Monday 30 August 2021

BOMMAI -MOVIE SONGS

 

BOMMAI -MOVIE SONGS




  • Song : Engo Piranthavaram
  • Movie/Album Name : Bommai 1964
  • Star Cast : S. Balachander, V. S. Raghavan and L. Vijayalakshmi
  • Singer : P. Susheela
  • Music Composed by : S. Balachander
  • Lyrics written by : V Lakshmanan



Engo Piranthavaram Lyrics in Tamil :

எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்

எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்

எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்

சிங்காரமாக வந்து
சிரித்து மயக்கி பேசியவர்
சிங்காரமாக வந்து
சிரித்து மயக்கி பேசியவர்

சிட்டாக பறந்து விட்டாரே
முல்லை மொட்டாக
இருக்க விட்டாரே.ஏ..

எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்

விழி வாசல் தனைக் கடந்து
வழி முழுதும் தெரிந்தவர்போல்
குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே

விழி வாசல் தனைக் கடந்து
வழி முழுதும் தெரிந்தவர்போல்
குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே

மொழி ஏதும் பேசாமல்
மோகவலை வீசி என்னை
மோன நிலையாக்கி விட்டு


வழி மறந்தாரேஏ..

நிலவுதன்னை பழித்தொரு நாள்
என் முகத்தை அவர் புகழ்ந்தார்
நிலவும் என்னை வெறுத்ததம்மா
துணையும் இல்லையே

நிலவுதன்னை பழித்தொரு நாள்
என் முகத்தை அவர் புகழ்ந்தார்
நிலவும் என்னை வெறுத்ததம்மா
துணையும் இல்லையே

மலரை மிஞ்சும் அழகி என்று
மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால்
மலரும் கோபம் கொண்டதம்மா
தூதும் இல்லையே.

தென்றலைப் போல் ஆடி வரும்
திருமகளே என்று அழைத்தார்
தென்றலுக்கும் பகை ஆனேன்
வழியும் இல்லையே

தென்றலைப் போல் ஆடி வரும்
திருமகளே என்று அழைத்தார்
தென்றலுக்கும் பகை ஆனேன்
வழியும் இல்லையே

ஒன்று சேர்ந்து கலந்தபோது
நடந்ததெல்லாம் கதையும் இல்லை
உண்மை என்று சொல்லி சேர்க்க
யாரும் இல்லையே.

எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்


  • Song : Nee Thaan Selvam Nee Thaan Amudham
  • Movie/Album Name : Bommai 1964
  • Star Cast : S. Balachander, V. S. Raghavan and L. Vijayalakshmi
  • Singer : P. Susheela
  • Music Composed by : S. Balachander
  • Lyrics written by : V Lakshmanan


Nee Thaan Selvam Nee Thaan Amudham Lyrics in Tamil :

நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீதான் எந்தன் உலகம்.ம்ம்ம்..

நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்

வாவென்றேன் உன்னை
வந்தாய் என் கண்ணே
தாயென்ற உயர்வை
தந்தாய் என் கண்ணே

வாவென்றேன் உன்னை
வந்தாய் என் கண்ணே
தாயென்ற உயர்வை
தந்தாய் என் கண்ணே

கண்ணுக்குள் மணியாய்க்
கலந்தே நீ வாழ்க
மண்ணுக்கு புகழாய்
மகனே நீ வாழ்க

நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்

தோட்டத்துக் கொடிக்கு
பூவால் சிறப்பு
வாழும் வீட்டுக்கு
ஏற்றும் விளக்கால் சிறப்பு

தோட்டத்துக் கொடிக்கு
பூவால் சிறப்பு
வாழும் வீட்டுக்கு
ஏற்றும் விளக்கால் சிறப்பு
பாட்டுக்குப் பொருளின்
நயத்தால் மதிப்பு
பசு மாட்டுக்குப் பிறந்த
கன்றால் மதிப்பு

கொடி தந்த பூவாய்
பூ தந்த மணமாய்
மடி மீது வளர்ந்தாய்
மகனே நீ வாழ்க

நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்

கண் பார்க்கும் இடத்தில்
நீ தான் இருப்பாய்
எந்தன் கை தீண்டும் பொருளில்
நீ தான் இருப்பாய்

கண் பார்க்கும் இடத்தில்
நீ தான் இருப்பாய்
எந்தன் கை தீண்டும் பொருளில்
நீ தான் இருப்பாய்

பண் சேர்த்துப்
பாடும் பாட்டில் இருப்பாய்.
நான் பார்க்கின்ற எதிலும்
நீ தான் இருப்பாய்..

அன்புக்கு வடிவாய்
பண்புக்குப் பொருளாய்
இன்பத்தின் சுவையாய்
என்றென்றும் வாழ்க

நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்

  • Song : Neeyum Bommai Naanum Bommai
  • Movie/Album Name : Bommai 1964
  • Star Cast : S. Balachander, V. S. Raghavan and L. Vijayalakshmi
  • Singer : K. J. Yesudas
  • Music Composed by : S. Balachander
  • Lyrics written by : V Lakshmanan


நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை
நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை
அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
வீசும் புயலில் உலகமே பொம்மை
நதியின் முன்னே தர்மமும் பொம்மை
வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
இன்ப சோலையில் இயற்கை பொம்மை
அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை



  • Song : Thathi Thathi Nadandhuvarum Thangapapa
  • Movie/Album Name : Bommai 1964
  • Star Cast : S. Balachander, V. S. Raghavan and L. Vijayalakshmi
  • Singer : L. R. Eswari
  • Music Composed by : S. Balachander
  • Lyrics written by : V Lakshmanan


தத்தி தத்தி
தத்தி தத்தி தத்தி தத்தி
தத்தி தத்தி
தத்தி தத்தி தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா

தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா

கையை வீசி கடைக்கு போகலாம்
சின்ன பாப்பா
கம்மல் வாங்கி காதில் மாட்டலாம்
செல்ல பாப்பா

கையை வீசி கடைக்கு போகலாம்
சின்ன பாப்பா
கம்மல் வாங்கி காதில் மாட்டலாம்
செல்ல பாப்பா

சொக்காய் வாங்கி சொகுசாய் போடலாம்
சின்ன பாப்பா
மிட்டாய் வாங்கி மெதுவாய் தின்னலாம்
செல்ல பாப்பாஆ..

தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா

நீ இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்

காட்டு பாப்பா

காக்காகிட்டே மை கிடைக்கும்
கண்ணுக்கு போடலாம்
குருவிக்கிட்டே பூ கிடைக்கும்
கொண்டைக்கு சூடலாம்

காக்காகிட்டே மை கிடைக்கும்
கண்ணுக்கு போடலாம்
குருவிக்கிட்டே பூ கிடைக்கும்
கொண்டைக்கு சூடலாம்

பசுவுகிட்டே பால் கிடைக்கும்
பசியை போக்கலாம்
கிளியின் கிட்டே பழம் கிடைக்கும்
ருசித்து தின்னலாம்

ஆசையோடு வாய் திறந்து
பேசு பாப்பா
அழகாக கைக்கொட்டி
ஆடு பாப்பா

சிப்பாய் போல நடந்து காட்டு
சின்ன பாப்பா
அப்பா அம்மா எனக்கு தந்த
ஜப்பான் பாப்பா

தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா

தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா








No comments:

Post a Comment