Friday 21 September 2018

KAREENA KAPOOR , THE LEGEND OF BOLLYWOOD "BEBO" BORN 1980 SEPTEMBER 21




KAREENA KAPOOR ,
THE LEGEND OF BOLLYWOOD "BEBO"
BORN 1980 SEPTEMBER 21




கரீனா கபூர் ( பிறப்பு செப்டம்பர் 21, 1980),[1] அடிக்கடி செல்லமாக பெபோ , என்று அறியப்படுபவர், பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகையாவார். அவர் ஒரு திரைக் குடும்பத்தில் பிறந்தவர், அவருடைய பெற்றோர், தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா, அவருடைய முத்த சகோதரி கரிஸ்மா போன்றோர் திரைப்படங்களில் நடித்தவர்கள் ஆவார்கள், அதன் காரணமாக மிகவும் சிறிய வயதிலிருந்தே, கரீனா ஊடகத்தின் இடவொளியிலேயே திளைத்துக்கொண்டிருந்தார். இருந்தாலும், 2000 ஆண்டுவரை அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை, அவ்வாண்டில் அவர் முதன்முதலாக ரெப்யுஜீ என்ற படத்தில் தோன்றினார்,
மேலும் அதில் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது. அவர் நடித்த உணர்ச்சி மிக்க இன்ப முடிவுகொண்ட கபி குசி கபி கம் என்ற திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சந்தையில் மிகவும் அதிகமான தொகையை ஈட்டிய இந்தியப்படமாகும் மேலும் வணிகரீதியில் இன்று வரை அவருடைய மிகப்பெரிய வெற்றிப்படமுமாகும்.[2][3]

2002 மற்றும் 2003 ஆண்டுகளுக்கிடையே திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடித்ததற்கு மக்களிடமிருந்து எதிர்மறை விமர்சனம் பெற்றதால், அச்சுமுகமாக தன் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர் துணிச்சலான பாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் விளைவாக, 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அவர் நடிப்பில் பெரும் பல்துறைத்திறமையை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்றார்.[4] சமேலி (2004) என்ற படத்தில் அவர் ஒரு விலை மாதுவாக நடித்தது அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக திகழ்ந்தது மேலும் அதனால் அவருக்கு பிலிம்பேரின் சிறப்பு நடிகைக்கான பரிசும் கிடைத்தது.[5] அதற்குப்பிறகு அவர் பிலிம்பேர் விழாவில், சிறந்த நடிகை என்று திறனாய்வாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட விருதுகளை தேவ் (2004) மற்றும் ஓம்காரா (2006) என்ற படங்களில் திறம்படத்தக்க என்று ஆர்பரிக்கப்பட்ட வகையில் நடித்ததற்கு இரண்டு விருதுகளை பெற்றார்.

2007 ஆம் ஆண்டில், இம்தியாஸ் அலி இயக்கிய ஜப் வீ மெட் என்ற காதல்நயம் கொண்ட நகைச்சுவைப் படத்தில் அவருடைய செயல்திறனுக்கு பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதை ஈட்டினார். அவர் நடித்த படங்களால் பாக்ஸ் ஆப்பீஸ் (கல்லாப்பெட்டி) பணப்பெட்டியில் குவிந்த வருமானத்தொகை மாறுபட்டிருந்தாலும், கரீனா தன்னை ஒரு முதன்மையான தற்காலத்து நடிகையாக இந்தி திரைப்பட உலகில் நிலைநாட்டியுள்ளார்.[6][7][8] கரீனாவின் நிஜ வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்தியாவில்
ஊடகங்கள் காரணமாக எப்பொழுதும் செய்தி கிடைப்பதற்காக நிருபர்கள் பின்தொடர்ந்து சூழ்ந்துகொண்டே இருப்பதால் அவளைப் பற்றியும், அவளுடைய நண்பரான நடிகர் சைஃப் அலி கானைப் பற்றியும் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்துகொண்டே இருந்தன, அவர்கள் இருவரும் மணம் செய்துகொள்ளப்போவதாக வதந்திகள் பரவலாக உலவியது.[

ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்
பஞ்சாபி கத்திரி வம்சத்தை மூலமாகக்கொண்ட திரைக்குடும்பமான கபூரின் இல்லத்தில் மகாராட்டிரத்தில் உள்ள மும்பையில் பிறந்த அவர், நடிகர்களான ரந்தீர் கபூர் மற்றும் பபிதா (அல்லது சிவதாசினியின்) மிகவும் இளைய மகளாவார். அவர் நடிகரும் படத்தயாரிப்பாளருமான ராஜ் கபூரின் பேத்தியாவார், நடிகர் ப்ரித்திவிராஜ் கபூரின் கொள்ளுப் பேத்தியாவார்,
நடிகை கரிஸ்மா கபூரின் தங்கையாவார் மற்றும் நடிகர் ரிஷி கபூரின் உடன் பிறந்தவரின் மகளுமாவார்.[1] கரீனா சொல்வதன்படி, "கரீனா" என்ற பெயர் அன்ன கரேனினா என்ற புத்தகத்தில் இருந்து பிறந்ததாகும், அவளுடைய தாயார் அவளை கருவில் சுமந்த போது அந்த புத்தகத்தை அவர் படித்தார்.[11] அவரை இயல்பாகவே அடிக்கடி பெபோ என்ற பெயரிலும் செல்லமாக அழைப்பதுண்டு.[12][13]

குழந்தைகளாக இருக்கும் போதே, கபூர் சகோதரிகள் நடிகைகளாக வரவேண்டும் என்று கனவு கண்டனர்.[14] குறிப்பாக நடிகைகளான நர்கீஸ் மற்றும் மீனா குமாரி கபூரை மிகவும் கவர்ந்தவர்கள்.[14] இருந்தாலும், அவர்களுடைய குடும்பப்பின்னணி அப்படி அமைந்தபோதும், அவளுடைய தந்தை பெண்கள் படங்களில் நடிப்பதை விரும்பவில்லை ஏன் என்றால் அவ்வாறு செய்வதால் அவளால் தன குடும்பத்திற்குள்ள கடமையை சரிவர செய்ய இயலாமல் போகும் என்ற நம்பிக்கையே ஆகும்.[15] இதனால் அவளுடைய பெற்றோர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வலுத்தது, முடிவில் கபூரின் தாயார் கரீனாவின் தந்தையை பிரிந்து வந்து விட்டார்.[16] 1991 ஆம் ஆண்டில் கரிஸ்மா ஒரு நடிகையாக அறிமுகமாகும்வரை,
லோகன்ட்வாலா என்ற இடத்தில் அவரது தாயார் அவர்கள் இருவரையும் வளர்க்கும் சுமையை ஏற்றுக்கொண்டார் மேலும் அவர்களை கரையேற்ற பல இடங்களில் பணிபுரிந்தார்.[17]

கரீனா முதலில் மும்பையிலுள்ள ஜமுனாபாய் நாற்சீ பள்ளிக்கூடத்தில் படித்தார், அதன் பிறகு தெஹ்ரா தூன்னில் உள்ள வெல்ஹாம் பெண்கள் விடுதிப்பள்ளியில் படிக்கச்சென்றார். மும்பையில் விலே பார்லெயில் உள்ள மிதிபாய் கல்லூரியில் அவர் இரண்டு வருடங்களுக்கு வர்த்தகம் படித்தார்.[14] இருந்தாலும், அங்கு படிப்பது அவருக்கு பிடிக்கவில்லை, ஆனால் அவர் தன் குடும்பத்தின் அருகாமையில் இருந்ததால் படிப்பதை தொடர்ந்து வந்தார்.[14] அதற்குப்பிறகு கரீனா அமேரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் மைக்ரோ கம்ப்யுடருக்கான மூன்று மாத வேனில்காலத்து பயிற்சி வகுப்பிற்காக தன்னை பதிவுசெய்து கொண்டார்.[14] பிறகு சட்டப்படிப்பில் அவர் கவனம் சென்றது மேலும் சர்ச்கேட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.[14] இருந்தாலும், சர்ச்கேட்டில் ஒரு வருடகாலம் முடிந்தபிறகு, கரீனா திரும்பவும் தனது நீண்டநாள் கனவான நடிகை ஆவதற்கு திட்டமிட்டார் மேலும் அந்தேரியிலுள்ள கிஷோர் நாமிட் கபூரின் நடிப்பு நிறுவனத்தில் பயிற்சிகள் பெறத்தொடங்கினார்.[18][19]


தொழில் வாழ்க்கை
அறிமுகம் மற்றும் பெருவளர்ச்சி, 2000-2003
2000 ஆம் ஆண்டில் கரீனா முதலில் ராகேஷ் ரோஷனின் கஹோ நா... ப்யார் ஹை என்ற படத்தில், இயக்குனரின் மகன் ரித்திக் ரோஷனுக்கு எதிராக நடிப்பதாக இருந்தது.[10] இருந்தாலும், படப்பிடிப்பு தொடங்கி பலநாட்கள் கழித்து, அவர் அத்திட்டத்தை கைவிட்டார் மற்றும் பின்னர் "விதிவசால் நான் அந்தப் படத்தில் நடிப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை" என்று குறைப்பட்டுக் கொண்டார். என்ன இருந்தாலும், அந்தப் படம் அவரது மகனை திரை உலகில் நிலை நிறுத்தும் நோக்குடன் தயாரித்த படமாகும். எல்லோர் கவனமும் மகன் மேல் தான் இருந்தது. இப்போது நான் அந்தப்படத்தில் நடிக்கவில்லை என்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்."[14]

பிறகு அதே வருடத்தில் ஜெ.பி. தத்தாவின் ரெப்யுஜீ என்ற போர் குறித்த நாடகத்தில் கரீனா அறிமுகமானார். 1971 ஆண்டின் இந்திய-பாகிஸ்தான் போரை மையமாக கொண்ட அந்தப்படம், ரெப்யுஜீ என்று மட்டுமே அறியப்பெற்ற ஒரு மனிதனை சுற்றிவருவதாகும். (அந்த வேடத்தை முதன் முதலில் அறிமுகமான அபிஷேக் பச்சன் சித்தரித்தார்). அவன் சட்டவிரோதமாக மக்களை இந்தியா-பாகிஸ்தானின் எல்லைக்கு அப்பாலும் இப்பாலும் அழைத்துச்செல்கிறான். கரீனா அப்படத்தில் நாசை என்ற வங்க தேசத்துப் பெண்ணின் வேடத்தை ஏற்றார், அவர் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடிபெயருவதற்கு முயற்சி செய்யும் பொழுது, ரெப்யுஜீயிடம் காதல் வசப்படுகிறார். அவளுடைய அறிமுகத்தோற்றத்தை ரசிகர்கள் யாவரும் பாராட்டினார்கள்; இந்தியா எப் எம் (indiaFM) இன் தரன் ஆதர்ஷ் எழுதினார்: கரீனா கபூருக்கு ஒரு காந்த சக்தியுடைய ஆளுமை இருக்கிறது, அதன் காரணம் அவளை பார்த்தவுடன் ஒருவன் அவளிடம் காதல் கொள்வான். நீங்கள் எதிர்பாராதது என்ன என்றால் அது அவர் மிகவும் கடினமான காட்சிகளிலும் கூட எவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை
வெளிப்படுத்துகிறார் என்பதே [...]அவர் இயற்கையாகவே நடிப்புத்திறன் மிகுந்தவர் மேலும் அவர் படக்கருவிகளுடன் (காமெராவுடன்) நட்பு கொண்டவர் என்பதையும் மறுக்க இயலாது."[20] 2000 ஆம் ஆண்டில் ரெப்யுஜீ மிகையாக பண வருமானத்தை ஈட்டிய படங்களில் ஐந்தாவதாக இருந்ததுடன் கபூரின் நடிப்பு அவளுக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றுத்தந்தது.[21]

2001 ஆண்டில் கரீனாவின் முதல் பாத்திரம் முஜே குச் கஹ்நா ஹை என்ற காதல்நயத்துடன் கூடிய நகைச்சுவைப் படத்திலாகும், அப்படம் அவ்வருடத்தில் மிகையான வருமானத்தை ஈட்டிக்கொடுத்தது.[22] இந்து பத்திரிகையில் வெளிவந்த விமர்சனம், "கரீனா ஒரு கவனிக்கப்பட வேண்டிய ஒரு நடிகையாகும், அவர் அபிஷேக்குடன் அறிமுகமான ரெப்யுஜீ மற்றும் இப்போது முஜே குச் கஹ்நா ஹை ஒரு அடையாளம் என்றால் [...] படம் முழுதும் கரீனா பிரகாசிக்கிறார், இப்பொழுதே அவர் ஒரு பக்குவம் பெற்ற ஆறறிவாளர் போல வெளுத்துக் கட்டுகிறார்" என்று கருத்துரைத்தது.[23] அதற்கு அடுத்ததாக அவர் சுபாஷ் கையின் குடும்ப நாடகமான யாதென் என்ற படத்தில் ஜாக்கீ ஷராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷனுடன் நடித்தார். இதன் கூத்தானது ராஜ் சிங் பூரி என்ற நடுத்தர வகுப்பை சார்ந்த ஒரு குடும்பத்தலைவன் மற்றும் அவன் பெற்ற பெண்களின் திருமண நிகழ்வுகளை சுற்றிவருவதாகும். இப்படத்தில் கரீனா மிகவும் இளைய மகளாக ரோஷனிடம் காதல் வயப்பட்ட, இஷா சிங் பூரியின் வேடம் பூண்டார். படம் வெளிவந்த பிறகு, மக்களிடம் அப்படம் ஒரு கலவையுடன் கூடிய எதிர்வினையை பெற்றது மற்றும் கல்லாப்பெட்டியில் (பாக்ஸ் ஆபீஸ்) சரியான பணவரவு பெறவில்லை.[22][24] அதற்குப்பிறகு கரீனா அப்பாஸ்- மஸ்தானின் அதிர்வு தரும் படமான அஜநபீ யில் நடித்தார். 1992 ஆண்டின் கண்சென்டிங் அடல்ட்ஸ் (ஒப்புக்கொள்ளும் பெரியவர்கள்) என்ற படத்தை ஆதாரமாக கொண்ட இப்படம், இந்தியாவில் சுமாரான கல்லாப்பெட்டி (பாக்ஸ் ஆபீஸ்) வெற்றியை பெற்றுத்தந்தது.[22][25]

பிறகு அதே வருடத்தில், அவர் சந்தோஷ் சிவனின் பழங்காலக்காவியமான அசோகா வில் நடித்தார், அப்படம் அசோகா தி கிரேட் என்ற மன்னரின் வாழ்க்கை முறையை சித்தரிக்கிறது. ஐக்கிய இராச்சியத்திலும் வடக்கு அமெரிக்காவிலும் இப்படத்திற்கு ஒரு நல்ல வலுவான வரவேற்பு இருந்தது. இப்படம் வெனிஸ் நகரத்தில் நடந்த (வெனிஸ் பிலிம் பெஸ்டிவல்) வெனிஸ் திரைப்பட திருவிழாவில் திரையிட்டனர் மற்றும் 2001 ஆம் ஆண்டில் நடந்த டொரோண்டோ
அனைத்துலக திரைப்பட திருவிழாவிலும் திரையிட்டனர்.[26][27] அவருக்கு எதிராக ஷா ருக் கான் அசோகராக நடித்தார், கரீனா கவுர்வகி என்ற பாத்திரத்தை சித்தரித்தார், கலிங்க நாட்டு இளவரசியாகும் வரும் அவர் மீது ஷா ருக் கான் காதல் கொள்கிறார். படத்திற்கு பொதுவாக நல்ல விமரிசனம் கிடைத்தாலும், சில திறனாய்வாளர்கள் கரீனாவின் நடிப்பைப்பற்றி எதிர்வினை கலந்த கருத்துக்களை கொண்டிருந்தார்கள். ரிடிப்ப்.காம் முடிவானது என்ன என்றால், "முதல் பகுதியில் மிக்க நேரமும் ஓடிப்போன இளவரசர் மற்றும் கரீனாவுக்கிடையே மலரும் காதலை சித்தரித்தாலும், மற்றும் அவர்களுக்கிடையே படத்தில் ஒரு விதமான இரசாயன சேர்க்கையினை அவர்கள் திறமையால் உருவாக்கினாலும், அவர் நடிப்புத்திறமையைப்பற்றி என்னால் இன்னும் கூற இயலவில்லை."[28] இருப்பினும், அவர் நடிப்பை சில திறனாய்வாளர்கள் புகழ்ந்தார்கள் மேலும் பிலிம்பேர் விருது களுக்கான நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான வகையில் முதன்மை தெரிவை ஈட்டியது.

2001 ஆம் ஆண்டின் இறுதியில் கரீனா நடித்து வெளிவந்த படம் கபி குசி கபி கம் என்ற படமாகும், அதை கரன் ஜோஹர் இயற்றினார். இப்படம், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஷா ருக் கான், கஜோல் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் போன்றவர்களின் குழுவைக்கொண்டதாக இருந்தது, மேலும் அப்படம் அவ்வாண்டின் வணிகரீதியில் மிகையாக வெற்றிபெற்ற படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது மற்றும் கரீனாவின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அனைத்துலக அரங்கிலும் அது நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலிவுட்டின் வெற்றியாக திகழ்ந்தது, அதற்கு கிடைத்த தொகை மொத்தம் 1,000 மில்லியன்($22.5 மில்லியன்)ஆகும். அவர் சித்தரித்த 'பூ' என்ற கதாபாத்திரம் திறனாய்வாளர்களின் நன்மதிப்பை பெற்றது மேலும் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தெரிவையும் பெற்றது.[29]

2002 மற்றும் 2003 ஆண்டுகளில், அவர் தனது தொழில்வாழ்க்கையில் ஒருசரிவைக் கண்டார். அவர் ஆறுபடங்களில் நடித்தார் - முஜே தோஸ்தி கரோகே ! , ஜீனா ஸிர்ப் மேரே லியே ,Talaash: The Hunt Begins... குசி, மை பிரேம் கி திவானி ஹூன், மற்றும் நான்கு மணிநேரப்போர் காவியமான எல் ஒ சி கார்கில் - அவையாவும் இந்தியாவில் இக்கட்டு நிறைந்ததாகவும், வணிகரீதியாக தோல்வியை தழுவியதாகவும் திகழ்ந்தது.[30][31] கபூரின் நடிப்பு மிக்கவாறும் பல திறனாய்வாளர்களால் சுமாறானதாகவும், திரும்பத்திரும்ப ஒரேபோன்றதுமாகவும், உத்வேகம் குறைந்தும் இருந்ததாக அவர்கள் கருதினர்.[32][33] அவர் ஒரு அச்சுமுகமாக மாறி வருவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர் ஆனால் இவ்வகையான எதிர்மறை விமர்சனங்கள் அவரை ஒரு நடிகையாக இருப்பதற்கான ஒருமைப்பாட்டை வரும் காலத்தில் மேம்படுத்த தூண்டுவதற்கு அடிப்படை காரணிகளாக இருந்தன மற்றும் மேலும் உத்வேகத்துடன் கூடிய பாத்திரங்களில் நடிக்க ஊன்றுகோலாகவும் இருந்தன.[5][34]

திருப்புமுனை, 2004–2006

கபூரின் தொழில்வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்மறை காலத்திற்கப்பால், 2004 ஆம் ஆண்டு முதல் அவர் மேலும் தீவிரமான பாத்திரங்களில் நடிக்கத்தொடங்கினார், அவை வணிகரீதியாக வெற்றிபெறவில்லையானாலும், அவற்றில் மிக்கவை அவருக்கு பெருமையை தேடித்தந்தன.[5][34] சுதிர் மிஸ்ரா இயக்கிய சமேலி என்ற படத்தில் ராகுல் போசிற்கு எதிராக கரீனா ஒரு விலைமாதர் வேடத்தில் நடித்தார். இந்தப்படத்தில் ஒரு இளவயது விலைமாது ஒரு மனைவியை இழந்த முதலீட்டு வங்கியாளரை சந்திக்கிறார் மற்றும் இருவரும் அவர்களுடைய இடிந்துபோன வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துகொள்கின்றனர் மற்றும் அவர்களுடைய உறவு இவ்வாறு தொடர்ந்து வலுவடைகிறது. சமேலி படத்திற்கு மேம்பட்ட ஐயமில்லாத விமரிசனம் கிடைத்தது மற்றும் கபூரின் நடிப்பை பொதுவாக
திறனாய்வாளர்கள் வரவேற்றனர், மற்றும் இந்தியா டைம்ஸி ன் விமரிசனம் "கரீனாவின் அருமையான உள்ளுணர்வுகளை" புகழ்ந்து, அவர் எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் மீறிவிட்டதாக சான்றுரைத்தது.[35] இருந்தாலும், மற்றொரு திறனாய்வாளர் கபூரின் நடிப்பு உப்புசப்பில்லாததாக அச்சுவார்த்ததுபோல இருந்ததாகவும், மேலும் அவர் "ஒரு பதின்வயதினர்போல் நடித்ததாகவும், ஆனால் ஒரு செயலறிவற்ற, மனம் கனத்துப்போன தெருக்கூத்தாடியைப்போல் அது இருக்கவில்லை என்று குறைகூறினார் மற்றும் படத்தில் அவளுடைய நடையுடைபாவனைகள் ஒரு கேலிச்சித்திரம் போல் இருந்ததாகவும் சூளுரைத்தார்.[36] எனினும், கபூரின் நடிப்பு அவருக்கு பிலிம்பேரின் சிறப்பு நடிகைக்கான விருதை கிடைக்கவைத்தது, மேலும் அவரது தொழில்வாழ்க்கையின் போக்கில் ஒரு மாறுபாட்டை காண முடிந்தது.[37]

அதற்குப்பிறகு கரீனா அமிதாப் பச்சன் மற்றும் பார்தீன் கானுடன் கோவிந்த் நிஹலானியின் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற தேவ் என்ற படத்தில் தோன்றினார், அப்படமானது இந்தியாவில் குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரங்களை மையமாக கொண்டதாகும்.[38] அதில் கரீனா ஆலியா என்ற ஒரு முஸ்லீம் பலியாட்டின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், அப்பாத்திரம்
வடோதராவில் நடந்த பெஸ்ட் பேகரி வழக்கில் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக்கை ஆதாரமாக கொண்டதாகும்.[38] இந்தப்படம் அவருக்கு பிலிம்பேரின் திறனாய்வாளர்களின் சிறந்த நடிப்பிற்கான விருதைப் பெற்றுத்தந்தது, மேலும் வேறுபல விருது வழங்கும் விழாக்களில் சிறந்த நடிகை க்கான தெரிவிலும் அவர் பெயர் முன்மொழியப்பட்டது. தரன் ஆதர்ஷ் சொன்னது, "கரீனா கபூர் முதல் தரமாகும். கவர்சியில்லாத ஒரு நோக்குடன், இந்த நடிகை ஒரு பெரிய சாதனையே படைத்துவிட்டார். அமிதாப் பச்சனுடன் ஒரு காட்ச்சியில், (அவர் சாட்சிகளை முன்னுக்கு வருமாறு அழைத்தபோது) அவருடைய நடிப்பு ஒரு உயர்ந்த எடுத்துக்காட்டாகும்."[39]

சிறிது நாட்களில், பிடா என்ற எழுச்சியூட்டும் படத்தில் முதல்முறையாக (சாகித் கபூர் மற்றும் பர்தீன் கானுக்கு எதிராக) தீயவள் வேடம் பூண்டார். இப்படம் வலைத்தளத்தில் திருட்டு நடப்பது மற்றும் மும்பையின் பாதாளவுலகம் போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கிறது. இப்படம் வணிகரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், அவர் நடிப்புக்காக கரீனா நல்ல பாராட்டை பெற்றார், மேலும் சில திறனாய்வாளர்கள் அவளுடைய முந்தைய பாத்திரங்களை சுட்டிக்காட்டி தனிப்பட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டார்கள்.[40][41] அதற்குப்பின் வெளிவந்த அவளுடைய படங்களானது அப்பாஸ் மஸ்தானுடைய சுமாரான எழுச்சியூட்டும் படமான ஐத்ராஜ் மற்றும் பிரியதர்சனின் நகைச்சுவைப் படமான ஹல்ச்சல், அதுவே 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு கல்லாப்பெட்டி நிறைந்த முதல் வெற்றிப்படம்.[40]

2005 ஆம் ஆண்டில், தர்மேஷ் தர்சன் இயக்கிய படமான பேவபா வில் நடித்தார். இப்படத்தில் கரீனா அஞ்சலி என்ற ஒரு இந்திய-கானடியப் பெண்ணாக தோன்றினாள், அவர் தன்னுடைய சகோதரியின் இறப்பிற்குப்பிறகு அவள் கணவனை மணக்கிறார், ஆனால் அந்த திருமணவாழ்க்கை மனதிற்கு ஒவ்வாதுபோனதால் அவர் தன்னுடைய முந்தைய நண்பனுடனான நட்பை மீண்டும் துவங்குகிறார். இந்தப்படம் எதிர்மறை விமரிசனங்களுக்கு ஆளாயிற்று மற்றும் கபூரின் நடிப்பு மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.[42] இந்தியா டைம்ஸி ன் நிகத் கஜ்மி கரீனா ஒரு தீவிரமான நடிகையாக ஆவதற்கான முயற்சியில், கரீனா பேவபா வில் ஒரு முதிர்ந்த மற்றும் தளர்ந்துவிட்ட பாத்திரத்தில் அவளுடைய வயதுக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் உருக்கொடுக்க நினைப்பது, அவள் வயதுள்ள பெண்களுக்கு விசித்திரமாக காட்சியளித்ததாக நம்புகிறார்.[42]

அதற்க்கப்புறம் அந்த வருடத்தில், அவர் பிரியதர்சனின் காதல்நயம்கொண்ட படமான க்யோன் கி யில் நடித்தார். இந்தப்படம், மனநிலை சரியில்லாதோர்களுக்கான ஒரு மருத்துவமனையில் எடுத்தது, ஒரு மனநிலை குன்றிய நோயாளியின் காதல்கதையை சித்தரிக்கிறது, அவ்வேடத்தில் சல்மான் கான் நடித்தார், மேலும் அவருடைய மருத்துவராக, கரீனா கபூர் நடித்தார். இந்தப் படம் வணிகரீதியில் தோல்வியை தழுவியது,[43] ஆனால் கபூரின் நடிப்பு பொதுவாக திறநாய்வாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, மற்றும் பிபிசி தெரிவித்தது, "நடிப்பைப்பொறுத்த வரை அவர் ஒரு இயற்கையைப்போல் தூய்மையானவர் என்பதை சொல்லாமல் சொல்லலாம்" என்பதாகும்.[44] கரீனா அப்புறம் அக்ஷய் குமார், போபி தியோள், மற்றும் லாரா தத்தாவுடன் இணைந்து காதல் படத்தில்நடித்தார். இந்தியாவில் வெற்றிபெறவில்லை என்றாலும், அப்படம் 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யுனைடெட் கிங்டம்) மிகையாக வருவாயினை ஈன்றெடுத்த பாலிவுட் படமாகும்[45]

2006 ஆம் ஆண்டில், கரீனா மூன்று படங்களில் தோன்றினார். 36 சைனா டவுன் என்ற மனதை தூண்டும் படத்தில் முதலில் நடித்தார், அதற்குப்பின்னர் சுப் சுப் கே என்ற நகைச்சுவைப் படத்தில் நடித்தார், இரு படங்களும் நல்ல விமரிசனங்கள் பெற்றன.[46] அடுத்ததாக வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ என்ற நாடகத்தைத்தழுவிய ஓம்காரா என்ற ஹிந்திப்படத்தில் அவர் டெஸ்டெமோனாவிற்கு சமமான பாத்திரத்தில் நடித்தார். விஷால் பரத்வாஜ் இயக்கிய இந்தப்படம், உத்தரப்பிரதேச அரசியல் முறைமையை பின்னணியாக கொண்டு மற்றும் பாலியல் சார்பான பொறாமை காரணமாக விளைந்த பெருந்துன்பத்தை சித்தரிக்கிறது.[47] இந்தப்படத்தின் முதல் காட்சி 2006 ஆம் ஆண்டு நடந்த கான் திரைப்பட விழா வில் திரையானது மற்றும் கைரோ அனைத்துலக திரைப்பட விழா வில் திரையிடுவதற்கும் தெரிவானது.[48][49] ஓம்காரா திறனாய்வாளர்களின் நன்மதிப்பை பெற்றது மற்றும் கபூரின் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள், அதன் மூலம் அவருக்கு நான்காவது பிலிம்பேர் விருது கிடைத்தது மேலும் முதன் முதலான ஸ்டார் ஸ்க்ரீன் விருதும் கிடைத்தது. ரிடிப்ப்.காம் வழங்கிய முடிவுரை, "அவர் நடித்த பாத்திரம் நடிப்பதற்கு மிகவும் கடினமான ஒன்றாகும், ஏன் என்றால் அவர் காதலிலும் சிக்கி பயபக்தியிலும் தவிக்கிறாள், அச்சமும் திகைப்பும் அவளை ஆட்கொள்கின்றன, தந்தையை எதிர்க்கவும் துணிகிறாள் மேலும் கடைசியில் அவளை ஆட்கொண்டவரிடம் பணிகிறாள். கரீனாவிற்கு பேசுவதற்கு (வசன)வரிகளில்லை, ஆனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஏராளமான சந்தர்ப்பங்கள் அமைகின்றன, மேலும் அவர் அதை மிகவும் சரியாக பயன்படுத்தியுள்ளார்."[50] கரீனா அவர்களே ஓம்காரா வில் தான் நடித்த பாத்திரத்தை தனது தொழில்வாழ்க்கையில் ஒரு "புதிய மட்டக்குறி"யாக கருதுகிறார் மேலும் கரீனா டாலி என்ற பாத்திரத்தில் நடித்ததையும், மேலும் தன வாழ்க்கையில் அவர் ஒரு பெண்ணாக முதிர்ந்து வருவதையும் எண்ணி அவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.[8]

அண்மைக்காலப் பணி, 2007–முதல் தற்போது வரை.

2007 ஆம் ஆண்டில், கரீனா ஷாகித் கபூருக்கு எதிராக இம்தியாஸ் அலியின் காதல்நயம்கொண்ட நகைச்சுவைப்படமான ஜப் வீ மெட் டில் நடித்தார். இரு வேறுபட்ட மனோபாவங்கள் கொண்ட மக்கள் ரயிலில் பயணிக்கும்போது சந்தித்து மற்றும் இறுதியில் காதல்வயப்படும் இக்கதையில், கரீனா கீத் தில்லண் என்ற படைப்பில் முதன்மை வாய்ந்த, சீக்கியரினத்தை சார்ந்த, வாழ்க்கையை உற்சாகம் மிக்க ஆர்வத்துடன் ரசித்துவாழத்துடிக்கும் பெண்ணாக தோன்றுகிறார். இப்படம் திறனாய்வாளர்களால் நன்றாக வரவேற்கப்பெற்றது. மேலும் அவ்வருடத்தின் மிகவும் வெற்றிபெற்ற படங்களில் ஒன்றாக அது திகழ்ந்தது, அதன் மூலம் உள்நாட்டில் கிடைத்த மொத்த வருமானமானது ரூ 303 மில்லியன் (US$ 6.45 மில்லியன்) ஆகும்.[51] கரீனா அவருடைய நடிப்பிற்காக பல விருதுகளைப்பெற்றார், அதில் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதும் அடங்கும் மேலும் அவருக்கு அவருடைய இரண்டாவது ஸ்டார் சிறப்பு நடிகைக்கான திரைப்பட விருதும் கிடைத்தது. சிஎன்என்-ஐபிஎன் (CNN-IBN) னின் ராஜீவ் மசாந்த் குறிப்பிட்டது, "தடையில்லாமலும் இயல்பாகவும் நடித்த கரீனா கபூர் இப்படத்தின் ஆத்மாவாகும், இப்படத்தின் மிகப்பெரிய வலிமை, அவர் அந்த சூட்டிகையான வசனங்களோடு மட்டுமல்லாமல், இதர நடிகர்களிம் காண இயலாத ஒரு விதமான வெளிப்படைத்தன்மையுடன் அந்த பாத்திரத்தை சித்தரித்து உயிர்கொடுத்திருக்கிறார்."[52]

ஜப் வீ மெட் டிற்குப்பிறகு, கரீனா அக்ஷய் குமார், ஸைப் அலி கான் , மற்றும் அணில் கபூருடன் தஷான் என்ற சண்டைக்காட்ச்சிகள் நிறைந்தபடத்தில் (2008) நடித்தார். இந்தியா எப்எம் (indiaFM) என்ற நிறுவனம் நடத்திய வாக்களிப்பு அப்படத்தை அவ்வருடத்தின் மிகுந்த எதிபார்ப்புகளுடன் கூடிய படமாக கோஷித்தபோதும்,[53] நாளடைவில் தஷான் வணிகரீதியிலும் மற்றும் உய்யநிலையிலும் தோல்வியை தழுவியது.[54][55] அடுத்ததாக கரீனா யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னீ பிக்ச்சர்சின் கார்டூன் படமான ரோட்சைட் ரோமியோ (Roadside Romeo) வில் லைலா என்ற தெருநாய்க்கு குரல் கொடுத்தார், அந்த நாய் ரோமியோ என்ற தெருநாயின் காதல்நாயகியாகும். ஒரு ஹாலிவுட் ஸ்டுடியோவால் வடக்கு அமெரிக்காவில் வெளியிட்ட பாலிவுட்டின் இரண்டாவது படம் இதுவேயாகும்.[56] இதற்கு ஆயத்தம் செய்வதற்காக, கரீனா பல ஹாலிவுட் அசைவூட்டிய படங்களை பார்த்து நடிகர்கள் எப்படி குரல் கொடுத்தனர் என்பதை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தார்.[57] கரீனா இதர திட்டங்களில் கவனம் செலுத்தியதால், இப்படத்தை சரியாக ஆதரிக்காமல் விட்டதற்காக திறனாய்வாளர்கள் குறை கூறினர்.[58]

2006 ஆம் ஆண்டில் வெளிவந்த கோல்மால் என்ற படத்தை ஆதாரமாக கொண்டு, அதன் பின்தொடற்சியாக வந்த கோல்மால் ரிடேர்ன்ஸ் என்ற ரோஹித் ஷெட்டியின் நகைச்சுவைப் படத்தில் கரீனா அடுத்ததாக நடித்தார். அஜய் தேவ்கன், அர்ஷத் வார்சி, துஷார் கபூர், ஸ்ரேயஸ் தால்பாடே, அம்ரிதா அரோரா, செலினா ஜைத்லீ, மற்றும் அஞ்சனா சுகானி போன்றோர் அடங்கிய ஒரு நடிகர்களின் குழுமத்தின் அங்கமாக இருந்து, கரீனா தனது கணவனின் கற்பை சந்தேகிக்கும் மனைவியாக நடித்தார். இந்தப்படத்திற்கு திறநாய்வாளர்களிடமிருந்து ஒரு கலவையான விமரிசனம் கிடைத்தது மற்றும் கபூருக்கு கலவையுடன் கூடிய விமரிசனமே பெற்றுத்தந்தது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் திரைக்கதை உயிரூட்டம் இல்லாததாக குறிப்பிட்டது மேலும் "கணவன் மீது சந்தேகம் கொண்ட ஒரு பெண்மணி குறிப்பாக தன் கணவன்மீது ஒரு கண் வைத்திருப்பது பெரிய நூதனமான விசயமல்ல, மேலும் அந்த பாத்திரத்தை கையாள்வதில் கரீனா புதுமை எதையும் புகுத்தவுமில்லை."[59] இருந்தாலும், கோல்மால் ரிடேர்ன்ஸ் ஒரு பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்தது, ரூ 793 மில்லியன்($17.84 மில்லியன்) மற்றும் உள்நாட்டில் மட்டும் மேலாக வருமானம் ஈட்டியது.[54]

2009 ஆம் ஆண்டில், கரீனா அக்ஷய் கானுடன் கம்பக்த் இஷ்க் என்ற சபீர் கானின் நகைச்சுவைப்படத்தில் நடித்தார். இரு வேறுபட்ட மனிதர்களிடையே நிலவும் உறவுகளை ஆராய்ந்து பார்க்கும் இப்படம், இந்தியப்பட வரலாறில் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்டின் யூனிவெர்சல் ஸ்டூடியோஸ் ஹாலிவுட் டில் படமானது மேலும் பல ஹாலிவுட் நடிகர்கள் சிறு வேடங்களில் அவ்வப்போது தோன்றினார்கள்.[60] கரீனா சிம்ரிதா ராய் என்ற பாத்திரத்தில் நடித்தார், ஒரு பகுதிநேர முதன்மையான முன்மாதிரியாகவும், மற்றும் ஒரு அறுவை மருத்துவநிபுணராக விரும்பும் பெண்ணாகவும் அவர் இருந்தார். படம் வெளிவந்த பிறகு, படத்திற்கு எதிர்மறை விமரிசனங்கள் குவிந்தன மேலும் கபூரின் நடிப்பு சரிவர வரவேற்கப்படவில்லை.[61] தி டைம்ஸ் ஒப் இந்தியா அவர் நடிப்பை "ஒரு முழுமையான ஏமாற்றம்" என்று விவரித்தது மட்டுமல்லாமல், "அவர் ஒரு முதன்மையான முன்மாதிரியாகவோ, அல்லது ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவோ, இருப்பதாக தெரியவில்லை" என்று சூளுரைத்தது.[62] இருந்தாலும் இப்படம் பொருளாதார வெற்றி அடைந்தது, மேலும் உலகளவில் சுமாரான வருமானத்தை ஈட்டியதுரூ 840 மில்லியன்($18.9 மில்லியன்)

ஆகஸ்ட் 2009 வரையான நிலவரத்தின் படி, கரீனா பிரேம் சோனியின் படமான மை அவுர் மிஸ்ஸிஸ். கன்னா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, அதில் அவர் சல்மான் கானுடன் நடிக்கிறார்.[63] மேலும் அவர் ராஜ்குமார் ஹிரானியின் த்ரீ இடியட்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார், அதன் முக்கிய படப்பிடிப்பு ஜுலை 2008 ஆம் ஆண்டில் தொடங்கியது.[64]

இதர பணி(கள்)
அவர் திரைப்படத்துறையில் இருந்த காலங்களில், கரீனா தனது நேரத்தை இதர கடமைகளில் செலவழிக்கத்தவறவில்லை, அவர் மனிதநேயப்பணிகளுக்காக தன் நேரத்தை செலவழித்தார் மற்றும் மேடை நாடகங்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 2002 ஆம் ஆண்டில், கரீனா தனது முதல் உலகப்பயணத்தை மேற்கொண்டார், ஹார்ட்த்ரோப்ஸ் கான்செர்ட் (the Heartthrobs Concert) (இதயத்துடிப்புகளின் கச்சேரி), என்ற நிகழ்ச்சியில், ஹ்ரித்திக் ரோஷன், கரிஸ்மா கபூர், அர்ஜுன் ராம்பால், மற்றும் ஆப்தாப் ஷிவ்தாசனி போன்றோருடன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி அமெரிக்கா மற்றும் கனடா முழுதும் நடந்தது மேலும் அது வெற்றிவாகை சூடியது.[65] நவம்பர் 2003 ஆம் ஆண்டில், கரீனா உலக இளைஞர் அமைதி மாநாடுக்காக நிதி திரட்ட மார்கோ ரிச்சி ஈச் ஒன் ரீச் ஒன் பெனிபிட் கான்செர்ட் (the Marco Ricci Each One Reach One Benefit Concert) என்ற நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றார், மற்றும் 2005 ஆம் ஆண்டில், இதர பாலிவுட் நட்ச்சத்திரங்களுடன் ஹெல்ப் ! டெலேதோன் கான்செர்ட் (HELP!Telethon Concert) என்ற நிகழ்ச்சியில் 2004 ஆம் ஆண்டில் இந்திய மகாசமுத்திரத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கித்தவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பங்குகொண்டார்.[66] அதற்குப்பின் அந்த வருடத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் இதயமாகவுள்ள பாலைவனங்களுக்கு சென்று நமது ஜவான்களை ஊக்கமளிப்பதற்காக என்டிடிவி NDTV யின் காட்சியான, ஜெய் ஜவான் என்ற நிகழ்ச்சியில் ஹோலி பண்டிகை கொண்டாடும் வாரத்தை ஜவான்களுடன் குதூகலமாக கலந்து கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியானது, கேளிக்கை செய்வோர் மற்றும் நட்ச்சத்திரங்கள் என்டிடிவி யின் குழுமத்துடன் ஆங்காங்கே தனிமையில் வாடும் இந்திய துருப்பினரை சென்று கண்டு அவர்களை மகிழ்விப்பதேயாகும்.[67]

2006 ஆம் ஆண்டில், கரீனா சல்மான் கான், சயெத் கான், ஜான் அப்ரகாம், ஷாகித் கபூர், ஏஷா தியோள் மற்றும் மல்லிகா ஷேரவாத் ஆகியோருடன் ரோக்ச்டார்ஸ் கான்செர்ட் (Rockstars Concert) நடத்திய உலகசுற்றுலாவில் கலந்துகொண்டார்.[68] அதற்கடுத்த வருடத்தில், கரீனா, பிரியங்கா சோப்ராவுடன், கோன் பனேகா குரோர்பதி என்ற ((Who Wants to Be a Millionaire?) யார் கரோட்பதியாக விரும்புகின்றனர் என்பதன் இந்திய பதிப்பில்) வென்ற அவளுடைய பகுதி பங்கான ஐந்து மில்லியன் ரூபாயை, செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லம் மற்றும் மவுண்ட் மேரியின் பாந்த்ராவிற்கு நன்கொடையாக வழங்கினார்.[69] ஜூன் 2008 ஆம் ஆண்டில், கரீனா விளையாட்டு நிகழ்ச்சியான க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹைன்? என்ற நிகழ்ச்சியில் அவளுடைய நண்பன் ஸைப் அலி கானுடன் கலந்துகொண்டார், மற்றும் அவருக்கு வெற்றியின் காரணமாக கிடைத்த தொகையின் பகுதிபங்கை, பாந்த்ராவில் உள்ள செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லத்திற்கு[70] நன்கொடையாகரூ5,000,000 ($112,500) வழங்கினார். 2009 ஆம் ஆண்டிலும், தஸ் கா தம் என்ற நிகழ்ச்சியின் மூலமாக வென்ற தொகையை, அவர் மீண்டும் செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக [71][71] வழங்கினார்.

கரீனா பல வணிகச்சின்னங்களை ஆதரித்து வந்துள்ளார், அவற்றில் குர்குரே மற்றும் ஆடைகளின் சங்கலித்தொடரான க்லோபஸ் நிறுவனம் போன்றவை அடங்கும்.[72] கரீனா க்லோபஸ் என்ற வணிகச்சின்னத்தின் உலகளாவிய தூதராகும், மற்றும் அவ்வணிகச்சின்னத்தின் விளம்பரங்களில் தோன்றி வருகிறார்; அவர் தொடர்ந்துவந்ததில் இருந்து, அவ்வணிகச்சின்னத்தின் பொருட்களின் விற்பனை 75 விழுக்காட்டையும் தாண்டியுள்ளது.[73]

தனிப்பட்ட வாழ்க்கை
ஒரு மனிதன் சூட் அணிந்தும் மற்றும் ஒரு பெண் சேலையணிந்தும்
கரீனா தனது பாய் ஃப்ரெண்ட் ஸைப் அலி கானுடன் 2008 ஆம் ஆண்டின் 53 ஆவது பிலிம்பேர் விருது விழாவில்.
2004 ஆம் ஆண்டில், கரீனா நடிகர் ஷாகித் கபூரை அடிக்கடி சந்திக்கத்தொடங்கினார்,[74] ஆனால் ஜப் வீ மெட் படப்பிடிப்பு நடக்கும்போது, 2007 ஆம் ஆண்டில் அவர் அவரிடமிருந்து ஒரேயடியாகப் பிரிந்தார்.[75][76] செப்டம்பர் 2007 ஆம் ஆண்டில், அவர் ஸைப் அலி கானை சந்திப்பதாக ஊகம் பரவலாக பரவியது. அக்டோபர் 18, 2007 ஆம் ஆண்டில், லக்மே பேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் மனிஷ் மல்ஹோத்ராவின் பிரம்மாண்டமான இறுதிக்காட்சி நடைபெறுகையில், கான் அவர்கள் இருவரிடையே நிலவிய உறவினை ஊடகங்களுக்கு உறுதி செய்தார்.[9][77][78]

கரீனா அவர் குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கம் கொண்டிருந்தார்,[79] மற்றும் அவர் தாயார் பபிதாவுடன் வாழ்க்கையின் மிக்க நாட்களையும் கழித்தார். கரீனா அவர் தாயாருடன் லோக்ண்ட்வாலா வில் சேர்ந்து வாழ்ந்தார்கள் மற்றும் அதற்குப் பிறகு பல வருடங்களுக்கு மும்பையில் உள்ள பாந்த்ராவில் பார்க் அவேநியூவிலும் வசித்து வந்தார்கள். மேலும் 2008 ஆம் ஆண்டில், கரீனா மற்றும் அவர் தாயார், அக்ஷய் குமாரின் மனைவியான டிவிங்கிள் கன்னா வடிவமைத்த மும்பையிலுள்ள கார் என்ற இடத்தில் அடுத்தடுத்துள்ள கட்டிடங்களை வாங்கி அதில் வசித்தனர்.[80] கரீனா தமது ஒய்வு நேரங்களில் புத்தகப்புழுவாக இருப்பதாகவும் மற்றும் நீச்சல் குளத்தில் நீச்சலடிப்பதாகவும் கூறியுள்ளார்.[14]

கரீனாவின் எடை மற்றும் பத்தியமுறை ஊடகங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய விஷயமாகும். 2006 ஆம் ஆண்டில், கரீனா தன் எடையைக் குறைப்பதற்காக சைவ உணவிற்கு மாறுவதாக தெரிவித்தார்.[81] கரீனா பசியின்மை காரணமாக தவிப்பதாகக் கூறும் வதந்திகளை மறுக்கிறார் மற்றும் தனது குறைவான எடைக்கு யோகா மற்றும் மிகவும் கவனத்துடன் கண்காணிக்கும் சமச்சீரான உணவே என்று வாதாடுகிறார்.[73][82] 2008 ஆம் ஆண்டில், தஷான் படப்பிடிப்பின்போது எடைகுறைந்து படப்பிடிப்பு மேடையில் மயங்கி விழுந்தபோது, ஊடகங்களில் அவளுடைய உடல்நலம் பற்றிய செய்திகள் பரவலாக இருந்தது. அவர் இந்நிகழ்ச்சியை ஒரு சாதாரண உடல் நல பாதிப்பே என்று கூறி முத்தாய்ப்பு வைத்துவிட்டார்.[82]

ஊடகங்களில்
கரீனா அவர்கள் 2000 ஆம் ஆண்டிற்குப்பின்னரே படங்களில் நடிக்க அறிமுகமானாலும், திரைப்படத்துறையில் மிகவும் ஆழமாக வேரூன்றிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவளானதால், கரீனா தமது சிறு வயதினிலேயே ஊடகங்களின் இடைவொளிக்கு காரணமானார்.[14] குழந்தையாக இருக்கும் போதே, கரீனா அவர் தாயார் பபிதா மற்றும் சகோதரி கரிஸ்மா கபூருடன் பல விருது வழங்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் மற்றும் அவர் சகோதரியின் படப்பிடிப்பின் போதும் அவர் அவளுடைய சகோதரியுடன் கூட படப்பிடிப்புக்கு வருவார்.[79] முன்னதான வருடங்களிலேயே, ஊடகங்களின் யூகங்களை மனதில் கொண்டு, கரீனா ஊடகங்களுடன் ஒரு அமைதியான உறவுமுறைகளை பூண்டார் மற்றும் அவர் தன்னுடைய தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையைப்பற்றி ஒளிவுமறைவின்றி பேசும் திறமையை ஊடகங்களுடன் தடையில்லாமல் வளர்த்துக் கொண்டதற்கு பெயர்பெற்றவரானார்.[83][84]

2005 ஆம் ஆண்டின் போது, கரீனா கரன் ஜோஹரின் பேட்டி நிகழ்ச்சியான காபி வித் கரன் (Koffee with Karan) என்ற நிகழ்ச்சியில் ராணி முகெர்ஜி யுடன் பங்கேற்றார், மேலும் இரு ஆண்டுகளுக்குப்பிறகு அவர் ஷாகித் கபூர் மற்றும் கரிஸ்மா கபூருடன் பேட்டி கொடுத்தார்.[85][86] அதற்கடுத்த வருடத்தில், அவர் பிரியங்கா சோப்ராவுடன் இந்தியன் ஐடல் என்ற பாட்டுத்திறமையை கண்டறியும் திறமை போட்டியினை சோதிக்கும் ஒரு விருந்தாளி நடுவராக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[87] பல மாதங்களுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற பேஷன் வீக் 2006 என்ற நிகழ்ச்சியில், கரீனா மற்றும் நடிகர்களான ஷாகித் கபூர் மற்றும் உர்மிளா மடோன்கர் ஆகியோர் வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா வின் பேஷன் காட்சியான, பிரீடம் என்ற தலைப்புகொண்ட நிகழ்ச்சியில், மாதிரியாக இருந்து சரிவு மேடையில் உடைகளை காட்சிவைக்கும்படி நடந்துசெல்ல தெரிவு செய்யப்பட்டனர்.[88] 2007 ஆம் ஆண்டில், கரீனா மற்றும் பல்வேறு பாலிவுட்டை சார்ந்த பிரமுகர்கள் சண்டிகரில் கபில் தேவி ன் இந்தியன் கிரிக்கெட் லீகின் (ICL) [89] திறப்பு விழாவில் மேடையில் நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டினர். ஜூன் 2008 ஆம் ஆண்டில், கரீனா மறுபடியும் மனிஷ் மல்ஹோத்ராவின் பேஷன் கலைக்காட்ச்சிக்கு மாதிரியாக 2008 ஆம் ஆண்டின் ஐஐஎப்ஏ (IIFA) பேஷன் கலைவிழாவில் பங்கேற்றார்.[90]

கரீனா ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஊடகங்கள் நடத்தும் வாக்களிப்பு தெரிவுகளில் பங்கேற்கிறார். 2004 ஆம் ஆண்டில், ரிடிப்ப் நடத்திய "முதன்மை பெற்ற பெண் நட்சத்திர நடிகைகளின்" பட்டியலில், கரீனா மூன்றாம் இடத்தை பிடித்தார்.[91] பிறகு அவர் 2005-2006 ஆண்டுகளில் ஏழாவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையாக பிடித்தார் மற்றும் 2007 ஆம் ஆண்டில், மீண்டும் மூன்றாம் இடத்திற்கு திரும்பி வந்தார்.[7][92][93] பெப்ரவரி 2007 ஆம் ஆண்டில், கபூர் இன்டியாடைம்ஸ் பட்டியலிட்ட "பாலிவுட்டின் முதன்மை பெற்ற முதல் 10 நடிகைகளின்" தர வரிசையில் நான்காவதாகவும்,[94] பிறகு அவ்வருடத்தில், இந்த நடிகை U.K. நாட்டு பத்திரிகையான ஈஸ்டேர்ன் ஐய்யில் "ஆசியாவின் மிகவும் விரும்பத்தக்க பெண்ணாக" எட்டாவது இடத்தில் தெரிவு செய்தது.[95] கரீனா பல்வேறு சைவ உணவு விருதுகளையும் வலைதள ஆன்லைனில் பெற்றுள்ளார், பிஈடிஏ இந்தியா (PETA INDIA) நிறுவனம் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவின் "சைவ உணவு உண்ணும் அழகான பெண் பிரமுகியாக" தெரிவு செய்யப்பட்டார்.[96] மார்ச் 2009 ஆம் ஆண்டில், பிலிம்பேர் பத்திரிகையின் வருடாந்தர "சக்திவாய்ந்த மக்கள் பட்டியலில்", பாலிவுட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பத்து மக்களின் வரிசையில் பெண்களில் அவர் மட்டுமே இடம் பெற்றார்.[97]




திரைப்பட விவரம்[தொகு]

ஆண்டு(திரைப்படம்)பாத்திரம்மற்ற குறிப்புகள்
2000அகதிநஸ்நீன்
"நாஜ் " எம். அஹ்மத்
வெற்றியாளர், பிலிம்பேர் சிறந்த பெண் அறிமுக விருது
2001முஜே குச் கஹ்நா ஹைபூஜா சாக்செனா
யாதேன்இஷா சிங்க் புரி
அஜநபீபிரியா மல்ஹோத்ரா
அசோகா (2001)கவுர்வகிபரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
கபீ குசி கபீ கம்பூஜா "பூ" ஷர்மாபரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது
2002முஜ்ஸே தோஸ்தி கரோகேடினா கபூர்
ஜீனா சிர்ப் மேரே லியேபூஜா /பிங்கி
2003.தலாஷ்: தி ஹன்ட் பெகின்ஸ் ...போர்ட்லாந்து,ஆரிகன், டாக்கி, டினா பிரஸ்(2003).
கபீ குசி கபீ கம்குஷி சிங்க் (லாலி)
மைன் பிரேம் கி திவானி ஹூன்சஞ்சனா
எல் ஒ சி கார்கில்சிம்ரன்
2004சமேலிசமேலிவெற்றிபெற்றவர் , பிலிம்பேரின் சிறந்த நடிபிற்கான விருது.
யுவாமீரா
தேவ்ஆலியாசிறந்த நடிப்புக்கான பிலிம்ஃபேர் கிரிட்டிக்ஸ் விருது வென்றார்
ஜப் நஹி ஆயே தே தும் [98] என்ற பாடலை பின்னணியில் பாடியதற்கு விருது.
பிதாநேஹா மெஹ்ராமுதல் வில்லன் பாத்திரம்
ஐத்ராஸ்ப்ரியா சக்சேனா/ மல்ஹோத்ரா
ஹல்ச்சல்அஞ்சலி
2005வேக்ஸ் மேன் , ஷேரன்(2005).பேவபாஅஞ்சலி சகாய்
கியூங் கிடா.தன்வி குரானா
தோஸ்தி: பிரிஎண்ட்ஸ் போறேவேர்அஞ்சலி
200636 சீனா டவுன்பிரியா
சுப் சுப் கேஸ்ருதி
ஓம்காராடாலி ஆர். மிஸ்ராசிறந்த நடிப்புக்கான பிலிம்ஃபேர் கிரிட்டிக்ஸ் விருது வென்றார்
பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன்காமினிகேமியோ
2007க்யா லவ் ஸ்டோரி ஹைஅவராகவேஇட்ஸ் ரோக்கிங் என்ற பாடலுக்காக சிறப்புத் தோற்றம்
ஜப் வீ மெட்கீத் தில்லான்வெற்றியாளர், பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
2008ஹல்லா போல்அவராகவேசிறப்புத் தோற்றம்
தஷான்பூஜா சிங்க்
ரோட்சைட் ரோமியோலைலா (குரல்)முதல் கார்டூன் படத்திற்கு குரல் கொடுத்தார்.
கோல்மால் ரிடேர்ன்ஸ்ஏக்தா
2009லக் பை சான்ஸ்அவராகவேசிறப்புத் தோற்றம்
பில்லுஅவராகவேமர்ஜானி என்ற பாடலுக்காக சிறப்புத் தோற்றம்
கம்பக்த் இஷ்க்சிம்ரிதா ராய்
மைன் அவுர் மிஸ்ஸிஸ் கன்னாரைனா கன்னா
குர்பான்பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது
திரீ இடியட்ஸ்பியாபரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது

No comments:

Post a Comment