவருடைய 11ஆவது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். நாடகக் கலையில் ஈடுபட்டதோடு இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். இந்த பணிகளினால் இவர் குடும்ப வாழ்க்கையில் தொடர முடியவில்லை. திருமணமான அடுத்த வருஷமே இவர் கணவனைப் பிரிந்துவிட்டார். நாடகங்களை இவர் இயக்கத் தொடங்கினார். அந்தக் காலத்தில் ஸ்பெஷல் நாடகம் எனப்படும் நாடகங்களை நடத்தினார். 

"சினிமா ராணி"

சாதாரணமாக நாடகக் கம்பெனிகள் தங்கள் நடிக நடிகர்களை நிரந்தரமாகத் தங்களுடன் வைத்திருப்பார்கள். ஸ்பெஷல் நாடகம் என்றால் எப்போது நாடகம் போடுகிறார்களோ அப்போது தகுந்த நடிக நடிகைகளைக் கூப்பிட்டு நாடகம் நடத்துவார்கள். 1930இல் இவர் சினிமாத் துறைக்குள் நுழைந்தார். அந்தக் காலத்தில் இவருடைய அழகைக் கண்டு இவரை "சினிமா ராணி" என்று புகழ்ந்தனர். இவர் தனது 20ஆம் வயதில் தன்னுடைய சக நடிகராக இருந்த டி.வி.சுந்தரம் என்பவரிடம் காதல் கொண்டார். ராஜலக்ஷ்மியிடம் தைரியமும், குறிக்கோளும் இருந்தன. அந்த நாட்களிலேயே இவர் குழந்தைத் திருமணத்தையும், சிசுக் கொலையையும் எதிர்த்திருக்கிறார். பெண் சிசுக் கொலையை சும்மா வாயால் எதிர்த்ததோடல்லாமல், அப்படி கொலை செய்யப்படவிருந்த ஒரு பெண் சிசுவை தத்து எடுத்து வளர்த்தும் வந்தார். அதன் பெயர் மல்லிகா. அந்த குழந்தை மல்லிகாவை தத்தெடுத்து, வளர்த்துத் திருமணமும் செய்து கொடுத்தார். இது தவிர இவரிடம் உதவி கேட்டு வந்த பல பெண்மணிகளுக்கு அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இவருக்கே ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. 1936இல் பிறந்த அந்தக் குழந்தையின் பெயர் டி.எஸ்.கமலா. இந்தப் பெயரில்தான் மிஸ்.கமலா என்று அவர் தன்னுடைய முதல் சினிமாவை இயக்கினார்.


இவர் காலத்தில் வெளியான "குலேபகாவலி" என்று மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்தார். இவர் தன் சொந்த சினிமா கம்பெனியையும் வைத்திருந்தார். அதன் பெயர் ராஜம் டாக்கீஸ். சென்னையில் இவர் வசித்த ராஜரெத்தினம் தெருவில் இவர் 10க்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருந்தார். அந்தத் தெருவில் முதல் எண் உள்ள தனது வீட்டிற்கு "ராஜ்மஹால்" என்று பெயரிட்டிருந்தார். "இந்தியத் தாய்" எனும் பெயரில் ஒரு தேசபக்தி படத்தை இவர் இயக்கினார். அது தோல்வியைக் கண்டது. காரணம் அதில் இவர் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்ததுதான். இவருக்கு வயதாகிவிட்டது, கிழவியாகி விட்டார், அழகெல்லாம் போய்விட்டது என்று மக்கள் நினைத்து விட்டனர். அதற்குப் பிறகு அதிக பட வாய்ப்புகள் இவருக்குக் கிடைக்கவில்லை. படங்கள் இல்லை, வருமானம் இல்லை, கீழ்ப்பாக்கத்தில் இவருக்கு இருந்த சொத்துக்களை யெல்லாம் விற்கத் தொடங்கினார். வறுமையெனும் கொடிய வாழ்க்கையில் சிக்கினார்.

இவருக்கு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் போகக்கூட வாகன வசதி இல்லாமல் இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் ஒரு காரையும் அதனுடன் தன்னுடைய உதவியாளரையும் அனுப்பி அவரை விழா மேடைக்கு அழைத்து வந்து கெளரவித்ததாக அவருடைய மகள் திருமதி கமலா சொல்லியிருக்கிறார்.



வாழ்வின் உச்சத்தையும், தாழ்வையும் பார்த்து அவர் உடல்நலம் கெட்டது. ரத்த அழுத்த நோய்க்கு ஆளானார். அதன் விளைவாக கைகால்கள் இயங்காமல் படுத்த படுக்கையானார். பெண் திருமதி கமலா தன் தாயாரை நன்கு கவனித்துக் கொண்டார். டி.பி.ராஜலக்ஷ்மி தன் எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டாலும் ஒரே ஒரு வீட்டை மட்டும் வைத்துக் கொண்டிருந்தார். அதைத் தன் மகள் கமலாவுக்குக் கொடுத்து விட்டார். அப்படி கொடுக்கும்போது தன் மகளிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டார், அது எந்த நிலையிலும் அந்த வீட்டை மட்டும் விற்கக்கூடாது என்பதுதான் அது. வறுமை காரணமாக அந்த வீட்டையும் விற்க நேர்ந்தது. மனமொடிந்து போன டி.பி.ராஜலக்ஷ்மி நினைவிழந்த நிலையில் வாடகை வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டார். நினைவு வந்து தான் எங்கிருக்கிறோம் என்பதறியாமல் மகளிடம் கேட்டபோது அந்த அறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகப் பொய் சொல்லி சமாளித்திருக்கிறார். தான் இன்னமும் அந்த "ராஜ்மஹால்" இல்லத்தில்தான் இருக்கிறோம் என்ற நினைவிலேயே இருந்தார்.


கமலாவின் மகனுடைய ஆண்டு நிறைவைக் கொண்டாட இவர் முயன்றபோது பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து தனக்கு பரிசாக வந்த கேடயமொன்றை உருக்கி குழந்தைக்கு மோதிரமும், நகையும் செய்து போட்டார். புகழின் உச்சியிலும், செல்வச் செழிப்பிலும் தவழ்ந்த டி.பி.ராஜலக்ஷ்மி அவர்களின் கடைசி நாட்கள் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. வறுமை யாரை விட்டது?

இறுதிக் காலம்[தொகு]

டி. பி. ராஜலட்சுமி

டி. பி. இராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு 1964 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு கமலா மணி என்ற ஒரே ஒரு மகள் உள்ளார்.

 இந்த அற்புதமான பெண்மணி 1964இல் காலமானார். 


No comments:

Post a Comment