Sunday 30 October 2016

MUTHURAMALINGA THEVAR முத்துராமலிங்கத் தேவர் அபாய அரசியல்வாதி அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 29, 1963


MUTHURAMALINGA THEVAR 
முத்துராமலிங்கத் தேவர் அபாய அரசியல்வாதி 
அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 29, 1963





முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 29, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர்

தவக்கோலத்தில் தேவர்

ஆன்மிகவாதியாகவும்  சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. 

பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். [1][2]

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி தேவருடன் இணைந்து துவக்கியதாகும். தேவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்[3][4][5] .

1957 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான தேவரை மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்கு பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக தேவர் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

குழந்தைப் பருவமும் குடும்ப வாழ்க்கையும்[தொகு]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். 

இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.

இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமிப்பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.

1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.

தேவரின் கன்னிப் பேச்சு[தொகு]
1933-ம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார். அந்த விழாவில் விவேகானந்தர் படத்தை திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்கு சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார்.

அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர் விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வரான காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போல பேசக் கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார்.

குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்[தொகு]

குற்றப் பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் 
கலந்துகொண்டவர்கள்

குற்றப் பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்
தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.

ஆப்பநாட்டின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த பி. வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.

1936 மாவட்ட வாரிய தேர்தல்[தொகு]
குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். 


பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.


1937 மாநில தேர்தல்[தொகு]
1937ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். தேவரின் இந்த செயல்கள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது.

1937ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார்.

பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை.

தேவர் நடத்திய தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம்[தொகு]

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். 

அதற்கு அவர், "என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்". "அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். 

வைத்தியநாதய்யர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல் காலை 10 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும்,சேர்ந்து ஆறு பேர் வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர்.[6][7][8][9]

தொழிலாளர்களின் தோழனாக[தொகு]

1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். 

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு மதுரை டிவிஎஸ் தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.


திரிபுரா காங்கிரஸ் மாநாடும் 
பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்[தொகு]
1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவ திரட்டினார்.

பின்னர் காந்தியின் தலையீட்டின் படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் போஸை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினை கூட்டினார்.

சிறையில்[தொகு]

வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்களை கரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது.

 பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறைசாலையில் 18 மாதகாலம் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 

18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை காரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை ஆனார்.

சிறை வாசத்திற்கு பின்[தொகு]

மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. 

பின்னர் பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் அன்று தேவர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார். அவர் “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி அவரே அதன் ஆசிரியராக இருந்து வந்தார். அன்று இரவு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். 

இதன் பின்னர் தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார் சென்றார். பின்னர் 1950 இல் மீண்டு போது வாழ்க்கைக்கு திரும்பினார். இப்படி மறைந்திருந்த காலங்களில் தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும் இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்து அங்கிருந்த சுபாஷ் சந்திரபோஸை சந்தித்து வந்ததாய் கூறினார் .

 பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948இல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.




நேதாஜி பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியராக தேவர்

நேதாஜி பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியராக தேவர்
1952 பொது தேர்தல்[தொகு]
1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு[தொகு]

1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நாக்பூரில் நடந்தது. இதை சிங்க் - யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணைத் தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

1957 பொது தேர்தல்[தொகு]

1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.

தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இந்த முறையும் இரு தொகுதிகளிலும் வென்றார். இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.

இராமநாதபுரம் கலவரம்[தொகு]

தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக வெடித்தது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தலித் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரயாக்கபட்டன.

இந்த கலவர நேரத்தில் லோக்சபா கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக சூலை 17 ஆம் நாள் டெல்லி சென்றிருந்த தேவர் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் நாள் திரும்பவும் தென்னகம் வந்தார். செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலு குடும்பனுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தேவேந்திரர்குல சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது. அப்போது தேவர், தேவேந்திரர்குலம் சார்பில் கலந்துகொண்ட இம்மானுவேல் என்பவரின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் அமைதி அறிக்கையில் அவருடன் கையொப்பம் இட முடியாது என்று தெரிவித்தார். இதனால் தனித் தனி அறிக்கைகளில் கையெழுத்துப் பெறப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

மறுநாள் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் 
கொல்லப்பட்டார். இந்த அரசியல் படுகொலை நிகழ்வு சில தினங்களில் சாதி சண்டையாக உருவெடுத்து, தென் மாவட்டங்கள் சாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் காவல் துறை மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28 ஆம் நாள்) தேவர் அவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

பின்னர் இந்த பாதுகாப்பு சட்ட வழக்கு,தியாகி இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வழக்காடபட்டது.

பார்வர்ட் பிளாக் கட்சி தேவர் மீதான இந்த வழக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த வழக்கின் முடிவில் தேவர் குற்றமற்றவர், நிரபராதி என்று இந்த வழக்கிலிருந்து சனவரி , 1959 விடுவிக்கப்பட்டார்.

இறுதி நாட்கள்[தொகு]

வழக்கிலிருந்து விடுபட்ட தேவர் அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ்(INDC - முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. 

இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரசின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக்குறைவின் காரணமாகவும் பொது வாழ்க்கையில் இருந்துது சிறிது காலம் விலகி இருக்க நேர்ந்தது.

பின்னர் 1962இல் மீண்டு லோக் சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஒரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். 

இவருடன் C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல்நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை.

உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.



இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல் தோல்வியாகும், 1957 இல் தியாகி இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவரை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்த்ததால், இவருடைய மறைவுக்கு பின் காங்கிரசு கட்சி தமிழகத்தை விட்டே அழிந்தது எனவும் கூறுவர்.

கொள்கைகள்[தொகு]

ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.

தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்
வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
வீரம் மட்டுமே உனது எதிரியையும் உன்னை மெச்சவைக்கும்
தேசியவாதிக்கு தேசமே குறி, அரசியல்வாதிக்கு தேர்தலே குறி
உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்

அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.
யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்ந்தால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும். [10]
என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும்.

ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். அவரது கேள்விகளுக்கு கடவுள் மறுப்பு பேசியோரால் பதில் சொல்ல இயலவில்லை.

அதேநேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நம்பிக்கை கொண்ட சோஷலிஸ கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த பேச்சாளர்[தொகு]

தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார். தேவர் ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொண்டு வள்ளலாரின் ஆன்மீக கருத்துக்களை விவரித்து பேசி வந்தார். அவரது பேச்சை ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கேட்டு ரசித்தனர்.

ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார்.இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.

குருபூஜை[தொகு]

தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் தேவர் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். எனவே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், ஜோதி ஏந்திவந்து அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். தேவர் குருபூஜையன்று பசும்பொன்னிலுள்ள தேவர் ஆலயத்தினுள், தங்கக் கவசம் பூட்டப்பட்ட தேவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குவர். பசும்பொன் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென்மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுதும், மேலும் தலைநகர் சென்னையிலும் தேவர் குருபூஜை நாளன்று கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.[11][12][13]

தங்க கவசம்[தொகு]



தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2010ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார்






@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

முத்துராமலிங்க தேவர் பற்றிய சர்ச்சைகள் 
பகுதி 1
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 
என்ற ஜாதி வெறியன்


தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)

சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.

அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.

"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."

கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."

காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).

குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் -  (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்க"பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்."ம்)

காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".

சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.

முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".

அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", . இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".

காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.

கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".

இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."
(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)

இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.

"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."

(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."

மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."

இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."

******************
இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். 

அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.

இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."

(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

**********************
கேப்பை, நெய், கேனைப்பயல்கள் மற்றும் தேவர்:

இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.

உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் "வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,

"இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,
"நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.

"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.

"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்" என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.

இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.

காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.

சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை "அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், "இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்" என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.

*****************
இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை:

தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.
"அரசியலுக்கு வரும்போது 'அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்' என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்" என்றும் "இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்" என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.

"சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜை போ" என்று சொல்ல முடிந்ததா?" என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.

கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்."

காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது."வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்".

****************
சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி "ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?" என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

அப்படி என்ன வதந்தி அது?
தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி "..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க.." என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான '..க்காளி' என்பதனைப் பேசினாரே என்பதாம்.

கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.

இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.
****************
சமீப காலகட்டங்களில் தேர்தல் கமிஷன் பல கெடுபிடிகளைப் போட்டு, பிரச்சாரத்தை இரவு பத்து மணியுடன் நிறுத்திடச் சொல்லியதும், சில கட்சி வேட்பாளர்கள், பத்து மணிக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டு வெறுமனே கைகளைக் கூப்பி வணங்குவதுடன் சென்று விடுகின்றனர். இதெல்லாம் ஏதோ புதுமை என்று எண்ணி இருக்கையில், 1952 தேர்தலுக்கு முன்பிருந்தே தேவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார். ஆனால் தேவரைப் பேச விடாமல் தடுத்தது தேர்தல் கமிஷன் அல்ல. அரசாங்கம். இவர் வாய் திறந்து பேசினாலே சாதி மோதல்தான் உருவானது. எனவே அரசு இவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.
ஆனால் தேவர், 1957 முதுகுளத்தூர் கலவரத்தின்போதும், 'மவுனமாகக் கைகூப்பும் முறையை' கலவரத்தை தூண்டிவிட பயன்படுத்தினார். அறிக்கை ஏதின்றி வெறுமனே தேவரின் கைகூப்பிய முழுப்படம் ஒன்றை 'தினமணி' என்றெல்லாம் விளம்பரமாய்ப் பிரசுரித்ததோ, அன்றெல்லாம், கலவரம் உக்கிரம் பெற்றுள்ளது.

இங்கு எண்ணற்ற ஆதாரங்களை தேவரின் சாதி வெறிப்போக்கிற்கான சான்றாகக் காட்டினாலும் தேவர் அபிமானிகள், 'தேவர் தனக்கு சொந்தமாய் இருந்த எக்கச்சக்கமான ஏக்கர் நிலங்களை தலித்களுக்கு எழுதிக் கொடுத்தவர்' என்று சொல்வது வழக்கமே. அவ்வாறு தேவர் நிலம் தந்தமைக்கு இருந்த உள்நோக்கத்தை அன்றைய அமைச்சர்கள் பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியமும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளனர் 'தனக்கு விசுவாசமாய் வாலாட்டும் ஓர் அடியாள் படையை தேவர் இவ்வாறுதான் உருவாக்கினார்' என்று.

*************************
ஆதார நூல்கள்
1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
2) பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் - தொகுப்பு கே.ஜீவபாரதி
3) பசும்பொன் தேவரின் கட்டுரைகள் - தொகுப்பு கே.ஜீவபாரதி
4) சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
5) பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6) சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு - தொகுப்பு கே.ஜீவபாரதி
*************************

கற்பக விநாயகம்
vellaram@yahoo.com

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




பசும்பொன் தேவரின் நாடாளுமன்றஆங்கில முழக்கத்தை .... 1959 பெப்ருவரி 17




1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி... 

அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல்... இமானுவேல் கொலை... கீழத்தூவல் படுகொலை... 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது... தொடர் சிறை வாழ்க்கை... 1959 ஜனவரி 7ல் விடுதலை... அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம்... அதனால் நாடாளுமன்ற உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம் ஒலித்தது.... 

1959 பிப்ரவரி 13... இன்றுதான் பசும்பொன் முத்துராமலிங் தேவர் நாடாளுமன்றத்தில் முழங்க நேரம் ஒதுக்கப்பட்டது... பின் 16 ஆம் தேதியாக அது மாற்றப்பட்டது... இறுதியில் 17ஆம் தேதியின் அந்த வாய்ப்பு பசும்பொன் தேவருக்கு கிடைத்தது. அதுவும் மாலை 4.45க்கு... மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும்... இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில் தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். எழுந்தார் பசும்பொன் தேவர்... ஆங்கிலத்தில் தொடர்ந்தார் முழக்கத்தை... அதுவரை கேட்டறியாத பசும்பொன் தேவரின் ஆங்கில முழக்கத்தை கேட்டு வடமாநிலத் தலைவர்கள் விழகள் மூட மறந்தன. 

மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லிப் பதிப்பு. 

"Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory" என்று தேவரின் நாடாளுமன்ற முழக்கம் பற்றி குறிப்பிட்டது. 

இனி, நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழக்கம்... தமிழில் தந்திருப்பது ஏ.ஆர். பெருமாள். 

ஐயா, 

ஜனாதிபதியவர்களின் தலைமையுரை மீது பேச வேண்டிய இவ்வேளையில், நமது வெளிநாட்டுக் கொள்கை, காமன்வெல்த் தொடர்பு முதலியவை பற்றி இடையே கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன் - விவரிக்க வேண்டியது அவசியமும் கூட. 

காமன்வெல்த் என்பதன் பெயரால் நாம் ஒரு கூட்டுறவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாம் பிணைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் என்ற கூட்டுறவின் பங்காளிகள், நமது நாட்டையும், செல்வத்தையும் சேர்த்துப் பங்குரிமை கொள்ள ஆசைப்படுகிறார்கள். பொதுச் சொத்து என்றும் கருதுகிறார்கள். ஆனால் நமது சுயாதிக்கத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. நமது நாட்டையும் செல்வத்தையும் அவர்கள் நேசிக்கிற அளவுக்கு நமது சுயாட்சியை நேசிக்கவில்லை என்பதால் இது ஓர் அபாயகரமான கூட்டுறவு என்றே குறிப்பிடலாம். 

மேலும், நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் அஹிம்சா முறையில் சாதித்துவிட்டதாக ஒரு அபிப்பிராயத்தை உலகெங்கும் உண்டாக்கி விட்டிருக்கிறோம். ஆனால் அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை என்பது அநேகமாக நம் எல்லோருக்கும் தெரியும். 

அகிம்சை என்பது அரசியல் ரீதியான செல்பாடுகளுக்கு ஒத்தியங்க அல்லது உடன்படுத்தி இயக்க இயலாத ஒரு தத்துவம்! அதைப் பேசலாம் - எழுதலாம், ஆனால் அரசியலில் அதைச் செய்ய முடியாது என்பது கண்கூடு. 

எல்லா நாடுகளிலும் - எல்லாப் பகுதிகளிலும், இரண்டு கட்சிகள் உண்டு. ஒன்று வலதுசாரிக் கட்சி - மற்றொன்று இடதுசாரிக் கட்சியாக இருக்கும் - இருந்து வருவதை நாமும் அறிஅவாம். இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று வேறுபடுமேயன்றி தேசியத்தை - தேச நலனைப் பற்றிய துறையில் வேறுபடாது. இரண்டு தேச பக்தக் கட்சிகள் தான். இரண்டுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கான கடமையைச் செய்து வருகின்றன. அதேபோல இந்த நாட்டிலும் வலதுசாரி - இடதுசாரி என்ற முறையில் இயங்கினர் - இயங்குகின்றனர். 

தேச விடுதலைக்காகப் பல பயங்கரப் புரட்சிகளைச் செய்த நமது நாட்டு இடதுசாரிகளில், பகவத் கீதையைக் கையில் வைத்துக்கெண்டே அந்நியரின் தூக்கு மேடையில் பலியானோரும், அந்தமான் தீவுகளில் ஆவி துறந்தோரும் கொஞ்சமல்ல, அவர்கள் தேசத்திற்காகவே கடமையைச் செய்து உயிரை இழந்தவர்களாக இருந்தாலும், காந்தீயர்களாக இருக்கவில்லை என்றே கருதப்பட்டார்கள். இதனால் அவர்கள் அடியிட்ட சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குரிய சிறப்புக்கு இடமில்லாது போய்விட்டது. அதாவது, ஒருவன் தேசத் தியாகியாக மட்டும் இருந்தால் போதாது ? அவன் தேசபக்தன் - தியாகி - என்பதை விட காந்தீயன் - காந்தி பக்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் : போகட்டும்! 

'அகிம்சை' என்ற கொள்கை நாம் அடிமைகளாக இருந்தபோது ஓரளவுக்குச்சரி, ஆனால் நாம் இப்பொழுது ஒரு குடியரசை நில்மாணித்திருக்கிறோம். நமது சர்க்கார் கோடானுகோடி ரூபாய்களைக் கொண்டும் ராணுவச் செலவைச் செய்கிறது. போர்ச்சுகலும், எல்லைப் புறங்களில் பாகிஸ்தானு புரிகிற கொடுமைகளைப் பற்றி, பேசும்போது கூட அகிம்சையைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளத் தவறுவதுமில்லை. 

கொள்கையோ அகிம்சை; வருமானத்தில் பெரும்பகுதி செலவிடுவதோ ராணுவத்துக்கு! அதே சமயம் அந்நியர்களின் அக்ரமத்திற்கு முனூனே அகிம்சைப் பேச்சு - ஆனால், அதே சமயம் நாகா மலை ஜாதியினர் மீது பாய ராணுவத்தை ஏவிவிடுகின்றோம் - நமது அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகளைச் சாய்க்கத் துப்பாக்கிகளின் வாய்களைத் திறந்துவிட அனுமதிக்கிறோம்! இது எந்த ரக அகிம்சாவாதம் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. 

எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது என்பதைக் கூறிக்கொள்கிறேன். 

யுத்த முடிந்த ஆரம்பகாலத்தில் எல்லோருமே அமைதி - சமாதானம் பற்றிப் பேசினார்கள். அதற்காக ஐ.நா. சபையும் உண்டாக்கப்பட்டது. ஆனால், சமாதான சாத்தியத்திற்காக உண்டாக்கப்பட்ட உலகப் பொதுச் சபைக்கு ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர்தான் வைக்கப்பட்டதேயன்றி, அதன் நோக்கமெல்லாம் ஐக்கியத்தைப் பிளப்பதாகவே இருக்கிறது. அது பேசுகிற சமாதனாப் பேச்சு, செயலை நெருங்கவே அனுமதிக்கப்படவில்லை.

ஐ.நா.வின் சமாதானம், அமைதி எல்லாம் பேச்சோடு சரி - அதன் செயல்களெல்லாம் அமைதியை சிதைப்பதிலேயே போய்க் கொண்டிருக்கிறது. எனவே இந்த ஐ.நா. சபை இரண்டாவது சர்வதேசச் சங்கம் என்ற நிலைமைக்கு மேற் போகவில்லை - போகாது. 

ஜனநாயகம் வந்துவிட்டது - அது சக்திமிக்கது; அதன் பயனாய் மனிதகுலத்தின் வாழ்க்கைத் தரமும், மனப்பாங்கும் உயர்ந்துவிட்டது. எனவே ஒரு நாட்டை ஒரு நாடு படையெடுக்காது. ஒரு நாட்டிற்குள் ஒரு நாடு பலவந்தமாய்ப் பிரவேசிக்காது - பிரவேசிக்கும் என்ற கனவு கூட இனி எவருக்கும் தோன்றாது என்றெல்லாம் அகிலமளாவ பிரச்சாரத்திருக்கிறோம். 

ஆனால் நடப்பது என்ன? ஜனநாயகத்திற்கும், அதன் வழி செல்லும் மனிதப் பாங்கிற்கும் எது ஆகாதோ அது நடக்கிறது. ஒரு நாட்டை ஒரு நாடு படையெடுத்தது. அதைப் பார்த்துக் கொண்டு ஜனநாயகத்தின் மூத்த அண்ணனான அமெரிக்கா சும்மா இருந்தது. சூயஸ் சம்பவத்தைத்தான் குறிப்பிடுகிறேன். 

சூயஸ் சம்பவம் மேலும் தொடராது - ஜனநாயக சக்தி தடுத்துவிடும் என்று நினைத்தோம். ஆனால், அதே சூயஸ் நிகழ்ச்சி லெபனானில் ஏற்பட்டது! சூயஸ் நிகழ்ச்சிக்கு சும்மா இருந்த நமது ஜனநாயகத்தின் மூத்த அண்ணனான அமெரிக்கா லெபனான் நிகழ்ச்சியின் போது சும்மா கூட இருக்கவில்லை. 

சூயஸ் முற்றுகையில் பிரிட்டன் கொட்டிய கொடுமையை விடக் கோரமாகக் கொட்டிற்கு - லெபனானில் தனது வலிமை மிக்க ஆறாவது கடற்படையையும், போர்க் கப்பல்களையும் காட்டி, சின்னஞ்சிறு நாடான லெபனானைக் கோரத்தனமாய்ப் பயமுறுத்திற்கு அமெரிக்கா. 

ஜனநாயகமே ஜனநாயகத்தை எதிர்த்துச் சண்டைக்கு மார்தட்டும் நிலைமையை அமெரிக்காவின் மூலம் கண்ட லெபனான், தான் வலிமையிலும், அளவிலும் மிகமிகச் சிறிதாக இருந்தாலும், ஜனநாயகத்தையும் மக்கள் சக்தியையும் நம்பி அமெரிக்காவின் சவாலை ஏற்று அதைக் களத்தில் சந்திக்க கச்சை கட்டிற்று. 

லெபனானின் இந்தச் துணிச்சலான எதிர்ச் சவால் அமெரிக்கா மூட்டிவிட்ட பிரச்சனையை அடக்கிற்று. நாடு சிறிதாக இருந்தும் சக்தி பெரிதாக இயங்கி களத்திலிறங்கத் தயாராகிவிட்ட லெபனானுக்கு முன்னே, அமெரிக்கச் சவால் அதிகநாள் நிற்கமாட்டாமல் ஓய்ந்ததை உலகம் அறியும். 

நமது அகிம்சாமுறையில் அகில உலகிலும் ஜனநாயகம் அமைய வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். ஆனால் நம்மைச் சுற்றி நடப்பது என்ன? ராணுவ சர்வாதிகாரம்! 

பாகிஸ்தானில் மட்டுமல்ல - மேலும் சில நாடுகளிலும் ராணுவ சர்வாதிகாரம் நடைபெறுகிறது. தாய்லாந்து, பர்மாவோடு இதர நாடுகளிலும் ராணுவ ஆட்சி அமலில் இருக்கிறது. அந்த நாடுகளெல்லாம் இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகள். ஆனால் பர்மாவையும் தாய்லாந்தையும் பற்றி நாம் எதுவும் குறிப்பிடுவதற்கில்லை. ஏனெனில் பர்மா, காமன்வெல்த் பிணைப்பில் இல்லை - தாய்லாந்து தென் கிழக்காசிய கூட்டணியோடு (சீட்டோ) இணைத்துக் கருதப்படும் நாடு. ஆனதால் பாகிஸ்தானைப் பற்றி நாம் பிறகு சிந்தித்துக் கொள்ளலாம். ஆனால், இதைப்பற்றி நாம் உடனடியாகச் சிந்தித்தே ஆகவேண்டும். ஏனெனில் அதுவும் நம்மைப்போல் நமது காமன்வெல்த்தில் இணைந்துள்ள நாடு. இந்த நாடு ராணுவ சர்வாதிகாரத்தல் சிக்கியிருக்கிறது. அதை மேற்கு நாடுகளும் அனுமதிக்கக் கொண்டிருக்கின்றன என்றால் நாம் அதில் அதில் எச்சரிக்கையோடு இருந்தாக வேண்டியதோடு, அதற்கு நாம் மறுப்புத் தெரிவிக்க வேண்டாமா? 

ஜனநாயக வரம்பிற்குட்பட்டது என்பது காமன்வெல்த் கூட்டின் கோட்பாடு. ஆனால், அதில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டில் ராணுவ சர்வாதிகாரம் நடைபெறுகிறது. அதை அதற்கு அதி அண்டை நாட்டினரான நாம் அனுமதித்துக் கொண்டிருந்தால், நமது ஜனநாயகத்தை எந்த வகையில் நம்மால் பரிபாலிக்க இயலும்? நம்மை முரட்டுத் தனமான வழியில் இழுக்க வைக்கும் கொடுஞ் சூழ்ச்சி அல்லவா இது? இதோடு நிற்கவில்லை - நிலைமை மேலும் படருகிறது. பாகிஸ்தானில் அந்நியரின் விமான தளங்கள் மட்டும் நிர்மாணிக்கப் பட்டிருக்கவில்லை - புதுமையான பல பயங்கர ஆயுதங்களைக் குவித்து வைக்கும் கிட்டங்கியும், ராக்கெட் தளங்களும் ஆப்கன் மலைகளுக்கு அருகே கட்டப்பட்டிருக்கின்றன! இது எல்லாம் எந்த வகை ஜனநாயகம் என்று மேற்கு நாடுகள், நம்மிடம் விவரித்திருக்கின்றனவோ அறியேன். இது நிற்க, நமது எல்லைப் புறங்களைக் கவனிப்போம். 

நமது குடியரசுக்கு 11வது வயது நடைபெறுகிறது. ஆனால் நமது எல்லைகளை இன்னும் அளவிட்டு வரையறை செய்து வேலி வைத்துக் கொள்ளவில்லை. 

ஒரு தனிப்பட்ட சிறு குடும்பத்தினர் கூட பாகப்பிரிவினை செய்து கொண்டுவிட்டால், அவரவர் பாகத்திற்கான பகுதியை சிறு சுவர் எழுப்புவதன் மூலம் பிரித்துக் கொள்கிறார்கள். சுவர் எழுப்பாது போனாலும் தமது பகுதியைப் பிரத்துக் காட்டிக்கொள்ள ஒரு கோடாவது கிழித்துக் கொள்ளாமலிருக்க மாட்டார்கள். சொத்து சுகங்களையும் முறைப்படி பிரத்தே தீருவார்கள். 

ஆனால் ஒரு நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு 12 வருடங்களாகியும் எல்லை நிர்ணயங்கூட இன்னும் சரிவரச் செயல்படவில்லை என்பது அதிசயத்திலும் அதிசயம்! இந்த அலட்சிய நிலை பல ஆபத்துகளை பலவித முறைகளில் உற்பத்தி செய்து கொண்டே போகிறது. 

ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதுபற்றிக் கேள்வி எழும்போது இன்னும் எல்லைக்கோடு கிழித்தாகவில்லை - அதனால் எதுவும் சொல்வதற்கில்லை - அச்சம்பவங்களை எம்.பி.கள் மிகைப்படுத்திப் பேசுகிறார்கள் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறோம். 

நமது அரசியல் நிர்ணயத்தின் 3வது பிரிவுப்படி தவறு என்பது தெரிந்தும், பாகிஸ்தான் பிரதமரும் நமது பிரதமரும் பேச்சு நடத்திப் பகுதிகளை மாற்றிக்கொள்கிறார்கள். இந்தப் பகுதிமாற்ற விவகாரம் அ.நி. சட்டத்தின் 3வது பிரிவுப்படி தவறு என்று கேள்விகள் எழுப்பப்பட்டால், "இல்லை இல்லை அப்பகுதி விவாதத்திற்குரியதாக இருப்பதால் 3வது சட்டப்பிரிவு அதற்குக் குறுக்கிடாது - எனவே அதைப்பற்றி எந்த சர்ச்சையும் வேண்டாம்" என்று ஒரேடியாக மொத்தத்தில் பதில் சொல்லப்பட்டு விடுகிறது! உண்மையில் அப்பகுதி விவாதத்திற்குரியதாக இருந்தால் அதன் பரிகாரத்துக்குச் சட்டமில்லையா? 

எதையும் சட்ட முறைப்படி செய்தால் என்ன? சர்க்கார் தரப்பில் செய்யப்படும் எதையும் முறைப்படி செய்வதற்காகவே சட்டம் வகுக்கப்படுகிறது. சட்ட சம்மதமின்றி சுயநோக்கத்துக்கு எதையும் செய்வதாக இருந்தால் சட்டம்தான் எதற்கு?

லோக்சபையிலே தன் பக்கம் மெஜாரிட்டி இருக்கிறதென்ற துணிச்சலில் தேசம் சம்பந்தப்பட்ட எதையும் சுயமூப்பில் செய்வது நல்லதா? என்று கேட்கிறேன். 

மேலம் இந்த எல்லைப் பிரச்சனை, என்றோ ஒரு நாளைய விவகாரமாகவும் இல்லை - நித்தியப் பிரச்சனையாகி வருகிறது. பெரியவர்களின் வாய்களிலிருந்து இம்மாதிரி பதில்கள் வருவதற்கு வேதனைப்படுகிறேன். பொறுப்புள்ள பெரிய மனிதர்களை மதித்து மரியாதை செய்யலாம். ஆனால் அவர்கள் மூத்தவர்கள் என்பதற்காக உயிரினுமினிய கொள்கைகளைத் தியாகம் செய்ய முடியுமா? 

ஆக, எல்லைப் புறங்களில் பாகிஸ்தான் நடத்துகின்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் சின்னஞ்சிறிய சம்பவமாகத்தான் தெரியும். ஆனால், ஒரு பெரிய ஆபத்தான மொத்தச் சம்பவத்தைப் பாகிஸ்தானிகள் இவ்விதச் சிறுசம்பவங்களால் உருவாக்கி வருகிறார்கள் என்பதுதான் உண்மை! சிறிய ஆபத்து பெரிதாக வளரும் மோசமான கட்டத்தில் நாம் நிற்கிறோம் என்பதைச் சொல்லாமல் தீரவில்லை

1959 ஆம் வருடம் மிக மிக முக்கியமான வருடமாக மாறி இருக்கிறது. இவ்வருடம் 2வது உலக யுத்தத்தைத் தோற்றுவித்த 1939 ஆம் வருடத்தின் மறுபிறவியாக இருக்குமென்று நான் கருதுவதை, பொதுவாக நாட்டிற்கும் குறிப்பாக சர்க்காருக்கும் அறிவித்துக் கொள்கிறேன். இவ்வருடம் மிக மோசமான வருடம் என்ற அறிவிப்பை சர்க்காரும் நாடு ஒரு எச்சரிக்கையாகக் கூடக் கொள்ளலாம். 

இரண்டாவது உலக யுத்தம் முடிந்துவிட்டதாக மிகப் பலர் கருதுகின்றனர். அவர்களைக் கருதும்படி செய்திருக்கிறது செய்தியும், அறிக்கைகளும்! செய்தி - அறிக்கை அளவில் 2வது யுத்தம் முடிந்திருக்கிறதேயன்றி உண்மையான செயல் அளவில் அல்ல!

1914ல் ஆரம்பித்த முதல் யுத்தம் 1918ல் முடிந்தது. 1919ல் வார்சேல்ஸ் சமாதான உடன்படிக்கை கையெழுத்தானவுடன் இருதரப்பு நாட்டு ராணுவங்களும் அவரவர் நாடுகளுக்குத் திரும்பிவிட்டன. 

இரண்டாவது உலக யுத்தம் 1939ல் ஆரம்பமாயிற்று. 1945ல் முடிந்ததாகச் சொல்லப்பட்டது. சமாதான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிவிட்டன. இதற்கப்புறம் முதலாவது யுத்த முடிவு மாதிரி ராணுவம் அவரவர் நாட்டுக்குத் திரும்ப வேண்டியதுதானே? ஆனால் திரும்பவில்லை - நின்ற இடங்களில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. 

ஆனால் சமாதான ஒப்பந்தங்கள் மட்டும் கையெழுத்தாகிவிட்டன. பரஸ்பர உதவி என்ற பெயராலோ, நாங்கள் ஆக்கிரமித்த பகுதி என்ற பெயராலோ, தூதுக் குழுக்கள் என்ற பெயராலோ, வேறு எதோ ஒரு பெயராலோ ராணுவங்கள் நிறுத்தப்பட வேண்டாத இடங்களில் ஒப்பந்தமானதற்கப்புறமும் நிறுத்தப்பட்டுள்ளன. இது ஏன்? என்று ஆராய முற்படும் படித்தவர்களுக்கு 2வது யுத்த முடிவில் உட்கட்டு தெரியும். 

நாம் மேற்கத்தியரோடு நேசம் பூண்டிருக்கிறோம். நேச பாவத்திற்கு வழிமுறையும் வைத்திருக்கிறோம். அதன் பயனாய் நாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் நம்புகிறோம். அதே சமயம் நாம் மேற்கத்தியரோடு கொண்டுள்ள உறவுக்கும் அவர்களின் கொள்கைக்கும் தொடர்பில்லை என்றும், அவர்கள் வழியேதான் நமது வழி என்று ஒப்பந்தமெதுவும் இல்லையென்றம் கூறிக்கொள்ளுகிறோம். இந்தமட்டில் சரி. இதுவே உண்மையில் கடைப்பிடிக்கும் கொள்கையாக இருக்குமேயானால் வழுக்கல் நிறைந்த இந்த வழியில் நமது அதிசயகரமான அகிம்சைக் கொள்கை எவ்வளவு தூரம் சறுக்கி விழாமல் நடை போட முடியும்? 

நாம் கொண்டிருப்பது அகிம்சா முறை - அம்முறையில் தான் நமது திட்டங்களும் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நமது உறவு, ராணுவத் திட்டத்தை வைத்துள்ள மேற்கத்தியரோடு இருக்கிறது. இந்த வக்கிர போக்கோடு மற்றொரு வக்கிரமும் சேருகிறது. நமக்கு அஹிம்சையும், மேற்கத்தியருக்கு ஹிம்சையும் கொள்கை என்பதோடு நிலைமை நிற்கவில்லை. வழிமுறை, செயல், திட்டம், எல்லாம் நமது பண்பாட்டிற்குரிய சுதந்திர ரீதியில் தயாரிக்கப்பட்டவை என்று கூறிக்கொள்கிற நாம், கோடானு கோடி ரூபாய்களைக் கொண்ட ராணுவ பட்ஜெட்டை வைத்திருக்கிறோம். 

உண்மையில் நமது பாதை அகிம்சைதான் என்றால் இத்தனை கோடி ரூபாய்களை விழுங்கும் ராணுவ பட்ஜெட் ஏன்? அவ்வளவு பெரிய தொகையை தேசிய நலத்திட்டம் போன்ற பல உருப்படியான காரியங்களுக்குச் செலவிடலாகாதா? 

நமது நாட்டை நாம்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? என்று கேட்கலாம் - ஒப்புக் கொள்கிறேன். அவ்வாறானால் நம்மிடம் நவீன ஆயுதங்களை நிறைத்துக் கொள்ள வேண்டும். ஏராளமான புதுவித ஆயுதங்களை நிலைமைக் கேற்றவாறு திரட்டிக் கொண்டால், பயங்கரச் சூழ்நிலைகளை அண்டவிடாமல் தடுத்துக் கொள்ளலாம். ஆனால் பாதுகாப்பு என்பதன் பெயரால் நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? இந்தக் காலச் சூழ்நிலைக்குப் பொருந்தாக மிகப் பழைய ரக ஆயுதங்களை, அதுவும், பிரிட்டன் கம்பெனியில் வாங்குகிறோம். இது ஏதோ விளங்கவில்லை! தாழ்வு நிலையை நோக்கிச் செல்லும் இந்த மாதிரி ராஜதந்திரத்தை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை

ராஜதந்திரம் என்றால் அதற்கொரு சாமுத்திரிகம், நாகரிகம் கண்ணியம் உண்டு. இம்மூன்றும் இல்லாத ராஜதந்திரத்துக்கு, ராஜதந்திரம் என்ற பெயரை வேண்டுமானால் சூட்டலாம். ஆனால் அது ராஜதந்திரமாகாது. மோசடி நிறைந்த கபடம். ஒரு நாட்டின் எல்லையை ஒரு நாடு வரம்பு மீறித் தாண்டுவது ராஜதந்திரமல்ல - பச்சைத் துரோகம். துரதிர்ஷ்டவசமாக 2வது உலகப் போர் ஒரு தரப்புக்கும் வெற்றியைத் தராமல், ஒரு தரப்பை ஒரு தரப்பு அடக்கிவிட்டது என்ற நிலையை உண்டாக்காமற் செய்துவிட்டது. எனவே இப்பொழுது யுத்தத் தயாரிப்புக்கான இடைக்காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இருதரப்பினருக்குமே தெரியும். இதோடு மூன்றாவது யுத்தத்திற்கு வித்திட்டுவிட்டேதான் இரண்டாவது யுத்தம் இளைப்பாறப் போயிருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆகவேதான், முற்றுகையிட்ட படைகள் ஆங்காங்கே நிற்கின்றன - பரஸ்பர உதவிப் படைகளும் ஆங்காங்கே இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கியங்கெட்ட நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. 

சமாதானம் வந்துவிட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால் இது வெறும் பிரமை, உண்மையில் சமாதானம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலைமையிலாவது நாம் விழிப்புற வேண்டாமா? நம்மை எதிர்நோக்கி வருகிற கோரப் புயலை சமாளிக்கத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டாமா? ஏதோ பேசுகிறோம் - எதையோ திட்டமிடுகிறோம் - எதுவோ நடக்கிறது. 

நமது பேச்சு, ஐக்கியத்தில் அழுத்தமாக இருக்கிறது. ஆனால் அந்த ஐக்கிய சாதனைக்கு விதமே நமக்குத் தெரியவில்லை. கூடி வாழ்வோம் என்று சுவைபடப் பேசுகிறோம். இதோடு கூட நிற்கவில்லை. இதற்கு மேலும் கடந்து, அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் கொண்டிருக்கிற நாடுகளுக்கு, கூடி வாழும்படி போதனை செய்யவும் போகிறோம். ஆனால் கண்றாவி! அரசியல் ரீதியில் எதிர் மனோபாவம் கொண்டு எதிர்க்குரல் எழுப்பும் நமது சொந்த சகாக்களோடு கூடி வாழ்வதற்கான சைகையைக் கூடக் காட்டவில்லை.

இதற்கு மாறாக நமது அரசியல் எதிரிகள் மீது சந்தர்ப்பம் வாய்க்கையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, உயிர்களை வாங்கத் தயங்கவில்லை. இது ஒரு கோரமான நிலைமையாகும். ராமநாதபுரம் ஜில்லாவில் அகிம்சையைக் குப்புறத் தள்ளிவிட்டுத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தோம் - பலர் மாண்டனர். மறக்கவொண்ணாத அச்சம்பவத்துக்கு நீதி விசாரணை வேண்டுமென்று வேண்டியதை அப்படியே நிராகரித்துவிட்டோம்... 

(இதன்போது ஒரு எம்.பி. எழுந்து பம்பாயிலும், ஆமதாபாத்திலும் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது என்று குறிப்பிட்டார்). 

சத்தியத்தின் பெயரால் அது சம்பந்தமான செய்திகளை மக்களுக்குப் பரவவொட்டாமல் அமுக்கியேவிட்டோம். இதுதான் எங்கள் கொள்கை - இப்படித்தான் செய்வோம் - இதுதான் சத்தியமும், அகிம்சையும் என்றால், மகத்தான இந்த நாட்டையும் காங்கிரசையும் எங்கே கொண்போய் நிறுத்துமோ? 

நினைக்கவே இனிக்கும் அற்புதம் பெற்ற தத்துவத்தை நாம் வாயில் வைத்திருக்கத் தவறவில்லை. ஆனால், அதைச் செயலுக்கு இறக்கிவிட நாம் விரும்பவே இல்லை; ஜனநாயகத்தின் தரத்தை நாம் ஒரு அளவுக்கேனும் கையாளாது போனாலும் பாதகமில்லை - போகட்டும் - ஆனால் மனித குலத்திற்கு வேண்டிய மனிதத் தரத்தையாவது மடக்கிச் சாய்க்காமல் விட்டுவிட்டால், அதுவே ஒரு பெரும் சேவையும், தியாகமும், புண்ணியமுமாகும். 

ஜனநாயகத் தத்துவத்தைப் பேச்சால் குளிப்பாட்டுகிற நாட்டில் மனிதத் தரத்திற்கே வாய்ப்பில்லை என்ற நிலைமை சகிக்கவொண்ணாததாகும். ஆகவேதான் உங்களைக் கரங்கூப்பி வேண்டுகிறேன் - ஜனநாயகத்தையாவது உங்கள் நோக்கம் போல் எப்படியும் உபயோகித்துக் கொள்ளுங்கள் - மனிதத் தரத்தையாவது கசக்கிக் கன்னவைக்காமல் விடுங்கள் என்று. 

கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் - இயல்பு. ஆனால் தேசத்தைப் பற்றிய விஷயங்களில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புண்டு.

மதிப்பிற்குரிய இந்தச் சபையில் நெஞ்சு நடுங்கும் பல தியாகங்களைத் செய்த பெரிய மனிதர்களும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். மகத்தான கொள்கைப் பற்றுள்ள புதியவர்களும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ்கார்களாகவும் இருக்கலாம் - இல்லாமலுமிருக்கலாம். ஆனால் கொள்கை பலம் எல்லோருக்குமே உண்டு. கருத்துக் கொள்ளும் உரிமையுமுண்டு. இதை மறந்தோ, மறுத்தோவிட்டு ஒரு உறுப்பினர், இந்து மத்தின் நேர்மை குறித்துப் பேசினால் நீங்கள் அவரை வகுப்புவாதி என்று இலேசாகச் சொல்லி ஒதுக்கிவிடுகிறீர்கள், மற்றொரு உறுப்பினர் முன்வந்து பொருளாதாரத் தத்துவம் பற்றிக் கூறினால், அவரை உங்கள் வாயால் கம்யூனிஸ்ட்டாக்கி விடுகிறீர்கள், வேறொருவர் வேறேதேனும் சொல்லத் துணிந்து முயன்றால், அவரை ஏதேனும் ஒரு கமிட்டிக்குப் பொறுப்புக் கொடுத்து, குல்லாய் மாட்டி உள்ளே இழுத்துக் கொள்கிறீர்கள். இவ்வளவு மோசமான போக்கைக் கொண்டிருந்தால் சக்தி மிக்க எதிர்க்கட்சி எப்படி உருவாகும்? என்று கேட்கிறேன். ஒருக்காலும் முடியாது! 

சக்திவாய்ந்த எதிர்க்கட்சியை நீங்கள் விரும்பினால் முதலில் உங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். சரியான எதிர்க்கட்சியை நீங்கள் விரும்பவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதை வேண்டுமென்றே தவிர்த்து விடுகிறீர்கள் எனறுதான் சொல்லுகிறேன். 

நமது போக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் இங்குள்ள எங்கள் எல்லோரையும் விட உங்களுக்கு அதிகம் தெரியும். ஆனால், தெரிந்தும் எதற்காக விவாதத்திற்குரிய வகையில் போக்கை வைத்திருக்கிறீர்கள என்பதற்கான உண்மையான காரணத்தைத்தான் என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. 

பாகிஸ்தானில் துப்பாக்கிப் பிரயோகம் குறித்து இன்று காலை இந்த சபையில் ஒரு அவசரப் பிரேரணை எழுந்தது. அதற்குச் சரியான முறையில் பதிலளிக்கும் நிலையில் இல்லை - நமது மதிப்பிற்குரிய பிரதமர்! துணிச்சலும் - விஷய விளக்கமும் இருக்க வேண்டிய அவருடைய பதிலில், விக்கி அழவைக்கும் துக்கம்தான் மேவியிருக்கிறது. 

"கனம் உறுப்பினர் விவரித்த மாதிரிதான் நிலைமை இருக்கிறது. அதற்காக அவசரத் தீர்மானமும் அவசியம்தான் - ஆயினும் அதை ஏன் கனம் உறுப்பினர் கொண்டு வந்தார் - அதனால் நடைமுறைப் பயன் எதுவுமிராது" என்கிறார் நமது பிரதமர். 

நமது ராணுவம் பாகிஸ்தானுக்குச் சரியான பதில் சொல்லும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வதில் உள்ள சக்தி, விஷயத்தில் இல்லை. நமது ராணுவம் மிகமிகச் சக்தி வாய்ந்தது - சாதுர்யம் மிக்கது - வைர உறுதி கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் அதைச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நமது ராணுவத்தின் மகத்தான சக்தியை நாங்களறிவோம் - நீங்களுமறிவீர்கள் - நாடும் அறியும் - நானிலத்திற்கும் தெரியும். ஆனால், நவீன ஆயுத வசதியைப் பொறுத்துத்தான் பிரச்சனை எழுகிறது. நமது ராணுவத்திற்கு உள்ள சக்தி மிகமிகப் பெரியது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ள நவீன ரக ஆயுதங்களின் சக்தியும்! நம்மிடம் உள்ள ஆயுதங்களைவிட ஆயிரம் மடங்கு வலிமையான ஆயுதங்களைக் கொண்டிருக்கிறது - பாகிஸ்தான் - சக்திவாய்ந்த ராணுவம் எவ்வளவு பெரிய சக்தியையும் முறியடிக்கும் திறன் வாய்ந்த ராணுவம் அந்த அளவுக்கு நவீன ரக ஆயுத வலிமையின்றி இருக்கிறது

இந்நிலையில் நமது ராணுவம், பாகிஸ்தானுக்குப் பதிலுக்குப் பதில் கொடுக்கும் என்று எதை வைத்துக் கூறுகிறீர்களோ தெரியவில்லை. இந்த நவீன ரக ஆயுதத் தேவையைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் அது ராணுவ ரகசியம் - அதை நீங்கள் கிளற வேண்டாம் - என்று சொல்லடி கொடுத்து, பிரச்சனையை பிதுங்கவிடாமல் அடக்கிவிடுகிறீர்கள் நம்மிடமுள்ள ஆயுதங்களைக் கொண்டே பாகிஸ்தான் எழுப்பிவிட்டுள்ள கொடூரமான நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்று நிஜமாகவே நீங்கள் நம்புகீறர்களா? 

முன்பு ஹைதராபாத்தில் நடந்ததே அந்த விவகாரம் என்ன?

சிட்னிகாட்டன் என்ற ஒரு வெள்ளையன், மணிலாக் கொட்டை வியாபாரி என்ற போர்வையில் ஏராளமான ஆயுதங்களைஹைதராபாத்துக்கு விமானம் மூலம் கொண்டு சென்று குவித்தான். இந்த தவறான செயல், குலை நடுங்கும் பயங்கர ரகத்தைச் சார்ந்ததாகும். ஆனால் அதிருஷ்டவசமாய் ஜின்னாவின் மரணத்தையொட்டிய ஒரு நிகழ்ச்சியின் வாய்ப்பில், நமது தளபதி ராஜேந்திர சிங்ஜி நிலைமையை நமது தரப்பு வெற்றியாக மாற்றி, ஹைதராபாத்தில் குவிந்திருந்த சகல ஆயுதங்களையும் நம் வசமாக்கினார் - ஒரே இரவில் போலீஸ் நடவடிக்கையால் இவ்வளவும் சாதித்துக் கொண்டதாகச் சொன்னோம். சரி இதில் இதற்குமேல் உட்புகுந்து கிளற நான் விரும்பவில்லை. 


நமது செயலின் முன்னைய வரிசையில் ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்த்துக் கொள்வதற்காக, சைகையின் ரீதியில் கொஞ்சம் தொட்டுக் காட்டினேன். அவ்வளவுதான். இதற்குமேல் அச்சம்பவத்துக்குள் ஊடுருவிச் செல்ல வேண்டியதுமில்லை. ஏனெனில் நீங்கள் எல்லோரும் பெரியவர்கள். ஆனதால் இதன் உள்விளக்கம், உங்கள் விளங்கும் சக்தியை மீறியல்ல, விளங்கிக் கொள்ளவே செய்வீர்கள். எனவே நான் தொட்டுக் காட்டிய ஓர் ஓரத்தின் ஓரத்தோடு இதைவிட்டு விடுகிறேன். ஏனெனில் இவ்வளவுதான் என்னால் சொல்ல இயலும். இயன்றதைச் சொன்ன நான் காஷ்மீர் விவகாரத்திற்கு உங்களை அழைக்கிறேன். 

காஷ்மீர் விவகாரம் எப்படி ஆகிவிட்டிருக்கிறது தெரியுமா? 

பாகிஸ்தானை காஷ்மீருக்குள் அனுமதித்துவிட்டு நாம் ஜம்முவில் இருக்கிறோம். இதன் பயனாய் பாகிஸ்தான் ஒன்று மட்டுமல்ல - பாகிஸ்தானுக்குள் ஒரு பாகிஸ்தான் என்ற கதியை அடைந்துவிட்டது பிரச்சனை! பாகிஸ்தானிகள் காஷ்மீரில் இருக்க வேண்டுமென்றே நாம் விரும்பி, அவர்கள் அங்கிருக்க அனுமதியும் கொடுத்து, அதற்காக ஒரு உடன்பாடும் ஆகியிருப்பதாகவே தெரிகிறது... 

(இந்த இடத்தில் சபாநாயகர் குறுக்கிட்டு, கனம் உறுப்பினருக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் தீர்ந்துவிட்டது - 15 நிமிடங்களுக்கு மேல் பேசி வருகிறீர்கள் என்று கூறினார்.) 

அதற்கு முத்துராமலிங்க தேவர் : 

"எனக்கு மேலும் 15 நிமிடங்கள் அனுமதிக்க வேண்டுகிறேன் - கனம் உறுப்பினர்கள் பலர் தாம் பேச 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதை நான் பார்த்தேன் என்றார்". 

(பிறகு இயன்ற வரை கனம் உறுப்பினர் எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ முடியுங்கள் என்றார் சபாநாயகர்) 

பின்னர் தேவர் தொடர்ந்து பேசியதாவது : 

காஷ்மீர் விவகாரம் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் பாகிஸ்தானிகள் ஆக்கிரமித்துவிட்டதாக வெகு சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானிகள் அக்கிரமித்தது மட்டும்தான் உண்மை - அவர்கள் ஆக்கிமித்தது அவர்களின் சொந்த சக்தியால் மட்டுமல்ல - நமது இணக்கமும் சேர்ந்தேதான். 

காஷ்மீர் படையெடுப்பிற்கு இலக்கானபோது நாம் நமது ராணுவத்தை அனுப்பினோம். ஆனால் தலைமைத் தளபதியான ஜெனரல் கரியப்பா அவர்களைக் கலந்து கொள்ளக் கூட இல்லை. ஏனெனில் பாகிஸ்தான் பெயரால் மேற்கத்தியருக்கு அங்கு தளம் இருக்க வேண்டுமென்பதில் நாம் வேறுபடாததால்! நான் இவ்வாறு கூறுவது அவ்வளவு ருசியாக இராது - கசக்கவும் செய்யும் - என்ன செய்யலாம் உண்மை எப்பொழுதுமே ருசிப்பதில்லை - கசக்கவே தான் செய்யும். அதற்காக உண்மையை மேலோட்டமாக விட்டுவிட்டால் விஷயம் புரையோடிவிடும். உண்மையை உடைத்துப் பார்த்தால் காஷ்மீர் விவகாரம் இப்படித்தான் தெரிகிறது. - அதை நம்பாமல் என்ன செய்வது? இந்த உண்மை நமது நண்பர்களுக்கும் புலப்படுத்தப்படுகிறதா? என்பது தெரியவில்¨! நமது நண்பர்கள் என்று சொல்லப்படுகிற மேற்கத்தியர்தான் விவகாரத்தை விறுவிறுப்பாக்குகிறார்கள் - அவர்களே அதை ஆறவும் போடுகிறார்கள். பிறகு உதவி என்பதன் பெயரால் பலரக உபத்திரவங்களை உண்டாக்கி வைக்கிறார்கள். கடைசியில் அவர்கள் செய்யும் உதவி என்ன தெரியுமா? 

மேற்கத்தியவர்களாகிய அவர்களை நாம் நண்பர்களாகப் பாவிக்கிறோம். ஆனால், அந்த நண்பர்கள், நமக்குப் பரம எதிரிகள் யாரோ, அவர்களுக்கு ராணுவ உதவி செய்துவிட்டு, நமக்குள்ள உணவுப் பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உணவு உதவுகிறோம் என்கிறார்கள். அந்த உதவியும் நமது திருப்திக்கு இப்பாலேயே நின்றுவிடுகிறது. 

அவர்களின் நண்பர்களாகிய நமக்கு அவர்கள் உதவும் கோதுமை, மூன்றாந்தரம் - நாலாந்தரத்தையும் கடந்ததாகும். அதாவது அவர்களின் குதிரைகளுக்கு போடும் கோதுமையை எடுத்து நமக்கு உதவுகிறார்கள். அதை நாம் உண்பதற்கில்லை - உண்ணவும் முடியாது. அவர்களின் குதிரைகளுக்குப் போடும் கோதுமையை நமக்குத் தந்துவிட்டு, நமது எதிரிகளுக்கு நல்ல ராணுவ சாதனங்களைக் கொடுத்துவிட்டு இரணமே உதவிதான் என்கிறார்கள். நாமும் அதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். வேறு என் செய்யலாம்? செய்வது...? 

இங்கு வலதுசாரி இடதுசாரி நிலைமைகளையும், அவர்கள் இயக்கப்படும் விதங்களையும் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. ஸ்ரீ இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஒரு ராஜ்யத்தின் முதன் மந்திரி. அவர், அவரது பணியைச் செய்யும்போது ஏதோ சில கடிதங்களை எழுதியிருக்கிறார். இதை ஒரு பெரிய பிரச்சனையாக ஆக்கிக்கொண்டு, அதை ஓர் ஒழுங்குப் பிரச்சனையாக வளர்த்து லோக்சபைக்குள்ளேயே வரவிட்டு விவாதம் செய்கிறோம். 

ஆனால், அதே சமயம் மத்தாய் விவகாரமும் உள்ளே நுழைந்து ஒரு விவாதத்தை உண்டாக்கி விட்டிருக்கிறது. ஆனால், இந்த மத்தாய் விவகாரத்தை விவாத அளவிற்கு மேற் போகாமல் நிறுத்திக்கொண்டு, கேரள முதன் மந்திரியின் கடிதப் பிரச்சனையை ஒழுங்குப் பிரச்சனையாக உயர்த்திக் கொள்ளுகிறோம். இது ஏனோ தெரியவில்லை. இவ்வளவு கீழ்நோக்கம் நமக்கு நமது கெளரவத்துக்கு ஒவ்வாததாகும். பிரச்சினையாக எடுத்துக்கொண்டு தீர அற விவாதித்து முடிவுகட்ட வேண்டிய விஷயங்கள் எத்தனையோ உள்ளது. 

இந்த மத்தாய் விவகாரம் என்ன? அதன் உள் அடக்கம் யாது? முந்திரா மோசடி விவகாரத்திற்குப் பின்னர் வெளிவந்துள்ள பெரிய - முக்கிய விவகாரம் இது. அமெரிக்க ஸ்தானிகராலயத்தில் வேலை பார்த்த ஒரு நபர், நமது சர்க்கார் அலுவலகத்தில் உளவறிய அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நபரை நாம் அனுமதித்தோம். அவர், அவருடைய வேலையைச் செய்து கொண்டார். அவர் தனக்கு வாய்த்த வாய்ப்பைக் கைவிடுவார் என்று நாம் எப்படி எதிர்பார்க்கலாம்? 

இந்த விவகாரம் வெளிக்கு வந்த பின்னர், மாபெரும் மனிதரும் நமது மதிப்பிற்குரிய பிரதமருமான நேரு அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை வெளிவந்தது. அதில், "என் மனம் சரியில்லாத சமயத்தில் நான் மத்தாயை அனுமதித்துவிட்டேன்" என்று கண்டிருக்கிறது. 

இம்மாதிரி மனது தவறும் நிலையும், அதன்போது எதுவும் செய்யும் நிலையும் நமது பிரமரின் மரியாதைக்கு மட்டுமல்ல, அகில ஆசியாவும் கொண்ட வெள்ளையரல்லாத வர்க்கத்துக்கே ஆபத்தானதாகும்.

சாதாரண ஒரு மனிதனுக்கு மனது சரியில்லாமற் போகலாம். கொடலாம். சகஜம்! ஆனால் பெரிய நாட்டின் பிரதமருக்கு - அதுவும் ஐந்தாம் படையினர் கழுகுகள் மாதிரி உளவறிய மூலை முடுக்குவிடாமல் வட்டமிட்டுத் திரியும் இந்த 1959ஆம் வருடத்தின் இக்கட்டான முகப்பில் - நமது தலைமைக் காரியாலயங்கள் தீப்பற்றி எரியும் தீமைகரமான சூழ்நிலைச் சந்தியில் - மனம் சரியில்லாத சந்தர்ப்பம் ஏற்படுவது சகஜநிலையாகாது - அது நாட்டுப் பொதுவுக்கு நல்லதுமல்ல. 

இதில் இன்னொரு வேதனைகரமான சம்பவம், அதவாது நமது சர்க்கார் (சிம்லா) அலுவலகத்திற்குத் தீவைக்க இரண்டு தடவை முயன்றும் முடியாமல், மூன்றாவது தடவை முடித்துவிட்டதாகச் செய்திகள் நமக்கு எப்படியும் ஒன்றும் நடவாதது மாதிரி சும்மாதான் இருக்கிறோம். இவ்வளவு பயங்கரமான செய்திகள் வந்து செயலும் முடிகிற வரை நமது சி.ஐ.டி.கள் என்ன செய்தார்களோ தெரியவில்லை. 

அடுத்து உணவுப் பிரச்சனை! 

இது மிக மோசமான நிலைமையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் மட்டும் சொல்லவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்களே கூறுகிறார்கள். இந்த சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள உணவுப் பிரச்சனை பற்றி இந்தியில் காரசாரமாகப் பேசினார்கள். எனக்கு இந்தி சரளமாகப் பேசவராது போயினும், பேசுவதை ஓரளவுக்குப் புரிந்துகொள்வேன். காங்கிரஸ் உறுப்பினர்கள் உணவுப் பரிச்சனை குறித்துப் பேசுகையில் தோல்வி - தோல்வி - தோல்வி என்று மும்முறை அழுத்தமாக ஆரவாரத்தோடு கூறினார்கள். அவர்கள் அழுத்தமாக இந்தி மொழியில் மும்முறை கூறியதன் அர்த்தத்தை நாமறிவோம். ஆயினும் அரசாங்கம் இப்பிரச்சனையில் வியாபாரத் தோரணையில் ஈடுபடுவதை நிறுத்துவதாகத் தெரியவில்லை. 

இந்த உணவுப் பிரச்சனையை வைத்துக்கொண்டு அரசியல் தலைவர்கள் லஞ்சத்தையும், சலுகையையும் வியாபாரம் செய்யும் வியாபாரிகளாகி வருகிறார்களேயன்றி, இதை தேசத்தின் உயிர்ப் பிரச்சனையாகக் கருதவேயில்லை. 

தேசப் பிரச்சனை, அரசயில் தலைவர்களின் லஞ்ச லாபத் தொழலாக மாற்றப்பட்ட மோசமான கட்டத்தில், நாம் எதைச் செய்து சமாளிப்பது என்பவையல்லவா ஆய்ந்தறிந்து செய்ய வேண்டும். உணவு வியாபாரம் - நிலங்களுக்கு உச்சவரம்பு என்ற கவைக்குதவாத விவகாரங்களை இழுத்து வைத்துக் கொண்டால் பிரச்சனை என்ன வாகும்? 

நில உடைமைகளுக்கு உச்சவரம்பு கட்டுவது உணவு வர்த்தகம் புரிவது போன்றவை எல்லாம் பேசுவதற்கு எளிதாகவும், ரஞ்சகமாகவும்தான் இருக்கும். ஆனால் அதை நடைமுறைப் படுத்தும்போதுதான், பேசுவதில் இருந்த சுலபம் செயலில் இல்லை என்பது விளங்கும். விளங்கிய பிறகும், பேசிவிட்டோமே என்பதற்காக செய்தே தீரவேண்டும் என்று அழுத்தமாகச் செய்யத் தொடங்கினால், அதன் முடிவில் நமக்கு என்ன தெரியும்? தெரியுமா? நாடு ஒரு பெரிய ஆபத்தில் சிக்கிவிட்டிருப்பதுதான் தெரியும். அந்த ஆபத்து பொருளாதாரம் சம்பந்தப்பட்டதோடு மட்டும் நில்லாது மக்களின் வெறுப்பையும் கொண்டதாக இருக்கும். 

நாம் ஏற்கனவே அன்னிய ராணுவங்களின் சுற்றுச் சூழ்நிலையில் உருவாகியுள்ள பயங்கரத்தின் நடுவே நிற்கிறோம். இந்நிலையில், வெளி ஆபத்துக்கள் போதாதென்று இது - அது என்பதன் பெயரால் உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்தானா? என்று கேட்கிறேன். நமது திட்டங்கள் சம்பந்தமாய் நம்மிடம் தெளிவான மனோ நிலையோ கொள்கையோ இல்லை. தெளிவற்ற நிலையில் இந்த விபரீதங்களை ஏனோ ஏற்படுத்திக் கொள்கிறோம். 

நில உடைமைக்கு உச்சவரம்பு என்று பேசுகிறோம். இதைப் பேசுவதற்கு நாசுக்காகவும் இருக்கிறது. இம்மாதிரி வரம்பு கட்டுவது என்பதை வரவேற்க வேண்டியதுதான். ஆனால் அது எல்லாத் துறைகளுக்குமே பொதுவாக இருக்க வேண்டாமா? 

நிலங்களுக்கு உச்சவரம்பு என்பது கிராமாந்திரங்களில் ஆரம்பிக்க வேண்டிய விஷயம். ஆனால் நிலங்களுக்கு உச்ச வரம்பை கிராமப் பகுதிகளில் தொடங்குவதற்கு முன், நகர்ப்புறங்களிலல்லவா தொடங்கி வைக்க வேண்டும். அதுவும் கனம் பிரதம மந்திரியின் சம்பளத்திலிருந்தல்லவா ஆரம்பமாக வேண்டும்? நிலவுடைமைக்கு உச்சவரம்பு கட்ட விரும்புகிற பிரதமர், முதலில் தமது சம்பளத்திற்கு உச்சவரம்பு கட்டிக்கொண்டு, அதற்கடுத்து நகர்ப்புற வருமானங்களுக்கு வரம்பிட்டு, அதன்பிறகு கிராமங்களுக்குப் போனால், கடமை எளிதாக நிறைவேறுமென்று கருதுகிறேன். 

ஏன் இதைச் செய்யவில்லை - செய்யக்கூடாதா? உச்சவரம்பு என்ற முறையை ஏற்படுத்தும் நீங்கள் அதற்கு ஒரு தரத்தை வரையறை செய்யவேண்டும். ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் வரையறை செய்யாமல் எடுக்கப்படும் எந்த முயற்சியும் சரிவரச் செயல்படுமென்று நான் கருதவில்லை. 

உச்சவரம்பு என்ற கொள்கையின் செயல்பாடு முதலில் நகரங்களில் ஆரம்பமாக வேண்டும். அப்புறம்தான் அதை கிராமங்களுக்கு இழுக்க வேண்டும். இதன்றி, நகர்ப்புறங்களில் வாழுகிறவர்கள், இயன்றவரை பணத்தையோ, உடைமைகளையோ திரட்டலாம் - சேமிக்கலாம் - எவ்வளவு செல்வத்தோடும் சுகிக்கலாம் - என்று அனுமதித்துவிட்டு, கிராமப்புறங்களில் வாழுவோர்களின் நிலங்களுக்கு மட்டும் உச்சவரம்பு கட்டப்போனால், உங்கள் திட்டத்திலும் அதைச் செய்யத் தூண்டிய எண்ணத்திலும் சமநிலை இல்லை என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் என்பதோடு, நமது நாட்டுக்குச் சொந்தமான மொத்த மக்களில் 80 சதவிகிதம் பேரை 20 சதவிகிதம் பேருக்கு அடக்கமாக்குகிறீர்கள் என்றுதான் பொருள்படும். 

அந்த நிலையில், மேற்கத்தியர் முன்பு இங்கு ஆடிப்பார்த்த விளையாட்டை நீங்கள் மறுபடியும் ஆடிப்பார்க்க விரும்புகிறீர்கள் என்பது உறுதியாகிவிடும்! 

ஆகவே, இடதுசாரிகளிடம் திட்டமில்லை - கொள்கை இல்லை என்றோ, இது பிழை, இது கேடு என்றோ வழக்கம் போல் இதிலும் எதையேனும் சொல்லிவைக்காமல், இந்த உச்சவரம்புப் பிரச்சனையில் நடுநிலையில் நின்று, நடுநோக்கோடு ஆராய்ந்து செயல்படும்படி அக்கறையோடும் அழுத்தத்தோடும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். 

பொறுப்பின்றியும், சரியான காலநிலை தவறியும் பேசி வைக்கும் இடதுசாரியும் இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக வலதுசாரிகள் மனத்திற்குத் தோன்றியதைச் செய்து, நாட்டை ஆபத்தின் வயப்படுத்திவிடாதீர்கள் என்று, பொறுப்பின் பெயரால் வேண்டி, எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன். 

இதுவே நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நிகழ்த்திய முதல் முழக்கமாகும்.






No comments:

Post a Comment