NAKARAJAN

Wednesday, 31 July 2019

MUMTAJ HINDI ACTRESS BIOGRAPHY




MUMTAJ HINDI ACTRESS BIOGRAPHY



மும்தாஜ் மத்வாணி (Mumtaz Madhvani), 1947 ஜூலை 31 இல் பிறந்த[1]) இந்திய நடிகையாவார். 1971இல் வெளிவந்த "கிலோனா" என்ற திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர் புகழ் பெற்ற நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் பெரும்பாலான படங்களில் பணிபுரிந்துள்ளார். 60 மற்றும் 70 களின் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் அழகு ராணியாக நினைவுப்படுத்தப்படுகிறார்

ஆரம்ப வாழ்க்கை

ஈரானில் புகழ் பெற்ற உலர் பழங்கள் விற்பனையாளரான அப்துல் சலீம் அஸ்காரி மற்றும் ஷாதி ஹபீப் ஆகா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவர் பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர்.[2][3][4] இவரது இளைய சகோதரி நடிகை மல்லிகா , மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான ரந்தாவா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான தாரா சிங்கின் இளைய சகோதரர் ஆவார்.[5]

தொழில்

மும்தாஜ் -2010


மும்தாஜ் "சோனெ கி சித்தியா" (1958) என்ற படதின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். பின் " வல்லா கியா பாட் ஹை" , "ஸ்ட்ரீ" (1961) மற்றும் "செஹ்ரா" போன்ற படங்களில் 60 களின் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் ஓ. பி. ரத்தன் இயக்கத்தில் வெளிவந்த "கெஹ்ரா தாக்" என்ற திரைப்படத்தில் நாயகனுக்கு தங்கை வேடத்தில் தோன்றினார்.[6] "முஜே ஜீனே தோ" படத்தில் சிறு வேடம், பின்னர், "ஃபாலத்" , "வீர் பீம்சேன்" , "டார்சான் கம் டு டெல்லி" "சிக்கந்தர் - இ - ஆசாம்" , "ரஸ்டம்- இ - ஹிந்த்" , "ராக்கா" மற்றும் "த்க்கு மங்கள் சிங்" ( தாரா சிங்குடன்), போன்ற பல படங்களில் அதிரடி காட்டும் நாயகியாக வலம் வர ஆரம்பித்தார் தாரா சிங் மற்றும் மும்தாஜ் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த படங்களில், தாராசிங்கின் நடிப்பிற்காக 4.50 லட்சமும், மும்தாஜ் சம்பளம் 2,50,000 ரூபாய் ஆகும்.[7]


ராஜேஷ் கன்னா இணையாக ராஜ் கோஸ்லாவின் தோ ராஸ்தே" (1969) படத்தில் இறுதியாக மும்தாஜ் ஒரு முழு நீள நட்சத்திரமாக நடித்தார். மும்தாஜ் இதில் ஒரு சிறிய பாத்திரத்தை கொண்டிருந்தாலும், இயக்குனர் கோஸ்லா அவருக்காக நான்கு பாடல்களை படமாக்கியுள்ளார்.[8] இந்த படம் பிரபலமானதாக அமைந்தது, மேலும் அவர் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தபோதிலும், தனக்கு பிடித்த படங்களில் ஒன்றாகும் என்று ஒப்புக் கொண்டார்.[6] 1969 ஆம் ஆண்டில், ராஜேஷ் கன்னாவுடன், அவரது திரைப்படங்கள் "தோ ராஸ்ட்" மற்றும் "பந்தன்" , அந்த ஆண்டில் சிறந்த வருவாய் ஈட்டியது, இது 65 மில்லியனுக்கும் மேல் சம்பாதித்தது.[9] அவர் "தங்கேவாலா" என்ற படத்தில் ராஜேந்திர குமாருடன் கதாநாயகியாக முன்னணி பாத்திரத்தில் நடித்தார், அவர் அதிரடி-திரைப்பட கதாநாயகியாக" இருந்ததனால் "சாச்சா ஜோதி" படத்தில் சசி கபூருடன் நடிக்க மறுத்துவிட்டார், அவர் கதாநாயகியாக இருக்க விரும்பினார். "ஷோர் மச்சையா சோர்" (1973), லோஃபர் மற்றும் ஜீல் கே உஸ் பார்" (1973) போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக தர்மந்த்ராவுடன் நடித்தார்.


1970 களில் அவரது விருப்பமான திரைப்படங்களில் ஒன்றான "கிலொனா" திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகை விருதினை வென்றார், மேலும் "பார்வையாளர்கள் தன்னை உணர்ச்சிகரமானப் பாத்திரத்தில் ஏற்றுக்கொண்டனர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி" என்றார்.[6] மும்தாஜ் பெரோஸ் கானுடன் தொடர்ந்து மேலா" (1971), அப்ராத் (1972) மற்றும் நாகின் (1976) போன்ற வெற்றிப்பட்ங்களை தந்தார். [[ராஜேஷ் கன்னா |ராஜேஷ் கன்னாவுடன்]] இணைந்து 10க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தந்துள்ளார்.[10]



அவரது குடும்பத்தினர் மீது கவனம் செலுத்துவதற்காக "ஆய்னா" (1977) படத்திற்குப் பிறகு அவர் திரைப்படங்களிலிருந்து விலகினார். 1990 களில் அவர் தனது இறுதி படமான "ஆந்தியான்" படத்திற்காக 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஷாமி கபூர் இவரை நேசித்து திருமணம் செய்ய விரும்பினார். . மேலும் கபூர் மும்தாஜ் திருமணத்திற்குப் பிறகு நடிக்க விரும்பவில்லை. தாரா சிங் இவருக்கு "அதிரடி இளவரசி' பெயரைக் கொடுத்தார், மேலும் பி-தர திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். ராஜேஷ் கன்னாவும், இவருடன் பல திரைப்படங்களில் நடித்தார். தர்மேந்தரும் இவருடன் காதலில் விழுந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின.[11][12]

தனிப்பட்ட வாழ்க்கை
1974 ஆம் ஆண்டில் மும்தாஜ் தொழிலதிபர் மயூர் மத்வானியை மணந்தார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் நதாஷா, 2006 இல் நடிகர் ஃபெரோஸ் கானை மணந்தா
Posted by NAKARAJAN at 19:32 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: ACTRESS, BIOGRAPHY, hindi, MUMTAJ

Saturday, 27 July 2019

KARUNANIDHI ,A LEGEND OF TAMIL CINEMA




KARUNANIDHI ,A LEGEND OF TAMIL CINEMA



எட்வர்டு மைபிரிட்ஸ் 1830-ல் அசைவுகளைப் படமாக்கினார். அதன் தொடர்ச்சியாகப் படச் சுருளை உருவாக்கினார் ஈஸ்ட்மென். படக் கருவியை உண்டாக்கினார் தாமஸ் ஆல்வா எடிசன். இப்படி மூவர் கூடிப் பெற்ற குழந்தையாய் சினிமா பிறந்தபோது உலகம் அறிந்திருக்காது, அத்தனை கலைகளையும் உள்ளிழுக்கப்போகும் ஆக்டோபஸ் கலை அதுவென்று. 1897-ல் சென்னை விக்டோரியா ஹாலில், தமிழர்கள் அதுவரை காணாத ஒரு கருவியினால் ‘அரைவல் ஆஃப் தி டிரெயின்’ (Arrival of the Train) படத்தை எட்வர்ட்ஸ் அறிமுகப்படுத்தியபோது, திகைப்பில் ஆழ்ந்த தமிழர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், அந்தக் கருவிக்குள் கருவாகித்தான் ஐந்து முதலமைச்சர்கள் தமிழகத்தை ஆளப்போகிறார்கள் என்று.

மெளன யுகம் முடிந்து பேசும் படம் பிறந்தபோது தமிழ் சினிமா பாடும் படமாகவே இருந்தது. தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931-ல் வெளிவந்தபோது அதில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 1934-ல் வெளிவந்த ‘பவளக்கொடி’யிலும் 50 பாடல்கள். ‘சீதா கல்யாணம்’ படத்தில் பாடல்களின் எண்ணிக்கை 22. 1936-ல் வெளிவந்த ‘நவீன சாரங்கதாரா’வில் 41. 1944-ல் ‘ஹரிதாஸ்’ 20 பாடல்களோடு வெளியானது. நடிகர்களே பாடகர்களாகவும் பாடகர்களே நடிகர்களாகவும் இயங்கிவந்த மேடை நாடகங்கள் திரைப்படத் தேரேறியபோதும் பாடல்கள் என்ற பண்ட மூட்டைகளை விட்டெறியவோ குறைத்துக்கொள்ளவோ முடியவில்லை. பாடல்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கொண்டே சமைக்கப்பட்டன. வெண்பொங்கலில் காணக் கிடைக்கும் மிளகுபோல சம்ஸ்கிருதத்துக்கு மத்தியில் தமிழ்ச் சொற்களும் ஆங்காங்கே தட்டுப்பட்டன. ‘வதனமே சந்த்ர பிம்பமோ - வசந்த ருது மன மோஹனமே - என் ஜீவப்ரியே ஷியாமளே - சாரசம் வசீகர கண்கள்’ என்றெல்லாம் இசைத்தன. வசனங்களிலோ பிராமண மொழியும் மணிப்பிரவாளமும் பின்னிப் பின்னிக் கொஞ்சிக் குலாவின.


எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கி 1940-ல் வெளிவந்த ‘சகுந்தலை’ படத்தில் அரசன் துஷ்யந்தனும் தோழனும் பேசிக்கொள்கிறார்கள்:

துஷ்யந்தன்: “ஒருபக்கம் ரிஷிகள் ஆக்ஞை; இன்னொரு பக்கம் தாயாரின் ஆக்ஞை. இரண்டும் முக்கியமான விஷயம். நேக்கு என்ன பண்றதுன்னுதெரியல...”

தோழன்: “நேக்கு ஒண்ணு தோண்றது. ஆஸ்ரமத்துக்கும் அரண்மனைக்கும் நடுவுல உக்காந்திருங்கோ” - இப்படி சத்திரிய மொழியும் பிராமண மொழியாகவே பேசப்பட்டது. உள்ளடக்கமெல்லாம் இதிகாசம் - புராணம். பேசும் மொழியெல்லாம் பெரும்பாலும் மணிப்பிரவாளம். இந்த நடையை உடைத்து, ஒரு மாற்றுமொழிக்குத் தோற்றுவாய் செய்தவர் இளங்கோவன் என்கிற செங்கல்பட்டு தணிகாசலம்.

1937-ல் வெளிவந்த ‘அம்பிகாபதி’, 1942-ல் வெளிவந்த ‘கண்ணகி’ இரண்டும் திரைத் தமிழை இளங்கோவன் நடைமாற்றம் செய்ததற்கான சாகாத சான்றுகளாகும். ஆனால், இளங்கோவனை விட, டி.வி.சாரியை விட, ‘கவியின் கனவு’ எழுதிய எஸ்.டி.சுந்தரத்தை விட, 1945-ல் வசனம் எழுதவந்த பாரதிதாசனை விட, ‘அமரகவி’க்கு வசனம் எழுதிய சுரதாவை விட, ‘வால்மீகி’க்கு வசனம் எழுதிய ஏ.எஸ்.ஏ.சாமியை விட அண்ணாவும் கருணாநிதியும் திரைத் தமிழில் எட்டாத உயரத்தை எட்டினார்களே!

ஏது காரணம்?

நடைமாற்றம் செய்தவர் இளங்கோவன். சமூகத்தையே மடைமாற்றம் செய்தவர்கள் அண்ணாவும் கருணாநிதியும்.

திரைத் துறையில் பழைய உள்ளடக்கங்களோடு பயணப்படுவது என்பது பிணத்துக்கு ரத்த தானம் செய்வது என்று புரிந்துகொண்டவர்கள், நிகழ்காலத்தின் மீது நெருப்பிட்டார்கள். பகுத்தறிவு மாட்சிக்கு, மூடநம்பிக்கை வீழ்ச்சிக்கு, இனமொழி மீட்சிக்கு, சுயமரியாதையின் ஆட்சிக்கு அவர்கள் திரைக் கலையைப் பயன்படுத்தியபோது ஒரு கற்பூர மலையில் தீப்பந்தம் எறிந்ததுபோல் நாடே பற்றி எரிந்தது.

அண்ணாவை விடப் பதினைந்து வயது இளையவர் கருணாநிதி எனினும், திரைத் துறையில் அண்ணாவை விடவும் அவர் இரண்டு வயது மூத்தவர். அண்ணாவின் முதல் படம் ‘நல்லதம்பி’ வெளிவந்தது 1949 பிப்ரவரி 4. அடுத்த மூன்று வாரங்களில் - பிப்ரவரி 25-ல் - ‘வேலைக்காரி’ வெளியானது. ஆனால், எம்.ஜி. ராமச்சந்தர் கதாநாயகன் என்றும், உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்றும் எழுத்துகளைச் சுமந்த ‘ராஜகுமாரி’ அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்துவிட்டது. கருணாநிதியின் பெயர் இடம்பெறாமலே வெளியான ‘அபிமன்யு’வில் இடம்பெற்ற ‘உடைந்த வாளேனும் ஒரு வாள் கொடுங்கள்’ என்ற நட்சத்திர வாக்கியமே “யாரய்யா இதை எழுதியது?” என்ற பேச்சை உருவாக்கிவிட்டிருந்தது.

திராவிடர் கழகம் உருவான 1944-க்கும் திமுக உருவான 1949-க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் திரைத் துறையில் தன் அழுத்தமான சுவடுகளைப் பதிக்கத் தொடங்கிவிடுகிறார் கருணாநிதி. முதல் படத்துக்கு வசனம் தீட்டும்போது அவரது வயது 23. பயமறியாத வயது; தமிழின் நயமறிந்த மனது. திராவிடர் கழகம் அவர் கைகளில் ஒரு தீப்பிடித்த பேனாவைத் திணிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏறுமுகம் அந்தத் தீயின் மீது நெய் மழை பெய்கிறது. எரிகிறது; பற்றி எரிகிறது. மடமை எரிகிறது; மூடநம்பிக்கை எரிகிறது; வருணாசிரமம் எரிகிறது; சூழ்ச்சி எரிகிறது; ஆட்சி எரிகிறது; யுகக் குப்பை எரிகிறது; ஒடுக்கப்பட்டவர் மீது ஆண்டாண்டு காலம் செலுத்தப்பட்ட ஆதிக்கம் எரிகிறது; இடதுசாரிச் சிந்தனைகளால் அநியாயத்தின் அடிப்படை எரிகிறது. வற்றிக் கிடந்த வாழைத்தண்டு மனங்களிலும் லட்சியம் எரிகிறது.

அவர் எழுதிய சரித்திரப் படங்களிலும் சமூகமே பேசப்பட்டது. 1950-ல் அவர் வசனம் எழுதிய ‘மருதநாட்டு இளவரசி’யில் பலிபீடத்தின் முன்னே கடைசி வசனம் பேசுகிறார் காண்டீபனாகிய எம்.ஜி.ராமச்சந்தர்: “நீதியின் நிலைக்களமாய், நேர்மையின் உலைக்களமாய் வாழ்ந்த வண்டமிழ் வளநாடே!

நீ, சூதர்களின் உறைவிடமாய், சூழ்ச்சியின் இருப்பிடமாய் ஆனது ஏன்? இந்த மண்ணிலேதான் பிறந்தேன்! இந்த மண்ணிலேதான் மழலை மொழி பேசித் தவழ்ந்து விளையாடினேன்! இந்த மண்ணிலேதான் சவமாகச் சாயப்போகிறேன். வந்தாரை வாழ வைக்கும் இந்த மண்ணில் சொந்த நாட்டுக்காரன் அநியாயமாகச் சாவதா? குற்றமற்றவன் சாவதா?”

இறந்த காலத்தில் பேசப்பட்ட இந்த வசனம், நிகழ் காலத்தின் நெற்றி சுட்டது. “சிங்கத் திருநாடே நீ சிலந்திக் கூடாக மாறியது எப்போது? வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாட்களாக?” என்று ‘பராசக்தி’யில் அறிமுகமான கணேசனின் காந்தக் குரலில் அக்கால அரசியல் நிர்வாணமாய் நிறுத்தப்பட்டுத் தோலுரிக்கப்பட்டது.

முன்னோடிகளின் உரையாடலுக்கும் கருணாநிதியின் உரையாடலுக்கும் என்ன வேறுபாடு என்று எண்ணிக் கிடந்தேன். ஏனையோர் எழுத்துகளெல்லாம் திரையோடு தேய்ந்தழிகின்றது; கருணாநிதியின் உரையாடலோ திரையைக் கிழித்தெறிந்து தெருவுக்கு வந்து விழுகிறது. அவர் மேடையின் உரையாடலும் திரையின் கலையாடலும் ஒன்றுக்கொன்று உறவு கொண்டிருந்ததால், கலை வேறு.. கட்சி வேறு என்றாகாதபடி இரண்டையும் ஒன்றென்று கொண்டான் கழகத்தின் இளந்தொண்டன்.

கதை வசனகர்த்தாவுக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார் கருணாநிதி. அவரது திரை மதிப்பு உயர்ந்தது. ‘மருதநாட்டு இளவரசி’ வசனப் புத்தகத்தின் விலை 3 அணா. ‘மந்திரி குமாரி’ 4 அணா. ‘பராசக்தி’ வசனப் புத்தகத்தின் விலை 1 ரூபா என்பதே அவரது சந்தை மதிப்புக்கான சாட்சியாகும். பாடல்களை இசைத் தட்டுக்களாய்க் கேட்ட தமிழர்கள், வசனத்தை இசைத் தட்டுகளில் கேட்கும் புதிய கலாசாரத்தைத் தொடங்கிவைத்தவர் கருணாநிதி. “கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்.. கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக’, ‘பூசாரியைத் தாக்கினேன்.. அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகிவிட்டதைக் கண்டிப்பதற்காக” என்று தீப்பிடித்த வார்த்தைகளும்... “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்? அறிவு கெட்டவனே” என்ற அமில வாக்கியமும், “இட்லி சுட்டு விற்பதுதானே தமிழ்நாட்டிலே தாலி அறுந்தவர்களுக்கெல்லாம் தாசில் உத்தியோகம்” என்ற கண்ணீர் கொப்பளிக்கும் சொல்லாடல்களும் நீதிமொழிகள் பேசப்பட்ட தமிழ்நாட்டில் வீதிமொழிகளாய்ப் பேசப்பட்டன.

படத்துக்கு எழுதிய வசனம் பழமொழியாயிற்று. “பராசக்தி வசனத்துக்கு உங்களுக்கு வந்த உயர்ந்தபட்சப் பாராட்டு எது?” என்று கேட்டேன் கருணாநிதியிடம்.

“பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்த்த கண்ணதாசன் சொன்னது” என்றார்.

“என்னது?” என்றேன்.

“போய்யா! ஒம்மப் பாத்தா ரொம்பப் பொறாமையா இருக்கு.”

இங்கே பொறாமைக்குப் பொருள் பொறாமை அன்று!

கருணாநிதிக்குள் மிக அழகான ஒரு கவிஞரும் உண்டு. 1950-ல் தமது 26-வது வயதில் ‘மந்திரி குமாரி’யில் அவர் எழுதிய ஒரு காதல் உரையாடல் இது.

ஜீவரேகா: நேற்றிரவு நீங்கள் வராததால் என்னால் பெளர்ணமியின் அழகையே ரசிக்க முடியவி்ல்லை...

வீரமோகன்: எதற்கெடுத்தாலும் நிலவுதான். ஏன்? அமாவாசை அழகாயில்லை?

ஜீவரேகா: நீங்கள் இருட்டைக்கூட ரசிப்பீர்களா? (இங்கே வினைப்படுகிறது கலைஞரின் கவிதைக் குறும்பு).

வீரமோகன்: ஆம்! சித்திரத்தை அழகுபடுத்தும் நிழல்கோடுபோல, உன் கண்ணின் கடைக்கூட்டில், கனி இதழின் ஓரத்தில், கன்னத்துச் சரிவுகளில் ஒளிந்துகொண்டிருக்கும் இருளை நான் ரசிக்கிறேன் ஜீவா...

கவிதைகளைப் புறமுதுகிடச் செய்யும் வசனமல்லவா இது!

கருணாநிதியிடம் உள்ள தீர்க்க சிந்தனை என்னை எப்போதும் வியக்கச் செய்கிறது. 1950-களில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 3.1 கோடி. அதில் கற்றவர்களின் விகிதாசாரம் 20.8%. பாரதி காலத்தில் பாமரராய், விலங்குகளாய்க் கிடந்தவர்கள் - கருணாநிதி காலத்தில் பொட்டுப்பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் இருந்தார்கள் என்று சொல்லலாம். இந்தக் கூட்டத்துக்கு இலக்கணத்தின் அருந்தமிழும் இலக்கியத்தின் பெரும்பொருளும் புரியுமா என்றெல்லாம் கருதாமல், புரிந்துகொள்வார்கள் அல்லது புரிந்துகொள்ளட்டும் என்று அவர் எடுத்த இலக்கிய முடிவு அற்புதமானது!

“எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ்நாட்டு முத்துக்களைச் சாராயத்தில் போட்டுக் குடித்தாளாம்” - இது ‘பராசக்தி’.

“மிருக ஜாதியில் புலி மானைக் கொல்லுகிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்லுகிறது” - இது ‘மருதநாட்டு இளவரசி’.

“வேலின் கூர்மையைச் சோதித்த விரல்கள் வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கின்றன!” - இது ‘மனோகரா’.

“மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” - இது ‘பூம்புகார்’.

“அவள் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசன்கூட கம்பனிடம் ஒன்றிரண்டு கடன் வாங்க வேண்டும்” - இது ‘புதுமைப்பித்தன்’.

இப்படி கொட்டகைக்குள் கருணாநிதி கொட்டிய கோமேதகங்கள் பலப் பல!

என் பார்வையில் திரைத் துறையில் கருணாநிதியின் தீராத சாதனை இதுதான். தமிழர் இருந்த பள்ளத்துக்குத் தமிழைத் தாழ்த்தாமல், தமிழ் இருந்த உயரத்துக்குத் தமிழரை உயர்த்தியது.

ஒரு குறிப்பிட்ட கால எல்லை வரை கலைத் துறை என்பது கழகத்தை வளர்க்கும் அரசியல் மேடையாகப் பயன்படுத்தப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசன் தான் எழுதிய ஒரு பாடலில் கழகத்தின் முன்னணி ஏடுகளைப் பட்டியலிட்டார். திராவிட இயக்கத்துக்கென்று 375 ஏடுகள் தோன்றி வளர்ந்ததாக ஒரு இதழியல் குறிப்பு சொல்கிறது.

அண்ணாவின் ‘திராவிட நாடு’, ‘நம்நாடு’, நெடுஞ்செழியனின் ‘மன்றம்’, கருணாநிதியின் ‘முரசொலி’, கண்ணதாசனின் ‘தென்றல்’ போன்றவை திராவிட இயக்கங்களின் லட்சியம் பரப்பிய இதழ்களில் சில. இந்த ஏடுகளையெல்லாம் தன் பாடலில் ஒரு சரணத்தில் நுழைத்தார் கண்ணதாசன்.

“மன்றம் மலரும் முரசொலி கேட்கும்

வளர்ந்திடும் நம்நாடு - இளம்

தென்றல் தவழும் தீந்தமிழ் கேட்கும்

திராவிடத் திருநாடு!”

ஆனால், ‘சேரன் செங்குட்டுவன்’ ஓரங்க நாடக வசனத்தில் கலைஞர் செய்த தொண்டு இயக்கத் தலைவர்களுக்கே கிரீடம் சூட்டியது. அண்ணா, நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, பி.எஸ்.இளங்கோ, கண்ணதாசன், என்.எஸ்.கிருஷ்ணன், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை முதன்முதலில் அறிஞர் அண்ணா எழுதுவதற்குத் தன் தாளைத் தந்தவர் என்று கருதப்படுகிற அரங்கண்ணல், இத்தனை தலைவர்களையும் ஒரே பத்தி வசனத்தில் உள்ளடக்கிய சாகசத்தை கருணாநிதியின் தமிழ் நிகழ்த்தியது:

“சிங்கத் திருவிடமே உன்னை இகழ்ந்தார்கள், ஈடற்ற புலவனே இளங்கோ! ஆசைத்தம்பி! உன்னை இகழ்ந்தார்கள், நீதிக்கு உயிர்தந்த பாண்டியனே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள், அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள், செந்தமிழ் வளங்குறையாச் சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைவாணரே! உம்மையெல்லாம் இகழ்ந்தார்கள். புறப்படுங்கள்! களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம். ஆனால், கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும்!”

கருணாநிதியின் கலையும் - அரசியலும் இருப்புப் பாதையின் இணைகோடுகளாய் இயங்கின. படங்களில் நீதிமன்றக் காட்சிகளை நிறையப் புகுத்தினார். அவை வெறும் நீதிமன்றங்கள் அல்ல. தயாரிப்பாளர் செலவில் கருணாநிதி தனக்கு அமைத்துக்கொண்ட சொற்பொழிவு மேடைகள். அந்தப் பாத்திரங்களின் பின்புலத்தில், தோள்களில் துண்டை உரசிப் பேசும் கருணாநிதியையே தமிழ்ச் சமூகம் கண்டு மகிழ்ந்தது. சுதந்திர இந்தியாவில் ஓர் ஊராட்சி ஒன்றியமாய் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு, நிதியிலும் நீதியிலும் புறக்கணிக்கப்பட்டு வந்ததால் ‘வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கத்தை அண்ணா முன்வைத்தார். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், தமிழகத்தில் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதாய்ப் பேச்சு. ஆனால், சற்றொப்ப 2லட்சம் பேருக்கு மட்டுமே வாய்ப்புக் கிட்டியது. காரணம் விதி அல்ல; நிதி. அன்று தமிழகம் கேட்டது ரூ. 394 கோடி. டெல்லி ஒதுக்கியதோ ரூ. 200 கோடி. அதில் தொழில் துறைக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ.42 கோடி. தெற்கு தேயுமா தேயாதா?

இந்தப் பேதங்கள் எல்லாம் நீங்க, ஆளும் உரிமையை நாமே பெற வேண்டும் என்றுதான் திராவிட நாடு என்ற கருத்துருவம் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டுதான் காஞ்சித் தலைவனில் கலைஞர் பாட்டெழுதுகிறார்:

“மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள் / மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்”

‘பராசக்தி’ படத்தில் பிச்சைக்காரர்களுக்குப் பரிந்தெழுதிய அதே பேனாவில் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்துக்குக் கையொப்பமிட்ட உரிமை கருணாநிதி என்ற படைப்பாளிக்கும் போராளிக்கும் கிடைத்த வரலாற்றுப் பெருமையாகும். கல்வியிலும் - பொருளாதாரத்திலும் தமிழர்கள் தலையெடுப்பதற்கு முன்பு மானமுள்ள சமுதாயமாய் வாழ வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கங்களின் உயிர்த் துடிப்பாக இருந்தது. அதற்காகத்தான் பகுத்தறிவு என்ற தத்துவம் தலையெடுத்தது.

ஊரறியாத ஓர் உண்மையைச் சொல்லி இந்தக் கட்டுரையின் கண் சாத்துகிறேன். முதுமையிலும் கலைஞரைப் பேணி வரும் அவரின் அணுக்கத் தொண்டர் நித்யானந்தம் என்னும் நித்யா ஓர் ஆத்திகர். கலைஞர் நலமுற வேண்டுமென்ற நல்லாசையிலும் அவருக்கிருந்த நம்பிக்கையிலும் அழுது தொழுது கலைஞர் நெற்றியில் திருநீறு பூசியிருக்கிறார். சற்று நேரத்தில் திரும்பிப் பார்த்தால் - நெற்றியிருக்கிறது; நீறு இல்லை. துடைக்கப்பட்ட திருநீறு கலைஞரின் கரத்தில் இருக்கிறது. பழுத்த முதுமையிலும் நினைவுகள் சற்றே நழுவும் கணங்களிலும் தான் பெரியார் வழிவந்த மானமிகு தொண்டன் என்பதை மறக்காத அந்தக் கலைஞரைத் தமிழ்நாடு மறக்காது; தலைமுறை மறக்காது!
Posted by NAKARAJAN at 05:49 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: A LEGEND, karunanidhi, TAMIL CINEMA

Thursday, 25 July 2019





நினைக்க தெரிந்த மனமே -உனக்கு 
மறக்க தெரியாதா 

பழக தெரிந்த உயிரே உனக்கு 
விலக தெரியாதா 
-
இறந்து போன தன்
இணையின் இரங்கற்பா
Posted by NAKARAJAN at 19:06 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மெக்காலே குறிப்புகள்( MACAULAY'S MINUTES)




மெக்காலே குறிப்புகள்( MACAULAY'S MINUTES)

ஒரு மனிதனுடைய வாழ்வில் இன்றியமையாத தேவைகளில் கல்வியும் ஒன்றாகிவிட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வியில் தலைசிறந்து விளங்கி உலகுக்கே அறிவு ஒளி காட்டிய தேசம் இந்தியா. நாளந்தா, தட்சசீலம் போன்ற பல்கலைக்கழகங்களில் லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் தங்கி தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொண்டு சென்றதற்கு ஆதாரமாக வரலாறே விளங்குகிறது. அத்தகைய புகழ்மிக்க இந்திய தேசத்தின் நவீன கால கல்வித் துறை கடந்து வந்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை பயன்படும்.

குருகுலக் கல்வியும் பாடசாலைகளும் மதரசாக்களும்
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நம்முடைய தேசத்தில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்பு வரையிலும், நம் தேசத்தில் பாடசாலைகள், மதரசாக்கள் மூலம் கல்வி கொடுக்கும் முறையே பிரதானமாக இருந்தது. அந்தப் பாடசாலைகள் பெரும்பாலும் ஒரே ஆசிரியரைக் கொண்டு, பல்வேறு வயதுடைய மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் வழிமுறையைப் பின்பற்றின. மேலும் மன்னர்கள், பிரபுக்கள், அரசு அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகள் அவரவர் வீடுகளுக்கே ஆசிரியரை வரவழைத்துப் பாடம் கற்றுக் கொண்டனர். தமிழகத்தில் அக்காலத்தில் 700க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இருந்ததாக 1797ன் கிழக்கிந்திய கம்பெனிக் குறிப்பேடு தெரிவிக்கிறது.


The Gurukul system of Education (Pic:edubilla)
1813ன் கல்வி சாசனம் (CHARTER OF 1813)
இத்தகைய பாடசாலைகள் ஒரு கட்டத்தில் மறையத் தொடங்கின. ஆங்கிலேயர்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களைக் கைப்பற்றி அங்கு அவர்களின் அதிகாரம் ஏற்பட்டபோது மேற்கத்திய கலாச்சாரமும் மெல்ல ஊடுருவ ஆரம்பித்தது. இதன் விளைவாக கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு கட்டப்பட்ட தேவாலயங்கள் மதமாற்றத்தை மட்டுமின்றி அவை ஏற்பட்ட இடங்களை சுற்றி நூலகம், பள்ளி என கட்ட வழி ஏற்பட்டது. இந்தக் கல்வியானது மதத்திணிப்பு போல் இருந்ததால் இந்தியர்களிடையே எதிர்ப்பு எழுந்தது.

இதன் விளைவாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதங்கள் எழுந்தன. 1813ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு கல்வி வழங்குவதை தனது பணியாக ஏற்பதாக அறிவித்தது. கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளுக்கு வருடா வருடம் 1 லட்சம்ரூபாய் வரை உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையே இந்திய பாடசாலைகளுக்கும், மதரசாக்களுக்கும் முடிவுரை எழுதியது. இந்த நடவடிக்கை “1813ன் கல்வி சாசனம்” (CHARTER OF 1813) என்று அழைக்கப்படுகிறது.

இந்த சாசனம் “இந்திய மக்களுக்கு கிழக்கிந்திய கம்பெனியின் பல்வேறு துறைகளில் வேலை செய்ய சாதி மதம் அந்தஸ்து எதுவும் தேவையில்லை. கல்வித்தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும்.” என்று அறிவித்தது. இந்தக் கல்வித் தகுதி “ஆங்கில வழி” கல்வி ஆகும்.



East India Company (Pic:hubert-herald)
மெக்காலே குறிப்புகள்( MACAULAY'S MINUTES)
1813 க்கும் 1833 ஆம் ஆண்டுக்கும் இடையிலான 20 ஆண்டு காலத்தில் மேலும் ஒரு திட்டத்தை ஆங்கிலக் கல்வியை விரிவுபடுத்த பிரிட்டிஷ் அரசு முன்மொழிந்தது. இந்தியாவின் மேல்தட்டு வர்க்கக் குடும்பங்களை ஆங்கிலக் கல்வியை நோக்கி இழுத்து அவர்களை அரசு வேலைகளில் அமர்த்த வேண்டும். இந்த நடவடிக்கை மற்றவர்களையும் ஆங்கிலக் கல்வியை நோக்கி இழுக்கும் என்று எதிர்பார்த்தது.

1834-ல் மெக்காலே இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு, மெக்காலேவை “பொது போதனை துறை” (Public instruction) எனும் கல்வித் துறையின் தலைவராக நியமனம் செய்தார். நான்கு மாதங்கள் இந்தியாவின் கல்வி முறையை ஆய்வு செய்த மெக்காலே, MACAULAY’S MINUTES(மெக்காலே குறிப்புகள்) எனும் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

மெக்காலேவின் நோக்கம் “வர்ணாஸ்ரம தர்மத்தை” கடைப்பிடித்து வந்த இந்திய பாரம்பரியக் கல்வி முறையை மாற்றி அனைவருக்கும் கல்வி வழங்குவதாக இருந்தது.

“நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய பணி, நமக்கும் நாம் ஆளுகின்ற மக்களுக்கும் இடையே நல்லெண்ணத் தூதுவராக செயல்படவேண்டிய புதிய வர்க்கம் ஒன்றைக் கல்வியின் மூலம் தோற்றுவிப்பது ஆகும். இவர்கள் ரத்தத்தால், நிறத்தால் இந்தியர்கள். ஆனால் உணர்வால், நிலைப்பாட்டால் நடத்தையால், எண்ணத்தால், விருப்பு வெறுப்பால் ஆங்கிலேயர்கள்” என்றார்.

மேலும், அதாவது கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதும் கடினம். அது மட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு அவர்களது மொழியைப் புரிந்து கொண்டு அதை அவர்கள் ஆளும் மக்களிடம் அவர்களது மொழியில் பேச ஆட்கள் உடனடியாக தேவைப்பட்டது. எனவே முதலில் ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள ஒரு சிலரிடம் கற்றுக்கொடுப்போம். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து தங்களது மொழியில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கொண்டு செல்லட்டும்” என்றார்.

1835 ஆம் ஆண்டு இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு மெக்காலேவின் பரிந்துரைகளை அமல்படுத்தினார்.


Lord Macaulay (Pic:etsy)
வுட் நடவடிக்கை(Wood’s Despatch)
இந்த வுட் நடவடிக்கை இந்திய கல்வியின் “MAGNA CARTA” என்று அழைக்கப்படுகிறது. 1853-ல் இங்கிலாந்து கல்விக் கட்டுப்பாட்டு குழுமத்தின் (The Board of Control of Education) தலைவராக இருந்த சார்லஸ் உட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. “கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்திலிருந்து கல்வி அதிகாரத்தை பிடுங்கி நேரடியாக பிரிட்டிஷ் அரசே அதை மேற்கொள்வது சாத்தியமா?” என்பதை ஆராய்ந்து அறிவதே இக்குழுவின் நோக்கம்.

இந்தக் குழு தான் ஆரம்பக் கல்வியை பிராந்திய மொழிகளிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளிலும், பட்டப்படிப்புகளை ஆங்கில மொழியில் மட்டும் வழங்கவும் வழி செய்தது. மேலும் இந்தியாவில் பெண்கள் கல்வி பெறுவதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தது. கல்விக்கான முதல் இயக்குநரகத்தை தோற்றுவித்தது. இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் தொடங்க வழி செய்தது.


Sir Charles Wood (Pic:fineartamerica)
ஹன்டர் கமிஷன் (HUNTER COMMISION)
1882-ஆம் ஆண்டு வில்லியம் ஹன்டர் என்பவர் தலைமையில் ஒரு கல்விக் கமிஷனை இங்கிலாந்து அரசு நியமனம் செய்தது. இது இந்திய கல்விக் குழு(INDIAN EDUCATION COMMISION) என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் ஆரம்பக் கல்வியின் தரத்தினை ஆராய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது.

நமது வகுப்பறைகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு மற்றும் மாதாந்திரத் தேர்வுகளும் இக்குழு மூலமாகத் தான் அறிமுகமாயின. மேலும், பள்ளிகளில் சீருடைகளை அறிமுகப்படுத்தியதும், பிராந்திய மொழி கல்வியை, பரவலாக்கியதும் இக்குழுவின் சாதனைகள். அதிகமான மாணவர்கள் ஆரம்பக் கல்விக்குள் நுழையவும் இக்குழு வழிவகுத்தது.


Sir William Wilson Hunter (Pic:wikipedia)
காந்தியக் கல்வி
சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்த மாகாணங்களின் அமைச்சர்களைக் கூட்டி 1937 ஆம் ஆண்டு வார்தாவில் கல்வி மாநாடு ஒன்று நடந்தது.

அந்த மாநாட்டில் சில கல்விக் கொள்கைகளை அந்தக் கட்சி முன்வைத்தது.

6 வயது முதல் 14 வயது வரை விலையின்றி இலவசமாகக் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும்
தொடக்கக் கல்வி கட்டாயமாகத் தாய்மொழியில் இருக்க வேண்டும்.
ராட்டை உட்பட பள்ளியில் மாணவர்கள் வாழ்க்கைத் தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும்
தன் சொந்தக் காலில் நிற்க சுயக் கட்டுப்பாடு மிக்க குழந்தைகளை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்
என்று இந்த மாநாடு முன்மொழிந்தது.

இந்தியா விடுதலை அடைந்தபோது வெறும் 14 சதவீதத்தினரே கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். இந்த நிலை மாற சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பல குழுக்களை உருவாக்கினார். இந்த முதல் கல்வி கமிஷனுக்கு அப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய, அதன் பின்னர் இந்திய துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.


Dr. Radhakrishnan (Pic:gangslangs)
லட்சுமணசாமி முதலியார் குழு

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழுவில் இருந்த லட்சுமணசாமி முதலியார் தலைமையில் 1952 ஆம் ஆண்டு ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இரண்டு பரிந்துரைகளை முன்வைத்தது.

பெண்களுக்கான தனி பள்ளிகளை அங்கீகரித்தல்.
முழுக்க முழுக்க அந்தந்த பிராந்திய மொழிக் கல்வியை வளர்த்தெடுத்தல்.
நேரு அவர்கள் 1964-ல் அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் டி.எஸ் கோத்தாரி அவர்களின் தலைமையில் ஒரு கல்விக் குழுவை நியமித்தார். அதில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இடம் பெற்றனர். நாட்டு நலத்திட்டம், விளையாட்டு ஆசிரியர், ஓவிய ஆசிரியர் போன்ற செயல்பாடுகள் இக்குழுவின் பரிந்துரைகளால் தான் நிறைவேற்றப்பட்டன.

அதன்பிறகு சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு வழங்க திரு.ராஜீவ் காந்தி அவர்கள் ஆட்சியில் “நவோதயா பள்ளிகள்” நாடு முழுவதும் திறக்கப்பட்டன.


Dr. A. Lakshmanaswami Mudaliar (Pic:veethi)
திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆன பிறகு 2002ஆம் ஆண்டு 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கவும், 8 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்கவும், மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தடுத்திடவும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தினை (SARVA SHIKSHA ABHIYAN) செயல்படுத்தினார்.

இவ்வாறாக இந்திய கல்வித் துறை பல மாற்றங்களுக்கு உள்ளாகி, நம் தேசத்தின் கல்வியறிவை 76 சதவீதமாக உயர்த்த வழி செய்துள்ளது. உலக நாடுகளைப் போல் நம் தேசமும் கல்வியிலும், மனித வளக் குறியீடுகளிலும் முன்னிலை பெறப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.















Posted by NAKARAJAN at 08:40 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: ( MACAULAY'S, MINUTES), குறிப்புகள், மெக்காலே

Wednesday, 24 July 2019

jumbo circus history



ஜம்போ யானையும் வீழ்ந்த சர்க்கஸ் கம்பெனியும்... ஒரு துயர வரலாறு!
ஜார்ஜ் அந்தோணி

எவ்வளவோ மனிதர்களும் உயிரினங்களும் சர்க்கஸ் கூடாரங்களில் ஓய்வின்றி உழைத்திருக்கின்றன. ஆனால், சர்க்கஸ் வரலாற்றில் ஒரு சில பெயர்களே தவிர்க்க முடியாத இடம் பிடித்திருக்கின்றன. அதில் ஒன்று “ஜம்போ”


சர்க்கஸ்... பேரைக் கேட்டாலே எனர்ஜி பொங்கும் ஒரு சொல்.. விலங்குகளும் மனிதர்களும் சேர்ந்து ஒரு யுகத்தையே பொழுதுபோக்கால் கட்டிப் போட்டு வைத்திருந்த காலம் அது. எவ்வளவோ மனிதர்களும் உயிரினங்களும் சர்க்கஸ் கூடாரங்களில் ஓய்வின்றி உழைத்திருக்கின்றன. ஆனால், சர்க்கஸ் வரலாற்றில் ஒரு சில பெயர்களே இடம் பிடித்திருக்கின்றன. அதில் ஒன்று “ஜம்போ” சர்க்கஸ் பார்ப்பவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு, அங்கு வேலை செய்கிறவர்களுக்கும் விலங்குகளுக்கு அது வாழ்க்கை.

ஜம்போ 
ஜம்போ
மனிதனோ விலங்கோ... சர்க்கஸ் உலகத்தில் அவ்வளவு எளிதாக அமைந்து விடுவதில்லை. ஜம்போ 1860 ஆண்டு டிசம்பர் மாதம் சூடானில் பிறந்த ஆப்பிரிக்க யானை. ஜம்போ குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு சர்க்கஸ் நிறுவனத்தைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். Ringling Bros. and Barnum & Bailey Circus அமெரிக்கன் சர்க்கஸ் நிறுவனம். அதன் மற்றொரு பெயர் Ringling Bros. பல இடங்களுக்கும் பயணம் செய்து சர்க்கஸ் நடத்திய நிறுவனம். அதன் பிரபலமான ஸ்லோகன் ‘The Greatest Show on Earth’ . இந்த நிறுவனத்தின் கதை 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது.

1871 ஆம் ஆண்டு பார்னம் (Phineas Taylor Barnum) என்பவரால் தொடங்கப்பட்டது. பல இடங்களுக்கும் பயணித்து சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது போட்டியாகப் பல நிறுவனங்கள் சர்க்கஸ் உலகில் கால் பதித்திருந்தன. புதுப் புது சாகசங்கள், பல விலங்குகள் எனப் போட்டிப் போட்டு சர்க்கஸ் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்திருந்த காலம். போட்டிகள் அதிகமாக அதிகமாக ஒரு சர்க்கஸ் வெற்றி பெறுவதும், ஒரு சர்க்கஸ் தோல்வியடைவதும் இயல்பாக நடந்தன. சர்க்கஸ் உலகில் போட்டி நிறுவனத்தை ஜேம்ஸ் பெய்லி என்பவர் 'காப்பர் அண்ட் பெய்லி' Cooper and Bailey என்ற பெயரில் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் போட்டிகளைச் சமாளிக்க இரண்டு நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து இயங்கும் உடன்படிக்கைக்கு வருகிறார்கள். அதன்படி 1881 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பெய்லி மற்றும் பார்னம் நிறுவனங்கள் இணைந்த பிறகு நிறுவனம் "பார்னம் & பெய்லி" என்று பெயர் மாற்றப்பட்டது. நிற்க..


ஜம்போ யானை பிறந்த சில மாதங்களில் கண்ணுக்கு முன்பாக தன்னுடைய தாயை வேட்டைக்குப் பறி கொடுத்தது. தாயை வேட்டையாடியவர்கள் குட்டியாக இருந்த ஜம்போவை சூடானில் இருந்து இத்தாலியில் இருக்கிற சூயஸ் நகருக்கு கடல்வழியாக கடத்திக்கொண்டு சென்றார்கள். அங்கிருந்து விலங்கு விற்பனை செய்பவர்கள் மூலமாக ஜெர்மனிக்குக் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு அதே ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கிருந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு அங்கிருந்து லண்டன் நகரில் உள்ள லண்டன் விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. இந்த விலங்குகள் பூங்கா 1828 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அங்குக் குழந்தைகள், சிறுவர்கள் என எல்லோரையும் முதுகில் சுமந்து செல்லும் வேலை ஜம்போவுக்குக் கிடைத்தது. ஜம்போவைப் பராமரிக்கும் பணிக்கு மேத்யூவ் ஸ்காட் என்பவரைப் பூங்கா நிர்வாகம் நியமித்தது. ஜம்போ என்கிற பெயர் இங்குதான் அதற்குச் சூட்டப்பட்டது. அதன் உருவமும் எடையும் ஜம்போ என்கிற பெயரை அதற்கு பெற்று தந்தது. அனோசன் அனந்த ஜெயஸ்ரீ என்கிற இந்தியர்தான் அதற்கு அந்தப் பெயரைச் சூட்டினார். ஜம்போவைப் பார்ப்பதற்காகவே மக்கள் லண்டன் பூங்காவிற்கு வந்து போனார்கள். பல ஆண்டுகளாக அதாவது 1882 ஆம் ஆண்டு வரை லண்டன் பூங்காவில் ஜம்போ இருந்தது.


லண்டன் விலங்கியல் பூங்காவில் Abraham Bartlett என்பவர் தலைமை பதவியிலிருந்தார். ஜம்போ யானை ஆக்ரோஷமாக இருக்கிறது; மதம் பிடித்தால் அடக்குவது சிரமம் என்று சொல்லி ஜம்போவை விற்பனை செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் அது அவருக்கு அவ்வளவு சுலபமான வேலையாக இல்லை. ஏனெனில் விஷயம் அறிந்த பத்திரிகைகள் ஜம்போவை விற்பனை செய்வது தவறு என எழுதின. சுமார் 1,00,000 பள்ளிக் குழந்தைகள் ஜம்போவை விற்பனை செய்யக் கூடாது என கையெழுத்திட்டு இங்கிலாந்தின் அப்போதைய ராணி விக்ட்டோரியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், எந்த ஒரு முயற்சியும் ஜம்போவிற்கு கை கொடுக்கவில்லை. ஜம்போவிற்கு பலமாக இருந்த அதன் உடலமைப்பே அதற்குப் பலவீனமாகவும் மாறிப் போனது. அசம்பாவிதங்களைத் தடுக்க வேண்டுமானால் ஜம்போவை விற்பதே சரி என வாதாடி கடைசியில் வெற்றியும் பெற்றார்கள்.

காலம் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் சில தவறுகளை நிகழ்த்த ஆரம்பிக்கும்."பார்னம் & பெய்லி" சர்க்கஸ் நிறுவனம் ஒன்றாக இணைந்தது இந்தத் தருணத்தில்தான். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட "பார்னம் & பெய்லி" நிறுவனம் ஜம்போவை பத்தாயிரம் அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கி அமெரிக்காவிற்கு கொண்டு சென்றார்கள். அதன் பராமரிப்பாளரும் ஜம்போவுடன் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். ஜம்போவின் நட்சத்திர அந்தஸ்து, மற்றும் அதன் உருவமும் தனி ஓர் அடையாளமாக மாறியது. "பார்னம் & பெய்லி" நிறுவனத்திற்கு லாபம் பல மடங்காக உயர்ந்தது. ஜம்போவை வாங்கச் செலவழித்த தொகை மூன்றே வாரங்களில் மீண்டும் லாபமாகக் கிடைத்தது.

1880 மே மாதம் 30 தேதி நியூயார்க்கின் ப்ரொக்ளின் பாலத்தை ஜம்போவோடு சேர்த்து பார்னம் & பெய்லி நிறுவனத்தைச் சேர்ந்த 21 யானைகளும் கடக்கும் பொழுது மிக பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். அப்போது ஜம்போ எந்த அச்சமும் இன்றி சாதுவாகவே நடந்துகொண்டது. எந்தக் காரணத்தைச் சொல்லி ஜம்போவை விற்பனை செய்தார்களோ அது பொய்யாகப் போனது.


1885 ஆண்டு செப்டம்பர் மாதம், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள செயின்ட் தாமஸில் சர்க்கஸ் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. சர்க்கஸ் நடத்துவதற்கு அந்த இடமும் சூழ்நிலையும் பொருந்திப் போனது. அங்கு சர்க்கஸ் நடத்துவதற்கு முக்கியமான இன்னொரு காரணம் இருந்தது. சர்க்கஸ் நிறுவனம் விலங்குகள் மற்றும் பொருள்களை ரயில் மூலமாகவே எடுத்துச் செல்லும். செயின்ட் தாமஸ் பல ரயில் பாதைகளை இணைக்கிற இடமாகவும் இருந்தது. செப்டம்பர் மாதம் 15 தேதி இரவு எல்லா யானைகளும் தங்களுடைய பணியை முடித்து விட்டு மீண்டும் தங்களுடைய பெட்டிகளுக்கு திரும்பி கொண்டிருந்தன. பயணச் சாலையில் பல ரயில் பாதைகள் இணைகிற இடமாக இருந்தது.

அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராத விதமாக வந்துவிடக் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. சரக்கு ரயில் ஜம்போ மீது மோதியதில் ஜம்போ அதே இடத்தில் உயிரை விட்டது. ‘குட்டி யானையைக் காப்பாற்றச் சென்ற ஜம்போ எதிர்பாராமல் விபத்தில் சிக்கி விட்டது’ என சர்க்கஸ் நிறுவன உரிமையாளரான பார்னம் உலகிற்கு அறிவித்தார். கண்டனங்களும் கண்ணீர் அஞ்சலிகளும் ஆங்காங்கே நிகழ்ந்தன


ஜம்போவின் வரலாறு அதோடு முடிந்து விடவில்லை. ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’. ஏற்கெனவே பார்னம் நிறுவனம் ஜம்போ யானையை வைத்து நன்கு காசு பார்த்திருந்தது. ஜம்போவின் விலை என்னவென்று நிறுவனமும் அதனுடைய முதலாளிகளும் அறிந்திருந்தனர். ஜம்போ என்கிற பெயர் மிகப் பெரிய வியாபாரத்தை உருவாக்கி வைத்திருந்தது. அதை பார்னம் பயன்படுத்திக் கொண்டார். யானையின் உடல் பாகங்களை விற்பனை செய்வது என்கிற முடிவிற்கு வருகிறார். முதலில் யானையின் இதயத்திலிருந்து தொடங்கினார். மார்ச் 1886 இல், “47 பவுண்டுகள் எடையுள்ள இதயம், ‘பார்னமின் புகழ்பெற்ற ஜம்போவின் இதயம்” என்கிற அடைமொழியோடு கார்னல் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் நிபுணரிடம் $ 40 க்கு விலை போனது.


வேறு எந்த வகையில் ஜம்போவின் உடலை விற்பனை செய்யலாம் என யோசித்த சர்க்கஸ் நிறுவனத்திற்கு புது எண்ணம் தோன்றியது. ஜம்போவின் எலும்புக் கூட்டை சர்க்கஸ் நடக்கிற இடங்களில் வைத்து கூட்டத்தைக் கூட்டினார். ஜம்போவின் எலும்புக்கூட்டைப் பார்க்க மக்கள் கூட்டமாக வர ஆரம்பித்தார்கள். அந்த அளவிற்கு ஜம்போ என்கிற பெயர் சர்க்கஸ் உலகில் மந்திரச் சொல்லாக இருந்தது. 1889 ஆம் ஆண்டு வரை ஜம்போவின் எலும்புக் கூடு பல நாடுகளுக்கும் பயணித்தது. கடைசியாக அதே ஆண்டு நியூயார்க் நகரத்திலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது.


ஜம்போ என்கிற பெயருக்கு கிடைத்த வாழ்க்கை கூட அந்த யானைக்கு கிடைக்கவில்லை என்பதுதான் பெரும்துயரம்.








Posted by NAKARAJAN at 19:51 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: CIRCUS, HISTORY, jumbo

Monday, 22 July 2019

Banas of Madurai & Ramnad , Samarakolakalan ( 1469 - 1476 AD )









Banas of Madurai & Ramnad , 
Samarakolakalan ( 1469 - 1476 AD )

Banas controlled much of Madurai , Ramanathapuram and some parts  of Kongu  regions from 14th to middle of 16th century their  epigraphs  are found in regions  of Madurai, Ramnad and Pudukottai . From the inscriptions, it appears that Irangavillidasan Navali Vanaraya Bana, Bhuvaneka Vira Samara Kolahala, Sundar Tol-udaiyan, Tirumal Irunjolai Mahabali Bana were the chiefs at Madurai as well as Ramnad.

They minted coins from Madurai with Garuda on the obverse and their title on the reverse. These coins bear two distinguishing  titles Bhuvanekavira and Samarakola kalan. Type 1: Obverse: a seated Garuda on a fish; flanking the Garuda are conch and discus. Reverse: The legend reading Samarakolakala. The legend is in three lines separated by line markings. Type 2: Obverse: Garuda with conch and discus Reverse: Legend Samarakolakala in beteen lines. Type 3: Obverse: Gauda with conch and discus Reverse: Legend Samarakolakala in between lines. Palaeographically earlier.
Type 4: Obverse: Garuda. Sankha and Cakra, a beautiful umbrella above. Reverse: legend ‘Bhuvanekavira’. Type 5: Obverse: Garuda holding a snake in the arms. Sanka Cakra present in the obverse. Reverse: the legend Bhuvanekavira separated by lines. Type 6: Obverse: Garuda with conch and discus. Reverse: Two fishes shown horizontally with a crozier in between.
Posted by NAKARAJAN at 12:30 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: ( 1469 - 1476 AD ), Banas, Madurai, Ramnad, Samarakolakalan

Monday, 15 July 2019









'முதியோர் பென்ஷன்' திட்டம்
காமராஜர் முதல்வரான பின், ஒரு முறை கும்பகோணத்துக்கு வந்திருந்தார். காரிலிருந்து காமராஜர் இறங்கும் நேரத்தில், ஒரு மூதாட்டி, அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி, போலீஸ்காரரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

"sivakasi culture" whatsup group
இந்த சண்டையைப் பார்த்த காமராஜர், அவரை அனுமதிக்கும்படி போலீசாரிடம் சொல்ல, அந்த மூதாட்டி, காமராஜரை அணுகி, 'ஐயா... என்னைப் போல வயசானவங்க, தள்ளாத காலத்திலும், கூடைத் துாக்கிப் பிழைக்க வேண்டியிருக்கு, எங்களுக்கு ஏதாவது செய்யணும்...' என்றார்.
'ஆகட்டும் பார்க்கலாம்...' என்று சொல்லி, கிளம்பி விட்டார் காமராஜர். கார் புறப்பட்டதும், அந்த மூதாட்டி சொன்ன வார்த்தைகள் அவர் மனதிற்குள் வந்து மோதின. காரில் இருந்த அதிகாரிகளிடம், 'இந்த ஏழை மூதாட்டிக்கு மாதம் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?' என, கேட்டார். யோசித்த அதிகாரிகள், 'இருபது ரூபாய் ஆகும்...' என்றனர்.
சென்னை வந்து சேர்ந்ததும், மாநிலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் எத்தனை பேர் என கணக்கு எடுக்க உத்தரவிட்டார். உடனடியாக, 'முதியோர் பென்ஷன்' திட்டம் அமல்படுத்தப்பட்டது

sivakasi culture






சிரிப்பொலி

அகில இந்திய காங்கிரஸ் மாநாடு மதுரையில் நடைபெற இருந்த சமயம் .நேருவும் வருவதால் ஏற்பாட்டினை காமராஜே நேரில் கவனித்தார்
"sivakasi culture" whatsup group

வட நாட்டு நிருபர் ஒருவர் உங்கள் ஊரில் பாதாம் அல்வா சுவையாய் இருக்குமாமே, அதை சாப்பிட ஏற்பாடு செய்ய முடியுமா என்கிறார் காமராஜரிடம் .

டி வி எஸ் குழுமத்தை சேர்ந்த டி .எஸ் .கிருஷ்ணா அதற்கு ஏற்பாடு செய்தார் .அதை எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவும் சாப்பிட்டார் .அவர் வயிற்று கோளாறால் அவதிப்பட்டார்

காமராஜ் மறுநாள் அந்த நிருபரை பார்த்து பாதாம் அல்வா சாப்பீட்டீர்களா எப்படி இருந்தது என்று கேலியாக கேட்டார்
சார் உங்க பாதாம் அல்வா படா danger சாப் என்கிறார்

அதற்கு காமராஜ்
" இதெல்லாம் "ஸ்பூன் வச்சி சாப்புடனும் - அகப்பையில் எடுத்து வச்சி சாப்பிடக்கூடாது " என்றார்..அந்த இடத்தின் சிரிப்பொலி அடங்க நெடு நேரம் ஆனது























Shri K Kamaraj history - mini biography

Kumaraswami Kamaraj played a leading role in shaping India's destiny from the passing away of Jawaharlal Nehru to the Congress split in 1969.He was born humble and poor in a backward area of Tamil Nadu on July 15, 1903. He was a Nadar, one of the most depressed castes of Hindu society. His schooling lasted only six years. At twelve he was a shop assistant. He was barely fifteen when he heard of the Jallianwala Bagh massacre which was the turning point in his life.

"sivakasi culture" whatsup group

Two years later when Kamaraj saw Gandhiji at Madurai the path was chosen.He became a member of the Indian National Congress. Kamaraj was content for years to remain a rank and file Congress volunteer, working hard for the cause of the freedom movement, unmindful of his personal comfort or career.He was eighteen when he responded to the call of Gandhiji for non-cooperation with the British. He carried on propaganda in the villages, raised funds for Congress work and took a leading part in organising meetings. At twenty he was picked up by Satyamurthy, one of the greatest orators and a leading figure of the Tamilnadu Congress Committee who was to be Kamaraj's political guru.

In April 1930, Kamaraj joined the Salt Satyagraha Movement at Vedaranyam and was sentenced to two years his first term in prison. Jail-going had become a part of his career and in all he went to prison six times and spent more than 3,000 days in British Jails.

Bachelor Kamaraj was forty-four when India became free. Kamaraj was elected President of the Tamilnad Congress Committee in February 1940. He held that post till 1954. He was in the Working Committee of the AICC from 1947 till the Congress split in 1969, either as a member or as a special invitee.

Kamaraj was elected to the Madras Legislative Assembly in 1937 unopposed. He was again elected to it in 1946. He was also elected to the Constituent Assembly of India in 1946, and later to Parliament in 1952. He became Chief Minister of Madras in 1954. He was perhaps the first non-English knowing Chief Minister in India. But it was during the nine years of his administration that Tamilnadu came to be known as one of the best administered States in India.

In 1963 he suggested to Nehru that senior Congress leaders should leave ministerial posts to take up organisational work. This suggestion came to be known as the 'Kamaraj Plan', which was designed primarily to dispel from the minds of Congressmen the lure for power, creating in its place a dedicated attachment to the objectives and policies of the organisation.

The plan was approved by the Congress Working Committee and was implemented within two months. Six Chief Ministers and six Union Ministers resigned under the Plan. Kamaraj was elected President, Indian National Congress, on October 9, 1963.Twice he played a leading role in choosing the Prime Minister of India. His defeat in Virudhunagar in 1967 considerably undermined his prestige. It was even said that he was a much disillusioned man.


But the landslide victory at Nagercoil revived his political stature. However, the split in the Congress in 1969 (he remained in the Organisation Congress) and the General Elections of 1971 resulted in a set-back to his political prestige and authority. He continued to work quietly among the masses until the last. He was honoured posthumously by the award of Bharat Ratna.
Posted by NAKARAJAN at 06:39 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, 11 July 2019

WORLD SMALL NATION ISLAND TAVOLARA




WORLD SMALL NATION ISLAND TAVOLARA




உலகின் மாபெரும் பேரரசுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். பல காலணி நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி, சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று அழைக்கப்பட்ட பிரிட்டன் சாம்ராஜியம், சீனாவில் இருந்து இந்துஸ்தான் வரை எல்லையை விரிவாக்கியிருந்த செங்கிஸ்தானின் மங்கோலிய பேரரசு. காபூலின் கந்தஹாரில் இருந்து கர்நாடகம் வரை பரவியிருந்த முகலாயர்களின் சாம்ராஜியம்.
ஆனால் உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது
தவோலாரா.


இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான்.
கத்தாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
ராஜாவின் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர். சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.

180வது நிறுவக தினத்தை கொண்டாடும் தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால் அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாக தோன்றலாம். ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்.
இத்தாலியில் வசித்துவந்த அந்தோனியா பர்த்திலியோனியின் முப்பாட்டனார் குஸெப் பர்த்லியோனி சகோதரிகளான இருவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது இத்தாலி ஒரு தனி நாடல்ல. சர்டீனியாவில் ஒரு பாகமாக இருந்த இத்தாலியில் இரண்டு திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம். எனவே அவர் 1807 ஆம் ஆண்டில் இத்தாலியில் இருந்து இந்தத் தீவில் குடியேறினார்.

ஆடு வேட்டை

ஜெனோவா நகரில் வசித்து வந்த குஸெப் பர்த்லியோனிக்கு, இந்தத் தீவில் இருக்கும் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகளைப் பற்றி தெரிந்துக்கொண்டார். இந்த அரிய வகை ஆடுகள் உலகிலேயே இங்கு மட்டுமே வசிக்கக்கூடியவை. இந்த ஆடுகள் பற்றிய தகவல் இத்தாலி வரை சென்றது. சர்டீனியாவின் ராஜா கார்லோ அல்பர்ட்டோ இந்த ஆடுகளை பார்க்கவும், வேட்டையாடவும் தவோலாரா தீவுக்கு வருகைபுரிந்தார்.

1836ஆம் ஆண்டில் தீவுக்கு வந்தபோது தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கார்லோ அல்பர்டோ, "நான் சார்டீனியோவின் ராஜா" என்று சொன்னாராம். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட குசெப்பின் மகன் பாவோலோ, "நான் தவோலாராவின் ராஜா" என்று கூறினார் என்று மூதாதையர்களின் தைரியத்தை பெருமையுடன் நினைவுகூர்கிறார் அந்தோனியோ.

மத்திய தரைக்கடல்
பாவோலோ, கார்லோ அல்பர்டோவுக்கு தீவு முழுவதையும் சுற்றிக் காண்பித்து, இந்த சிறப்பு ஆடுகளை வேட்டையாட உதவியும் செய்தார். தீவை மூன்று நாட்கள் சுற்றிப் பார்த்த அரசர் கார்லோ அல்பர்டோ நாடு திரும்பியதும், தவோலாரவை தனிநாடாக அறிவித்து சாசனம் எழுதிக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து, தன்னை புதிய ராஜ்ஜியத்தின் அரசராக பாவோலா அறிவித்துக்கொண்டார். புதிதாக உதித்த ராஜ்ஜியத்தின் மொத்தப் பிரஜைகள் 33 பேர் மட்டுமே.

இரண்டே மணி நேரத்தில்
அரசரான பாவோலோ இறப்பதற்கு முன்னதாக அரச கல்லறையை அமைத்தார். அங்கு தான் புதைக்கப்பட்ட பிறகு, கல்லறையின் மேற்புரத்தில் கிரீடம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அரசராக வாழ்ந்தபோது, ஒருமுறை கூட மணிமகுடம் சூடாத பாவோலோ, கல்லறைக்குள் அடங்கிய பிறகு அதன்மேல் மகுடம் அமைக்கப்பட்டது என்பது சுவராசியமான தகவல்.

அமைதி ஒப்பந்தம்
இத்தாலியின் நிறுவனர் என்று அழைக்கப்படும் குசெப் கைரிபால்டி உட்பட பல நாட்டு அரசர்களுடன் தவோலாரா சமரசங்களை செய்து கொண்டது. சர்டீனியாவின் அரசராக இரண்டாம் விக்டோரியா இமானுவெல், தவோலாராவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.

நேட்டோ ராணுவத் தளம்

இன்றும் அதே புகைப்படம் அந்தோனியாவின் உணவு விடுதியை அலங்கரிக்கிறது. 1962-ல், நேட்டோவின் ராணுவத்தளமாக மாறிய பிறகு இந்த சிறிய ராஜ்ஜியத்தின் இறையாண்மை முடிவுக்கு வந்துவிட்டது. பல இடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி எப்போதுமே தவோலாராவை தனது நாட்டின் ஒருபகுதி என முறைப்படி குறிப்பிட்டதேயில்லை.

உலகின் எந்தவொரு நாடும் தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர். உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.

பரம்பரைத் தொழில்
தீவு நாடான தவோலாராவை சுற்றி இருக்கும் கடல்பகுதியில் பல்வேறு வகையிலான கடல்வாழ் உயிரனங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. அந்தோனியோவும் அவரது மருமகனும் படகு போக்குவரத்தை நிர்வகிக்க, மற்றொரு உறவினர் மீன்பிடித் தொழிலிலும், இன்னும் ஒருவர் வேட்டைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்ஜிய பரிபாலனம் என்பது குடும்பத்தை நிர்வகிப்பது போல என்று அந்தோனியா சொல்கிறார். சுற்றுலா அதிகரித்து வருவதால் கணிசமான வருவாய் ஈட்டுவதாக கூறும் அந்நாட்டு அரசர், சாதாரண வாழ்க்கையே என்றும் சிறந்தது என்கிறார்.

தினமும் காலையில் குடும்பத்தினரின் கல்லறைகளுக்கு சென்று மலர் தூவி வழிபடுவது அந்தோனியாவுக்கு பிடித்தமானது. ஆனால் அசல் பூக்களை எடுத்துச் சென்றால், ஆடுகள் மென்றுவிடுவதால், பிளாஸ்டிக் மலர்களையே கல்லறைகளில் வைத்து வழிபடுகிறார்.
தொழில்நுட்பரீதியில் பார்த்தால் அந்தோனியா மற்றும் குடும்பத்தினர் இத்தாலியின் குடிமக்கள். தனது ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கும்படி, டியூக் ஆஃப் சவாயிடம் கோரிக்கை வைக்கலாமா என ஒரு காலகட்டத்தில் யோசித்த அந்தோனியா, பிறகு அதனை கைவிட்டுவிட்டார்.
தவலோராவின் அரசர் கேட்கிறார் "சிறிய நாடாக இருந்தாலும், எங்கள் முன் விரிந்திருக்கும் மிகப்பெரிய கடல் சாம்ராஜ்ஜியத்தின் கோட்டையாக தவோலாரா திகழ்கிறது. இதைவிடப் பெரிய பேறு வேறென்ன இருக்கமுடியும்?"

தவோலாரா போன்ற மக்கள் வசிக்கும் வேறு சில சிறிய ராஜ்ஜியங்கள்
1. ரெடோண்டா, இங்கிலாந்தின் செளத்ஹாம்ப்டனில் அமைந்திருக்கும் இது, புகையிலைத் தடையில் இருந்து விலகியிருப்பதற்காக தன்னைத்தானே தனி ராஜ்ஜியமாக அறிவித்துக்கொண்டது.
2. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா 748 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. ஒரு லட்சத்து ஆறாயிரம் மக்கள் வசிக்கும் இந்த நாடு, 1773இல் பிரிட்டனின் கேப்டன் ஜேம்ஸ் குக்கால் கண்டுபிடிக்கப்பட்டது. கேப்டன் குக் இந்த தீவை நட்புத் தீவு என்று அழைத்தார். ஆனால், இங்கு வசித்தவர்களோ கேப்டன் குக்கை கொல்ல நினைத்தார்கள்.
3. போர்னியோத் தீவில் அமைந்துள்ள புரூணை ஐந்தாயிரத்து 765 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு மக்களிடம் எந்தவித வரியும் வசூலிக்கப்படுவதில்லை. புரூணை சுல்தான், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர்.
4. ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்வாசிலாந்து 17 ஆயிரத்து 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த நாட்டின் அளப்பரிய இயற்கை அழகினால் இது மர்மங்கள் சூழ்ந்த நாடு என்று அழைக்கப்படுகிறது. ஸ்வாசிலாந்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 13 லட்சம்.
5. 30 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் லெசோதே, தென்னாப்பிரிக்காவால் சூழப்பட்டது. கடற்கரை மட்டத்தைவிட கீழே அமைந்திருக்கும் இந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் இருபது லட்சம்.

Posted by NAKARAJAN at 10:01 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: island, NATION, SMALL, tavolara, World
Newer Posts Older Posts Home
Subscribe to: Comments (Atom)

About Me

NAKARAJAN
View my complete profile

Blog Archive

  • ►  2025 (118)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (25)
    • ►  July (68)
    • ►  June (5)
    • ►  May (15)
  • ►  2022 (255)
    • ►  June (21)
    • ►  May (64)
    • ►  April (66)
    • ►  March (48)
    • ►  February (33)
    • ►  January (23)
  • ►  2021 (806)
    • ►  December (3)
    • ►  November (32)
    • ►  October (37)
    • ►  September (48)
    • ►  August (56)
    • ►  July (101)
    • ►  June (79)
    • ►  May (61)
    • ►  April (75)
    • ►  March (128)
    • ►  February (154)
    • ►  January (32)
  • ►  2020 (1339)
    • ►  December (6)
    • ►  November (66)
    • ►  October (176)
    • ►  September (147)
    • ►  August (196)
    • ►  July (115)
    • ►  June (134)
    • ►  May (275)
    • ►  April (118)
    • ►  March (53)
    • ►  February (31)
    • ►  January (22)
  • ▼  2019 (377)
    • ►  December (45)
    • ►  November (82)
    • ►  October (92)
    • ►  September (41)
    • ►  August (35)
    • ▼  July (11)
      • MUMTAJ HINDI ACTRESS BIOGRAPHY
      • KARUNANIDHI ,A LEGEND OF TAMIL CINEMA
      • நினைக்க தெரிந்த மனமே -உனக்கு மறக்க தெரியாதா...
      • மெக்காலே குறிப்புகள்( MACAULAY'S MINUTES)
      • jumbo circus history
      • Banas of Madurai & Ramnad , Samarakolakalan ( 14...
      • 'முதியோர் பென்ஷன்' திட்டம் காமராஜர் முத...
      • WORLD SMALL NATION ISLAND TAVOLARA
      • The Hartford Circus Fire, July 6, 1944
      • GENEROSITY OF THE SHIVAJI THE GREAT
      • CEYLON KING ALAGAKONE GOT ARRESTED BY MING DYNAST...
    • ►  June (8)
    • ►  May (8)
    • ►  April (24)
    • ►  March (7)
    • ►  February (7)
    • ►  January (17)
  • ►  2018 (1006)
    • ►  December (14)
    • ►  November (28)
    • ►  October (21)
    • ►  September (39)
    • ►  August (36)
    • ►  July (115)
    • ►  June (167)
    • ►  May (101)
    • ►  April (114)
    • ►  March (140)
    • ►  February (107)
    • ►  January (124)
  • ►  2017 (873)
    • ►  December (201)
    • ►  November (174)
    • ►  October (226)
    • ►  September (78)
    • ►  August (19)
    • ►  July (103)
    • ►  June (61)
    • ►  May (1)
    • ►  March (5)
    • ►  January (5)
  • ►  2016 (824)
    • ►  December (32)
    • ►  November (146)
    • ►  October (166)
    • ►  September (234)
    • ►  August (246)
Picture Window theme. Powered by Blogger.