Tuesday, 3 February 2026

MOST FAMOUS 10 BEAUTYS அசர வைத்த 10 அழகுத் தேவதைகள்

 




அசர வைத்த 10 அழகுத் தேவதைகள்


அழகான பெண்களின் தாய் தனது மகளை தேவதைப் போல் அழகுடன் இருக்கிறார் என்று புகழ்வது உண்டு. அத்தகைய அழகுத் தேவதைகளைப் பற்றியே நாம் காண இருக்கிறோம்.


முருகன் என்றால் அழகு என்பது தமிழ் மரபு, அத்தகைய அழகினைப் போற்றிக் கொண்டாடி ஆராதனை செய்வது தமிழர்களின் மாண்பு.


ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அசர வைக்கும் அழகுத் தேவதைகள் தோன்றுகிறார்கள், புகழ்பெறுகிறார்கள், பின்னர் மறைகிறார்கள். அதன்பின்னர் புதியதாக அழகு தேவதைகள் தோன்றுகிறார்கள். இது ஒரு வரலாற்று சுழற்சியாகும்.


ஆண்டுதோறும் சர்வதேச நாடுகளின் அழகுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் தேர்ந்தெடுக்கப்படும் அழகிகள் 5 கோடி ரூபாய் நிதியும் ஓராண்டிற்கு பிற சலுகைகளும் பெறுகின்றனர்.


உலக அழகிகளுக்கு அணிவிக்கப்படும் கிரீடம் 500 வைரங்களும், 120 முத்துக்களும் கொண்ட 1.25 கோடி ரூபாய் பெறுமானமுள்ள பரிசாகும்.


உலக அழகிப்போட்டிகள் மிஸ்வேர்ல்டு என்றும், மிஸ் எர்த் என்றும், திருமதி உலக அழகி என்றும், பிரபஞ்ச அழகி என்றும் பல பெயர்களில் நடத்தப்பெறுகின்றன.


அழகு என்பது ஒருவருக்கு இயல்பாக இருக்கக் கூடிய எண்ணங்களின் வெளிப்பாட்டு இயல்பு ஆகும். இவ்வியல்பு அவற்றைக் காண்போருக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் தரக்கூடிய அனுபவத்தை வழங்கினால் அது தான் தூய அழகு.


இதில் பிரதானமாக அமைவது மூக்கும், கண்களும்தான். கண்புருவம் மெல்லியதாக இருப்பதைத்தான் சாமுத்ரிகா லட்சணம் பெருமையாகச் சொல்கிறது. சிலருக்கு கண்புருவம் கட்டையாக இருக்கும். அதைவிட மெல்லிய புருவ அமைப்பு நல்லது. பெண்களுக்கு இடை குறுகி இருப்பது நலம். கை விரல்கள் நீண்டு இருந்தால் அவர்கள் கலை உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள்.


இன்றைய நாளில் பாலியல் ரீதியான கவர்ச்சியே அழகு என்று வர்ணிக்கப்படுகிறது. அழகுக்கான செயற்கை சாதனங்களின் உதவியால் மாடலிங் கலை அபரிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.


1. கிளியோபாத்ரா

ஒரு காலத்தில் எகிப்திய அரசி கிளியோபாத்ரா மிகச் சிறந்த உலக அழகியாக கருதப்பட்டார். மேற்கத்திய கலாசாரத்தில் மிகப்பிரபலமான பெண்ணாக இருந்தார்.  ஷேக்ஸ்பியரின் துன்பவியல் நாடகமான ஆன்டனி கிளியோபாத்ராவைத் தழுவி கிளியோபாத்ரா  எனும் ஆங்கில திரைப்படம் வெளிவந்தது.


கிளியோபாத்ராவின் ஒப்பற்ற அழகு மிகவும் புகழப்பட்டு, உலகின் பலம் வாய்ந்த மனிதர்களின் செல்வாக்கினை பயன்படுத்த இவருக்கு உதவியது. இவரது இயற்கை அழகும், கிரக்கம் கொள்ள வைக்கும் காந்தப் பார்வையும் இவரை உலக அழகியாக மெய்பித்தது. கிளியோபாத்ராவுக்கு நீண்ட மூக்கு இருந்தென்றும், அதுதான் அவரின் அழகுக்கு அழகு சேர்த்தது என்ற ஒரு கருத்து உண்டு.


ஆனால் அவரது மூக்கு இன்னும் சிறிதாக மாற்றப்பட்டிருந்தால் மொத்த உலகினையும் அவர் தன் பக்கம் ஈர்த்திருப்பார் என்பது மற்றொரு சாரார் கருத்து.


கூடா நட்பாக 21 வயதேயான கிளியோபாத்ரா 52 வயதான சீசரிடம் தொடர்பு கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். பின்னர் ரோம் மன்னர் அந்தோணியுடன் உறவு கொண்டு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இறுதியில் கிளியோபாத்ரா தானே வலிய கொடிய எகிப்திய நாகப்பாம்பினை, தனது மார்பகத்தில் கடிக்க வைத்து விஷம் ஏறி இறந்து போனதாகக் கூறப்படுகிறது.


ஒரு பேரரழகி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை விளக்கும் வகையில் கிளியோபாத்ராவின் அழகு குறிப்பிடப்படுகிறது.

------------------------

2 . மும்தாஜ்

தாஜ்மகால் என்றாலே மும்தாஜ்பேகம் தான் நினைவுக்கு வருவார். அழகிய தாஜ்மகாலைப் போலவே  அரசி மும்தாஜும் அழகுமிக்கவர். ஜாஜஹான் மன்னருக்கு ஒரு மனைவியாக மட்டும் இல்லாமல் இவர் ஒரு  நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.


இவருடைய அழகு அரசவையில் உள்ள கவிஞர்களால் புகழ்ந்து பலமுறை பாடப்பட்டுள்ளது. மொகலாயப் பேரரசின் பிரமாண்ட பேரழகிகளில் இவர் முதலாமவர். இவருடைய கனிவும், பளபளப்பான உடல்பொலிவும், இளமையான உடல்வாகும், அரவணைப்பும் பாராட்டப்பட்டுள்ளன.

----------------------------

3. ராணி காயத்ரிதேவி

இந்திய மக்களைக் கவர்ந்த பேரழகிகளில் ஒருவர் ராணி காயத்ரிதேவி. ஜெய்ப்பூரின் ராஜமாதா என்று அழைக்கப்பட்ட இவர், ஜெய்ப்பூர் அரசின் மூன்றாவது மகாராணியாகத் திகழ்ந்தார். 1939-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை இவர் ஆட்சியில் இருந்தார். அதன்பின்னர் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டதால் இவர் அரசியலில் புகுந்து மீண்டும் புகழ் பெற்றார்.


காயத்ரிதேவி அவரது இளமைக்காலத்தில் அபரிதமான அழகுடன் திகழ்ந்தார். நவநாகரீகப் பெண்களின் அடையாளமாக மின்னினார். அமெரிக்க நாட்டின் வோக் பத்திரிகை இவரை உலகின்  அதிஅழகு பெண்கள் 10 பேரில் ஒருவராகத் தேர்ந்து எடுத்து பாராட்டியது. இவர் சிறந்த குதிரை ஏற்ற வீரர் மட்டுமின்றி போலோ விளையாட்டு வீரரும் கூட.  பெண்களின் கல்விக்காக பாடுபட்டு, தனது பெயரில் பல பள்ளிகளைப் பெண்களுக்காகவே, நாட்டில் ஏற்படுத்தினார்.


1947ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1,92,909 வாக்குகள் பெற்று கின்னஸ்-ல் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். இதன் மூலம் உலகிலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் என்ற புகழை அடைந்தார்.

--------------------------

4. லீலா நாயுடு

1954ம் ஆண்டு பெமினா பத்திரிகையால் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லீலாநாயுடு. ஆந்திரப்பிரதேசம் மதனப்பள்ளியைச் சேர்ந்த டாக்டர். பட்டிப்பட்டி ராமையாநாயுடு இவருடைய தந்தையாவார்.


இதே ஆண்டில் அமெரிக்காவிலுள்ள "வோக்" பத்திரிகை உலக அழகிகள் 10 பேரில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. இவர் ஏக் ரஸ்தே ஹெயின் பியார் ஹி, தி ஹவுஸ் ஹோல்டர், அனுராதா ஆகிய இந்திப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். பின்னர் இயக்குனர் ஷியாம் பெனகலின், திரிகால் எனும் படத்திலும், எலக்ட்ரிக்மூன் என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இவர் நடித்த எந்தப்படமும் வசூலைக் குவிக்கவில்லை.


தனது 17வது வயதில் ஒபராய் ஹோட்டல் குழும நிறுவனர் மகனான 33 வயதான திலக்ராஜ் ஒபராயை மணந்தார். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற பிறகு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். லண்டனில் தான் சந்தித்த தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை இரண்டாம் முறையாக மணந்துகொண்டார்.

-----------------------------

5. ஜீனத் அமன்

ஜீனத் அமன் பற்றி இந்திப்பட உலகில் தெரியாதவர் எவரும் இல்லை. இந்திப்பட எழுத்தாளர் அமானுல்லாகான்- சிண்டா தம்பதிகளின்  புதல்வி. மும்பையில் படித்த இவர் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். திரும்பி இந்தியாவிற்கு வந்தபோது பெமினா பத்திரிகையில் பத்திரிகையாளராகச் சேர்ந்தார்.


பின்னர் மாடலிங் உலகில் நுழைந்து புகழ் பெற்றார். 1970-1980ம் ஆண்டுகளில் தொடர்ந்து இந்திப்படங்களில் நடித்ததால் பெரும் புகழ் இவரைத் தேடி வந்தது. மிஸ் ஆசியா பசிபிக் என 1970ம் ஆண்டு தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்தி சினிமாவில் ஒரு செக்ஸ் அடையாள கதாநாயகியாக விளங்கினார். இந்திப்பட கதாநாயகிகளுக்கு மேற்கிந்தியப் பார்வையினை ஏற்படுத்துவதில் முன்னணியில் நின்றார்.


இவர் நடித்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில் தர்மேந்திரா பாடல்பாடி ரசிகர்களை கிரங்கடித்தார். இவருடைய யாதோன் கி பாரத் இந்திப்படமும் வசூலை குவித்து ஒரு புதிய வரலாற்றினை ஏற்படுத்தியது. 1985ம் ஆண்டு இவர் மஜ்தர்கான் என்பவரை மணந்து 2 குழந்தைகளுக்கு தாயானார்.

 --------------------------------

6. ஹேமா மாலினி

தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்க சென்று கனவுக்கன்னியாகப் புகழ் பெற்றவர் இந்தி நடிகை ஹேமாமாலினி, இவர் சிறந்த பரத நாட்டியத் தாரகை, 150 இந்திப் படங்களில் நடித்து 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திப் பட உலகில் தனது புகழ்க் கொடியை நிலை நாட்டியவர். நடிப்புக் காலத்தில் பல்வேறு கதா பாத்திரங்களை ஏற்று, முன்னனி நடிகையாக இந்திப்பட உலகில் வலம் வந்தார். அவருடைய அழகும், பரத நாட்டியத்திறனும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.


1972 ஆம் ஆண்டு இவர் சிறந்த நடிகையாக பிலிம்பேர் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் பிலிம்பேர் பத்திரிகையால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.


அன்றைய நாளில் இந்திப்பட கதாநாயகர்களாக வலம் வந்த நடிகர் சஞ்சீவ் குமாரும், ஜிதேந்திராவும் இவரைத் திருமணம் செய்ய முன் மொழிந்த போதும், இவர் ஏற்கனவே திருமணமான தர்மேந்திராவையே திருமணம் செய்து கொண்டார்.


என்றென்றும்  மாறாத புன்னகை ததும்பும் முகமே இவரது வெற்றியின் ரகசியம்.

-----------------------------------

7. ரீட்டா பரியா

1966 ஆம் ஆண்டு தான், முதன்முதலாக இந்தியாவிற்கு அழகிப் போட்டி கதவுகள் திறந்தன. இந்திய அழகி ரீட்டா பரியா, உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பையில் பிறந்த அவர் இதற்கு முந்தைய ஆண்டு தான் ஈவ்ஸ்வீக்லி பத்திரிகையால் மும்பையின் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அழகுக் கிரீடம் சூட்டப் பெற்றார்.


ஓராண்டு மாடலிங் துறையில்  பணியைத் தொடர்ந்த ரீட்டா பரியா பின்னர் அழகுப் போட்டிகளிலோ, மாடலிங் துறையிலோ ஈடுபடவில்லை, பின்னர் எம்.பி.பி.எஸ் படித்து, டாக்டர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அயர்லாந்து சென்று விட்டார்.

---------------------------------------

8. சுஷ்மிதா சென்

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிக் கிரீடத்தை சூடியவர் சுஷ்மிதாசென். ஹைதராபாத்தில் பிறந்து, புதுடெல்லியில் வளர்ந்த சுஷ்மிதாசென் வங்காள இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.


1994 ஆம் ஆண்டு நடந்த பெமினா ஆழகுப் போட்டியில் உலக அழகி ஐஸ்வர்யா ராயினைத் தோற்கடித்து, சிறந்த அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1996 ஆம் ஆண்ட தங்தக், பீவி நம்பர் 1, ஆகிய இந்திப் படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். 2006 ஆம் ஆண்டில் இந்திப்பட உலகில் சாதனை படைத்ததற்காக ராஜீவ் காந்தி தேசிய விருது பெற்றார்.

------------------------------------------

9. டைனா ஹைடன்

டைனா ஹைடன் 1993 ஆம் ஆண்டு உலக அழகியாகவும், பெமினா அழகியாகவும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹைதராபாத்தில் பிறந்த இவர் உஸ்மானிய பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் மாடலிங் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார், 1997 ஆம் ஆண்டு  நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வென்றவர்.


இதன் பின்னர் இங்கிலாந்து சென்று நடிப்புக் கலை பயின்றார். 'பிக்பாஸ்' தொலைக்காட்சித் தொடரில் 2008 ஆம் ஆண்டு தோன்றி புகழ் பெற்றவர்.

--------------------------------------------

 10. யுக்தா முகி

வட இந்தியாவினைச் சேர்ந்த யுக்தாமுகி தனது 7-வது வயது வரை மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து பின்னர் மும்பைக்கு வந்தார். இவர் இந்துஸ்தானி சங்கீதத்தில் வல்லவராய் இருந்தார்.


1994 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு கிரீடம் வென்றவர். இந்தப் போட்டியில் கலந்து கொண்ட 94 நாட்டைச் சேர்ந்த அழகிகளை இவர் தோற்கடித்தார்.


யுக்தாமுகி,  மேம் சாப், கட்புட்லி, பிஸாகா போன்ற இந்திப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

-------------------------------------------

11. பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா ஷாம்ஜெட் பூரில் பிறந்தவர். இவரது தாய்-தந்தை இருவரும் டாக்டர்கள். இவர் மும்பையில் ஜெய்கிந்த் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதால் தனது படிப்பை  கைவிட்டார்.


முதலில் மாடலிங் உலகில் புகுந்து லக்ஸ், பான்ட்ஸ், சன்சில்க் போன்ற விளம்பரப் படங்களில் தோன்றி புகழ் அடைந்தார். பின்னர் தமிழன், தி ஹீரோ, அந்தாஸ், முஸ்கி ஷாதி கிரோகி ஆகிய திரைப்படங்களில் நடித்து சமகால நடிகைகளில், சிறந்த முன்னனி நடிகை என்ற பெயர் பெற்றார்.


2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு உலக அழகி என போற்றப்பட்டார். இதே ஆண்டில் தான் லாரா தத்தாவும், தயாமிர்சாவும் உலக அழகி  மற்றும் ஆசிய பசிபிக் அழகி ஆகிய பட்டங்களைப் பெற்றனர். இந்த ஆண்டில் இந்திய அழகிகளாக 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியாவின் அதிர்ஷ்டம்.

----------------------------------

12 -- லாரா தத்தா

 உத்தர பிரதேச மாநிலம் காசியா பாத்தில் பிறந்தவர் லாரா தத்தா. இவரது தந்தை இராணுவத்தில் விங் கமான்டராக இருந்து வந்தார். பெங்களூரில் கல்வியை முடித்த இவர் மாடலிங் துறையில் புகுந்தார்.


2000 ஆம் ஆண்டில் லாரா தத்தா உலக அழகியாக முடிசூடினார். அதே ஆண்டில் பெமினா பத்திரிகையின் இந்திய அழகிப் போட்டியிலும் வென்றார். அழகிப் போட்டியின் போது நீச்சல் உடையில் வந்த போது மெய் மறந்து நீதிபதிகள் உச்ச அளவு மதிப்பெண்கள்  தந்ததால் வெற்றி பெற்று எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.


இவர் நடித்த மஸ்தி, நோ என்டரி, பார்ட்னர், ஹவுஸ்புல் ஆகிய இந்தித் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இவர் பிலிம்பேர் பத்திரிகையின் சிறந்த துணை நடிகை விருதினை 2003 ஆம் ஆண்டு அந்தாஸ் படத்திற்காக பெற்றார்.


2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஸ் பூபதியை மணந்தார். திருமண விழாவை கிறிஸ்துவ முறைப்படி கோவாவில் பிரமாண்டமாகக் கொண்டாடினார்.

----------------

13 -- ஐஸ்வர்யாராய்

உலக ஊடகங்களால் எப்போதும், உலகப் பேரழகி என்று புகழப்படுவர் ஐஸ்வர்யாராய். கன்னடத்துப் பைங்கிளி என்று அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. இவரைப் போன்று கர்நாடக மாநிலம், மங்களுரில் பிறந்தவர், மும்பையில் ஜெய்ஹிந்த் கல்லூரியில் படித்தார், பின்னர் கட்டிடக்கலை வல்லுநர் படிப்பில் சேர்ந்தார்.


இவர் 9வது வகுப்பு படிக்கும் போதே மாடலிங் செய்து வந்தார். பின்னர் முழுநேரம் இதில் ஈடுபட்டதால் கட்டிடக்கலை வல்லுநர் படிப்பை பாதியில் கைவிட்டார். 1997-ஆம் ஆண்டு இருவர் என்ற தமிழ் படத்தில் நடித்து ஈடில்லா புகழ் பெற்றார். 1998-ம் ஆண்டில் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.


பாலிவுட்டின் கவனம் இவர் மீது திரும்பியதில், ஹம் தில் தே சுக்சனம் என்ற இந்திப் படத்தில் நடித்து, அதற்காக பிலிம்பேர் பத்திரிக்கையின் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார்.


1994-ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில்  பங்குபெற்று உலக அழகிப் பட்டத்தினை வென்றார். ஏறத்தாழ 40 இந்திப் படங்களில் நடித்ததால் இவரின் புகழ் உலகெங்கும் பரவியது. மாடலிங் கலையில் தொடர்ந்து புகழ் பெற்று வந்ததால் இவர் சிறந்த புகைப்படத்திற்கேற்ற முக அழகி என்ற பட்டத்தினை பெற்றார்.


கடந்த 10 ஆண்டுகளாக கேன்ஸ் பட விழாவிற்கு தொடர்ந்து அழைக்கப்பட்டு வரும் இந்திய உலக அழகி இவர் மட்டுமே. இந்த ஆண்டும் கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்ட இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


தனிப்பட்ட வாழ்க்கையில் 1990-ம் ஆண்டு சல்மான்கானுடன் நட்பாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் விவேக் ஓபராய் இவரைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இதன்பின்னர், 2007-ம் ஆண்டு ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சனைத் திருமணம் செய்து கொண்டார்.


37 வயதான ஐஸ்வரயாராய் தற்போது கற்பமாக உள்ளார், இதுபற்றி திரைப்பட தயாரிப்பாளர் ராம் கோபால்வர்மா, அழகான பெண்கள் கர்ப்பமடைவதை பொதுவாக விரும்புவதில்லை என்றும், ஆனால் அழகுத் தேவதையான ஐஸ்வர்யாராய்க்கு  அதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


2004 ஆம் ஆண்டு இவரது மெழுகுச்சிலை லண்டன் மேடம் தி சுயாட் மெழுகு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியத்தில் இடம் பெற்ற 6-வது இந்தியரும், இரண்டாவது பாலிவுட் நடிகையும் ஐஸ்வர்யாராய் தான்.


2009 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நடத்திய கன்னட உலக மாநாட்டில் இவருடைய சேவைகள் புகழப்பட்டு பாராட்டப்பட்டன. இந்த விழாவில் இவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


இணையதளங்களில், உலகின் அழகான பெண்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். அவற்றில் முதன்மையாயிருக்கும் 10 பேரில் கண்டிப்பாக ஐஸ்வர்யாராய் இடம் பெற்று வருகிறார்.


 லீலா நாயுடு,  இவர் 1956-ம் ஆண்டு உலக அழகிப்பட்டம் பெற்றவர். சிறந்த நடிகை 2009 ஆம் ஆண்டு வோக் பத்திரிக்கையின் அட்டையை அலங்கரித்தவர்.


 ரெய்டா பரியா, 1966 ஆம் ஆண்டு உலக அழகிப்பட்டம் வென்றவர்.


 ஜீனத் அமன்- பாலிவுட் நடிகை 1970-ம் ஆண்டு ஆசிய பசிபிக் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


 ஜூகி சாவ்லா - 1984 ஆம் ஆண்டு இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற இளமை ததும்பும் பாலிவுட் நடிகை.


 மதுசாப்ரே - ஆங்கிலப்புலமை இல்லாததால் 1992-ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தினை தவற விட்டவர், இருப்பினும் சிறந்த சிரிப்பழகி.


சுஷ்மிதாசென் - 1994-ல் உலக அழகிப்பட்டத்தினை வென்ற முதல் இந்தியப் பெண்மனி, சிறந்த நடிகை.


டயானா ஹான்டன் - 1997 ஆம் ஆண்டு சிறந்த உலக அழகியானவர், மகிழச்சி ததும்பும் இவரது முகப் பொழிவு காண்போரை வசப்படுத்தும்.


 ஐஸ்வர்யாராய் - உலக அழகி பட்டம் பெற்ற இரண்டாவது இந்தியப் பேரழகி. பட்டம் பெற்றதுடன் நில்லாது இன்று வரை உலக அழகியாகவே வாழ்ந்தும் வரும் ஐஸ்வர்யாராயை உலக அளவில் அறியாதவர் எவரும் இல்லை.


 லாரா தத்தா - 2000 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் பெற்ற பாலிவுட் நடிகை. டென்னிஸ் விளையாட்டு வீரரான மகேஷ்பூபதியின் மனைவியானவர்.


 பிரியங்கா சோப்ரா - கடைசியாக உலக அழகிப்பட்டம் வென்றவர் இந்திய அழகி. இவருக்குப்பின் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அழகிகளில் எவரும் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பாலிவுட்டின் சிறந்த முன்ணனி நடிகைகளில் ஒருவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பெண்மணிகள் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த காலகட்டத்தில் மட்டும் தான் அவர்கள் அழகிகள் என்ற நிலைப்பாட்டில் ஒரு பத்து ஆண்டுகளில் அவர்கள் இளமையை இழந்து அடுத்த அழகிப்போட்டிக்கு நீதிபதியாகி விடுகிறார்கள்.


தமிழ் திரைப்பட உலகினைப் பொருத்தவரை, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் அழகிகளாகப் போற்றப்படுவார்கள். பின்னர் அவர்களின் தேவை திரையுலகில் தளர்ந்ததும் அடுத்த கதாநாயகி ஆட்சிக்கு வந்துவிடுவார். வைஜெயந்திமாலா, பானுமதி, பத்மினி, சரோஜாதேவி, ஆகிய பலரை இதற்கு சான்றாகச் சொல்லலாம்.


அழகு ஆராதனைக்குரியது தானே...!

---------------------------------------------

எழுத்து‌

டாக்டர். ப. தென்னவன்

No comments:

Post a Comment