Tuesday 2 August 2016

காமராஜர் மதிய உணவுத் திட்டம்-மாணவன் அப்துல் கலாம்

காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டு வர முடிவு செய்து வேலைகள் செய்து கொண்டிருந்த நேரம். அப்போது விருதுநகர் அருகே இருந்த பள்ளிக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் சொன்ன விசயம் அந்த திட்டத்திற்கே பெரிய தடைக்கல்லாக இருந்தது, சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை இருக்கும் அந்த பள்ளிக்கு எவ்வளவு அரிசி தேவைப்படும், அவ்வளவையும் வேகவைத்து வடிப்பது எப்படி என்ற கேள்விதான் அது.


அதற்கு உடனே தீர்வு காணவேண்டும் என்று காமராஜர் சொல்ல அனைவரும் கையைப் பிசைந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளம் மின்னியல்  பொறியாளர் கையை தூக்கினார். இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார். அவர் மீது நம்பிக்கை வைத்து காமராஜரும் சரியென்றார்.



இரண்டு நாட்களும் தூங்காமல் அந்த பொறியாளர் வடிவமைத்த இயந்திரம்தான் நீராவி மூலம் அதிக அரிசியை சோறாக்கும் ஸ்டீம் குக்கர். இன்று பெரும் மண்டபங்களில் உணவு சமைக்க உதவும் அந்த ஸ்டீம் குக்கரை வடிவமைத்து, சத்துணவுத் திட்டத்தை தடங்கல் இன்றி நடக்க உதவி, காமராஜரிடம் பாராட்டையும் அன்பையும் பெற்ற அந்த பொறியாளர் வேறு யாருமல்ல.. நம் கலாம் ஐயா அவர்கள்தான்..

இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

என்றாலும் செலவை குறைக்கும் முயற்சியில் இந்த திட்டம் கைவிடப்பட்டது -
-
 இதிலிருந்து பிறந்ததே குக்கர் 


No comments:

Post a Comment