Monday 21 March 2022

TWITTER INTRODUCED ON 2006 MARCH 21

 


TWITTER INTRODUCED 

ON 2006 MARCH 21






டுவிட்டர் அல்லது ட்விட்டர் (ஆங்கில மொழி: Twitter) என்பது டுவீட் (ட்வீட்) என்று அழைக்கப்படும் 140 வரியுருக்களாலான குறுகிய செய்திகளை அனுப்பும், வாசிக்கும் வசதிகளைப் பயனர்களுக்கு வழங்குகின்ற ஒரு தொடர் குழு வலையமைப்புச் சேவை ஆகும். டுவிட்டரில் பதிவுசெய்த பயனர்கள் டுவீட்டுகளை வாசிக்கலாம், பதியலாம். ஆனால், பதிவுசெய்யாதவர்கள் டுவீட்டுகளை வாசிக்க மட்டுமே முடியும். வலைத்தள இடைமுகத்தினூடாகவோ குறுஞ்செய்தி மூலமோ நகர்பேசிச் செயலி மூலமோ பயனர்கள் டுவிட்டரை அணுகமுடியும்.[7] டுவிட்டரின் தலைமை அலுவலகம் சான் பிரான்சிற்கோவில் அமைந்துள்ளது. 35இற்கும் மேற்பட்ட துவிட்டர் அலுவலகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன.[2] துவிட்டரானது இணையத்தின் குறுஞ்செய்திச்சேவை எனவும் அழைக்கப்படுகின்றது.[8]

துவிட்டரானது யாக்கு உடோர்சி, இவான் வில்லியமிசு, பிசு தோன், நோவா கிளாசு ஆகியோரால் 2006 மார்ச்சில் உருவாக்கப்பட்டு, 2006 சூலையில் வெளியிடப்பட்டது. 2012 அளவில் 140 மில்லியனுக்கு மேற்பட்ட பயனார்கள் ஒரு நாளுக்கு 340 மில்லியன் துவிட்டுகளைப் பதியத்தொடங்கியதுடன், இச்சேவையானது உலக அளவில் பரவலாகத் தொடங்கியது.[9] அத்துடன், ஒரு நாளுக்கு 1.6 பில்லியன் தேடல் வினவல்களும் கிடைக்கப்பெற்றன. 2013இல், கூடுதலாகப் பார்க்கப்படும் முதல் பத்து வலைத்தளங்களுள் ஒன்றாகத் துவிட்டர் இடம்பிடித்தது.[10] 2016 மார்ச்சு நிலவரப்படி, மாதந்தோறும் இயங்குநிலையிலுள்ள 310 மில்லியன் பயனர்கள் துவிட்டரில் உள்ளனர்.[2]

சமூக ஊடகம் என்பது வலைத்தளங்களின் வழியாக தகவல், கருத்துக்கள், தொழில்சார் நலன்கள் மற்றும் வெளிப்பாட்டின் பிற வடிவங்களை உருவாக்கும் பகிர்வுக்கும் உதவும் ஊடகங்கள் ஊடாடும் கணினி நடுநிலை தொழில்நுட்பங்கள் ஆகும். தற்போது பல சமூக ஊடகங்கள் பலவித பண்புகளை கொண்டிருப்பதால் தெளிவான வரையறை கூறமுடியாது. இருப்பினும் சமூக ஊடகத்திற்கான பொதுவான பண்புகள் உள்ளன.[1


சமூக ஊடகத்தின் தாக்கம்[தொகு]

எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்பமாக இருந்தாலும் சாதக மற்றும் பாதக விளைவுகள் உண்டு.

நன்மைகள்[தொகு]

  1. தகவல் பறிமாற்றம்
  2. நிகழ்ப்படம் பதிவேற்றம்
  3. கருத்துக்கள் பறிமாற்றம்
  4. குழு உரையாடல்
  5. வேலைவாய்ப்பு தகவல் பெற
  6. பொழுதுபோக்கு
  7. உலக சமூகங்கள் அல்லது சர்வதேச நபர்களின் நட்புறவு என பல
  8. நமது சிறந்த படைப்புகள் அனைத்தையும் சமுதாயத்தில் பரப்ப............ #

தீமைகள்[தொகு]

  1. தனிநபர் தகவல் திருட்டு
  2. சட்டவிரோத பதிவேற்றங்கள்
  3. தவறான பதிவுகள்
  4. அடிமையாதல்
  5. குணாதிசய மாற்றம் .[2]
  6. கலாச்சார கலப்பு
  7. தணிக்கை தொடர்பான பதிவுகள் என பல

தமிழகத்தில்[தொகு]

தமிழ்நாட்டில் மெரீனாப் புரட்சியில் சமூக ஊடகங்கள் பங்கு சிறப்பாக அமைந்தது. இளைஞர்கள் இந்த சமூக ஊடகங்களின் வழியே மாநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ஜல்லிக்கட்டு பற்றிய முக்கியத்துவம் அறியச்செய்து ஒருங்கிணைத்தது. மேலும் உலக தமிழர்கள் என அனைவர்க்கும் மெரீனாப் புரட்சி பற்றிய அவ்வப்போது நிகழ்வுகளை நேரலையாக அறியச்செய்தது.

ஜல்லிக்கட்டு மெரீனா புரட்சி

இரவு நேரத்தில் தமது கைபேசியில் (செல்போன்) உள்ள விளக்கினை உயர்த்திக் காட்டி, அசைத்தல் [3]. விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதை ஒத்ததாக இது அமைந்திருந்தது.

சில சமூக ஊடகங்கள்[தொகு]

  1. முகநூல்[4]
  2. இன்ஸ்ட்டாகிராம்
  3. வாட்சப்
  4. கூகுள்+ [5]
  5. மைஸ்பேஸ்
  6. லிங்டின்[6]
  7. பின்டெரெஸ்ட்
  8. சினாப்சாட்
  9. டம்ளர்
  10. வைபர்
  11. டுவிட்டர்[7]
  12. கிளப்ஹவுஸ்


வரலாறு[தொகு]

உருவாக்கம்[தொகு]

குறுஞ்செய்திச்சேவையை அடிப்படையாகக் கொண்ட குழு வலையமைப்புக்காக யாக்கு உடோர்சியால் வரையப்பட்ட நீல அச்சுப்படித் திட்ட உருவரை

வலையொலிபரப்பு நிறுவனமான ஓடியோவின் அவை உறுப்பினர்களால் ஒரு நாள் முழுவதும் நடத்தப்பட்ட குழுச்சிந்திப்பு அமர்வில் துவிட்டரைத் தொடங்குவதற்கான எண்ணக்கரு உதித்தது. அப்போது நியூ உயோர்க்குப் பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவராக இருந்த யாக்கு உடோர்சி, தனியாள் ஒருவர், ஒரு சிறுகுழுவுடன் தொடர்புகொள்வதற்காக ஒரு குறுஞ்செய்திச்சேவையைப் பயன்படுத்தலாம் என ஓர் எண்ணக்கருவைப் பரிந்துரைத்தார்.[11] இதற்கான திட்டக் குறிப்பெயராக twttr என்பது பயன்படுத்தப்பட்டது. பிளிக்கரின் தாக்கத்தாலும் அமெரிக்கக் குறுஞ்செய்திச்சேவைக் குறுங்குறியீடுகள் ஐந்து வரியுருக்களில் அமைந்திருந்ததாலும் இப்பெயர் பயன்படுத்தப்பட்டது. பின்னர், இப்பெயரானது நோவா கிளாசால் பரிந்துரைக்கப்பட்டது என வில்லியமிசு அறிவித்தார்.[12] twitter.com என்ற ஆள்களப்பெயர் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததாலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. Twttr என்ற பெயரில் தளம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களின் பின்பே, twitter.com என்ற ஆள்களப்பெயர் வாங்கப்பட்டு, துவிட்டர் (Twitter) எனப் பெயர் மாற்றப்பட்டது.[13] துவிட்டரின் உருவாக்குநர்கள் 10958 என்பதையே குறுங்குறியீடாகப் பயன்படுத்த எண்ணியிருந்தனர். ஆயினும், இலகுவில் நினைவிலிருத்திக்கொள்வதற்காகவும் பயன்பாட்டுக்கு இலகுவாக இருப்பதற்காகவும் குறுங்குறியீடாக 40404 என்பதை மாற்றியமைத்தனர்.[14] மார்ச்சு 21, 2006 அன்று, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரப்படி பிற்பகல் 8:50இற்கு "just setting up my twttr" என்ற முதல் துவிட்டர்ச் செய்தியை உடோர்சி வெளியிட்டதிலிருந்து துவிட்டர்த் திட்டத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.[1] துவிட்டர் என்ற பெயரின் மூலம் பற்றி உடோர்சி பின்வருமாறு விளக்குகின்றார்.

...we came across the word 'twitter', and it was just perfect. The definition was 'a short burst of inconsequential information,' and 'chirps from birds'. And that's exactly what the product was.

[15]

...நாம் துவிட்டர் என்ற சொல்லுக்கு வந்தோம், அது சரியாகப் பொருந்தியது. 'தொடர்ச்சியற்ற தகவலின் ஒரு குறுகிய வெளிப்பாடு' என்றும் 'பறவைகளின் கீச்சிடல்கள்' என்றும் பொருள் கூறப்பட்டிருந்தது. விளைபொருளும் சரியாக அப்படியே அமைந்துள்ளது.

முதல் ட்விட்டர் மூலப்படிமம் ஓடியோ பணியாளர்களின் அகச் சேவையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது, பின்னர் ஜூலை 2006 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கான முழு பதிப்பு தொடங்கப்பட்டது. அக்டோபர் 2006 ஆம் ஆண்டில், பிஸ் ஸ்டோன்இவான் வில்லியம்ஸ், டோர்சே மற்றும் பிற ஓடியோ உறுப்பினர்கள் கொண்ட வெளிப்படையான நிறுவனம் உருவாக்கப்பட்டது, மேலும் Odeo.com மற்றும் Twitter.com உள்ளிட்ட ஓடியோவின் அனைத்து சொத்துக்களையும், முதலீட்டாளர்கள் மற்றும் மற்ற பங்குதாரர்களிடமிருந்து அந்நிறுவனம் பெற்றது.[16] பின்னர் ஏப்ரல் 2007 ஆம் ஆண்டில் ட்விட்டர் தனி நிறுவனமாக விரிவுபடுத்தப்பட்டது.[17]

2007 சவுத் பை சவுத்வெஸ்ட் (SXSW) விழா ட்விட்டரின் பிரபலத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் புள்ளியாக அமைந்தது. அந்த நிகழ்வின் போது ட்விட்டரின் பயன்பாடு ஒரு நாளைக்கு 20,000 ட்வீட்ஸிலிருந்து 60,000 ஆக உயர்ந்தது.[18] "ட்விட்டரைச் சேர்ந்தவர்கள் சாதுரியமாக இரண்டு 60 அங்குல பிளாஸ்மா திரைகளை ட்விட்டர் செய்திகளை வெளிப்படுத்துவதற்காக மாநாட்டுப்பாதையில் வைத்திருந்தனர்" என்று நியூஸ் வீக்கின் ஸ்டீவன் லெவி குறிப்பிட்டார். "நூற்றுக்கும் மேற்பட்ட மாநாட்டுக்கு சென்றவர்கள் மாறாத ட்விட்டர்ஸ் மூலம் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். குழுவைச்சேர்ந்தவர்கள் மற்றும் பேச்சாளர்கள் அச்சேவையை, வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்கான பிளாக்கரின் வருகையாகக் குறிப்பிட்டார்கள். விரைவிலேயே ஒவ்வொருவரும் உடனடி குறுஞ்செய்தி அனுப்பவும், வலைப்பதிவிடவும் மற்றும் தந்திகள் அனுப்பவும் கூடப் பயன்படும் இந்தப் புதிய அம்சத்தைப் பற்றி சலசலத்தனர்."[19] அந்த விழாவின் விளைவுகள் திணறடிக்கிற அளவில் நேர்மறையாக அமைந்தது. லாஃபிங் ஸ்குவிட் பிளாக்கர் ஸ்காட் பீல், ட்விட்டர் SXSW ஐ "முழுமையாக ஆட்கொண்டது" என்றார். சமூக மென்பொருள் ஆய்வாளர் டனா பாய்ட், ட்விட்டர் இவ்விழாவை "வென்றது" என்றார்.[20] அந்த திருவிழாவில் வழங்கப்பட்ட வெப் விருதை ஏற்றுக்கொண்ட ட்விட்டரின் பணியாளர், "நாங்கள் 140 எழுத்தாலர்கள் அல்லது அதற்கும் குறைவான எழுத்தாலர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். மேலும் நாங்கள் சாதித்திருக்கிறோம்!" என்று குறிப்பிட்டார்.[21]

நிதிகள் [தொகு]

539 பிரையண்ட் ஸ்ட்ரீட் 4 ஆவது மாடியில் உள்ள ட்விட்டரின் சேன் பிரான்சிஸ்கோ தலைமையகம்

மொத்தத்தில், ட்விட்டர் துணிகர முதலீடுகளில் இருந்து 57 மில்லியன் US$க்கு மேல் உயர்ந்தது. நிதியின் சரியான விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ட்விட்டரின் வெளிப்படுத்தப்படாத முதல் சுற்று நிதி $1 மில்லியனுக்கும் மற்றும் $5 மில்லியனுக்கும் இடைப்பட்டதாக இருந்ததாக வதந்தி வெளியானது.[22] இண்டிட்யூசனல் வெஞ்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் பெஞ்ச்மார்க் கேபிட்டலில் இருந்து மற்றும் அதனுடன் சேர்ந்து யூனியன் ஸ்கொயர் வெஞ்ச்சர்ஸ், ஸ்பார்க் கேபிட்டல் மற்றும் இன்சைட் வெஞ்ச்சர் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட மற்ற முதலீட்டாளர்களிடமிருந்து வெளியிடப்படாத பணத்தையும் சேர்த்து 2008 இல் அதன் B சுற்றினுடைய நிதி $22 மில்லியனாகவும்[23], 2009 ஆம் ஆண்டில் அதன் C சுற்று நிதி $35 மில்லியனாகவும் இருந்தது.[22] யூனியன் ஸ்கொயர் வெஞ்ச்சர்ஸ், டிஜிட்டல் கேரேஜ், ஸ்பார்க் கேபிட்டல் மற்றும் பெசோஸ் எக்ஸ்படிசன்ஸ் ஆகிய நிறுவனங்களால் ட்விட்டர் ஆதரிக்கப்படுகிறது.[24]

த இண்டஸ்ட்ரி ஸ்டேண்டார்ட், ட்விட்டரின் நெடுநாள் நிலைக்குந்தன்மையானது பற்றாக்குறை வருமானத்தால் வரையறுக்கப்படுகிறது என குறிப்பிட்டிருக்கிறது.[25] ட்விட்டர் குழு உறுப்பினர் டோட் சாஃப்பி, ஏற்கனவே பயனர்கள் பொருட்களின் பரிந்துரையைப் பெற்றபோதும் மற்றும் பல நிறுவனங்கள் பொருட்களை மின்வணிகம் மூலம் விற்கின்றபோதும், பெரும்பாலான பயனர்கள் ட்விட்டரின் மூலம் நேரடியாகப் பொருட்களை வாங்க விரும்புகின்றனர், எனவே ட்விட்டர் மின்வணிகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என முன்மொழிந்துள்ளார்.[26]

வருமானம் மற்றும் பயனாளி அதிகரிப்பு அடங்கிய சில ட்விட்டரின் ஆவணங்கள் டெக் க்ரஞ்ச்சில் வெளியிடப்பட்டது, பின்னர் அவை ஹேக்கரால் மீட்கப்பட்டன. அதில் ட்விட்டரின் 2009 ஆம் ஆண்டின் அகத் திட்டமிடல்களான மூன்றாவது காலாண்டில் (Q3) $400,000 வருமானமும் நான்காவது காலாண்டில் (Q4) $4 மில்லியன் வருமானமும், அத்துடன் வருட முடிவில் 25 மில்லியன் பயனர்களைப் பெற்றிருந்தது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தது. 2013 ஆம் ஆண்டின் இறுதிக்கான திட்டமிடல்கள், வருமானத்தில் $1.54 பில்லியனும், மொத்த வருமானத்தில் $111 மில்லியனும், மற்றும் 1 பில்லியன் பயனர்களும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது.[27] இந்த எண்ணிக்கையை அடைய ட்விட்டர் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறது என்ற விவரங்கள் அதில் வெளியிடப்படவில்லை. விவரங்களை வெளியிடுவதற்காகச் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தலே சாத்தியமான ஒன்று என பிக் ஸ்டோனின் வலைப்பதிவு இடுகை ஒன்றில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.[28]

தொழில்நுட்பம்[தொகு]

இணையம் சார்ந்த இண்டர்நெட் ரிலே சாட் (IRC) கிளையண்டின் பண்புகளை ஒத்ததாக ட்விட்டர் இருப்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது.[29] ட்விட்டர் இணைய இடைமுகப்பானது ரூபி ஆன் ரெயில்ஸ் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.[30] 2007 ஆம் ஆண்டின் வசந்த காலத்திலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஸ்டார்லிங்[31] என அழைக்கப்படும் ரூபி நிலையான வரிசை சேவையகத்தால் இயல்பான செய்திகள் கையாளப்பட்டு வந்தது, 2009 ஆம் ஆண்டிலிருந்து இது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்காலாவில் எழுதப்பட்ட மென்பொருளுக்கு மாற்றப்பட்டது.[32] இந்தச் சேவைகளின் API மற்ற வலைத்தள சேவைகள் மற்றும் பயன்பாடுகளை ட்விட்டருடன் இணைய அனுமதிக்கிறது.[33] ஹாஷ் குறிச்சொற்களைப் பயன்படுத்தி கணினியில் தேடல் அமையும்படி உருவாக்கப்பட்டிருந்தது, அதாவது வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் # என்ற முன்னொட்டுடன் இருக்கும். "beer" என்ற வார்த்தையைத் தேடுவதாகக் கொண்டால் அது அனைத்து செய்திகளிலும் #beer என்றே தோன்றும்.[34] அதே போன்று, @ குறியீடு பயனாளிபெயருக்கு முன்பு இடம்பெற்றிருப்பது பயனர்கள் தங்களுக்குள் நேரடியாகச் செய்திகளை அனுப்புவதற்கு அனுமதியளிக்கிறது. @example என்ற குறிப்புடன் இருக்கும் ஒரு செய்தி, "example" என்ற பயனருக்கு அனுப்பப்பட்டதைக் குறிக்கும், எனினும் அதனை யார் வேண்டுமானாலும் படிக்க முடியும்.[35]

SMS வழியாக, ஐந்து கேட்வே எண்கள் எனப்படும் அமெரிக்கா, கனடா, இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஐஸ்ல் ஆஃப் மேன் சார்ந்த சர்வதேச பயன்பாட்டுக்கான எண்ணின் சிறிய குறியீடுகள் வழியாக பயனர்கள் ட்விட்டருடன் தொடர்பு கொள்ள முடியும். மேலும் யுனைடட் கிங்டமிற்கான சிறிய குறியீடு வோடபோன் மற்றும் O2 நெட்வொர்க்குகளை மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கின்றது.[36]

இடைமுகம்[தொகு]

தொழில்நுட்ப எழுத்தாளர் ஸ்டீவன் ஜான்சன் ட்விட்டரின் அடிப்படை இயக்கம் "குறிப்பிடத்தக்க எளிமையானது" என்றார் மேலும் அவர் குறிப்பிட்டது பின்வருமாறு:[37]

As a social network, Twitter revolves around the principle of followers. When you choose to follow another Twitter user, that user's tweets appear in reverse chronological order on your main Twitter page. If you follow 20 people, you'll see a mix of tweets scrolling down the page: breakfast-cereal updates, interesting new links, music recommendations, even musings on the future of education.

2009 ஏப்ரல் 30 இல், பக்கப்பட்டியில் அதிகம் புழக்கத்தில் உள்ள தலைப்புகளில் மிகவும் பொதுவான சொற்றொடர்கள் மற்றும் தேடல் பட்டி போன்றவை செய்திகளில் இடம்பெறும்படி ட்விட்டர் தனது இணைய இடைமுகத்தை மாற்றியது. "உலகில் 24/7 நேரத்தில் எந்தவொரு பகுதியிலிருந்தும் ட்விட்டருக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு பொதுப் புதுப்பிப்பும் எங்களது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நேர தேடல் மூலமாக உடனடியாக வரிசைப்படுத்தப்படும், மேலும் அது உடனடியாகக் கண்டறியும் விதத்தில் இருக்கும்", என பிஸ் ஸ்டோன் விவரித்திருந்தார். மேலும் கூறுகையில் "புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சத்தினால், தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் தேடல் பொறியில், எதிர்பார்க்க முடியாதளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ட்விட்டர் மாறும்" என்றார்.[38]

ட்வீட்ஸின் உள்ளடக்கம்[தொகு]

சேன் ஆண்டொனியோவைச் சேர்ந்த விற்பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் பியர் பகுப்பாய்வில் ட்விட்டரில் இரண்டு வார காலங்களுக்கு காலை 11:00 மணியிலிருந்து மாலை 5:00 வரை (CST) அனுப்பப்பட்ட 2,000 ட்வீட்ஸ் (அமெரிக்காவிலிருந்தும் ஆங்கிலத்திலும் அனுப்பப்பட்டவை) ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை ஆறு பிரிவுகளாக பிரித்தனர் அவை பின்வருமாறு:[39]

  • செய்திகள்
  • ஸ்பாம்
  • சுய வெளிப்பாடு
  • அர்த்தமில்லாத எழுத்துக்கள்
  • உரையாடல் சார்ந்தவை
  • முக்கிய விசயங்களைப் பரிமாறல்

பெரும்பாலான ட்விட்டரின் உள்ளடக்கமாக "அர்த்தமில்லாத எழுத்துக்கள்" இருந்ததாக அந்நிறுவனம் கண்டறிந்தது, அதாவது மொத்தமாக கணக்கெடுக்கப்பட்ட செய்திகளில் 811 ட்வீட்ஸ்கள் அல்லது 40.55 சதவீத ட்வீட்ஸ் அர்த்தமில்லாத எழுத்துக்கள் கொண்டவையாக இருந்தன.

ட்விட்டரின் 751 செய்திகள் அல்லது 37.55 சதவீத செய்திகள் உரையாடல் சார்ந்த செய்திகளாகவும், ட்வீட்ஸில் 174 செய்திகள் அல்லது 8.70 சதவீத செய்திகள் "முக்கிய விசயங்களைப் பரிமாறல்" அதாவது மீண்டும் மீண்டும் அனுப்பப்படும் ட்வீட்ஸாக இருந்தன, 117 ட்வீட்ஸ் அல்லது 5.85 சதவீத ட்வீட்ஸ் நிறுவனங்களின் சுயவெளிப்பாடாக இருந்தன, 75 ட்வீட்ஸ் அல்லது 3.75 சதவீதம் ஸ்பாமாகவும் மற்றும் 72 ட்வீட்ஸ் அல்லது 3.60 சதவீத ட்வீட்ஸ் முக்கிய ஊடக வெளியீடுகளிலிருந்து வெளிவந்த செய்திகளைக் கொண்டவையாக இருந்தன.[39]

சமூக வலையமைப்பு ஆய்வாளர் டனா பாய்ட் பியர் பகுப்பாய்வு மதிப்பீட்டைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், பியர் ஆய்வாளர்கள் "அர்த்தமற்ற எழுத்துக்கள்" என்ற தலைப்பில் என்ன குறிப்பிட்டுள்ளார்கள், அதற்கு பதிலாக "புற விழிப்புணர்வு" அல்லது "சமூக வெளிப்பாடு" என்று குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் என வாதிட்டார்.[40]

மக்கள் தொகையியல்[தொகு]

டவிட்டரை பயன்படுத்தியதற்கு முன்பு மற்ற சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தியிராத வயது முதிர்ந்தவர்களே பெரும்பாலும் ட்விட்டரைப் பயன்படுத்த்துகிறார்கள் என்று சமூக ஊடகத்தை ஆய்வு செய்யும் தொழில் ஆய்வாளர் ஜெரெமியா ஓவ்யாங் குறிப்பிட்டார். "வயது வந்தோர் சில ஆண்டுகளாக பதின்வயதினர் எதைச் செய்கிறார்களோ அதையே செய்கிறார்கள்," என்று அவர் கூறினார்.[41]

காம்ஸ்கோரின் ஆய்வின் படி, ட்விட்டரின் பயனர்களில் 11 சதவீதத்தினர் மட்டுமே 12 முதல் 17 வயதுடையவர்களாக இருக்கிறார்கள்.[41]

பழைய சரிந்த முதனிலை பின்பற்றுவோர் சுயவிவரத்தின் விளைவாக, தொழில் அமைப்புகள் மற்றும் செய்திகள் வெளியிடுதல் போன்றவற்றில் முதன்முதலாக ஒரு சமூக வலையமைப்பு பிரபலமானதாக இருக்கிறது, இதை ட்விட்டரின் "முதனிலை பின்பற்றுவோர் காலம்" என காம்ஸ்கோர் கருதுகிறது. இருப்பினும், காம்ஸ்கோர் பின்னர், "ஷேக்பிரிட்னி ஸ்பியர்ஸ் மற்றும் ஆஷ்டன் குட்ச்சர் போன்ற பிரபலமானவர்கள் ட்விட்டரேட்டி தரவரிசையில் இணைந்ததுடன் சேர்த்து, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களையே அதிகம் உடையதாக இருப்பதற்கு" தொடக்கமாக ட்விட்டர் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தது.[42] ட்விட்டர் தக்கவைத்திருக்கும் ஆற்றலின் விகிதம் 40% ஆக இருப்பதாக நீல்சன் ஆன்லைன் மதிப்பிட்டிருக்கிறது.[43]

செயலிழப்புக்காலங்கள்[தொகு]

ட்விட்டரின் செயலிழப்புக்காலத்தின் போது, பயனர்களுக்கு இயியிங் லூவால் உருவாக்கப்பட்ட,[44] "டூ மெனி ட்வீட்ஸ்! பிளீஸ் வெயிட் எ மொமெண்ட் அண்ட் ட்ரை அகையின்" என்ற எழுத்துக்களுடன்[45] கூடிய, சில சிவப்பு நிறப்பறவைகள் வலைகளைப் பயன்படுத்தி கடலிலிருந்து திமிங்கலத்தைத் தூக்குவதைப் போன்ற "ஃபெயில் வேல்" பிழைச் செய்தி உருவப்படம் தெரியும்.[45]

2007 ஆம் ஆண்டில் ட்விட்டர் 98 சதவீத இயக்கநேரத்தைக் கொண்டிருந்தது, அல்லது ஆறு முழுநாட்கள் செயல்படாத நேரத்தைக் கொண்டிருந்தது.[46] ட்விட்டரின் செயல்படாத நேரம், குறிப்பாக 2008 மேக்வோர்ல்ட் கான்ஃபரன்ஸ் & எக்ஸ்போ சிறப்புக்குறிப்பு நிகழ்ச்சி போன்ற தொழில்நுட்பத்துறையில் நடைபெறும் பிரபலமான நிகழ்வுகளின்போது குறிப்பிடும்படியாக அதிகமாக இருந்தது.[47][48] மே 2008 சமயத்தில் ட்விட்டரின் புதிய பொறியியல் குழு, வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்தது. செயல்படா நேரத்தின் விளைவினால் நிலைப்புத் தன்மை பிரச்சினைகள் அல்லது தற்காலிக அம்சத்தை நீக்குதல் போன்றவை அதில் அடங்கும்.

ஆகஸ்ட் 2008 இல், யுனைட்டட் கிங்டமை[49] சேர்ந்த பயனர்களுக்கு வழங்கி வந்த இலவச குறுஞ்செய்திச் சேவை சேவைகள் வசதியைத் திரும்பப் பெற்றது, மேலும் தோராயமாக ஐந்து மாதங்கள் XMPP போட் வழியாக வழங்கப்பட்டு வந்த உடனடிச் செய்தியனுப்புதல் ஆதரவு "தற்காலிகமாக கிடைக்கவில்லை" என்றும் பட்டியலிடப்பட்டிருந்தது.[50] 2008 அக்டோபர் 10 இல், ட்விட்டரின் நிகழ்நிலை வலைப்பதிவில் உடனடிச் செய்தியனுப்புதல் (IM) சேவை நெடுநாளைக்கு தற்காலிகச் செயலிழப்பில் இருக்காது, விரைவில் அது சீரமைக்கப்படும் என்று வெளியிடப்பட்டிருந்தது. ட்விட்டர் அதன் IM சேவையைத் திரும்பச் செயல்படுத்த நினைக்கிறது, ஆனால் அது சற்று பெரிய பணியாக இருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.[51]

2009 ஜூன் 12 இல், ஆற்றல் மிக்க "ட்விட்போகாலிப்ஸ்" என அழைக்கப்படும் தனித்துவ அடையாளங்காட்டி, ஒவ்வொரு ட்வீட்டுடன் இணைந்து அதன் எல்லை 32-பிட் குறியீடு இடப்பட்ட முழு எண்களுக்கு அதிகரித்தது.[52] இதனால் ட்விட்டரில் எந்த பாதிப்பும் இல்லை எனினும், சில மூன்றாம் தரப்பு கிளையண்டுகளால் சமீபத்திய ட்வீட்ஸை நீண்ட நேரம் அணுக முடியவில்லை. அதற்கான தொகுப்புகள் விரைவில் வெளியிடப்பட்டன, எனினும் சில ஐஃபோன் பயன்பாடுகளில் ஆப்பிள் ஸ்டோரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.[53] செப்டம்பர் 22 இல், அடையாளங்காட்டியின் எல்லை 32-பிட் குறியிடப்படாத முழு எண்களுக்கு மாறியது, இதனால் மீண்டும் சில மூன்றாம் தரப்பு கிளையண்டுகள் பாதிக்கப்பட்டனர்.[54]

2009 ஆகஸ்ட் 6 இல், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இரண்டும் சேவை மறுப்புத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டன, இதன் காரணமாக ட்விட்டர் வலைத்தளம் பலமணிநேரங்கள் செயல்படாமல் இருந்தது.[55] பின்னர் ஜியார்ஜியாவைச் சேர்ந்த பயனர் ஒருவர் 2008 தெற்கு ஒஸ்ஸெட்டியா போரின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இதனைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டது.[56]

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு[தொகு]

ட்விட்டர் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணக்கூடிய தகவல்களைத் தனது பயனர்களிடமிருந்து பெற்று மூன்றாம் தரப்பினரிடம் பகிர்ந்துகொள்கிறது. இந்த சேவையில் தகவல் ஒரு சொத்தாக மதிப்பிடப்படுகிறது, மேலும் அவை ஒரு வேலை நிறுவனத்தை வேறொருவருக்கு விற்க நேர்ந்தால் அதை விற்பதற்கான உரிமைக்காகவும் சேர்த்து வைக்கப்படுகிறது.[57] ட்விட்டரில் எந்த விளம்பரமும் காட்சிப்படுத்தப் படாத போதும், பயனர்கள் தங்களது ட்வீட்ஸின் வரலாறு சார்ந்து இலக்குக்குட்பட்ட பயனர்களுக்கு விளம்பரங்கள் அனுப்பமுடியும், மேலும் சிலநேரங்களில் ட்வீட்ஸில் மேற்கோள் காட்டியும் விளம்பரப்படுத்தப்படுகிறது.[58]

2007 ஏப்ரல் 7 இல் நிதேஸ் தஞ்சானி மற்றும் ரூஜித் ஆகியோரால் பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்பு விவரிக்கப்பட்டது. ட்விட்டர் குறுஞ்செய்திச் சேவை செய்தி அனுப்புபவருடைய தொலைபேசி எண்ணை உறுதிப்பாட்டுக்காக பயன்படுத்திய போதும், தீயநோக்குடைய சில பயனர்களால் மற்றவர்களுடைய நிலைமைப் பக்கத்தை SMS ஸ்பூஃபிங் முறையைப் பயன்படுத்தி மாற்ற முடிந்தது.[59] பாதிக்கப்பட்ட பயனரின் தொலைபேசி எண் ஸ்பூஃபருக்குத் தெரிந்தால் மட்டுமே இந்த வகை தாக்குதல் செய்யமுடியும். சில வாரங்களில் ட்விட்டர் இதற்கு மாற்றை கண்டறிந்து அறிமுகப்படுத்தியது, அதன்படி ஒவ்வொரு பயனரும் விருப்பமிருந்தால் SMS சார்ந்த செய்திகள் மூலம் தனிநபர் அடையாள எண்ணை (PIN) உறுதிப்படுத்திய பின்னரே அதனைப் பயன்படுத்த முடியும்.[60]

2009 ஜனவரி 5 இல், ட்விட்டர் அட்மினிஸ்ட்ரேட்டரின் கடவுச்சொல் அகராதித் தாக்குதல் மூலமாக அனுமானமாகக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 33 ஹை-புரொஃபைல் ட்விட்டர் கணக்குப் பயனர்கள் பாதிப்படைந்தனர்.[61] பாலுணர்வை வெளிப்படுத்தக்கூடிய மற்றும் போதை தொடர்பான செய்திகள் பொய்யாக அந்தக் கணக்குகளிருந்து அனுப்பப்பட்டது.[62]

ட்விட்டர் அதன் சரிபார்க்கப்பட்ட கணக்குகளின் சேவையின் பீட்டா பதிப்பை 2009 ஜூன் 11 இல் அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் பிரபலமானவர்கள் அல்லது குறிப்பிடத்தகுந்த பயனர்கள் எந்த ட்விட்டர் கணக்கு அவர்களுக்கு உரியதாக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். சரிபார்க்கப்பட்ட கணக்குகளின் முதன்மைப் பக்கத்தில் அதன் சிறப்பு நிலை முத்திரையிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும்.[63]

வரவேற்பு[தொகு]

ட்விட்டரின் வேகமான வளர்ச்சியினால் 2007 ஆம் ஆண்டில் இணையத்தில் போக்குவரத்துச் சுமை ஏற்பட்டு செயலிழப்பு நிகழ்ந்தது.[64] த வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் எழுதியது ட்விட்டர் போன்ற சமூக வலையமைப்பு சேவைகள் "இது தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளக்கூடியவர்களின் தங்கள் முதனிலை பின்பற்றுவோருடன் கலவையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு பயன்படுகிறது. தங்கள் பரபரப்பு அதிகமுள்ள நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கிறது என்று இதன் விசிறிகள் சொல்கிறார்கள். ஆனால் சில பயனர்கள் தங்கள் தனிப்பட்ட நேரத்தில் நெடுநேரம் இதனைப் பயன்படுத்திய பின்னர், அதிகப்படியான கைபேசி கட்டணங்கள் மற்றும் அவர்களது நெருங்கிய நண்பர்கள் தங்கள் உண்ட இரவு உணவு என்ன என்பதையெல்லாம் இதில் தொடர்ந்து அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கத்தொடங்கிய பின்னர் இது "கூடுதலாக" இணைப்பதாக நினைக்கத் தொடங்கியுள்ளனர்" என எழுதப்பட்டிருந்தது.[65] "இலக்கியத் தொடர்புகளுக்காக ட்விட்டரைப் பயன்படுத்துவது என்பது CB வானொலியைக் கேட்பது போன்றது மற்றும் ஒருவன் 'த இலியட்'டை மனப்பாடம் செய்து கூறுவதை கேட்பது போன்றது" என்று தொழில்நுட்ப எழுத்தாளர் ப்ரூஸ் ஸ்டெர்லிங் கூறினார்.[66] "பெரும்பாலான மக்கள் தங்கள் தொடர் நடவடிக்கைகளை ஒன்று விடாமல் விவரிப்பது மிகவும் அபத்தமான ஒன்று" என்று மேலாய்வு எழுத்தாளர் கிளைவ் தாம்ப்சன் கூறினார். "உங்களது நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஏன் உங்களது நண்பர்களிடம் விவரிக்கிறீர்கள்? மேலும் அதே நேரத்தில், அவர்கள் அனுப்பிய முதன்மையில்லாத நிகழ்வுகள் உங்களுக்கு எவ்வளவு அபத்தமாகத் தோன்றியுள்ளது? சுற்றுபுற நெருக்கத்தின் வளர்ச்சியால், நவீன தன்னை விரும்புதல் புதிய வளர்சிதை மாற்றத்தின் உச்சத்தை அடைந்ததாகக் கருதலாம், பிரபலங்களால் குழப்பமடைந்த இளம் தலைமுறை இளைஞர்களின் இறுதியான உணர்வு, தங்கள் ஒவ்வொரு நிகழ்வையும் உலகுக்குச் சொல்லுதல் மிகவும் ஈர்க்கப்படவேண்டிய விசயம் என்பதாக உள்ளது."[67] அதே நேரத்தில் ட்விட்டரில் சிக்கனமான எழுத்துக்களைக் கொண்ட செய்திகளை வெளியிடுவதற்கு முயற்சிப்பது மிகவும் சவாலான ஒன்று என்று ஸ்டீவ் டோடோ கருத்து தெரிவித்தார்.[68] "ட்விட்டரின் வெறுமைநிலை மற்றும் அரைகுறை நிலை போன்ற குணங்கள் அதனை மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒன்றாக உருவாக்கியுள்ளது" என ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் இணையச் சட்டப் பேராசிரியர் ஜொனாதன் ஜிட்ரயின் கூறினார்.[69]


ட்விட்டர் பயனாளித் தக்கவைத்திருக்கும் ஆற்றலின் விகிதம் 40% ஆக இருப்பதாக நீல்சன் ஆன்லைன் மதிப்பிட்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் ஒரு மாதங்களுக்குப் பிறகு இதனைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறார்கள், இதனால் அனைத்து இணையப் பயனர்களில் 10% பயனாளிகள் மட்டுமே ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர்.[70] 2009 இல், ட்விட்டர் "பிரேக்கவுட் ஆப் த இயர்" வெப்பி விருதை வென்றது.[71][72]

பிப்ரவரி 2009 இல் தேசிய பொது வானொலியின் வார இறுதிப் பதிப்பு விவாதத்தின் போது, ட்விட்டர் நிகழ்வுகள் கடுமையாக உண்மையைச் சோதனையிடல் மற்றும் மற்ற இதழாசிரியர்க்குரிய மேம்பாடுகள் போன்றவற்றில் பற்றாக்குறையுடன் இருப்பதாக டேனியல் ஸ்கோர் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த ஆண்டி கார்வின் ட்விட்டரில் வெளிவந்த இரண்டு முக்கிய செய்தி கதைகளை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார், மேலும் பயனர்கள் தன்னிலைக் கதைகள் மற்றும் சில நேரங்களில் பாசாங்கு அகற்றும் கதைகளை எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.[73]

2009 பிப்ரவரி 26 இல் த டெய்லி ஷோ வின் ஒரு எபிசோடில் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்ட பிரையன் வில்லியம்ஸ், ட்விட்டரில் இடம்பெற்றிருக்கும் எந்த நிகழ்வின் கருத்துக்களுமே அதனை எழுதியவரின் கருத்து மட்டும்தான என்று குறிப்பிட்டார். மேலும் வில்லியம்ஸ் ட்விட்டரை இதுவரை பயன்படுத்தியதில்லை எனவும், ட்விட்டர் வடிவத்தில் ஆர்வத்துடன் அனுப்புவதற்கு போதுமான விசயங்கள் எதும் அவருக்குத் தோன்றவில்லை என்றும் குறிப்பிட்டார்.[74]

ஆனால் இதற்கு எதிர்மறையாக, 2009 மார்ச் 2 இல் த டெய்லி ஷோ வின் மற்றொரு எபிசோடில்ஜான் ஸ்டீவர்ட், அதிபர் ஓபாமாவின் உரையின் போது (2009 பிப்ரவரி 24 இல்) "ட்விட்டர்" பயன்படுத்தும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒபாமா பேசியதை கவனிப்பதைவிட ட்விட்டரிலேயே கவனமாக இருந்தார்கள் எனக் குறிப்பிட்டார். "இளவயதினர் இதை விரும்புவதில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஆனால் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இளவயதினர் நடுத்தர வயதினரே" என்று நிகழ்ச்சியின் சமந்தா பீ நிகழ்ச்சியில் நையாண்டி செய்திருந்தார்.[75]

2009 மார்ச்சில், டூனெஸ்பரி நகைச்சுவைப் படக்கதை ட்விட்டரை நையாண்டி செய்யத் தொடங்கியது. பெரும்பாலான பாத்திரங்கள் ட்விட்டரை அற்பமாக வெளிப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருந்தது, எனினும் ஒரு ஆதரிக்கும் பாத்திரம் மூலம் அதன் நிலையான புதுப்பிக்கப்படும் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தனர்.[76] சூப்பர்நியூஸ்! நிகழ்ச்சியிலும் இதேபோல் ட்விட்டர் "நிலையான சுய-விருப்பத்துக்கு" அடிமைப்படுத்துகிறது என கிண்டலடித்திருந்தது, மேலும் ட்வீட்ஸ் அனுப்புவது "யாரேனும் ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்ற நினைப்பில் இருட்டில் கத்துவதற்கு சமமானது" என்றும் கூறியிருந்தது.[77]

No comments:

Post a Comment