Friday 22 September 2017

VINTHAN , WRITER FOR FARMERS ,AND LABOURS 1916 SEPTEMBER 22


VINTHAN , WRITER FOR  FARMERS ,AND LABOURS BORN 1916 SEPTEMBER 22



விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு]
கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.
இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.
1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.
அச்சகத்தில் பணி[மூலத்தைத் தொகு]

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.
எழுத்தாளராக[மூலத்தைத் தொகு]
கல்கி போன்ற ஜாம்பவான்கள் புகழின் உச்சத்தில் இருந்த போது ஓசையில்லாமல் எழுத்து லகில் நுழைந்து முத்திரை படைத்துச் சென்றவர் விந்தன். கற்பனை மிகுந்த எழுத்துக்கள் நிறைந்திருந்த காலகட் டத்தில், யதார்த்தத்தை, ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கான குரலை எழுப்பியவர் அவர்.

1916 செப்டம்பர் 22-ல் பிறந்த விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இந்த ஆண்டு (2016) அவரது நூற்றாண்டு. இதையொட்டி விந்தனின் மொத்தப் படைப்புகளையும் 3 தொகுதியாக வெளியிட்டிருக்கிறது காவ்யா பதிப்பகம். அவரது கட்டுரை கள், கதைகள், நாவல்களைத் தனித் தனியே தொகுத்து சுமார் 3,000 பக்கங் கள் கொண்ட பிரம்மாண்ட நூல் களாக வெளியிட்டிருக்கிறார் பதிப்பாசிரி யர் காவ்யா சண்முகசுந்தரம். பத்திரிகை யாளர், எழுத்தாளர், கவிஞர், திரைப்பட வசனகர்த்தா, கவிஞர் என்று பல முகம் கொண்ட விந்தனின் படைப்புகள் ஒவ்வொ ன்றும் ஒருவித அனுபவம் தருகின்றன.

முதலில் கட்டுரைத் தொகுப்பை எடுத்துக்கொள்வோம். ‘ஓ மனிதா’ என்ற தலைப்பில், நாய், கழுதை, சிட்டுக்குருவி, கரிச்சான் போன்றவை மனிதனைப் பார்த்து பேசுவது போன்ற நகைச்சுவை கட்டுரைகளுடன் தொடங்குகிறது. கிண்டலும் குத்தலுமான நடையில் எழுதப்பட்ட இந்த கட்டுரைகள் மனிதனின் மூடப்பழக்க வழக்கங்களையும், சோம் பேறித்தனத்தையும் கேலி செய்கிறது. பிரபலமான ‘எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்’ முழுமையாக இங்கே இடம்பெற்றிருக்கின்றன. அதைப் போலவே, ‘எம்.கே.டி.பாகவதர் திரையும் வாழ்வும்’ எனும் தொடர், எம்ஜிஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’க்கு அவர் எழுதிய கதை-வசனம், ‘பஜகோவிந்தம்’ எழுதிய ராஜாஜிக்குப் பதிலடியாக பகுத்தறிவு கருத்துக்களுடன் இவர் எழுதிய ‘பசி கோவிந்தம்’, கிருபானந்தவாரியார் குமுதத்தில் ‘வாரியார் விருந்து’ எழுதிய போது அதன் தாக்கத்தால் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’ ஆகிய வையும் இந்தத் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

‘விந்தன் கதைகள்’ தொகுப்பில் அவர் எழுதிய 67 குட்டிக்கதைகள், 91 சிறுகதைகள், 32 ‘மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகள்’ இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கால கட்டத்தில், வெவ்வேறு இதழ்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் அவற்றின் அடிநாதமாக சமூக முன்னேற்றமே இருக் கிறது. ஏழை, எளிய அடித்தட்டு மக்க ளின் வாழ்க்கை நெருக்கடிகளையே தன் படைப்புகளுக்கான மூலமாக எடுத்தி ருக்கிறார் விந்தன்.

‘விந்தன் நாவல்கள்’ தொகுப்பில், அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ‘பாலும் பாவையும்’ இடம்பெற்றுள்ளது. இது ராமாயண நையாண்டிப் போலி. இந்த நாவலை ஏவி.எம். செட்டியார் படமாக எடுத்தபோது, தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்பட்ட காரணத்தால் விந்தன் அதிலிருந்து விலகினார். இந்நாவலில் அவர் எழுதிய, ‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடி னாள்’ வரிகள், பராசக்தி படத்தில் கலை ஞர் பெயரில் பிரபலமானதாகச் சொல்வார் கள். ‘அன்பு அலறுகிறது’ நாவல், பிறன் மனை நோக்குதலைப் பேராண்மையாகக் கருதும் போக்கைப் பரிகாசம் செய்கிறது.

ஒரு தமிழ்ப் பேராசிரியரின் பொய்யான வாழ்க்கையைப் பச்சையாகப் படம் பிடித்துக்காட்டுவது, ‘மனிதன் மாற வில்லை’ நாவல்’. ராணி வார இதழில் விந்தன் தொடராக எழுதிய ‘காதலும் கல்யாணமும்’ நாவலும் இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான நாவல்.

“எழுத்தாளனுக்கு எழுத வராதது என்று எதுவுமில்லை. ஒரு முழு எழுத்தாளனுக்கு கதை எழுதவரும், கவிதை எழுத வரும், விமர்சனம் எழுத வரும். இது எனக்கு வராது என்று சொல்பவன் முழுமையான எழுத்தாளனே அல்ல” என்பது விந்தன் அடிக்கடி சொல்வது. இந்த மூன்று நூல்க ளும் அவர் ஒரு முழுமையான எழுத்தாளர் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.

1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.
"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி . [1]
திரைப்படவுலகில்[மூலத்தைத் தொகு]

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும், "அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். குழந்தைகள் கண்ட குடியரசு, பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.
கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.
இறுதிக் காலம்[மூலத்தைத் தொகு]
பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
விந்தன் எழுதிய நூல்கள்[மூலத்தைத் தொகு]
தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய நூல்கள் நாட்டுடமை ஆக்கியது. நாட்டுடமை ஆன நூல்களின் பட்டியல்.
அன்பு அலறுகிறது
இந்திய இலக்கியச் சிற்பிகள்
இலக்கியப்பீடம் 2005
எம்.கே.டி.பாகவதர் கதை
ஒரே உரிமை
ஓ, மனிதா
கண் திறக்குமா?
காதலும் கல்யாணமும்
சுயம்வரம்
திரையுலகில் விந்தன்
நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
பசிகோவிந்தம்
பாலும் பாவையும்
பெரியார் அறிவுச் சுவடி
மனிதன் இதழ் தொகுப்பு
மனிதன் மாறவில்லை
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
விந்தன் இலக்கியத் தடம்
விந்தன் கட்டுரைகள்
விந்தன் கதைகள் - 1
விந்தன் கதைகள் -2
விந்தன் குட்டிக் கதைகள்
வேலை நிறுத்தம் ஏன்?

No comments:

Post a Comment