Thursday 28 January 2021

SHRUTI HASSAN ,ACTRESS SINGER BORN 1986 JANUARY 28

    


SHRUTI HASSAN ,ACTRESS SINGER 

BORN 1986 JANUARY 28



சுருதிஹாசன் (Shruti Haasan, பிறப்பு: சனவரி 28, 1986) பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.[1]

இளமைப்பருவம்

சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார்.[3] பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.[4]

கலைத்துறை

பாடகர்


சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும்[5], ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.

Shruti Haasan TeachAIDS Recording Session.jpg

நடிப்பு

இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது.[6] 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.

இசையமைப்பு

2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.[


நடிகையும் கமல்ஹாசன் மகளுமான சுருதிஹாசனும் லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்கிறார்கள்.


சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுருதிஹாசன், ‘’என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது’’ என்று தெரிவித்தார்.



இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியாக தொடங்கின. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றினை மட்டுமே தொகுத்து வருகிறார் சுருதிஹாசன்.

 நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் பாடல் என அனைத்து திறமையும் கொண்டவர்.



 

மேலும் இவர் உலகநாயகன் கமலஹாசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் 3, உன்னை போல் ஒருவன்,  ஏழாம் அறிவு, புலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இவர் இடையில் சில காலம் தனது காதலருடன் டைம் ஸ்பென்ட் பன்னி  ஊர்சுத்தி கொண்டிருந்தார் பின் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்  என எதிர்பார்த்த நிலையில் அவர்களுடைய காதல் இடையிலேயே பிரிந்தது.



 

அதனைதொடர்ந்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் நடிகை ஸ்ருதிஹாசனும் ஒருவர். அந்த வகையில் தற்போது இவரின் பள்ளி பருவத்தில்  நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.


சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகை சுருதிஹாசன், தனது வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.நடிகர் கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான சுருதிஹாசன் தற்போது தமிழில் அஜீத்துடன் தல 56, விஜயுடன் புலி, தெலுங்கில் மகேஷ்பாபு வுடன் ஸ்ரீமந்துடு, இந்தியில் அணில் கபூருடன் வெல்கம் பேக், யாரா, ராக்கி ஹேண்ட்சம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.மூன்று மொழிகளிலும் இவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க தற்போது சுருதியின் காட்டில் தான் அடைமழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் திருமணம்செய்து கொள்ளும் எண்ணமே இல்லை அதிரடியாக மனந்திறந்து கூறியிருக்கிறார்.சுருதியின் பதிலில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை, ஏனெனில் அவரின் பெற்றோர்கள் பிரிவை சிறுவயதில் பார்த்ததால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். பணம், புகழ் எல்லாம் இருந்தும் கூட பெற்றோர்கள் பிரிந்ததுதான் சுருதி திருமண வாழ்வில் இந்த முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது போலும்.


சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:–

பதிவு: ஆகஸ்ட் 26,  2018 04:15 AM

‘‘நான் சினிமாவில் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்தவை. இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவே இருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கேரக்டர்களிலும், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன்.

மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் ‘ஸ்ப்ரிச்சுவல்’ சக்தி ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஆனால் அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதில் இல்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன்.


சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்கவேண்டிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள்தான். தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் இந்தி படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும்.


நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டதையும், அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் எண்ணி பெருமை அடைகிறேன்’’


இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

No comments:

Post a Comment