Thursday 27 October 2016

NILE RIVER நைல் நதி உருவான கதை


NILE RIVER நைல் நதி உருவான கதை



உலகின் மிகமிக நீளமான நதி! இந்த நைல் நதி உருவான கதை ஒன்று கிரேக்கப் புராணங்களில் காணப்படுகிறது! அந்தக் கதையைப் பார்ப்போம்!

 கிரேக்கக் கடவுள்களிலேயே ஜீயஸ் மிகவும் சக்தி வாய்ந்தவர்! ஏனெனில் அவரால் தான் நினைத்த உருவத்தை எடுக்க முடியும். மேலும மற்றவர்களின் உருவத்தையும் தான் விரும்பியபடி மாற்றி விடுவார். காரணம் அவருக்கு பொய் பேசுவர்களைக் கண்டால் பிடிக்காது. இதன் காரணமாக எல்லா உயிரினங்களும் ஜீயûஸக் கண்டு நடுங்கின.

 ஜீயெஸýக்கு "ஹீரா' என்னும் அழகிய மனைவி ஒருத்தி இருந்தாள். யாருக்குமே பயப்படாத ஜீயெஸ் தன் மனைவி ஹீராவுக்கு பயந்தார்! காரணம் அவள் கண்களில் இருந்து


யாரும் எதையும் மறைக்க முடியாது! ஜீயெஸ் யாரைச் சந்தித்தாலும் அவளுக்குத் தெரிந்துவிடும்!



 ஒரு முறை பூமியில் ஜீயெஸ் காலாற நடந்து கொண்டிருந்தபோது ஓர் அழகிய பெண்ணைக் கண்டார். அந்தப் பெண்ணின் பெயர் "லோ' என்பதாகும். அவள் அழகில் அவர் மயங்கினார். தன் மனைவியின் கண்களுக்குத் தன் செயல்பாடுகள் தெரியாமல் இருக்க பூமிப்பந்து முழுவதையும் கரு மேகங்களால் சூழச் செய்தார்.


பின்னர் "லோ' வைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பூமியை ஆனந்தமாகச் சுற்றி வந்தார்! ஆனால் ஹீராவிற்கு எல்லா விஷயங்களும் தெரிந்து விட்டன. அவள் பூமியை நோக்கிப் பறந்து வந்தாள். இதை அறிந்த ஜீயெஸ் லோவை ஒரு பசுமாடாக மாற்றினார்! ஹீரா வந்து பார்த்தபோது ஜீயெஸின் அருகே ஒரு பசுமாடு இருந்தது.


 ""இந்தப் பசு யாருடையது?'' என்று கேட்டாள்.


 ""தெரியவில்லை'' என்றார் ஜீயெஸ். உடனே அதனைத் தனக்குப் பரிசாக


அளிக்குமாறு வேண்டினாள். வேறு வழியில்லாத ஜீயெஸ் அதனை அவளுக்குப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட ஹீரா பாதாள உலகில் அதை மறைத்து வைத்தாள். அதற்கு காவலாக ஒருவரை நியமித்தாள்.


 பாதாள உலகில் சிறைப்பட்டிருக்கும் "லோ' வைக் காப்பாற்ற எண்ணிய ஜீயெஸ், தன் மகன் அப்பல்லோவை அழைத்து ஒரு பாடல் பாடுமாறு கூறினார். ஏனெனில் அப்பல்லோ பாடினால் தூங்காதவர் கூடத் தூங்கி விடுவர்!


 அவன் பாடவும் காவலாளி தூங்கிவிட்டான்! அந்த நேரத்தில் பசு வடிவிலிருந்த லோ தப்பி ஓடினாள். இதை அறிந்து ஆத்திரமடைந்த ஹீரா, கடு விஷம் கொண்ட பூச்சி ஒன்றை உருவாக்கி அந்தப் பசுமாட்டைக் கடிக்குமாறு ஏவினாள். இதை அறிந்த லோ கடலுக்குள் பசு வடிவேலேயே குதித்து நீந்தி பல்வேறு துன்பங்களைத் தாண்டி எகிப்தை அடைந்தாள்.


 லோ அடைந்த துன்பத்தைக் கண்டு மனமிரங்கிய ஹீரா அவளை மனித உருவில் மாற்றினாள். ஆனால் தன் கணவனிடம் இனி ஜீயெûஸச் சந்திக்கக் கூடாது என்று உறுதி பெற்றுக் கொண்டாள்.

 ஆனால் பொய்யே பேசாத கடவுள் பொய் பேசியதால் அவரால் உருவாக்கப்பட்ட கருமேகங்கள் மழையாகப் பொழியத் தொடங்கின! எப்படிப்பட்ட மழை தெரியுமா? கனமழை! தொடர்ந்த பல வருடங்களுக்குக் கொட்டித் தீர்த்தது. தண்ணீர் பெரும் பள்ளத்தில் நிரம்பி அந்த இடமே ஒரு ஏரியாக மாறியது. எகிப்தின் பாலைவனத்தில் மனித உருவில் தவித்துக் கொண்டிருக்கும் லோ வின் தாகத்தைத் தணிக்க அந்நீர் ஒரு ஆறாகப் பெருக்கெடுத்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்தது. அதுவே "நைல் நதி' என்று கிரேக்க புராணங்கள் கூறுகின்றன.


 இந்நதியானது தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரிட்டீரியா, தெற்கு சூடான், மத்தய சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகள் வழியாகப் பாய்கிறது. அதனால் இதனை "சர்வதேச ஆறு' என்றும் கூறுவர்.


 நைல் நதி "வெள்ளை நைல்' மற்றும் "நீல நைல்' என இரு கிளைகளைக் கொண்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவின் "விக்டோரியா ஏரி' யில் இருந்து வெள்ளை நைலும், (இது தான்சானியா, உகாண்டா, தெற்கு சூடான் வழியாகப் பாய்கிறது.) எத்தியோப்பியாவில் உள்ள  "டானா ஏரி' யில் இருந்து நீல நைலும் (இது சூடானின் தென் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.) உருவாகின்றன. இவ்விரு ஆறுகளும், சூடானின் தலைநகர் "கார்டூம்' இல் ஒன்று சேர்ந்து நைல் நதியாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றது.


 எகிப்து, சூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குவது நைல் நதியே ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய எகிப்தின் முக்கிய இடங்கள் யாவும் நைல் நதியின் கரையை ஒட்டியே அமைந்திருந்தன.




 "நைல்' என்ற சொல்லுக்கு எகிப்திய மொழியில் ஆறு என்று பெயர். நைல் நதியின் தோற்றுவாய் எது என்பதில் இன்றளவும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. விக்டோரியா ஏரியே இதன் முக்கியத் தோற்றுவாய் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஏரி உருவாக பல்வேறு சிற்றாறுகள் துணை புரிகின்றன. அவற்றுள் முக்கியமானது "காகேரோ' என்னும் ஆறு ஆகும். இது டான்சானியாவில் "புகோபா' என்னும் இடத்தில உற்பத்தியாகிறது. இது தவிர "ருவியோரான்சா'...,"நியாமராங்கோ' போன்ற பல சிற்றாறுகளும் விக்டோரியா ஏரிக்கு நீர் வழங்கும் ஆதாரங்களாக விளங்குகின்றன. இந்த ஆறுகள் அனைத்தும் ஒன்று கூடி "ருசுமோ' என்ற பெயரில் அருவியாக விழுகின்றன. நைல் நதியின் தோற்றுவாய் என்று நம்பப்படும் இடத்தை "கிஷ் அபே' என்று அழைக்கிறார்கள்.


 எத்தியோப்பியாவில் பெய்யும் கனமழையால் நைல் நதியில் பெருக்கு ஏற்படுகிறது. ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெள்ளப் பெருக்கு அதிகமாகி நீர் மட்டம் உயரும். எத்தியோப்பியாவிலிருந்து நீர் மட்டும் அடித்து வராமல் வளமான கருப்பு நிற வண்டல் மண்ணையும் நைல் நதி அடித்து வருகிறது. அக்டோபர் மாதம் வெள்ளம் முழுவதும் வடிந்த பிறகு விவசாயம் செய்யத் தொடங்குகிறார்கள். மார்ச் மாதத்தில் இருந்து மே மாதத்திற்குள் அறுவடை நடைபெறும்.

நைல் டெல்டா

No comments:

Post a Comment