Saturday 1 October 2016

சிவாஜி கணேசன் நடிப்பில் எவரும் தொடமுடியாத சிகரம் பிறப்பு: 1 அக்டோபர் 1927



சிவாஜி கணேசன் நடிப்பில் எவரும் தொடமுடியாத சிகரம் 
பிறப்பு: 1 அக்டோபர் 1927



பிறப்பு: 1 அக்டோபர் 1927

பிறந்த இடம்: விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: 21 ஜூலை 2001

தொழில்: நடிகர், அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.


ஆரம்பகால வாழ்க்கை

சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.


நடிகராகவும், அரசியல்வாதியாகவும்


சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.


“இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.

அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று விமரிசிப்பவர்கள் கூட சிவாஜியின் திரையுலகச் சாதனையை மறுப்பதில்லை. பொதுவில் அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் அரங்கில் பிழைக்கத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார்.

ஆனால் அவரது சமகால வரலாறும், அவரது திரைப்படங்களும், அதில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களும், அவரால் உருவாக்கப்பட்ட நடிப்பு பாணியும், ஒரு நட்சத்திரமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவர் செய்த முயற்சிகளும், அதையொட்டி மாறிய அவரது அரசியல் வாழ்க்கையும், ‘இமேஜ்’ கரைந்து போன பிற்காலத்தில் அவர் நடித்த கேவலமான படங்களும், வளர்ப்பு மகன் திருமணத்தில் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதரைப் போன்று பங்கேற்றதும், 80 – களின் இறுதியில் வேறு வழியின்றி அரசியல் துறவறம் மேற்கொண்டதும் – நமக்கு வேறு ஒரு மதிப்பீட்டைக் காண்பிக்கின்றன.


திரையுலகச் சாதனை

‘பராசக்தி’ தயாரிப்பளாருக்கு பண உதவி செய்த ஏ.வி.எம் செட்டியாருக்கு, புதுமுகமான சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. அதையும் மீறி கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனமெழுத 1952 – இல் வெளியான இப்படம் பெரும் வெற்றியடைந்தது. மேடை நாடகங்களில் கணீரென வசனம் பேசிக் கொண்டிருந்த சிவாஜிக்கு இப்பட வாய்ப்பு தற்செயலாக கிடைத்திருந்தாலும், பராசக்தியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட அவசியமான சூழ்நிலைகள் அப்போது உருவாகியிருந்தன.

அன்றைய திரையுலகம் பாட்டிலிருந்து வசனத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. புராணக் கதைகளில் சிக்கியிருந்த திரைக்கதை, பார்ப்பனியத்தின் அநீதியை எடுத்துரைக்கும் சமூக நோக்கம் கொண்டதாக விரிவடைய ஆரம்பித்திருந்தது. மவுசிழந்த தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா போன்ற நட்சத்திரங்களுக்குப் பதிலாக, திராவிட இயக்கக் கலைஞர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர்.

கலையுலகின் இம்மாற்றத்திற்கு முன்பாகவே அரசியல் உலகமும் மாறத் துவங்கியிருந்தது. காங்கிரசின் மேட்டுக்குடி நலனுக்கான அரசியல் பின்தங்கி, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு முன்னணிக்கு வந்தது. இன்னொரு புறம் மொழிவழி மாநிலங்களுக்கான போராட்டப் பின்னணியில் திராவிட இயக்கமும் வளர ஆரம்பித்திருந்தது. மொழி – இனப் பெருமையை வைத்து, சாமானிய மக்களின் குரலாக உருவெடுத்து, விரைவிலேயே தமிழ் மக்களின் பிரதிநிதியாக இவ்வியக்கம் தன்னை முன்னிருத்திக் கொண்டது. அதற்கு அவ்வியக்கத் தலைவர்கள் தமது பிரச்சாரத்தை எளிய வடிவில் மக்களிடம் கொண்டு சென்றது ஒரு முக்கியமான காரணமாகும்.




திரையுலக பிரவேசம் :

திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெய
ரை நிலைக்கச் செய்தது.

தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.


அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.


திராவிட இயக்கமும் திரைப்பட முதலாளிகளும் !

1967 – இல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் வரை முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகளை அபாயமாகக் கருதிய முதலாளிகள், திராவிட இயக்கத்தை தமக்கு சாதகமானது என்று சரியாகவே கருதினர். சமூக அரங்கில் வரவேற்பைப் பெற்றிருந்த திராவிட இயக்க படைப்புக்களை திரையுலகில் ‘ஸ்பான்சர்’ செய்வதற்கு முதலாளிகள் தயாராயினர். இரு பிரிவினரும் தமது அரசியல் நலனைக் காப்பாற்றிக் கொண்டு பண ஆதாயம் பெறுவது உறுதி செய்யப்பட்டது.

அப்போதே அண்ணாவும், கருணாநிதியும் தமது வசனங்களுக்காக ஆயிரக்கணக்கில் ஊதியம் பெற்றனர். சிவாஜி தவிர எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.இரேசேந்திரன், கே.ஆர்.ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன் போன்ற திராவிட இயக்க நடிகர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர். 47 – க்குப் பின் பிரச்சினையின்றி தனது படத்தில் பாரதி பாடலைச் சேர்த்த ஏ.வி.எம். செட்டியார் போன்ற முதலாளிகள் தயாரிப்பாளரானார்கள். ‘பராசக்தி’ காலப் படங்களில் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூகப் பிரச்சினைகளும் வீரம் – காதல் – கற்பு – பாசம் போன்ற ‘தமிழ் நெறி’களின் பின்னணியில் வெளிப்பட்டன. அந்தத் ‘தமிழ் நெறி’ அற்ப உணர்வாகவும், இனப்பெருமை சவடாலாகவும் சீரழிய அதிக காலம் ஆகவில்லை. அதுவே திராவிட இயக்கத்தின் அரசியல் வழிமுறையாகவும் உறுதியானது.

நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி !

இதனிடையே சிவாஜியின் சிம்மக்குரல் கர்ஜனையில் பணம், மனோகரா, இல்லற ஜோதி போன்ற படங்கள் வெளிவந்தன. இவை அவரது பாணி நடிப்பு – வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 -களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி, 60 – களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் நட்சத்திரமாகிவிட்டார்.

அவரது ‘இமேஜூ’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள், ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர், ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’ களுக்கும் இதுவே இலக்கணம்.


எம்.ஜி.ஆர் – ரஜனியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமலஹாசனுககு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்ட கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.

இத்தகைய நட்சத்திர நடிகர்கள், தமது ஒரு சில படங்களின் வெற்றியை வைத்து, வெற்றி பெரும் கதை, மக்களின் ரசனை, தமது திறமையின் மகிமை போன்றவை இன்னதுதான் என தமக்குத்தானே தீர்மானிக்கின்றனர். உலகமே தம்மை மேதைகளாக மதிப்பதாகவும் கருதிக் கொள்கின்றனர்.

திரையுலகில் திறமையும் – சமூக நோக்கமும் கொண்டவர்கள் நுழைய முடியாமல் இருப்பதும், இருந்தால் ஒழிக்கப்படுவதும் மேற்படி நட்சத்திர முறையின் முக்கிய விளைவுகளாகும். திரையுலகத்தைக் கோடிகளைச் சுருட்டும் மாபெரும் தொழிலாக மாற்றிவிட்ட முதலாளிகளுக்கு,இந்த ‘சூப்பர் ஸ்டார்கள்’ நம்பகமான மூலதனமாக இருப்பதால், நட்சத்திரங்களை அவர்களே திட்டமிட்டு உருவாக்கவும் செய்கின்றனர்.

நடிகர்களின் திறமை, முதலாளிகளின் ஆதரவு போக இந்த நட்சத்திரங்கள் எழுவதற்கும்,  குறிப்பிட்ட காலம் மின்னுவதற்கும், பின்னர் மங்குவதற்கும் குறிப்பான – சமூக வரலாற்றுக் காரணங்களும் தேவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரசின் மேட்டுக்குடி அரசியலுக்கு மாற்றாக தமிழினப் பெருமை பேசி வந்த திராவிட இயக்கம், உழைக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாய் சில பத்தாண்டுகள் நீடித்தது. அதனால்தான் தி.மு.க.வின் தமிழ்ப் பண்பான காதல், வீரம், கற்பு, தாய்ப் பாசம், மொழி – இனப் பெருமை போன்றவை கலந்து ஒரு நாட்டுப்புற வீரனாய் உருவெடுத்த எம்.ஜி.ஆரின் இமேஜ் செல்வாக்குடன் பல ஆண்டுகள் நீடித்தது.

உயர்குடி மாந்தராக சிவாஜியின் இமேஜ் !

இதே காலப் பின்னணியில் உருவான சிவாஜியின் இமேஜ் வேறு ஒரு பின்புலத்தைக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் – அதன் பின்னரும் பின்தங்கிய நிலவுடைமைச் சமூகம் மெல்ல மெல்ல மாறத் துவங்கியிருந்தது. தொழில் துறை – நகரங்களின் வளர்ச்சி, பழைய சமூக உறவுகளை அப்படியே நீடிப்பதற்கு அனுமதிக்கவில்லை. பார்ப்பன – பார்ப்பனரல்ல்லாத மேல்சாதிகளும், மேல்தட்டு வர்க்கங்களும் இந்த மாற்றத்தின் பொருளாதார ஆதாயங்களைப் பெற்றாலும் மறுபுறம், தமது பிற்போக்கான, பழமையான சமூக மதிப்பீடுகள் அழிவதாகவும் அரற்றிக் கொண்டன. இந்த முரண்பாட்டில் சிக்குண்ட மேல்தட்டு மனிதர்கள் மற்றும் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதர்களின் பெருமை, ஏக்கம், புலம்பல், இத்யாதிகளை, சற்று அழுத்தமான மிகை நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு ஒரு சிவாஜி தேவைப்பட்டார்.

பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.
Add caption


 உயர்குடி மனிதர்களின் வாழ்க்கையைத்தான் சிவாஜி மட்டுமல்ல அவரது சமகாலத் திரையுலகம், இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரும் பிரதிபலித்தனர். அப்போது இத்தகைய ‘குடும்பப் படங்கள்’ எனும் மதிப்புடன் வெளிவந்த கதைகளே வெற்றிக்குரிய சூத்திரமாகக் கருதப்பட்டன. அதில் சிவாஜி மட்டும் குறிப்பிடத் தகுந்த வகை நடிப்பைக் கொண்டிருந்தார் என்பதே அவருக்குரிய பங்காகும்.

சிவாஜியும் மிகை நடிப்பும்!

அதை மிகை நடிப்பு என்பாரின் விமரிசனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்தும், அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்கு குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்கு காரணம் என்று கூறிவிட முடியாது.

மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர் அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்தி விட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.

தி.மு.க.வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான மூடியாகவே இருந்தது.

முதலில் ஜாடிக்கேற்ற மூடி; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு அது முற்றத் தொடங்கியது.

கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும் !

சிவாஜி தனது நடிப்புத் திறனை எப்படி வளர்த்துக் கொண்டார்? அவரே கூறியிருப்பது போல பலரது வாழ்க்கைப் பாணிகளை பார்த்துப் பதிந்து கொண்டதுதான். ஆனால் யாரை – எதை பார்க்கப் பழகியிருந்தார் என்பதுதான் பிரச்சினை. சிவாஜியின் படங்களைப் போல அவரும் சமகால சமூகத்தைப் பற்றியும், அது மாறி வந்தது குறித்தும், மக்களின் யதார்த்தமான வாழ்க்கை –
பிரச்சினைகளையும் அறியாதவராகவே இருந்தார். அப்படித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை அவரது படங்களும் – பாத்திரங்களும் கோரவில்லை. கூடவே அவரது அரண்மனை வீடும், காங்கிரசின் மேட்டுக்குடி நட்பும், திரைப்பட முதலாளிகளின் சூழலும் – உயர்குடி மனிதர்களைப் பற்றியே சிந்திக்க வைத்திருக்க முடியும். நடிப்பும் – வாழ்க்கையும், இமேஜூம் – கற்பனையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன.

ஆகவே சிவாஜி கற்றுக் கொணடு நிகழ்த்திக் காட்டிய ஸ்டைலாக – புகைவிடுவது, கம்பளியுடன் இருமுவது, தலையைப் பிய்த்து நிம்மதி தேடுவது, தரை அதிரவோ – நளினமாகவோ நடந்து வருவது போன்ற ஜோடனைகளுக்கும், சர்க்கஸ் வித்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. சீனியர் சங்கராச்சாரியையப் பார்த்து அப்பராக நடித்ததைப் பெருமையுடன் குறிப்பிடும் சிவாஜி, தனது வித்தியாசமான வேடங்கள் பலவற்றையும் எங்கிருந்து கற்றார் என்பதை எங்கேயும் கூறியதில்லை.

வீழ்ந்த நட்சத்திரம் !

சிவாஜி கால உயர்குடி மிகை யதார்த்தப் படங்களுக்கான வரலாற்றுக் காரணங்கள் மாறத் துவங்கிய போது அவரது நட்சத்திர இமேஜ் மங்கத் தொடங்கியது. அதைச் சரிகட்ட சிவாஜியும் – எம்.ஜி.ஆரும் 70 – களின் வண்ணப் படங்களில் நாயகிகளைத் துகிலுரிவதிலும், காதலைக் காமமாக மாற்றுவதிலும் போட்டியாக ஈடுபட்டனர். இதன் பின்னர் 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ‘தர்மராஜா’வில் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.

இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். 


அரசியல் வாழ்க்கை

அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1987ல் கட்சியை விட்டு விலகி, ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
பெரும்நடிகராக இருந்தாலும், அவருக்கு அரசியலில் எம்.ஜி.ராமச்சந்திரன் போல செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, தனது இறுதிக்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

சிவாஜியும் அரசியலும் !

 ‘ அரசியலில் மட்டும் சிவாஜி தோல்வியடைந்தார்’ என்ற கருத்தைப் பரிசீலிக்கலாம். முதலில் இந்த மதிப்பீடே நேர்மையற்ற மதிப்பீடு. காரணம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அரசியலில் ஈடுபடும் ஒருவர் தோல்வியடைந்தால் அப்படி மதிப்பிடலாம். மாறாக தனது ‘நடிகர் திலகம்’ இமேஜைத் தக்க வைக்கவும், விரிவுபடுத்தவும், அதன்மூலம் அரசியலிலும் புகழடைய வேண்டும் என்ற சிவாஜியின் நோக்கமே பச்சையான சுயநலமாகும். இது பெருங்கனவாக வளருவதற்கு எம்.ஜி.ஆரின் போட்டி ஒரு காரணமாக இருந்தது.

திராவிட இயக்கத்தின் முன்னணிக் கலைஞராக வளர்ந்த சிவாஜி 1955- இல் திடீரென திருப்பதி சென்று வழிபட்டார். கொதித்தெழந்த உடன்பிறப்புகளோ “திருப்பதி கணேசா! திரும்பிப் பார் நடந்துவந்த பாதையை, நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?”என்று கேட்டனர். திராவிட அரசியலும் -நாத்திகமும் தனது இமேஜை குறுக்கிவிடும் என்று கருதிய சிவாஜி தேசியமும் – தெய்வீகமும் உள்ளவராகக் காட்டிக் கொண்டார். அதன்படி அடுத்த சில ஆண்டுகளில் ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்களில் நடித்து, 50களில் புதையுண்டு போயிருந்த புராணப் புரட்டல்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

இதே ஏ.பி.நாகராஜன்தான் திராவிட இக்கங்களைப் பல படங்களில் கொச்சைப்படுத்தி கேலி செய்தவர். பராசக்தியில் சிவாஜியுடன் நடித்த எஸ்.எஸ். இராசேந்திரன் போன்றோர் புராண, கடவுள் படங்களில் நடிப்பதில்லை என்று உறுதியுடன் கடைபிடித்தார்கள். 

காங்கிரசில் சேர்ந்த ‘கூத்தாடி’ !

திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரசு கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ’ என்று கேவலப்படுத்தியது. 

50-களில் ‘தாராசிங் – கிங்காங்கை’ வைத்து மல்யுத்தக் காட்சிகள் நடத்திப் புகழ் பெற்ற சின்ன அண்ணாமலை என்ற காங்கிரசுக்காரர், 60 – களில் நடிப்புடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த சிம்மக் குரலோனை வைத்து அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் உருவாக்கினார். புதுப்படங்களுக்கு பூசை, தோரணம், அபிஷேகம், ஊர்வலம், ஒவ்வொரு படத்தின் பெயரிலும் ரசிகர்மன்றம் என்று ரசிகர்களை பொய்யான உணர்ச்சியில் மூழ்கடித்து, சினிமாவை முக்கியமான சமூக நிகழ்வாக மாற்றி சீரழித்ததில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சம பங்காற்றினர். இந்த ரசிகர் மன்ற நோய் பரவுவதற்கு, திரையுலகின் புகழையும், செல்வாக்கையும், கவர்ச்சியையும், அரசியலுக்கு கேடாகப் பயன்படுத்திய தி.மு.க.வும் காரணமாக இருந்தது.

பால்கனி, பெஞ்சு டிக்கட் என்ற இரு பிரிவையும் கவர்ந்த சிவாஜிக்கு சாதிகளைக் கடந்த ரசிகர்களே அதிகம். இருப்பினும் தேவர் சாதி மக்கள் இருக்கும் ஊர்களில் சிவாஜி மன்றாடியார் – தேவர்மகன் சிவாஜி ரசிகர் மன்றங்களாக இருந்ததை அவர் ஆதரித்தார். 70 – களின் சில படங்களில் ‘நான் தேவன்டா’ என்று அடிக்கடி வலிந்து பேசி தன் பெருமிதத்தைக் காட்டிக் கொண்டார். இவ்வளவு இருந்தும் பின்னாளில் அவர் ஆரம்பித்த தனிக் கட்சிக்கு டெபாசிட் வாங்கிக் கொடுத்த சில தொகுதிகளில் தேவர்சாதி மக்கள் அதிகம் கிடையாது.


பார்ப்பனர்களிடம் பறி கொடுத்த பிரஸ்டீஜ் !

அதே சமயம் தன் புகழ் உச்சத்திலிருக்கும் போதும் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்தும் போயிருக்கிறார். 71 – ஆம் ஆண்டில் அவரது ‘களம் கண்ட கவிஞன்’ எனும் நாடகத்திற்கு சென்னையின் ‘அவாள்’ சபாக்கள் இடம் கொடுக்கவில்லை. பார்ப்பனக் குடும்பக் கதைகளை மட்டும் நாடகங்களாக நடத்தும் சபாக்களின் விதிப்படி தனது நாடகத்தை விடுத்து, ‘வியட்நாம் வீடு’ என்ற நாடகத்தை சிவாஜி அரங்கேற்றினார். இதில் ‘பிரஸ்டீஜ் பத்மநாப அய்யராக’ நடித்து அவாளின் உள்ளம் கொள்ளை கொண்ட நடிகர் திலகம் தன்னுடைய ‘பிரஸ்டீஜ்’ பறி போனது குறித்து கவலைப்படவில்லை.



இக்காலத்தில் வெளியான ‘ராஜபார்ட் ரங்கதுரையில்’ தூக்கு மேடையேறும் பகத்சிங் “காந்தி வாழ்க” என்று பேசத் தொடங்கி அலையோசை, நவசக்தி போன்ற காங்கிரஸ் பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்து கயிற்றில் தொங்குவார். 

அரசியல் வேண்டாம், ஆளை விடுங்கப்பா !

இடையில் இந்திராவிடமிருந்து பிரிந்து ஸ்தாபனக் காங்கிரஸ் ஆரம்பித்த காமராஜருடன் சேர்ந்தார். காமராஜர் இறந்ததும் இந்திராவிடம் திரும்பினார். 80 – களில் இவருக்கும் மூப்பனாருக்கும் நடந்த காங்கிரஸ் குழுச் சண்டையில் தோற்றார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அடுத்த புரட்சித் திலகம் நாம்தான் என்று முடிவு செய்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக்கட்சி ஆரம்பித்தார். 88 தேர்தலில் “234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 3 -இல் மட்டும் டெபாசிட் பெற்றது ” எனுமளவுக்கு கேவலமாகத் தோற்றார்.

அப்போதும் சளைக்காமல் வி.பி.சிங்கின் ஜனதா தளத்தில் சேர்ந்து மாநிலத் தலைவரானார். அந்தக் கட்சியும் கட்டெறும்பாக கரைந்த நிலையில் ‘அடங்கொப்புரானே, அரசியலும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் ’ என்று அரசியல் துறவறம் மேற்கொண்டார். சிவாஜியின் அரசியல் சந்தர்ப்பவாதம் இத்தனை விகாரமாகத் தெரியக் காரணம், அதையே நேர்த்தியாக செய்யும் திறமை அவருக்கில்லை என்பதுதான்.

அண்ணாவும், தம்பி கணேசனும், நண்பர் கருணாநிதியும் !
அந்தத் திறமை அடுக்கு மொழியில் சவுடால் அரசியல் செய்து வந்த தி.மு.கவிடம் இருந்தது. திருப்பதிக்குப் போன சிவாஜியை உடன்பிறப்புகள்தான் எதிர்த்தனர். ‘அறிஞர்’ அண்ணாவோ ‘தம்பி கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று தந்திரமாக சமரசம் செய்து கொண்டார். காரணம் அப்போது அண்ணா எழுதிய சில படங்களில் நடிப்பதற்கு சிவாஜி தேவைப்பட்டார். அதன் பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பகுத்தறிவுக்கு அவர் சமாதி எழுப்பிய பின் திரையுலகில் கொள்கையுமில்லை – வெங்காயமுமில்லை என்ற வணிகப் பண்பு நிலைபெற்றது.


அதனால்தான் பராசக்தி படத்தில் ஏழைகளின் துன்பத்தை எழுதி பேசிய கருணாநிதி – சிவாஜி ஜோடி, 1981 இல் ‘மாடிவீட்டு ஏழை’ படத்தில் இலட்சாதிபதியின் துன்பத்தை எடுத்துரைத்தது. அப்போது இருவரும் இலட்சாதிபதிகளாக இருந்தார்கள் என்ற விசயம் அவர்களது கொள்கையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் இருவரும் கட்டிப்பிடித்து அழுதார்கள். எதை நினைத்து அழுதார்களோ தெரியவில்லை!


புகழ்[தொகு]

எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது.
 சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.[2

விருதுகள்:

1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

1966 – பத்ம ஸ்ரீ விருது

1984 – பத்ம பூஷன் விருது

1995 – செவாலியே விருது (Chevalier)

1997 – தாதா சாகேப் பால்கே விருது

1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு

தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.
303
    வ.எண்ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிவெளியீடு
    11952பராசக்திகுணசேகரன்அக்டோபர் 171952
    2பணம்திசம்பர் 271952
    31953பரதேசிதெலுங்குசனவரி 141953
    4பூங்கோதைஆனந்த் வேடம்பெப்ரவரி 11953
    5திரும்பிப் பார்சூலை 101953
    6அன்புசெல்வம்சூலை 241953
    7கண்கள்நவம்பர் 51953
    8பெம்புடு கொடுக்குநவம்பர் 131953
    9மனிதனும் மிருகமும்தெலுங்குதிசம்பர் 41953
    101954மனோகராமனோகரா வேடம்மார்ச்சு 31954
    11இல்லற ஜோதிஏப்ரல் 91954
    12அந்த நாள்ராஜன்ஏப்ரல் 131954
    13கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிஅம்பலவண்ணன் / அம்பலம்ஏப்ரல் 131954
    14துளி விஷம்சூலை 301954
    15கூண்டுக்கிளிஜீவாசெப்டம்பர் 261954
    16தூக்குத் தூக்கிஆகத்து 261954
    17எதிர்பாராததுசுந்தர் வேடம்திசம்பர் 91954
    181955காவேரிசனவரி 131955
    19முதல் தேதிமார்ச்சு 131955
    20உலகம் பலவிதம்மார்ச்சு 141955
    21மங்கையர் திலகம்ஆகத்து 261955
    22கோடீஸ்வரன்நவம்பர் 131955
    23கள்வனின் காதலிநவம்பர் 131955
    241956நான் பெற்ற செல்வம்சேகர்சனவரி 141956
    25நல்ல வீடுசனவரி 141956
    26நானே ராஜாசனவரி 251956
    27தெனாலி ராமன்ராமகிருஷ்ணாபெப்ரவரி 31956
    28பெண்ணின் பெருமைரகுபெப்ரவரி 171956
    29ராஜா ராணிபெப்ரவரி 251956
    30அமரதீபம்அசோக்செப்டம்பர் 291956
    31மர்ம வீரன்ஆகத்து 31956
    32வாழ்விலே ஒரு நாள்செப்டம்பர் 211956
    33ரங்கூன் ராதாதர்மலிங்க முதலியார்நவம்பர் 11956
    341957மக்களைப்பெற்ற மகராசிசெங்கோடன்பெப்ரவரி 271957
    35வணங்காமுடிசித்ரசேனன்ஏப்ரல் 121957
    36புதையல்மே 101957
    37மணமகன் தேவைமே 171957
    38தங்கமலை ரகசியம்சூன் 291957
    39பாக்யவதிசோமுசூலை 101957
    40ராணி லலிதாங்கிசெப்டம்பர் 211957
    41அம்பிகாபதிஅம்பிகாபதிஅக்டோபர் 221957
    421958பொம்மலா பெல்லிதெலுங்கு
    43உத்தம புத்திரன்பெப்ரவரி 71958
    44பதிபக்திமார்ச்சு 141958
    45சம்பூர்ண ராமாயணம்பாரத்ஏப்ரல் 141958
    46பொம்மை கல்யாணம்மே 31958
    47எங்கள் குடும்பம் பெரிசுசூலை 41958
    48அன்னையின் ஆணைசேகர் & கணேஷ்சூலை 41958
    49சாரங்கதாராசாரங்கதாராஆகத்து 151958
    50சபாஷ் மீனாசெப்டம்பர் 31958
    51காத்தவராயன்நவம்பர் 071958
    521959தங்கப்பதுமைசனவரி 101959
    53நான் சொல்லும் ரகசியம்மார்ச்சு 71959
    54வீரபாண்டிய கட்டபொம்மன்மே 101959
    55மரகதம்ஆகத்து 211959
    56அவள் யார்அக்டோபர் 301959
    57பாகப்பிரிவினைஅக்டோபர் 311959
    581960இரும்புத்திரைசனவரி 141960
    59ராஜபக்திபெப்ரவரி 201960
    60குறவஞ்சிஏப்ரல் 41960
    61தெய்வப்பிறவிஏப்ரல் 131960
    62படிக்காத மேதைசூன் 251960
    63குழந்தைகள் கண்ட குடியரசுசிறப்பு தோற்றம்கன்னடம்சூலை 291960
    64பெற்ற மனம்அக்டோபர் 191960
    65பாவை விளக்குஅக்டோபர் 191960
    66விடிவெள்ளிதிசம்பர் 311960
    671961பாவ மன்னிப்புமார்ச்சு 161961
    68புனர் ஜென்மம்ஏப்ரல் 211961
    69பாசமலர்மே 271961
    70எல்லாம் உனக்காகசூலை 11961
    71ஸ்ரீ வள்ளிசூலை 11961
    72மருத நாட்டு வீரன்ஆகத்து 241961
    73பாலும் பழமும்செப்டம்பர் 91961
    74கப்பலோட்டிய தமிழன்வ. உ. சிதம்பரம் பிள்ளைநவம்பர் 71961
    751962பார்த்தால் பசி தீரும்சனவரி 141962
    76நிச்சய தாம்பூலம்பெப்ரவரி 91962
    77வளர் பிறைமார்ச்சு 301962
    78படித்தால் மட்டும் போதுமாஏப்ரல் 141962
    79பலே பாண்டியாமே 261962
    80வடிவுக்கு வளைகாப்புசூலை 71962
    81செந்தாமரைசெப்டம்பர் 141962
    82பந்த பாசம்அக்டோபர் 271962
    83ஆலயமணிநவம்பர் 231962
    841963சித்தூர் ராணி பத்மினிபெப்ரவரி 91963
    85அறிவாளிமார்ச்சு 11963
    86இருவர் உள்ளம்மார்ச்சு 291963
    87நான் வணங்கும் தெய்வம்ஏப்ரல் 121963
    88குலமகள் ராதைசூன் 71963
    89பார் மகளே பார்ஆகத்து 121963
    90குங்குமம்ஆகத்து 121963
    91இரத்தத் திலகம்செப்டம்பர் 141963
    92கல்யாணியின் கணவன்செப்டம்பர் 201963
    93அன்னை இல்லம்நவம்பர் 151963
    941964கர்ணன்சனவரி 141964
    95ராம தாசுபெப்ரவரி 11964
    96பச்சை விளக்குமார்ச்சு 41964
    97ஸ்கூல் மாஸ்டர்ஏப்ரல் 31964
    98ஆண்டவன் கட்டளைசூன் 161964
    99கை கொடுத்த தெய்வம்சூலை 181964
    100புதிய பறவைசெப்டம்பர் 121964
    101முரடன் முத்துநவம்பர் 31964
    102நவராத்திரிநவம்பர் 31964
    1031965பழனிசனவரி 141965
    104அன்புக்கரங்கள்பெப்ரவரி 191965
    105சாந்திஏப்ரல் 221965
    106திருவிளையாடல்சூலை 311965
    107நீலவானம்அக்டோபர் 121965
    1081966மோட்டார் சுந்தரம்பிள்ளைசனவரி 261966
    109தாயே உனக்காகஆகத்து 261966
    110சரஸ்வதி சபதம்செப்டம்பர் 31966
    111மகாகவி காளிதாஸ்அக்டோபர் , 1966
    112செல்வம்நவம்பர் 111966
    1131967கந்தன் கருணைசனவரி 141967
    114நெஞ்சிருக்கும் வரைபெப்ரவரி 31967
    115பேசும் தெய்வம்பெப்ரவரி 41967
    116தங்கைமே 191967
    117பாலாடைசூன் 161967
    118திருவருட்செல்வர்சூலை 281967
    119இரு மலர்கள்நவம்பர் 11967
    120ஊட்டி வரை உறவுநவம்பர் 11967
    1211968திருமால் பெருமைசனவரி 141968
    122லட்சுமி கல்யாணம்மார்ச்சு 111968
    123கலாட்டா கல்யாணம்ஏப்ரல் 121968
    124என் தம்பிசூன் 71968
    125தில்லானா மோகனாம்பாள்சூலை 271968
    126எங்க ஊர் ராஜாஅக்டோபர் 211968
    127அரிச்சந்திராநவம்பர் 41968
    128உயர்ந்த மனிதன்நவம்பர் 291968
    1291969அன்பளிப்புசனவரி 11969
    130குரு தட்சணைபெப்ரவரி 61969
    131தங்கச் சுரங்கம்மார்ச்சு 281969
    132காவல் தெய்வம்மே 11969
    133அஞ்சல் பெட்டி 520சூன் 271969
    134நிறைகுடம்ஆகத்து 81969
    135தெய்வமகன்செப்டம்பர் 51969
    136திருடன்அக்டோபர் 101969
    137சிவந்த மண்நவம்பர் 91969
    1381970எங்க மாமாசனவரி 141970
    139விளையாட்டுப் பிள்ளைபெப்ரவரி 201970
    140பாதுகாப்புமார்ச்சு 111970
    141வியட்நாம் வீடுஏப்ரல் 111970
    142எங்கிருந்தோ வந்தாள்மே 101970
    143எதிரொலிகே. பாலச்சந்தர்சூன் 271970
    144ராமன் எத்தனை ராமனடிஆகத்து 151970
    145சொர்க்கம்அக்டோபர் 291970
    146தார்திதிசம்பர் , 1970
    1471971இரு துருவம்சனவரி 141971
    148தங்கைக்காகபெப்ரவரி 61971
    149அருணோதயம்மார்ச்சு 51971
    150குலமா குணமாமார்ச்சு 261971
    151பிராப்தம்ஏப்ரல் 141971
    152சுமதி என் சுந்தரிஏப்ரல் 141971
    153சவாலே சமாளிசூலை 31971
    154தேனும் பாலும்சூலை 221971
    155மூன்று தெய்வங்கள்ஆகத்து 141971
    156பாபுஅக்டோபர் 181971
    1571972ராஜாசனவரி 261972
    158ஞான ஒளிமார்ச்சு 111972
    159பட்டிக்காடா பட்டணமாமே 61972
    160தவப்புதல்வன்மே 191972
    161தர்மம் எங்கேசூலை 151972
    162வசந்த மாளிகைசெப்டம்பர் 291972
    163நீதிதிசம்பர் 71972
    1641973பங்காரு பாபுமார்ச்சு 31973
    166பாரத விலாஸ்மார்ச்சு 241973
    167ராஜ ராஜ சோழன்மார்ச்சு 311973
    168பொன்னூஞ்சல்சூன் 151973
    169பக்த துக்காராம்சூன் 181973
    170எங்கள் தங்க ராஜாசூலை 141973
    171கௌரவம்அக்டோபர் 241973
    172மனிதரில் மாணிக்கம்திசம்பர் 71973
    173ராஜபார்ட் ரங்கதுரைதிசம்பர் 221973
    1741974சிவகாமியின் செல்வன்சனவரி 261974
    175வாணி ராணிஏப்ரல் 121974
    176தங்கப் பதக்கம்சூன் 11974
    177தாய்சூலை 31974
    178என் மகன்ஆகத்து 211974
    179அன்பைத்தேடிநவம்பர் 131974
    1801975அவன்தான் மனிதன்சனவரி 11975
    181மனிதனும் தெய்வமாகலாம்சனவரி 111975
    182சினிமா பைத்தியம்சனவரி 311975
    183மன்னவன் வந்தானடிபெப்ரவரி 81975
    184அன்பே ஆருயிரேசெப்டம்பர் 271975
    185வைர நெஞ்சம்நவம்பர் 11975
    186டாக்டர் சிவாநவம்பர் 21975
    187பாட்டும் பரதமும்திசம்பர் 61975
    1881976கிரஹபிரவேசம்ஏப்ரல் 101976
    189சத்யம்மே 61976
    190உத்தமன்சூன் 251976
    191சித்ரா பௌர்ணமிஅக்டோபர் 221976
    192ரோஜாவின் ராஜாதிசம்பர் 151976
    193உனக்காக நான்திசம்பர் 191976
    1941977அவன் ஒரு சரித்திரம்சனவரி 141977
    195தீபம்சனவரி 261977
    196இளைய தலைமுறைமே 281977
    197சாணக்ய சந்திரகுப்தாதெலுங்குசூலை , 1977
    198நாம் பிறந்த மண்அக்டோபர் 71977
    199அண்ணன் ஒரு கோயில்நவம்பர் 101977
    200ஜீவன டீரலுதெலுங்குதிசம்பர் 81977
    2021978அந்தமான் காதலிசனவரி 261978
    203என்னைப்போல் ஒருவன்பெப்ரவரி 181978
    204தியாகம்மார்ச்சு 41978
    205வாழ்க்கை அலைகள்ஏப்ரல் 141978
    206புண்ணிய பூமிமே 121978
    207ஜெனரல் சக்ரவர்த்திசூன் 161978
    208தச்ஹோலி அம்புசெப்டம்பர் 11978
    209பைலட் பிரேம்நாத்அக்டோபர் 301978
    210ஜஸ்டிஸ் கோபிநாத்திசம்பர் 161978
    2111979திரிசூலம்சனவரி 271979
    212கவரிமான்ஏப்ரல் 61979
    213நல்லதொரு குடும்பம்மே 31979
    214இமயம்சூன் 211979
    215நான் வாழவைப்பேன்ரவி வேடம்ஆகத்து 101979
    216பட்டாகத்தி பைரவன்அக்டோபர் 191979
    217வெற்றிக்கு ஒருவன்திசம்பர் 81979
    2181980ரிஷிமூலம்சனவரி 261980
    219நட்சத்திரம்ஏப்ரல் 121980
    220தர்மராஜாஏப்ரல் 261980
    221எமனுக்கு எமன்மே 161980
    222இரத்த பாசம்ஆகத்து 141980
    223விஷ்வரூபம்நவம்பர் 61980
    2241981மோகனப் புன்னகைசனவரி 141981
    225சத்ய சுந்தரம்பெப்ரவரி 211981
    226அமரகாவியம்ஏப்ரல் 241981
    227கல்தூண்மே 11981
    22லாரி டிரைவர் ராஜாக்கண்ணுசூலை 31981
    228மாடி வீட்டு ஏழைஆகத்து 221981
    229கீழ்வானம் சிவக்கும்அக்டோபர் 261981
    2301982ஹிட்லர் உமாநாத்சனவரி 261982
    231ஊருக்கு ஒரு பிள்ளைநவம்பர் 51982
    232வா கண்ணா வாபெப்ரவரி 61982
    233கருடா சௌக்கியமாபெப்ரவரி 271982
    234சங்கிலிஏப்ரல் 141982
    235வசந்தத்தில் ஒரு நாள்மே 71982
    236தீர்ப்புஏப்ரல் 251982
    237நிவுறு கப்பின நிப்புதெலுங்குசூன் 241982
    238தியாகிசெப்டம்பர் 31982
    239துணைஅக்டோபர் 11982
    240பரீட்சைக்கு நேரமாச்சுநவம்பர் 141982
    241ஊரும் உறவும்நவம்பர் 141982
    242நெஞ்சங்கள்திசம்பர் 101982
    2431983உருவங்கள் மாறலாம்சனவரி 141983
    244பெசவாட பெப்புலிதெலுங்குசனவரி 141983
    245நீதிபதிசனவரி 261983
    246இமைகள்ஏப்ரல் 141983
    247சந்திப்புசூன் 161983
    248சுமங்கலிஆகத்து 121983
    249மிருதங்க சக்கரவர்த்திசெப்டம்பர் 241983
    250வெள்ளை ரோஜாநவம்பர் 41983
    251சூரக்கோட்டை சிங்கக்குட்டிதிசம்பர் , 1983
    2521984திருப்பம்சனவரி 141984
    253சிரஞ்சீவிபெப்ரவரி 171984
    254தராசுமார்ச்சு 161984
    255வாழ்க்கைஏப்ரல் 141984
    256சரித்திர நாயகன்மே 261984
    257சிம்ம சொப்பணம்சூன் 301984
    258எழுதாத சட்டங்கள்ஆகத்து 131984
    259இருமேதைகள்செப்டம்பர் 141984
    260தாவணிக் கனவுகள்செப்டம்பர் 141984
    261வம்ச விளக்குஅக்டோபர் 231984
    2621985பந்தம்சனவரி 261985
    263நாம் இருவர்மார்ச்சு 81985
    264படிக்காத பண்ணையார்மார்ச்சு 231985
    265நீதியின் நிழல்ஏப்ரல் 131985
    266நேர்மைமே 31985
    267முதல் மரியாதைஆகத்து 161985
    268ராஜரிஷிஅக்டோபர் , 1985
    269படிக்காதவன்நவம்பர் 111985
    2701986சாதனைசனவரி 11986
    271மருமகள்சனவரி 261986
    272ஆனந்தக்கண்ணீர்மார்ச்சு 71986
    273விடுதலைஏப்ரல் 111986
    274தாய்க்கு ஒரு தாலாட்டுசூலை 161986
    275லட்சுமி வந்தாச்சுநவம்பர் 11986
    276மண்ணுக்குள் வைரம்திசம்பர் 111986
    2771987குடும்பம் ஒரு கோயில்சனவரி 261987
    278முத்துக்கள் மூன்றுமார்ச்சு 61987
    279வீரபான்டியன்ஏப்ரல் 141987
    280ராஜ மரியாதைஏப்ரல் 151987
    281அன்புள்ள அப்பாமே 161987
    282தாம்பத்யம்ஆகத்து 111987
    283அக்னி புத்ருடுதெலுங்குஆகத்து 171987
    284கிருஷ்ணன் வந்தான்ஆகத்து 281987
    285ஜல்லிக்கட்டுஆகத்து 281987
    286விஸ்வநாத நயகுடுதெலுங்குநவம்பர் , 1987
    2871988புதிய வானம்சூன் 161988
    288என் தமிழ் என் மக்கள்செப்டம்பர் 21988
    2891991ஞானப் பறவைசனவரி 111991
    2901992நாங்கள்மார்ச்சு 131992
    291சின்னமருமகள்மே 231992
    292முதல் குரல்ஆகத்து 141992
    293தேவர் மகன்அக்டோபர் 251992
    2941993பாரம்பரியம்நவம்பர் 131993
    2951995பசும்பொன்ஏப்ரல் 141995
    2961996ஷ்வர்ணச்சமரம்மலயாளம்சனவரி , 1996
    2971997ஒன்ஸ்மோர்தமிழ்சூன் 41997
    298ஒரு யாத்ராமொழிமலயாளம்செப்டம்பர் 131997
    2991998என் ஆசை ராசாவேஆகத்து 281998
    3001999மன்னவரு சின்னவருசனவரி 141999
    301படையப்பாஏப்ரல் 101999
    302பூப்பறிக்க வருகிறோம்செப்டம்பர் 171999

    தெலுங்கு திரைப்படங்கள்[தொகு]

    சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
    தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
    பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
    பங்காரு பாபு (தெலுங்கு) (1972)
    பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
    பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
    பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்
    ராமதாசு (தெலுங்கு) (1964)
    விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)

    மலையாளத் திரைப்படங்கள்[தொகு]

    ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)
    தச்சோளிஅம்பு 

    No comments:

    Post a Comment