Sunday 16 October 2016

VEERAPANDIA KATTA BOMMAN வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட நாள் 16 அக்டோபர் 1799

VEERAPANDIA KATTA BOMMAN 
வீரபாண்டிய கட்டபொம்மன் 
தூக்கில் இடப்பட்ட நாள் 16 அக்டோபர் 1799






வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர்.
கெட்டிபொம்முலு (வீரபாண்டிய கட்டபொம்மன்)
Kattabomman.jpg
ஆட்சிகி.பி 1790- கி.பி 1799
முடிசூட்டு விழாகி.பி 1790
முன்னிருந்தவர்ஜெகவீர கட்டபொம்மன்
அரச குலம்நாயக்க மன்னர்
தந்தைஜெகவீர கட்டபொம்மன்
தாய்ஆறுமுகத்தம்மாள்
கட்டபொம்மன் பெயர் காரணம்
அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று[1]. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்[1].

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்[1]. இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் [1] என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கை
ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது[சான்று தேவை] பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும்.வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்
கும்பினியார் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனடிப்பையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். 


அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.


வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்

வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்

உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்

உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்

மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை


மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை

மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.

1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்
ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. 

மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை
இந்த காப்பகத்தை பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன விசயத்தை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும் பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்துவிட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமற் போய்விட்டது என 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்[2].


வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சற்தலை

வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சற்தலை
மணிமண்டபம்
கட்டபொம்மன், மற்றும் ஊமத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. [3].

பாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்

ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ
எட்டயபுரம் - 23 கி.மீ
தூத்துக்குடி - 25 கி.மீ
கயத்தாறு - 40 கி.மீ
கோவில்பட்டி - 38 கி.மீ
திருச்செந்தூர் - 70 கி.மீ



வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள்

நெடிய உருவம். தலைப்பாகையுடன், கூரிய பார்வையுடன் எங்களிடம் வந்து தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று அறிமுகப்படுத்திக் கொண்டவரின் பெயர் ஜெகவீர பாண்டிய பீமராஜா.  அமைதியான மனிதர். எங்களிடம் அன்பாகப் பழகி 'பேச நேரம் இருக்கின்றதா' என்று கேட்டுக் கொண்டு தனது கதையைக் கூறினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் தான் தற்போது வாழ்கின்றனராம். அவர்களுக்கு வசிப்பதெற்கென்று எந்த கோட்டையுமில்லை. குறிப்பாக இவரது தொழில் ஊர் ஊராகச் சென்று ஜோதிடம் பார்ப்பது. ஆனால் எங்கு சென்றாலும் மீண்டும் பாஞ்சாலங்க்குறிச்சிக்கு வந்து விடுவாராம்.

சுதந்திர போராட்டத்தின் போது வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பெரிதும் உதவிய பாளைய பகுதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்துவதை இன்றளவும் அவர்களது வாரிசுகள் பின்பற்றி வருகின்றனராம்.  நினைவு நாட்கள், சிறப்பு நாட்களில் அவரகளை சந்திக்கச் சென்று சிறப்பு நினைவு நாள் பூஜையில் கலந்து கொண்டு வருவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்திருக்கின்றார் இவர்.






ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின் போது கட்டபொம்மனுக்கு ஆதரவாக செயல்பட்ட பாளையங்களில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தளி பாளையம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த உடுமலை அருகிலுள்ள தளி பாளையத்தை ஆட்சி செய்த எத்தலப்பன் சிலை திருமூர்த்தி அணை பகுதியில் உள்ளதாம். போராட்டத்தில் உயிர் நீத்த தளி பாளையக்காரர் சிலைகளுக்கு கட்டபொம்மன் வாரிசுகள் என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்துவதை கடமையாக இவர் வைத்திருக்கின்றார்.






சரி. இவர் எந்த வகையில் வீர பாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு என்று கூறிக் கொள்கின்றார் என்பதை அறிய அவரிடம் இதனைக் கேட்டபோது ஒரு விளக்கம் கூறினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அவரது மனைவி ஜக்கம்மாள் என்ற மல்லம்மாள் நிபந்தனை கைதியாக திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கின்றார். அப்போது சிறையிலிலேயே கர்ப்பிணியாக இருந்த மல்லம்மாளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களின் ஒருவரின் பரம்பரையில் வந்தவர் தான் இந்த ஜெகவீரபாண்டிய பீமராஜா என்று தன்னைப் பற்றிய தகவலை வழங்கினார். இவர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து ஐந்தாவது தலைமுறையாம்.








கட்டபொம்மனின் ராஜ்யம் பிற பாளையக்காரர்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டதால் 1872ம் ஆண்டுக்குப் பிறகு மாதந்தோறும் 52.50 ரூபாய் பென்ஷனாக கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் அறிமுகப்படுத்திய ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் ஜமீன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் தடை செய்யப்பட்ட போது இவர்களுக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

பின்னர் தி.மு.க கட்சி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் ஜமீன் வாரிசுகளுக்கு 50 ரூபாய் பென்ஷன் தொகை மீண்டும் வழங்க ஆரம்பிக்கப்பட்டதாம். அந்த உதவித்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது 1000 ரூபாய் வழங்கப்படுகின்றதாம்.  இந்த உதவித் தொகை போதாததால் வருமையில் வாழ்வதாககவும் வருனமானத்திற்கு ஜோதிடம் பார்த்து பொருளீட்டுவதைத் தொழிலாக செய்து வருவதாகவும் வீமராஜா குறிப்பிட்டார்.

நினைவு மண்டபம் கட்டப்பட்ட பின்னர் இந்த வாரிசுகளுக்கு அங்கேயே பக்கத்திலேயே குடியிருக்கவும் வசதியும் செய்து கொடுத்திருக்கின்றது தமிழக அரசு. ஆனால் தற்போது இந்தக் குடியிருப்பு போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் இருப்பதால் வாரிசுகள் சிலர் வேறு இடங்களுக்கு குடியிருப்பை காலி செய்து விட்டு சென்று விட்டனராம்.  ஆனால் வீமராஜாவும் அவரது குடும்பமும் இங்கேயே இருக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்து வருகின்றார்களாம். 


வீமராஜாவின் மகன் தற்போது ஒரு தனியார் கம்பெனியில் வேன் ஓட்டுனராகப் பணிபுரிகின்றாராம். நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள இடத்திலேயே கட்ட பொம்மனின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தால் அங்கேயே இருந்து வாழ முடியும். கட்ட பொம்மனின் கோட்டை அமைந்திருந்த 30 ஏக்கர் நிலத்தில் தற்போது  6 ஏக்கர் பரப்பில் மட்டுமே மேம்பாட்டு பணிக,ள் நினைவு மண்டபம் ஆகியவை நிர்மானிக்கபப்ட்டிருக்கின்றன. பிற பகுதிகள் குப்பை கிடங்காக உள்ளன.அப்பகுதியிலும் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அப்பகுதியையும் ஆய்வு செய்யவேண்டும்  என்றும்  கூறினார்.

சுதந்திர போராட்டத்தின் போது தனது மூதாதையரான வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியவர்களையும் மறக்காமல் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றார் வீமராஜா. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அப்போது உதவிய  கோவை மாவட்டத்தின் தளி பாளையம், திண்டுக்கல் மாவட்டத்தின்  விருப்பாச்சி பாளையம்  ஆகிய பாளையக்காரர்களின் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தானும் தனது குடும்பத்தினரும் பாஞ்சாலங்குறிச்சியை விட்டு போகமாட்டோம் என்று உறுதியுடன் எங்களிடம் பேசினார்.


சில நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொண்ட படங்களையும் அவர் சில நிகழ்ச்சிகளில் சிறப்பு செய்யப்படும் சில படங்களையும் எங்களுக்குக் காட்டினார். ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. காலம் மாறிக் கொண்டிருக்கின்றது. இனிமேலும் ஜமீன், அரச பரம்பரை என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு பொருளாதார சலுகைகளை எதிர்பார்ப்பது என்பது தற்கால நிலைக்கு ஒத்துவராத ஒன்று. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிக் கொண்டு கல்வி, தொழில் மேம்பாடு, சுய காலில் நின்று தனது குடும்பத்தை பேணுதல் என்ற நிலையில் அரச ஜமீன் வாரிசுகளும் எல்லா சாதாரண குடிமகனைப் போல வாழ பழகிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திர்கு வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நினைவு மண்டபத்தில் நடந்த அனைத்துமே அளவில்லா பிரமிப்பு உணர்ச்சியையே கொடுத்திருந்ததால் மதியம் 4 மணியை நெருங்கிக் கொண்டிருந்தாலும் பசி மறந்து  நிகழ்வுகளில் ஒன்றிப் போயிருந்தோம்.

வீமராஜாவிடம் நன்றி சொல்லி விடை பெறும் போது எங்களிடம் ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கின்றதா என்று கேட்டார். ஆமாம் என்றோம். உடனே கையைக் காட்டுங்கள் என்று கூறி எங்கள் ஐந்து பேருக்கும் கைரேகை ஜோதிடம் பார்த்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பலன் கூறினார்.  அவருக்கு நன்றி கூறி ஜோதிடத்திற்கு பணம் கொடுத்து விட்டு புறப்படும் போது எங்களிடம் வந்து தூரத்தில் எங்கள் வாகனத்திற்கு அருகில் நிற்கும் ஒருவரைக் காட்டி "அவர் ஏதும் சொன்னால் நம்ப வேண்டாம். அவரும் தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று சொல்லிக் கொண்டு புதிதாக இங்கு வந்திருக்கின்றார்." என்று எச்சரித்தார். இது என்ன ஆச்சரியம்? எத்தனை வாரிசுகள் உண்மையில் இருக்கின்றார்கள் என்று ஓரளவு திகைப்பு தோன்றத்தான் செய்தது. 



அவர் சொன்னது போலவே நாங்கள் வாகனத்திற்கு அருகில் வரவும் எங்களிடம் வந்து தன்னை தானும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று கூறிக் கொண்டு பேச வந்தார். இவரிடமும் பேசியிருக்கலாம். ஆனால் நாங்கள் உடன் ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டிய நிலை. மாலை 4:30 மணிக்குள் அங்கு சென்று சேர வேண்டும். ஆக அவரிடம் வணக்கம் சொல்லி அவசரமாக கிளம்பும் நிலையை சொல்லி வாகனத்தில் ஏறி ஒட்டப்பிடாரம் நோக்கி புறப்பட்டோம்.

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment