Sunday 2 February 2020

QUEEN VICTORIA BORN MAY 24,1819 - JANUARY 22, 1901




QUEEN VICTORIA BORN MAY 24,1819 - 
JANUARY 22, 1901






விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா, Alexandrina Victoria, மே 24, 1819 – சனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837 ஆம் ஆண்டு சூன் 20 ஆம் நாள் முதலும், பிரித்தானிய இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை பிரித்தானியாவை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விடக் கூடியது ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற் புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது[1].

இவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, "ஐரோப்பாவின் பாட்டி" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.

ஆட்சி

63 ஆண்டுகள், ஏழு மாதங்கள் இரண்டு நாட்களுக்கு விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் காலனிகளையும் ஆண்டார். உலகில் மிக அதிக நாள் ராணியாக இருந்த வரலாற்றையும் இவர் படைத்துள்ளார்.மகாராணி எலிசபெத் தற்போது அச்சாதனையை முறியடித்துள்ளார்

இறப்பு

விக்டோரியா மகாராணி 22 ஜனவரி 1901 அன்று தனது எண்பத்து ஒன்றாவது அகவையில் ஓஸ்பர்ன் இல்லத்தில் இறந்து[2] பிப்ரவரி 2, 1901 அன்று அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது[3].




விக்டோரியா மகாராணியின் ரகசிய உறவு, சினிமாவாகிறது..!


இங்கிலாந்தின் முன்னாள் மகாராணி விக்டோரியா மற்றும் அவரது இந்திய பணியாளர் அப்துல் கரீம் ஆகியோருக்கிடையிலான உறவு குறித்த சம்பவங்களை ஸ்டீபன் ஃபிரியர்ஸ் என்பவர் திரைப்படமாக இயக்கியுள்ளார்.



1837ம் ஆண்டு முதல் 1876வரை விக்டோரியா இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் மகாராணியாக இருந்தார். அறிவுக்கூர்மையும், தைரியமும் நிறைந்த பெண்ணாக சிறப்பான ஆட்சியை தந்தவர்.



விக்டோரியா மகாராணிக்கும், இந்தியாவை சேர்ந்த பணியாளர் அப்துல் கரீமுக்கும் இடையிலான உறவு குறித்து திரைப்படம் வர உள்ளது. செப்டம்பர் மாதம் 22ம் தேதி வெளிவர உள்ள இந்த படத்தின் பெயர் ‘விக்டோரியா அண்ட் அப்துல்’
விக்டோரியா மகாராணியின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை ஸ்ராபாணி பாசு என்பவர் எழுதியுள்ளார்.



மகாராணியின் டைரியில் அனைத்து உண்மைகளும் எழுதப்பட்டிருந்தாலும் அவைகள் வெளி உலகத்திற்கு மறைக்கப்பட்டுள்ளன.மகாராணிக்கும்,அப்துல் கரீமுக்குமான உறவும் மறைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவை சேர்ந்த கரீம் அறிவு கூர்மை உள்ளவர் என்பதால் அவரை மகாராணி தனது ஆசிரியராக நியமித்துக்கொண்டுள்ளார். மேலும், நல்ல உயரமான ஆண்கள் தன் அருகில் இருப்பதை விக்டோரியா மகாராணி மிகவும் விரும்புவார்.



மேலும் அப்துல் கரீம் எப்போதும் மகாராணியுடனேயே இருப்பார். மகாராணி எழுதிய கடிதங்களில் கூட அன்பு முத்தங்கள், தாய் மற்றும் உன் அன்பு தோழி என்றெல்லாம் விளித்திருப்பார்.



இவர்களுக்கிடையேயான உறவு குறித்து விக்டோரியாவின் மூத்த மகன் எட்வர்ட் (Edward-vii) அதிகம் கவலைப்பட்டுள்ளார். அதனாலேயே டைரியில் இருந்த உண்மைகளை மறைத்துவிட்டார்.



தற்போது அவர்களுக்கிடையேயான உறவு குறித்த திரைப்படம் செப்.22ம் தேதி வெளிவருகிறது.

No comments:

Post a Comment